| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
- Hide Meaning https://sivaya.org/thiruvasagam2/27 Punarchip pathu.mp3 Add audio link
8.127
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் - கருடக்கொடியோன்
ஆசிரிய விருத்தம்
சுடர் பொன் குன்றை, தோளா முத்தை, வாளா தொழும்பு உகந்து
கடை பட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனை, கரு மால், பிரமன்,
தடை பட்டு, இன்னும் சாரமாட்டாத் தன்னைத் தந்த என் ஆர் அமுதை,
புடை பட்டு இருப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
1
ஒளிவிடுகின்ற பொன்மலையைப் போன்றவனும், துளைக்கப்படாத முத்தைப் போன்றவனும், காரணமின்றி, எனது தொண்டினை விரும்பக், கடையாய நிலையில் உள்ள என்னை, ஆட் கொண்டருளின கருணைக்கு இருப்பிடமானவனும், கரிய நிறமுடைய திருமாலும் பிரமனும் செருக்கில் அகப்பட்டு இன்னும் அடைய முடியாத தன்னை, எனக்கு அறியும்படி கொடுத்த அரிய அமுதம் போன்றவனும், செதுக்கப்படாத மாணிக்கம் போன்றவனுமாகிய இறைவனைச் சேர்ந்து அவனிடத்திலே பொருந்தியிருப்பது எந் நாளோ!
ஆற்றகில்லேன் அடியேன்; அரசே! அவனி தலத்து ஐம் புலன் ஆய
சேற்றில் அழுந்தாச் சிந்தை செய்து, சிவன், எம்பெருமான்,' என்று ஏத்தி,
ஊற்று மணல் போல், நெக்கு நெக்கு உள்ளே உருகி, ஓலம் இட்டு,
போற்றிப் புகழ்வது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
2
அடியேன், பூதலத்திலே ஐம்புலன்களாகிய சேற்றில் அழுந்தி, பொறுக்கமாட்டாதவனாய் உள்ளேன். எனது செதுக்கப் படாத மாணிக்கம் போன்ற இறைவனைச் சேர்ந்து அவனையே நினைத்து, அரசனே! சிவனே! எம்பெருமானே! என்று துதித்து ஊற்றினையுடைய மணலைப் போன்று நெகிழ்ந்து மனமானது உருகி, முறையிட்டு வணங்கி நிற்பது எந்நாளோ!
நீண்ட மாலும், அயனும், வெருவ நீண்ட நெருப்பை, விருப்பிலேனை
ஆண்டு கொண்ட என் ஆர் அமுதை, அள்ளூறு உள்ளத்து அடியார் முன்
வேண்டும்தனையும் வாய் விட்டு அலறி, விரை ஆர் மலர் தூவி,
பூண்டு கிடப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
3
நெடிய திருமாலும், பிரமனும் ஏனைய தேவரும் இந்திரனும் முன்னின்று துதிக்கும் பெருமையை உடையவனும் ஓங்கி நின்ற அழற்பிழம்பானவனும், தன்னிடத்து ஆசை இல்லாத என்னை ஆட்கொண்டருளின, என்னுடைய அருமையான அமுதம் போன்ற வனுமாகிய இறைவனை மிகுதியாக உருகுகின்ற மனத்தினை உடைய அடியவர்கள் முன்னிலையில் வேண்டுமளவும் வாய்திறந்து அரற்றி, மணம் பொருந்திய மலர்களை அருச்சித்து என் பொல்லா மணியைச் சேர்ந்து திருவடியைச் சிரமேற் கொண்டு கிடப்பது எந்நாளோ!
அல்லிக் கமலத்து அயனும், மாலும், அல்லாதவரும், அமரர் கோனும்,
சொல்லிப் பரவும் நாமத்தானை, சொல்லும் பொருளும் இறந்த சுடரை,
நெல்லிக் கனியை, தேனை, பாலை, நிறை இன் அமுதை, அமுதின் சுவையை,
புல்லிப் புணர்வது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
4
அக இதழ்களை உடைய தாமரை மலரிலுள்ள பிரமனும், திருமாலும், தேவர் தலைவனாகிய இந்திரனும், மற்றைத் தேவரும், சொல்லித் துதிக்கின்ற திருப்பெயரை உடையவனும், சொல்லுலகத்தையும் பொருளுலகத்தையும் கடந்த ஒளியானவனும், நெல்லிக் கனியைப் போன்றவனும், தேனையும், பாலையும் நிறைந்த இனிய அமுதத்தையும், அமுதத்தின் சுவையையும் ஒப்பவனும் என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கத்தைப் போன்றவனும் ஆகிய இறைவனைச் சேர்ந்து நான் தழுவி இருப்பது எந்நாளோ!
