சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.101  
சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க
Tune - (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.102  
கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
தில்லை மூதூர் ஆடிய திருவடி பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி, எண் இல் பல் குணம் எழில் பெற விளங்கி, மண்ணும், விண்ணும், வானோர் உலகும், துன்னிய கல்வி தோற்றியும், அழித்தும், | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.103  
திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம், அளப்புஅரும் தன்மை, வளப் பெரும் காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின் நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன; இல் நுழை கதிரின் துன் அணுப் புரைய, | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.104  
போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா
Tune - தென் நாடு உடைய சிவனே, போற்றி! (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
நான்முகன் முதலா வானவர் தொழுதெழ ஈரடி யாலே மூவுல களந்து நால்திசைமுனிவரும் ஐமுலன் மலரப் போற்றிச்செய் கதிர்முதித் திருநெடு மாலன்(று) அடி முடி அரியும் ஆதர வதனிற் | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.105.01  
திருச்சதகம் - I மெய்யுணர்தல் (1-10) மெய்தான் அரும்பி
Tune - அயிகிரி நந்தினி (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
மெய் தான் அரும்பி, விதிர்விதிர்த்து, உன் விரை ஆர் கழற்கு, என் கை தான் தலை வைத்து, கண்ணீர் ததும்பி, வெதும்பி, உள்ளம் பொய் தான் தவிர்ந்து, உன்னை, போற்றி, சய, சய, போற்றி!' என்னும் கை தான் நெகிழவிடேன்; உடையாய்! என்னைக் கண்டுகொள்ளே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.106  
நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக்
Tune - அயிகிரி நந்தினி (Location: உத்தரகோசமங்கை God: Goddess: )
கடையவனேனைக் கருணையினால் கலந்து, ஆண்டுகொண்ட விடையவனே, விட்டிடுதி கண்டாய்? விறல் வேங்கையின் தோல் உடையவனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே, சடையவனே, தளர்ந்தேன்; எம்பிரான், என்னைத் தாங்கிக்கொள்ளே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.107  
திருவெம்பாவை - ஆதியும் அந்தமும்
Tune - (Location: திருவண்ணாமலை God: Goddess: )
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள் தடம் கண் மாதே! வளருதியோ? வன் செவியோ நின் செவி தான்? மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய் வீதிவாய்க் கேட்டலுமே, விம்மி விம்மி, மெய்ம்மறந்து, போது ஆர் அமளியின்மேல் நின்றும் புரண்டு, இங்ஙன் ஏதேனும் ஆகாள், கிடந்தாள்; என்னே! என்னே! ஈதே எம் தோழி பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.108  
திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ்
Tune - தன்னானே நானே நனே; தாநானே தானனே தனே (Location: திருவண்ணாமலை God: Goddess: )
செம் கண் நெடுமாலும் | சென்று இடந்தும்,| காண்பு அரிய பொங்கு மலர்ப் பாதம் |பூதலத்தே |போந்தருளி, எங்கள் பிறப்பு அறுத்திட்டு,| எம் தரமும் |ஆட்கொண்டு, தெங்கு திரள் சோலை,| தென்னன் |பெருந்துறையான், அம் கணன், அந்தணன் ஆய், | அறைகூவி,| வீடு அருளும் அம் கருணை வார் கழலே| பாடுதும் காண்;| அம்மானாய்! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.109  
திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
முத்து நல் தாமம், பூ மாலை, தூக்கி, முளைக்குடம், தூபம், நல் தீபம்,வைம்மின்! சத்தியும், சோமியும், பார் மகளும், நா மகளோடு பல்லாண்டு இசைமின்! சித்தியும், கௌரியும், பார்ப்பதியும், கங்கையும், வந்து, கவரி கொள்மின்! அத்தன், ஐயாறன், அம்மானைப் பாடி, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.110  
திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும் (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
பூ ஏறு கோனும், புரந்தரனும், பொற்பு அமைந்த நா ஏறு செல்வியும், நாரணனும், நான்மறையும், மா ஏறு சோதியும், வானவரும், தாம் அறியாச் சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.111  
திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும் (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
