பொன் உள்ளத் திரள் புன்சடையின் புறம், மின் உள்ளத் திரள் வெண்பிறையாய்! இறை நின் உள்ளத்து அருள் கொண்டு, இருள் நீங்குதல் என் உள்ளத்து உளது; எந்தைபிரானிரே!
|
1
|
எந்தை பெருமானே ! பொன்னும் நினையுமாறு அழகு திகழ்கின்ற புன்சடையின் புறத்தே ஒளியுள்ளதாகிய திரண்ட வெண்பிறை சூடியவனே ! நின் உள்ளத்துச் சிறிது அருள் கொண்டு என்னுள்ளத்துள் உளதாகிய இருள் நீங்கிடத் திருவுளம் பற்றியருள்க . | |
முக்கணும்(ம்) உடையாய்! முனிகள் பலர் தொக்கு எணும் கழலாய்! ஒரு தோலினோடு அக்கு அணும்(ம்) அரையாய்! அருளே அலாது எக்கணும்(ம்) இலன்; எந்தைபிரானிரே!
|
2
|
எந்தை பெருமானே ! முக்கண்ணும் உடையாய் ! முனிவர்கள் பலர் கூடி எண்ணித் தியானிக்கும் கழலை உடையாய் ! புலித்தோலினோடு அழகிய நினது அருளேயல்லாது வேறு எவ்விடத்தும் பொருள் இல்லேன் . | |
பனிஆய் வெண்கதிர் பாய் படர் புன்சடை முனியாய்! நீ உலகம் முழுது ஆளினும், தனியாய், நீ; சரண், நீ;சலமே பெரிது; இனியாய், நீ எனக்கு; எந்தைபிரானிரே!
|
3
|
எந்தை பெருமானே ! தண்ணியாய் ! விரும்புதற்குரிய தெண்ணிலவு பாயும் படர்புன்சடை முனிவனே ! நீ உலகம் முழுதும் ஆண்டாலும் தனியாய் ! சரண் நீயே ; என்பால் வஞ்சனையே பெரிது ; எனக்கு இனியாய் நீயே . | |
மறையும் பாடுதிர்; மா தவர் மாலினுக்கு உறையும் ஆயினை; கோள் அரவோடு ஒரு பிறையும் சூடினை; என்பது அலால், பிறிது இறையும் சொல் இலை-எந்தைபிரானிரே!
|
4
|
எந்தை பெருமானே ! வேதங்களையும் பாடுவீர் ; பெரிய முனிவர்களது மயக்கத்தினுக்கு உறையும் ஆயினீர் ; கொள்ளும் பாம்பினோடு ஒரு பிறையும் சூடினை என்பதல்லால் வேறு சிறிதும் சொல் இல்லை . | |
பூத்து ஆர் கொன்றையினாய்! புலியின்(ன்) அதள் ஆர்த்தாய், ஆடு அரவோடு! அனல் ஆடிய கூத்தா! நின் குரை ஆர் கழலே அலது ஏத்தா, நா எனக்கு; எந்தைபிரானிரே!
|
5
|
எந்தை பெருமானே ! பூத்துச் செறிந்த கொன்றையினை உடையாய் ; புலியின் தோலை ஆர்த்துக் கட்டினாய் ; ஆடும் பாம்பினோடும் அனலோடும் ஆடும் கூத்தனே ! நின் ஒலிக்கும் கழலே அல்லது எனது நா வேறு ஒன்றையும் ஏத்தாது . | |
| Go to top |
பைம் மாலும்(ம்) அரவா! பரமா! பசு- மைம் மால் கண்ணியோடு-ஏறும் மைந்தா! எனும் அம் மால் அல்லது மற்று அடி நாயினேன் எம்மாலும்(ம்) இலன் எந்தைபிரானிரே!
|
6
|
எந்தை பெருமானே ! படத்தொடு ஒலிக்கும் அரவுடையவனே ! பரமனே ! இடபத்தின்மேல் அஞ்சனம் தீட்டிய கண்ணுடைய உமாதேவியோடு ஏறும் மைந்தனே ! என்றும் அம்மயக்கமல்லது மற்று அடி நாயினேனுக்கு வேறு எம் மயக்கமும் இல்லேன் . ` நாயினேன் ` என்றும் பாடம் . | |
வெப்பத்தின் மன மாசு விளக்கிய செப்பத்தால், சிவன்! என்பவர் தீவினை ஒப்பத் தீர்த்திடும் ஒண் கழலாற்கு அல்லது எப்பற்றும்(ம்) இலன் எந்தைபிரானிரே!
|
7
|
எந்தை பெருமானே ! வெப்பத்தின் மனமாசு விளக்கும் செப்பம் உடைமையினால் ` சிவன் ` என்பவர் தீவினைகளை ஒப்பத் தீர்க்கும் ஒள்ளிய கழலை உடையானாகிய உமக்கல்லது வேறுபற்று இல்லேன் . | |
திகழும் சூழ் சுடர் வானொடு, வைகலும், நிகழும் ஒண் பொருள் ஆயின, நீதி, என் புகழும் ஆறும் அலால், நுன பொன் அடி இகழும் ஆறு இலன் எந்தைபிரானிரே!
|
8
|
எந்தை பெருமானே ! விளங்குகின்ற சுடர் சூழ்கின்றவனோடு நாள்தோறும் நிகழும் ஒள்ளிய பொருளாயின நீதிகளை என்னே புகழுமாறு ! அல்லது உன் பொன்னடிகளை இகழுமாறு இல்லேன் . | |
கைப்பற்றித் திருமால் பிரமன்(ன்) உனை எய்ப் பற்றி(ய்) அறிதற்கு அரியாய்! அருள் அப் பற்று அல்லது, மற்று அடிநாயினேன் எப்பற்றும்(ம்) இலன்; எந்தைபிரானிரே!
|
9
|
திருமாலால் அறிதற்கரியவனே ! உன் திருவருளாகிய பற்றுக்கோடு ஒன்றைத் தவிர வேறு எப்பற்றும் எனக்கு இல்லை . | |
எந்தை, எம்பிரான் என்றவர்மேல் மனம், எந்தை, எம்பிரான் என்று இறைஞ்சித் தொழுது, எந்தை, எம்பிரான் என்று அடி ஏத்துவார், எந்தை, எம்பிரான் என்று அடி சேர்வரே.
|
10
|
எந்தை எம்பிரான் என்று மனம் வாக்குக் காயங்களால் வழிபடுவார் இறைவன் திருவடி சேர்வர் . | |
| Go to top |