திகழத் திகழும் அடியும் முடியும் காண்பான், கீழ் மேல், அயனும் மாலும்,
அகழப் பறந்தும், காணமாட்டா அம்மான், இம் மா நிலம் முழுதும்
நிகழப் பணி கொண்டு, என்னை ஆட்கொண்டு, ஆ! ஆ!' என்ற நீர்மை எல்லாம்
புகழப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
5
மிகவும் விளங்குகின்ற திருவடியையும் திரு முடியையும் காணும் பொருட்டுக்கீழும் மேலுமாகத் திருமாலும் பிரம னும், மண்ணை அகழ்ந்தும் விண்ணில் பறந்தும் காணமுடியாத அந்தப் பெரியோன் இந்தப் பெரிய உலகம் முழுவதும் விளங்க, என்னை ஆளாகக் கொண்டு எனது தொண்டினை ஏற்று, அந்தோ என்று இரங் கின குணங்களை எல்லாம், என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கம் போன்ற அப்பெருமானைச் சேர்ந்து புகழ்ந்து பேசுவது எந்நாளோ!
Go to top
பரிந்து வந்து, பரம ஆனந்தம், பண்டே, அடியேற்கு அருள்செய்ய,
பிரிந்து போந்து, பெரு மா நிலத்தில் அரு மால் உற்றேன், என்று என்று,
சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர், உரோமம் சிலிர்ப்ப, உகந்து அன்பு ஆய்,
புரிந்து நிற்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
6
பெருமான் விரும்பி வந்து, முன்னமே, அடி யேனுக்கு மேலான இன்பத்தை அருள் செய்யவும், பிரிந்து வந்து பெரிய நிலவுலகத்தில் பெரிய மயக்கத்தை அடைந்தேன். இதனைப் பலகால் எண்ணி, நீரைப் பொழியும் கண்கள் நீரைப் பொழிந்து கொண்டேயிருக்க, உள்ளன்பினால் மயிர்க்கூச் செறிய, மகிழ்ச்சியுற்று அன்போடு, என்னுடைய, செதுக்கப்படாத மாணிக்கத்தைச் சேர்ந்து விரும்பி நிற்பது எந்நாளோ!
நினையப் பிறருக்கு அரிய நெருப்பை, நீரை, காலை, நிலனை, விசும்பை,
தனை ஒப்பாரை இல்லாத் தனியை, நோக்கி; தழைத்து; தழுத்த கண்டம்
கனைய; கண்ணீர் அருவி பாய; கையும் கூப்பி, கடி மலரால்
புனையப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
7
அன்பரல்லாத பிறருக்கு நினைத்தற்கு அருமை யான நெருப்பு, நீர், காற்று, நிலம், விண் ஆகிய பொருளாகிய இறை வனைப் பார்த்து, என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கம் போன்ற அப்பெருமானைச் சேர்ந்து, உடல் பூரித்துத் தழுதழுத்த கண்டம் கனைக்க, கண்களினின்றும் நீர் அருவியாகப் பாய, கரங்களையும் குவித்து மணமுடைய மலர்களைக் கொண்டு அணியப் பெறுவது எந் நாளோ!
நெக்கு நெக்கு, உள் உருகி உருகி, நின்றும், இருந்தும், கிடந்தும், எழுந்தும்,
நக்கும், அழுதும், தொழுதும், வாழ்த்தி; நானா விதத்தால் கூத்து நவிற்றி;
செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கி; சிலிர் சிலிர்த்து;
புக்கு நிற்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
8
மனம் நெகிழ்ந்து நெகிழ்ந்து இடைவிடாது உருகி நின்றும் அமர்ந்தும், படுத்தும், எழுந்தும், சிரித்தும், அழுதும், வணங்கியும் வாயாரத் துதித்துப் பல வகையாகக் கூத்துக்களை இயற்றிச் செவ்வானம் போன்ற திருமேனியை விளங்கப் பார்த்து, மயிர் சிலிர்த்து, என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கத்தைச் சேர்ந்து புகுந்து நிற்பது எந்நாளோ!
