ஓசை ஒலி எலாம் ஆனாய், நீயே; உலகுக்கு ஒருவனாய் நின்றாய், நீயே; வாசமலர் எலாம் ஆனாய், நீயே; மலையான் மருகனாய் நின்றாய், நீயே; பேசப் பெரிதும் இனியாய், நீயே; பிரானாய் அடி என்மேல் வைத்தாய், நீயே; தேச விளக்கு எலாம் ஆனாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
|
1
|
திருவையாற்றை விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையவனே! பொருளில்லாத வெற்று ஓசையாகவும் பொருளுடைய எழுத்து சொல் என்பனவாக உள்ள ஒலியாகவும் நீ உள்ளாய் . இவ்வுலகுக்குத் தன்னிகரில்லாத் தலைவனாக உள்ளாய் . மலரில் மணம் போல உலகமெங்கும் பரவியுள்ளாய் . இமவான் மருமகனாய் உள்ளாய் . உன் பெருமையைப் பேசுதற்கு இனியனாய் உள்ளாய் . எனக்குத் தலைவனாய் உன் திருவடிகளை என் தலைமீது வைத்தாய் . உலகில் உள்ள ஞாயிறு திங்கள் , கோள்கள் , விண்மீன்கள் முதலிய யாவுமாகியுள்ளாய் . | |
நோக்க(அ)ரிய திருமேனி உடையாய், நீயே; நோவாமே நோக்கு அருள வல்லாய், நீயே; காப்ப(அ)ரிய ஐம்புலனும் காத்தாய், நீயே; காமனையும் கண் அழலால் காய்ந்தாய், நீயே; ஆர்ப்ப(அ)ரிய மா நாகம் ஆர்த்தாய், நீயே; அடியான் என்று அடி என்மேல் வைத்தாய், நீயே; தீர்ப்ப (அ)ரிய வல்வினை நோய் தீர்ப்பாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ!.
|
2
|
ஊனக்கண்ணால் காணுதற்கு இயலாத திருமேனியை உடையாய் ! பசி , பிணி முதலியவற்றினால் வருந்தாதபடி அருட்பார்வையால் காப்பவன் . நீ , அடக்க முடியாத என் ஐம்புலன்களையும் அடக்குமாறு செய்தாய் . மன்மதனை நெருப்புக் கண்ணால் வெகுண்டாய் . கட்டுதற்கு அரிய பெரிய பாம்பினை வில் நாணாகக் கட்டினாய் . உன் அடியவன் என்று என் தலையில் உன் திருவடிகளை வைத்தாய் . மற்றவரால் போக்க முடியாத ஊழ்வினையால் ஏற்படும் துயரங்களை நீக்கினாய் . இவ்வாறு செய்து திருவையாறு அகலாத செம்பொன் சோதியாய் உள்ளாய் . | |
கனத்து அகத்துக் கடுஞ் சுடர் ஆய் நின்றாய், நீயே; கடல், வரை, வான், ஆகாயம், ஆனாய், நீயே; தனத்து அகத்துத் தலை கலனாக் கொண்டாய், நீயே; சார்ந்தாரைத் தகைந்து ஆள வல்லாய், நீயே; மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய், நீயே; மலர்ச் சேவடி என்மேல் வைத்தாய், நீயே; சினத்து இருந்த திரு நீலகண்டன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
|
3
|
திருவையாறு அகலாத செம்பொன் சோதியே ! நீ மேகத்தில் மின்னல்களாகவும் , கடல் மலை மேகம் ஆகாயம் என்பனவாகியும் , மண்டை ஓட்டையே செல்வமாகக் கொண்டவனாகவும் , உன்னைச் சார்ந்த அடியவர்களைத் தவறான வழிகளில் செல்லாமல் தடுத்து அடிமை கொள்ள வல்லவனாகவும் , அடியவர் உள்ளக் கருத்தை அறிந்து நிறைவேற்றுபவனாகவும் , என் தலைமேல் தாமரை போன்ற உன் திருவடிகளை வைத்தவனாகவும் , சிவந்த திருமேனியில் நீலகண்டனாகவும் உள்ளாய் . | |
வான் உற்ற மா மலைகள் ஆனாய், நீயே; வடகயிலை மன்னி இருந்தாய், நீயே; ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய், நீயே; ஒளி மதியோடு, அரவு, புனல், வைத்தாய், நீயே; ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய், நீயே; அடியான் என்று அடி என்மேல் வைத்தாய், நீயே; தேன் உற்ற சொல் மடவாள் பங்கன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
|
4
|
திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ வானளாவிய மலைகளில் வடக்கிலுள்ள கயிலை மலையில் உறைவாய் . புலால் மணம் கமழும் ஒளி வீசும் மழுப்படையை உடையாய் . சடையில் பிறை , பாம்பு , கங்கை இவற்றை வைத்தாய் . பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்புகிறாய் . அடியவன் என்று என் தலை மீது உன் திருவடிகளை வைத்தாய் . தேன் போன்ற சொற்களை உடைய பார்வதி பாகனாய் உள்ளாய் . | |
பெண் ஆண் பிறப்பு இலியாய் நின்றாய், நீயே; பெரியார்கட்கு எல்லாம் பெரியாய், நீயே; உண்ணா அருநஞ்சம் உண்டாய், நீயே; ஊழி முதல்வனாய் நின்றாய், நீயே; கண் ஆய் உலகு எலாம் காத்தாய், நீயே; கழல்சேவடி என்மேல் வைத்தாய், நீயே; திண் ஆர் மழுவாள் படையாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
|
5
|
திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ பெண்ணும் ஆணும் ஆகிய பிறப்புக்களை இல்லாதவனாய்ப் பெரியவர்களுக்கு எல்லாம் பெரியவனாய் , மற்றவர் உண்ணாத கொடிய நஞ்சினை உண்டவனாய் , ஊழிகளுக்கெல்லாம் தலைவனாய்ப் பற்றுக்கோடாய் இருந்து உலகங்களை எல்லாம் காத்தவனாய்க் கழலணிந்த சிவந்த திருவடிகளை என் தலைமேல் வைத்தவனாய் , வலிமை வாய்ந்த மழுப்படையை உடையவனாய் உள்ளாய் . | |
| Go to top |
உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய், நீயே; உற்றவர்க்கு ஓர் சுற்றம் ஆய் நின்றாய், நீயே; கற்றிருந்த கலைஞானம் ஆனாய், நீயே; கற்றவர்க்கு ஓர் கற்பகம் ஆய் நின்றாய், நீயே; பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய், நீயே; பிரானாய் அடி என்மேல் வைத்தாய், நீயே; செற்றிருந்த திரு நீலகண்டன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
|
6
|
திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ பொருள்களில் அவற்றின் பண்புகளாக உள்ளாய் . அடியவர்கள் சுற்றமாக உள்ளாய் . கற்கும் கலையறிவாகவும் அநுபவப்பொருளை ஞானதேசிகர்பால் கேட்டவர்க்கு வேண்டியவை வழங்கும் கற்பகமாகவும் உள்ளாய் . பெற்ற தாயை விட மேம்பட்டவனாய் உள்ளாய் . பிரானாய் அடி என்மேல் வைத்தாய் . நஞ்சினை அடக்கிய நீல கண்டன் நீயே ஆவாய் . | |
எல்லா உலகமும் ஆனாய், நீயே; ஏகம்பம் மேவி இருந்தாய், நீயே; நல்லாரை நன்மை அறிவாய், நீயே; ஞானச்சுடர் விளக்கு ஆய் நின்றாய், நீயே; பொல்லா வினைகள் அறுப்பாய், நீயே; புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய், நீயே; செல்வாய செல்வம் தருவாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
|
7
|
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ ! நீ எல்லா உலகங்களும் ஆனவனாய் , ஏகம்பத்தில் விரும்பியிருப்பவனாய் , நல்லவர்களின் நன்மையை அறிந்து அவருக்கு அருள் செய்பவனாய் , ஞான ஒளி வீசும் விளக்காய் , கொடிய வினைகளைப் போக்குபவனாய்ப் புகழ்ச் சேவடி என் மேல் வைத்தவனாய்ச் செல்வங்களுள் மேம்பட்ட வீடுபேற்றுச் செல்வத்தை அருளுபவனாய் உள்ளாய் . | |
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய், நீயே; அளவு இல் பெருமை உடையாய், நீயே; பூவினில் நாற்றம் ஆய் நின்றாய், நீயே; போர்க் கோலம் கொண்டு எயில் எய்தாய், நீயே; நாவில் நடு உரை ஆய் நின்றாய், நீயே; நண்ணி அடி என்மேல் வைத்தாய், நீயே; தேவர் அறியாத தேவன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
|
8
|
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ ! நீ பஞ்ச கவ்விய அபிடேகத்தை உகப்பவனாய் , எல்லையற்ற பெருமையை உடையவனாய் , பூவினில் நாற்றம் போல எங்கும் பரவியவனாய் , போர்க் கோலம் பூண்டு மும்மதில்களையும் அழித்தவனாய் , நாவினால் பேசும் நடுவுநிலையான சொற்களை உடையவனாய் , நண்ணி என் தலை மீது திருவடிகளை வைத்தவனாய் , ஏனைய தேவர்களும் அறிய முடியாத தேவனாய் உள்ளாய் . | |
எண் திசைக்கும் ஒண்சுடர் ஆய் நின்றாய், நீயே; ஏகம்பம் மேய இறைவன், நீயே; வண்டு இசைக்கும் நறுங்கொன்றைத் தாராய், நீயே; வாரா உலகு அருள வல்லாய், நீயே; தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய், நீயே; தூ மலர்ச்சேவடி என்மேல் வைத்தாய், நீயே; திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
|
9
|
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ ! நீ எண்திசைகளிலும் உள்ள ஒளி வீசும் சுடர்கள் ஆனாய் . ஏகம்பம் மேவிய இறைவன் நீ . வண்டுகள் ஒலிக்கும் நறுமணம் கமழும் கொன்றை மாலையை உடையவன் . சென்றால் மீண்டு வருதல் இல்லாத வீடுபேற்றை அளிப்பவன் . அடியார்கள் உன் திருத் தொண்டில் ஈடுபட்டு உன் திருவடிகளை முன்நின்று துதிக்குமாறு உள்ளாய் . தூய மலர்போன்ற உன் சிவந்த திருவடிகளை என் தலை மேல் வைத்தாய் . திண்ணிய மலையாகிய வில்லுக்கு ஏற்ற அம்பினை இணைத்துச் செயற்பட்டவன் ஆவாய் . | |
விண்டார் புரம் மூன்றும் எய்தாய், நீயே; விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய், நீயே; கண்டாரைக் கொல்லும் நஞ்சு உண்டாய், நீயே; காலங்கள் ஊழி ஆய் நின்றாய், நீயே; தொண்டு ஆய் அடியேனை ஆண்டாய், நீயே; தூ மலர்ச்சேவடி என்மேல் வைத்தாய், நீயே; திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
|
10
|
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ ! நீ பகைவர் முப்புரங்களை அழித்தாய் . தேவர்களுக்கும் மேம்பட்டு நின்றாய் . பார்த்தவர்களையே உயிரைப் போக்கும் கொடிய விடத்தை உண்டாய் . பல ஊழிக்காலங்களாக நிலைபெற்றிருக்கிறாய் . அடியேனைத் தொண்டனாக அடிமை கொண்டாய் . தூமலர்ச் சேவடி என்மேல் வைத்தாய் . திண்ணிய தோள்களை வீசித் தீயில் கூத்தாடுதலில் திறமை உடையாய் . | |
| Go to top |
ஆரும் அறியா இடத்தாய், நீயே; ஆகாயம் தேர் ஊர வல்லாய், நீயே; பேரும் பெரிய இலங்கை வேந்தன் பெரிய முடிபத்து இறுத்தாய், நீயே; ஊரும் புரம் மூன்றும் அட்டாய், நீயே; ஒண் தாமரையானும் மாலும் கூடித் தேரும் அடி என்மேல் வைத்தாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.
|
11
|
ஒருவரும் அறிய முடியாத உயர் நிலையில் உள்ளாய் . வானத்திலே தேரைச் செலுத்தவல்லமை உடையாய் . பெரிய புகழை உடைய இராவணனுடைய பத்துத் தலைகளையும் நசுக்கினாய் . வானத்தில் உலாவிய மூன்று மதில்களையும் அழித்தாய் . பிரமனும் திருமாலும் கூடித்தேடும் அடிகளை என் தலைமேல் வைத்தாய் . அத்தகைய நீ திருவையாற்றை விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையையாய் அனைவருக்கும் காட்சி வழங்குகிறாய் . | |
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|