திருமாலும் | பன்றியாய்ச் | சென்று உணராத் | திருவடியை, உரு நாம் | அறிய, ஓர் | அந்தணன் ஆய், | ஆண்டுகொண்டான்; ஒரு நாமம், | ஓர் உருவம், | ஒன்றும் இல்லாற்கு,| ஆயிரம் திருநாமம் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.112  
திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
Tune - பூவேறு கோனும் புரந்தரனும் (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
பூசுவதும் வெள் நீறு, பூண்பதுவும் பொங்கு அரவம், பேசுவதும் திருவாயால் மறை போலும்? காண், ஏடீ! பூசுவதும், பேசுவதும், பூண்பதுவும், கொண்டு என்னை? ஈசன் அவன் எவ் உயிர்க்கும் இயல்பு ஆனான்; சாழலோ! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.113  
திருப்பூவல்லி - இணையார் திருவடி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும் (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
இணை ஆர் திருவடி என் தலைமேல் வைத்தலுமே, துணை ஆன சுற்றங்கள் அத்தனையும், துறந்தொழிந்தேன்; அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன் சீர் பாடி பூவல்லி கொய்யாமோ! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.114  
திருஉந்தியார் - வளைந்தது வில்லு
Tune - அயிகிரி நந்தினி (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.115  
திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும் (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
பூத்து ஆரும் பொய்கைப் புனல் இதுவே, எனக் கருதி, பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே, தீர்த்தாய்; திகழ் தில்லை அம்பலத்தே திரு நடம் செய் கூத்தா! உன் சேவடி கூடும்வண்ணம் தோள் நோக்கம்! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.116  
திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்
Tune - தாலாட்டு பாடல் (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
சீர் ஆர் பவளம் கால், முத்தம் கயிறு, ஆக; ஏர் ஆரும் பொன் பலகை ஏறி, இனிது அமர்ந்து; நாராயணன் அறியா நாள் மலர்த் தாள், நாய் அடியேற்கு ஊர் ஆகத் தந்தருளும் உத்தரகோசமங்கை ஆரா அமுதின் அருள் தாள் இணை பாடி, போர் ஆர் வேல் கண் மடவீர்! பொன் ஊசல் ஆடாமோ. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.117  
அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
வேத மொழியர், வெள் நீற்றர், செம் மேனியர், நாதப் பறையினர்; அன்னே! என்னும், நாதப் பறையினர் நான்முகன், மாலுக்கும், நாதர், இந் நாதனார்; அன்னே! என்னும். | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.118  
குயிற்பத்து - கீத மினிய குயிலே
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
கீதம் இனிய குயிலே! கேட்டியேல், எங்கள் பெருமான் பாதம் இரண்டும் வினவின், பாதாளம் ஏழினுக்கு அப்பால்; சோதி மணி முடி சொல்லின், சொல் இறந்து நின்ற தொன்மை ஆதி குணம் ஒன்றும் இல்லான்; அந்தம் இலான்; வரக் கூவாய்! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.119  
திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே
Tune - ஏரார் இளங்கிளியே (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
ஏர் ஆர் இளம் கிளியே! எங்கள் பெருந்துறைக் கோன் சீர் ஆர் திரு நாமம் தேர்ந்து உரையாய் ஆரூரன், செம் பெருமான்,' வெள் மலரான், பால் கடலான், செப்புவ போல், எம் பெருமான், தேவர் பிரான்,' என்று. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.120  
திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத
Tune - புறநீர்மை (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
போற்றி! என் வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது; பூம் கழற்கு இணை துணைமலர் கொண்டு ஏற்றி, நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கொண்டு, நின் திருவடிதொழுகோம் சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே! ஏற்று உயர் கொடி உடையாய்! எமை உடையாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.121  
கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
உடையாள், உன் தன் நடுவு, இருக்கும்; உடையாள் நடுவுள், நீ இருத்தி; அடியேன் நடுவுள், இருவீரும் இருப்பதானால், அடியேன், உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் பொன்னம்பலத்து எம் முடியா முதலே! என் கருத்து முடியும்வண்ணம், முன் நின்றே! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.122  
கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை
Tune - அக்ஷரமணமாலை (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
மாறி நின்று, என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து; அமுதே ஊறி நின்று; என் உள் எழு பரஞ்சோதி! உள்ளவா காண வந்தருளாய்: தேறலின் தெளிவே! சிவபெருமானே! திருப்பெருந்துறை உறை சிவனே! ஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.123  
செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்
Tune - ஹரிவராசனம் (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
பொய்யனேன் அகம் நெகப் புகுந்து, அமுது ஊறும், புது மலர்க் கழல் இணை அடிபிரிந்தும், கையனேன், இன்னும் செத்திலேன்; அந்தோ! விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன். ஐயனே! அரசே! அருள் பெரும் கடலே! அத்தனே! அயன், மாற்கு, அறி ஒண்ணாச் செய்ய மேனியனே! செய்வகை அறியேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.124  
அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்
Tune - அயிகிரி நந்தினி (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
செழுக் கமலத் திரள் அன, நின் சேவடி சேர்ந்து அமைந்த பழுத்த மனத்து அடியர் உடன் போயினர்; யான், பாவியேன்; புழுக்கண் உடைப் புன் குரம்பை, பொல்லா, கல்வி ஞானம் இலா, அழுக்கு மனத்து அடியேன்; உடையாய்! உன் அடைக்கலமே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.125  
ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்
Tune - கருடக்கொடியோன் (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
கருடக் கொடியோன் காணமாட்டாக் கழல் சேவடி என்னும் பொருளைத் தந்து, இங்கு, என்னை ஆண்ட பொல்லா மணியே! ஓ! இருளைத் துரந்திட்டு, இங்கே வா' என்று, அங்கே, கூவும் அருளைப் பெறுவான், ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.126  
அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்
Tune - கருடக்கொடியோன் (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
வைப்பு, மாடு, என்று; மாணிக்கத்து ஒளி என்று; மனத்திடை உருகாதே, செப்பு நேர் முலை மடவரலியர்தங்கள் திறத்திடை நைவேனை ஒப்பு இலாதன, உவமனில் இறந்தன, ஒள் மலர்த் திருப் பாதத்து அப்பன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.127  
புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை
Tune - கருடக்கொடியோன் (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
சுடர் பொன் குன்றை, தோளா முத்தை, வாளா தொழும்பு உகந்து கடை பட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனை, கரு மால், பிரமன், தடை பட்டு, இன்னும் சாரமாட்டாத் தன்னைத் தந்த என் ஆர் அமுதை, புடை பட்டு இருப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே? | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.128  
வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்
Tune - அக்ஷரமணமாலை (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
பாரொடு, விண்ணாய், பரந்த, எம் பரனே! பற்று நான் மற்று இலேன் கண்டாய்; சீரொடு பொலிவாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! ஆரொடு நோகேன்? ஆர்க்கு எடுத்து உரைக்கேன்? ஆண்ட நீ அருளிலையானால், வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள் புரியாயே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.129  
அருட்பத்து - சோதியே சுடரே
Tune - அக்ஷரமணமாலை (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
சோதியே! சுடரே! சூழ் ஒளி விளக்கே! சுரி குழல், பணை முலை மடந்தை பாதியே! பரனே! பால் கொள் வெள் நீற்றாய்! பங்கயத்து அயனும், மால், அறியா நீதியே! செல்வத் திருப்பெருந்துறையில் நிறை மலர்க் குருந்தம் மேவிய சீர் ஆதியே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.130  
திருக்கழுக்குன்றப் பதிகம் - பிணக்கிலாத பெருந்துறைப்பெரு
Tune - (Location: திருக்கழுக்குன்றம் God: Goddess: )
பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான்! உன் நாமங்கள் பேசுவார்க்கு, இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும்; துன்பமே துடைத்து, எம்பிரான்! உணக்கு இலாதது ஒர் வித்து, மேல் விளையாமல், என் வினை ஒத்த பின், கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.131  
கண்டபத்து - இந்திரிய வயமயங்கி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும் (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
இந்திரிய வயம் மயங்கி, இறப்பதற்கே காரணம் ஆய், அந்தரமே திரிந்து போய், அரு நரகில் வீழ்வேனைச் சிந்தை தனைத் தெளிவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட அந்தம் இலா ஆனந்தம் அணி கொள் தில்லைக் கண்டேனே! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.132  
பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
கலந்து, நின் அடியாரோடு, அன்று, வாளா, களித்திருந்தேன்; புலர்ந்து போன, காலங்கள்; புகுந்து நின்றது இடர், பின் நாள்; உலர்ந்து போனேன்; உடையானே! உலவா இன்பச் சுடர் காண்பான், அலந்து போனேன்; அருள் செய்யாய், ஆர்வம் கூர, அடியேற்கே! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.133  
குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
குழைத்தால், பண்டைக் கொடு வினை, நோய், காவாய்; உடையாய்! கொடு வினையேன் உழைத்தால், உறுதி உண்டோ தான்? உமையாள் கணவா! எனை ஆள்வாய்; பிழைத்தால், பொறுக்க வேண்டாவோ? பிறை சேர் சடையாய்! முறையோ?' என்று அழைத்தால், அருளாது ஒழிவதே, அம்மானே, உன் அடியேற்கே? | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.134  
உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்
Tune - (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
பைந் நாப் பட அரவு ஏர் அல்குல் உமை பாகம் அது ஆய், என் மெய்ந் நாள்தொறும் பிரியா, வினைக் கேடா! விடைப் பாகா! செம் நாவலர் பரசும் புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்! எந் நாள் களித்து, எந் நாள் இறுமாக்கேன், இனி, யானே? | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.135  
அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்; கற்றை வார் சடை எம் அண்ணல், கண் நுதல், பாதம் நண்ணி, மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து, எம் பெம்மாற்கு அற்றிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.136  
திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்
Tune - அயிகிரி நந்தினி (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
பரு வரை மங்கை தன் பங்கரை, பாண்டியற்கு ஆர் அமுது ஆம் ஒருவரை, ஒன்றும் இலாதவரை, கழல் போது இறைஞ்சி, தெரிவர நின்று, உருக்கி, பரி மேற்கொண்ட சேவகனார் ஒருவரை அன்றி, உருவு அறியாது என் தன் உள்ளம் அதே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.137  
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை (Location: சீர்காழி God: Goddess: )
உம்பர்கட்கு அரசே! ஒழிவு அற நிறைந்த யோகமே! ஊத்தையேன் தனக்கு வம்பு எனப் பழுத்து, என் குடி முழுது ஆண்டு, வாழ்வு அற வாழ்வித்த மருந்தே! செம் பொருள் துணிவே! சீர் உடைக் கழலே! செல்வமே! சிவபெருமானே! எம்பொருட்டு, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே? | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.138  
திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை
Tune - பூவேறு கோனும் புரந்தரனும் (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
இரும்பு தரு மனத்தேனை, ஈர்த்து, ஈர்த்து, என் என்பு உருக்கி, கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினை உன் கழல் இணைகள்; ஒருங்கு திரை உலவு சடை உடையானே! நரிகள் எல்லாம் பெரும் குதிரை ஆக்கிய ஆறு அன்றே, உன் பேர் அருளே! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.139  
திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி (Location: திருவாரூர் God: Goddess: )
பூம் கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே, கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூறா, வெண் நீறு ஆடீ, ஓங்கு எயில் சூழ் திருவாரூர் உடையானே, அடியேன், நின் பூம் கழல்கள் அவை அல்லாது, எவை யாதும் புகழேனே! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.140  
குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே
Tune - அயிகிரி நந்தினி (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
ஓடும், கவந்தியுமே, உறவு' என்றிட்டு, உள் கசிந்து; தேடும் பொருளும் சிவன் கழலே எனத் தெளிந்து; கூடும், உயிரும், குமண்டையிடக் குனித்து; அடியேன் ஆடும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.141  
அற்புதப்பத்து - மைய லாய்இந்த
Tune - கருடக்கொடியோன் (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
மையல் ஆய், இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டு, தையலார் எனும் சுழித்தலைப் பட்டு, நான் தலை தடுமாறாமே, பொய் எலாம் விட, திருவருள் தந்து, தன் பொன் அடி இணை காட்டி, மெய்யன் ஆய், வெளி காட்டி, முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.142  
சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச்
Tune - (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
தேவ தேவன், மெய்ச் சேவகன், தென் பெருந்துறை நாயகன், மூவராலும் அறிஒணா, முதல் ஆய, ஆனந்த மூர்த்தியான், யாவர் ஆயினும், அன்பர் அன்றி, அறிஒணா மலர்ச் சோதியான், தூய மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, சுடருமே! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.143  
திருவார்த்தை - மாதிவர் பாகன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
மாது இவர் பாகன், மறை பயின்ற வாசகன், மா மலர் மேய சோதி, கோது இல் பரம் கருணை, அடியார் குலாவும் நீதி குணம் ஆய நல்கும், போது அலர் சோலைப் பெருந்துறை, எம் புண்ணியன், மண்ணிடை வந்திழிந்து, ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.144  
எண்ணப்பதிகம் - பாருருவாய
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும்; பத்திமையும் பெற வேண்டும்; சீர் உரு ஆய சிவபெருமானே, செம் கமல மலர் போல் ஆர் உரு ஆய என் ஆர் அமுதே, உன் அடியவர் தொகை நடுவே, ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி, என்னையும் உய்யக்கொண்டருளே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.145  
யாத்திரைப் பத்து - பூவார் சென்னி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
பூ ஆர் சென்னி மன்னன், எம் புயங்கப் பெருமான், சிறியோமை ஓவாது உள்ளம் கலந்து, உணர்வு ஆய் உருக்கும் வெள்ளக் கருணையினால், ஆ! ஆ!' என்னப் பட்டு, அன்பு ஆய் ஆட்பட்டீர், வந்து ஒருப்படுமின்; போவோம்; காலம் வந்தது காண்; பொய் விட்டு, உடையான் கழல் புகவே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.146  
திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
ஞான வாள் ஏந்தும் ஐயர் நாதப் பறை அறைமின்; மான மா ஏறும் ஐயர் மதி வெண் குடை கவிமின்; ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள்; வான ஊர் கொள்வோம் நாம் மாயப் படை வாராமே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.147  
திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்
Tune - ஏரார் இளங்கிளியே (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
வெய்ய வினை இரண்டும் வெந்து அகல, மெய் உருகி, பொய்யும் பொடி ஆகாது; என் செய்கேன்? செய்ய திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ மருவாது இருந்தேன் மனத்து. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.148  
பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்
Tune - ஏரார் இளங்கிளியே (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா; மால், அயனும், கண்டாரும் இல்லை; கடையேனைத் தொண்டு ஆகக் கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு, நெஞ்சமே! உண்டாமோ கைம்மாறு? உரை. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.149  
திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
கண்கள் இரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.150  
ஆனந்தமாலை - மின்னே ரனைய
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (Location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் God: Goddess: )
மின் நேர் அனைய பூம் கழல்கள் அடைந்தார் கடந்தார், வியன் உலகம்; பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார், அமரர் எல்லாம்; கல் நேர் அனைய மனக் கடையாய், கழிப்புண்டு, அவலக் கடல் வீழ்ந்த என் நேர் அனையேன், இனி, உன்னைக் கூடும்வண்ணம் இயம்பாயே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8 - Thirumurai
Pathigam 8.151  
அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத
Tune - முல்லைத் தீம்பாணி (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை, பத்தி நெறி அறிவித்து, பழ வினைகள் பாறும்வண்ணம், சித்த மலம் அறுவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட அத்தன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே! | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.201  
முதல் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந் துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.202  
இரண்டாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
பூங்கனை யார்புனற் றென்புலி யூர்புரிந் தம்பலத்துள் ஆங்கெனை யாண்டு கொண் டாடும் பிரானடித் தாமரைக்கே பாங்கனை யானன்ன பண்பனைக் கண்டிப் பரிசுரைத்தால் ஈங்கெனை யார்தடுப் பார்மடப் பாவையை யெய்துதற்கே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.203  
மூன்றாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
என்னறி வால்வந்த தன்றிது முன்னும்இன் னும்முயன்றால் மன்னெறி தந்த திருந்தன்று தெய்வம் வருந்தல்நெஞ்சே மின்னெறி செஞ்சடைக் கூத்தப் பிரான்வியன் தில்லைமுந்நீர் பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று மின்றோய் பொழிலிடத்தே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.204  
நான்காம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
எளிதன் றினிக்கனி வாய்வல்லி புல்ல லெழின்மதிக்கீற் றொளிசென்ற செஞ்சடைக் கூத்தப் பிரானையுன் னாரினென்கண் தெளிசென்ற வேற்கண் வருவித்த செல்லலெல் லாந்தெளிவித் தளிசென்ற பூங்குழற் றோழிக்கு வாழி யறிவிப்பனே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.205  
ஐந்தாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
பல்லில னாகப் பகலைவென் றோன்தில்லை பாடலர்போல் எல்லிலன் நாகத்தொ டேனம் வினாவிவன் யாவன்கொலாம் வில்லிலன் நாகத் தழைகையில் வேட்டைகொண் டாட்டமெய்யோர் சொல்லில னாகற்ற வாகட வானிச் சுனைப்புனமே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.206  
ஆறாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்துநெற் றித்தனிக்கண் ஒருத்தன் பயிலுங் கயிலை மலையி னுயர்குடுமித் திருத்தம் பயிலுஞ் சுனைகுடைந் தாடிச் சிலம்பெதிர்கூய் வருத்தம் பயின்றுகொல் லோவல்லி மெல்லியல் வாடியதே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.207  
ஏழாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
மடுக்கோ கடலின் விடுதிமி லன்றி மறிதிரைமீன் படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் தில்லைமுன்றிற் கொடுக்கோ வளைமற்று நும்மையர்க் காயகுற் றேவல்செய்கோ தொடுக்கோ பணியீ ரணியீர் மலர்நும் சுரிகுழற்கே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.208  
எட்டாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
மைவார் கருங்கண்ணி செங்கரங் கூப்பு மறந்துமற்றப் பொய்வா னவரிற் புகாதுதன் பொற்கழற் கேயடியேன் உய்வான் புகவொளிர் தில்லைநின் றோன்சடை மேலதொத்துச் செவ்வா னடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.209  
ஒன்பதாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
ஆவா விருவ ரறியா அடிதில்லை யம்பலத்து மூவா யிரவர் வணங்கநின் றோனையுன் னாரின்முன்னித் தீவா யுழுவை கிழித்ததந் தோசிறி தேபிழைப்பித் தாவா மணிவேல் பணிகொண்ட வாறின்றொ ராண்டகையே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.210  
பத்தாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
பொருளா வெனைப்புகுந் தாண்டு புரந்தரன் மாலயன்பால் இருளா யிருக்கு மொளிநின்ற சிற்றம் பலமெனலாஞ் சுருளார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் துடியிடையீர் அருளா தொழியி னொழியா தழியுமென் னாருயிரே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.211  
பதினொன்றாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
தாதேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை வண்டுதண் டேன்பருகித் தேதே யெனுந்தில்லை யோன்சே யெனச்சின வேலொருவர் மாதே புனத்திடை வாளா வருவர்வந் தியாதுஞ்சொல்லார் யாதே செயத்தக் கதுமது வார்குழ லேந்திழையே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.212  
பன்னிரண்டாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
தேமென் கிளவிதன் பங்கத் திறையுறை தில்லையன்னீர் பூமென் தழையுமம் போதுங்கொள் ளீர்தமி யேன்புலம்ப ஆமென் றருங்கொடும் பாடுகள் செய்துநுங் கண்மலராங் காமன் கணைகொண் டலைகொள்ள வோமுற்றக் கற்றதுவே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.213  
பதின்மூன்றாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
வானுழை வாளம்ப லத்தரன் குன்றென்று வட்கிவெய்யோன் தானுழை யாவிரு ளாய்ப்புற நாப்பண்வண் தாரகைபோல் தேனுழை நாக மலர்ந்து திகழ்பளிங் கால்மதியோன் கானுழை வாழ்வுபெற் றாங்கெழில் காட்டுமொர் கார்ப்பொழிலே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.214  
பதினென்காம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
மருந்துநம் மல்லற் பிறவிப் பிணிக்கம் பலத்தமிர்தாய் இருந்தனர் குன்றினின் றேங்கும் அருவிசென் றேர்திகழப் பொருந்தின மேகம் புதைந்திருள் தூங்கும் புனையிறும்பின் விருந்தினன் யானுங்கள் சீறூ ரதனுக்கு வெள்வளையே. 9; | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.215  
பதினைந்தாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
புகழும் பழியும் பெருக்கிற் பெருகும் பெருகிநின்று நிகழும் நிகழா நிகழ்த்தினல் லாலிது நீநினைப்பின் அகழும் மதிலும் அணிதில்லை யோனடிப் போதுசென்னித் திகழு மவர்செல்லல் போலில்லை யாம்பழி சின்மொழிக்கே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.216  
பதினாறாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
ஒராக மிரண்டெழி லாயொளிர் வோன்தில்லை யொண்ணுதலங் கராகம் பயின்றமிழ் தம்பொதிந் தீர்ஞ்சுணங் காடகத்தின் பராகஞ் சிதர்ந்த பயோதர மிப்பரி சேபணைத்த இராகங்கண் டால்வள்ள லேயில்லை யேயெம ரெண்ணுவதே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.217  
பதினேழாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
எழுங்குலை வாழையின் இன்கனி தின்றிள மந்தியந்தண் செழுங்குலை வாழை நிழலில் துயில்சிலம் பாமுனைமேல் உழுங்கொலை வேல்திருச் சிற்றம் பலவரை உன்னலர்போல் அழுங்குலை வேலன்ன கண்ணிக்கென் னோநின் னருள்வகையே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.218  
பதினெட்டாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
குறைவிற்குங் கல்விக்குஞ் செல்விற்கும் நின்குலத் திற்கும்வந்தோர் நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின்அல் லால்நினையின் இறைவிற் குலாவரை யேந்திவண் தில்லையன் ஏழ்பொழிலும் உறைவிற் குலாநுத லாள்விலை யோமெய்ம்மை யோதுநர்க்கே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.219  
பத்தொன்பதாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
பிரசந் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார் முரசந் திகழு முருகியம் நீங்கும் எவர்க்குமுன்னாம் அரசம் பலத்துநின் றாடும் பிரானருள் பெற்றவரிற் புரைசந்த மேகலை யாய்துயர் தீரப் புகுந்துநின்றே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.220  
இருபதாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
சீரள வில்லாத் திகழ்தரு கல்விச்செம் பொன்வரையின் ஆரள வில்லா அளவுசென் றாரம் பலத்துள்நின்ற ஓரள வில்லா ஒருவன் இருங்கழ லுன்னினர்போல் ஏரள வில்லா அளவின ராகுவ ரேந்திழையே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.221  
இருபத்தொன்றாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள் வீப்பான் வியன்தில்லை யானரு ளால்விரி நீருலகங் காப்பான் பிரியக் கருதுகின் றார்நமர் கார்க்கயற்கட் பூப்பால் நலமொளி ரும்புரி தாழ்குழற் பூங்கொடியே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.222  
இருபத்திரண்டாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
மிகைதணித் தற்கரி தாமிரு வேந்தர்வெம் போர்மிடைந்த பகைதணித் தற்குப் படர்தலுற் றார்நமர் பல்பிறவித் தொகைதணித் தற்கென்னை யாண்டுகொண் டோன்தில்லைச் சூழ்பொழில்வாய் முகைதணித் தற்கரி தாம்புரி தாழ்தரு மொய்குழலே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.223  
இருபத்திமூன்றாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
போது குலாய புனைமுடி வேந்தர்தம் போர்முனைமேல் மாது குலாயமென் னோக்கிசென் றார்நமர் வண்புலியூர்க் காது குலாய குழையெழி லோனைக் கருதலர்போல் ஏதுகொ லாய்விளை கின்றதின் றொன்னா ரிடுமதிலே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.224  
இருபத்திநான்காம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியுமெனப் பனிவருங் கண்பர மன்திருச் சிற்றம் பலமனையாய் துனிவரு நீர்மையி தென்னென்று தூநீர் தெளித்தளிப்ப நனிவரு நாளிது வோவென்று வந்திக்கும் நன்னுதலே. | [1] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8 - Thirumurai
Pathigam 8.225  
இருபத்தைந்தாம் அதிகாரம்
Tune - (Location: கோயில் (சிதம்பரம்) God: Goddess: )
உடுத்தணி வாளர வன்தில்லை யூரன் வரவொருங்கே எடுத்தணி கையே றினவளை யார்ப்ப இளமயிலேர் கடுத்தணி காமர் கரும்புரு வச்சிலை கண்மலரம் படுத்தணி வாளிளை யோர்சுற்றும் பற்றினர் மாதிரமே. | [1] |