தாதாய், மூ ஏழ் உலகுக்கும் தாயே, நாயேன் தனை ஆண்ட
பேதாய், பிறவிப் பிணிக்கு ஓர் மருந்தே, பெரும் தேன் பில்க, எப்போதும்
ஏது ஆம் மணியே!' என்று என்று ஏத்தி, இரவும் பகலும், எழில் ஆர் பாதப்
போது ஆய்ந்து, அணைவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
9
பழமையான ஏழு உலகங்களுக்கும் தந்தையான வனே! தாயானவனே! நாய் போன்ற என்னை ஆட்கொண்ட பித்துடையவனே! பிறவி நோய்க்கு ஒப்பற்ற மருந்து போன்றவனே! பேரறிவாளனே! என்று பலகால் துதித்து என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கத்தைச் சேர்ந்து பேரின்பமாகிய மிக்க தேன் சிந்த இடைவிடாது இரவும் பகலும் அழகு நிறைந்து திருவடியாகிய தாமரை இதழ்களை ஆராய்ந்து சேர்வது எக்காலமோ!
காப்பாய், படைப்பாய், கரப்பாய், முழுதும்; கண் ஆர் விசும்பின் விண்ணோர்க்கு எல்லாம்
மூப்பாய்; மூவா முதலாய் நின்ற முதல்வா; முன்னே எனை ஆண்ட
பார்ப்பானே; எம் பரமா!' என்று, பாடிப் பாடிப் பணிந்து, பாதப்
பூப் போது அணைவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?
10
எல்லா உலகத்தையும் காப்பவனே! படைப் பவனே! ஒடுக்குபவனே! பெருமை நிறைந்த விண்ணுலகிலுள்ள தேவர் களுக்கு எல்லாம் மூத்திருப்பவனே! முதுமை எய்தாத இளையோனாய் நின்ற முதல்வனே! முன்னே என்னை ஆட்கொண்டருளின எம் முடைய மேலோனே! என்று பலகால் பாடி வணங்கி என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கத்தைச் சேர்ந்த பொலிவினையுடைய தாமரை மலரை அணுகப் பெறுவது எந்நாளோ!
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்
8.101
மாணிக்க வாசகர்
திருவாசகம்
சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.01
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - I மெய்யுணர்தல் (1-10) மெய்தான் அரும்பி
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.02
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - II. அறிவுறுத்தல் (11-20)
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.03
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - III. சுட்டறுத்தல் (21-30)
Tune - வெள்ளம் தாழ் விரி சடையாய்! விடையாய்!
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.04
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - IV ஆன்ம சுத்தி (31-40)
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.05
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - V கைம்மாறு கொடுத்தல் (41-50)
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.06
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - VI அநுபோக சுத்தி (51-60)
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.07
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - VII. காருணியத்து இரங்கல் (61-70)
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.08
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் -VIII. ஆனந்தத்து அழுந்தல் (71-80)
Tune - ஈசனோடு பேசியது போதுமே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.09
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் -IX . ஆனந்த பரவசம் (81-90)
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.10
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - X. ஆனந்தாதீதம் (91-100)
Tune - ஹரிவராசனம்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.120
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத
Tune - புறநீர்மை
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.123
மாணிக்க வாசகர்
திருவாசகம்
செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்
Tune - ஹரிவராசனம்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.124
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.125
மாணிக்க வாசகர்
திருவாசகம்
ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.126
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.127
மாணிக்க வாசகர்
திருவாசகம்
புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.128
மாணிக்க வாசகர்
திருவாசகம்
வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்
Tune - அக்ஷரமணமாலை
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.129
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அருட்பத்து - சோதியே சுடரே
Tune - அக்ஷரமணமாலை
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.132
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.133
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.134
மாணிக்க வாசகர்
திருவாசகம்
உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.136
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.138
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.141
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அற்புதப்பத்து - மைய லாய்இந்த
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.142
மாணிக்க வாசகர்
திருவாசகம்
சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச்
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.143
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவார்த்தை - மாதிவர் பாகன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.144
மாணிக்க வாசகர்
திருவாசகம்
எண்ணப்பதிகம் - பாருருவாய
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.147
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்
Tune - ஏரார் இளங்கிளியே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.148
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்
Tune - ஏரார் இளங்கிளியே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.150
மாணிக்க வாசகர்
திருவாசகம்
ஆனந்தமாலை - மின்னே ரனைய
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
12.900
கடவுண்மாமுனிவர்
திருவாதவூரர் புராணம்
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )