| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
- Hide Meaning https://sivaya.org/thiruvaasagam/28 Valapatthu Thiruvasagam.mp3 Add audio link
8.128
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் - அக்ஷரமணமாலை
எழுசீர் விருத்தம்
பாரொடு, விண்ணாய், பரந்த, எம் பரனே! பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
சீரொடு பொலிவாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஆரொடு நோகேன்? ஆர்க்கு எடுத்து உரைக்கேன்? ஆண்ட நீ அருளிலையானால்,
வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள் புரியாயே.
1
மண்முதல் விண் ஈறாகக் கலந்து விளங்கும், எமது மேலோனே! சிறப்பொடு விளங்குகின்றவனே! சிவலோகநாதனே! திருப்பெருந்துறையில் வாழ்கின்ற சிவபெருமானே! என்னை ஆண்டருளின நீயே அருள் செய்யவில்லை என்றால் நான் யாரோடு நொந்து கொள்வேன்? யாரிடம் இதை எடுத்துச் சொல்வேன்? நான் வேறு பற்றுக் கோடு இல்லேன். நெடிய கடல் சூழ்ந்த இவ்வுலகில் வாழ ஒருப்படேன்: என்னை வருவாய் என்று அழைத்து அருள் செய்வாயாக!
வம்பனேன் தன்னை ஆண்ட மா மணியே! மற்று நான் பற்று இலேன் கண்டாய்;
உம்பரும் அறியா ஒருவனே! இருவர்க்கு உணர்வு இறந்து, உலகம் ஊடுருவும்
செம் பெருமானே! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
எம்பெருமானே! என்னை ஆள்வானே! என்னை, நீ கூவிக்கொண்டருளே.
2
வீணனாகிய என்னை ஆண்டருளின பெருமையை யுடைய மாணிக்கமே! தேவரும் அறிய முடியாத ஒருவனே! திருமால் பிரமனாகிய இருவருக்கும் உள்ள உணர்ச்சியைக் கடந்து, எல்லா உலகங்களிலும் ஊடுருவிச் சென்ற செம்மேனி அம்மானே! சிவலோக நாதனே! திருப் பெருந்துறையின் சிவனே! எம் தலைவனே! என்னை ஆளாக வுடையானே! நான் வேறு பற்றுக் கோடு இல்லேன்; அடியேனை, நீ அழைத்துக் கொண்டு அருள் புரிவாயாக.
பாடி, மால், புகழும் பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
தேடி, நீ ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஊடுவது உன்னோடு; உவப்பதும் உன்னை; உணர்த்துவது, உனக்கு, எனக்கு உறுதி;
வாடினேன்; இங்கு வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.
3
சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! திருமால் புகழ்ந்து பாடுகின்ற உன்னு டைய திருவடியை அன்றி நான் வேறு ஒரு பற்றுக்கோடும் இல்லேன். என்னைத் தேடிவந்து நீ ஆண்டருளினை; பிணங்குவது உன்னோடு, நான் மகிழ்வதும் உன்னையே; உன்னிடத்தில் நான் தெரிந்து கொள்வது என் உயிர்க்கு நன்மை ஆவதேயாம்; நான் துணை இன்மை யால் வாடியிருக்கிறேன்; இவ்வுலகில் வாழ ஒருப்படேன்; வருவாய் என்று அழைத்து அருள் செய்வாயாக!.
வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே! மற்று நான் பற்று இலேன் கண்டாய்;
தில்லை வாழ் கூத்தா! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
எல்லை மூ உலகும் உருவி, அன்று, இருவர் காணும் நாள், ஆதி, ஈறு, இன்மை
வல்லையாய் வளர்ந்தாய்; வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.
4
விரைவிலே வாளை ஏந்திய அரக்கரது முப்புரங் களையும் நீறாக்கியவனே! தில்லையில் வீளங்குகின்ற கூத்தப் பெருமானே! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! விண், நிலம், பாதலம் என்னும் எல்லைகளையுடைய மூன்று உலகத்தையும் கடந்து அக்காலத்தில், திருமால் பிரமனாகிய இருவரும் காணப்புகுந்த நாளில், முதலும் முடிவும் இன்றித் தோன்ற வல்லவனாய் வளர்ந்தவனே! நான் வேறு பற்றுக்கோடு இல்லேன். வாழமாட்டேன். வருவாய் என்று அழைத்து அருள்புரிவாயாக!.
பண்ணின் நேர் மொழியாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
திண்ணமே ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
எண்ணமே, உடல், வாய், மூக்கொடு, செவி, கண், என்று இவை நின்கணே வைத்து,
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.
5
பண்ணினை ஒத்த மொழியாளாகிய உமையம்மை யின் பங்கனே! என்னை உண்மையாகவே ஆட்கொண்டருளியவனே! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! உன்னையன்றி நான் வேறு ஒரு பற்றுக் கோடு இல்லேன். என் நினைவு, மெய், வாய், நாசியொடு, செவிகளும், கண்களும் உன்னிடத்தே வைத்ததனால் மண்ணுலகத்தினிடம் நான் வாழ மாட்டேன். வருவாய் என்று அழைத்து அருள் செய்வாயாக!.
Go to top
பஞ்சின் மெல் அடியாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
செஞ்செவே ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
அஞ்சினேன் நாயேன்; ஆண்டு, நீ அளித்த அருளினை, மருளினால் மறந்த
வஞ்சனேன், இங்கு வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.
6
பஞ்சினும் மென்மையான பாதங்களை உடைய உமையம்மையின் பங்கனே! உன்னையன்றி நான் வேறு ஒரு பற்றுக்கோடும் இல்லேன். மிகவும் செம்மையாகவே ஆண்டருளினை! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! நாய்போன்ற நான் பயப்படுகின்றேன். நீ ஆட்கொண்டு வழங்கிய கருணையை மயக்கத்தினால் மறந்த வஞ்சகனாகிய நான் இவ்வுலகில் வாழமாட்டேன். வருவாய் என்றழைத்து அருள்புரிவாயாக!.
பருதி வாழ் ஒளியாய்! பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
திரு உயர் கோலச் சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
கருணையே நோக்கிக் கசிந்து, உளம் உருகிக் கலந்து, நான் வாழும் ஆறு அறியா
மருளனேன், உலகில் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.
7
சூரிய மண்டலத்தில் எழுந்தருளியிருக்கும் ஒளி வடிவானவனே! செல்வத்தாற்சிறந்த அழகிய சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! உன் திருவடியை அன்றி நான் வேறு ஒரு பற்றுக் கோடும் இல்லேன்; நான் உன் திருவருளையே கருதி உள்ளம் கனிந்து உருகி உன்னோடு கலந்து, வாழும் வகையினை அறியாத மயக்க உணர்வினையுடையேன். இவ் வுலகத்தில் வாழமாட்டேன். ஆதலால், வருவாய் என்றழைத்து அருள் புரிவாயாக!.
பந்து அணை விரலாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
செம் தழல் போல்வாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
அந்தம் இல் அமுதே! அரும் பெரும் பொருளே! ஆர் அமுதே! அடியேனை
வந்து உய, ஆண்டாய்; வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.
8
பந்து பொருந்திய விரலினை உடைய உமையம்மை யின் பங்கனே! நீ அன்றி நான் வேறு ஒரு பற்றுக் கோடும் இல்லேன்; செம்மையான நெருப்புப் போன்றவனே! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! அழிவில்லா அமுதமே! சுவை முடிவில்லா பரம்பொருளே! அருமையான அமுதமே! நீயே வந்து அடியேனை உய்யும் வண்ணம் ஆட்கொண் டருளினை. இவ்வுலகில் வாழமாட்டேன்; வருவாய் என்றழைத்து அருள்புரிவாயாக!.
பாவ நாசா, உன் பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
தேவர் தம் தேவே, சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
மூ உலகு உருவ, இருவர் கீழ் மேலாய், முழங்கு அழலாய், நிமிர்ந்தானே!
மா உரியானே! வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.
9
பாவத்தை நீக்குபவனே! தேவர்தம் தலைவனே! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! மூன்று உலகங்களும் ஊடுருவும் வண்ணம் திருமால் பிரமனாகிய இருவரும், கீழும் மேலுமாய்த் தேட ஒலிக்கின்ற அனற்பிழம்பாகி வளர்ந்தவனே! யானைத் தோலுடையானே! உன் திருவடியே அன்றி நான் வேறு ஒரு பற்றுக்கோடு இல்லேன்; இவ்வுலகில் நான் வாழமாட்டேன்; வருவாய் என்றழைத்து அருள் புரிவாயாக!.
பழுது இல் தொல் புகழாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
செழு மதி அணிந்தாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
தொழுவனோ பிறரை? துதிப்பனோ? எனக்கு ஓர் துணை என நினைவனோ? சொல்லாய்;
மழ விடையானே! வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.
10
குற்றம் இல்லாத தொன்மையான புகழை உடைய உமையம்மையின் பங்கனே! இளங்காளையை ஊர்தியாக உடையவனே! செழுமையதாகிய பிறையை அணிந்தவனே! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! உன்னையன்றி நான் வேறு ஒரு பற்றுக்கோடும் இல்லேன். ஆதலால், பிற தெய்வங்களை வணங்குவேனோ? வாயால் வாழ்த்துவேனோ? எனக்கு ஒரு துணை என்று மனத்தால் நினைப்பேனோ? சொல் வாயாக; இவ்வுலகத்தில் வாழமாட்டேன்; வருவாய் என்று அழைத்து அருள் புரிவாயாக!
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்
8.101
மாணிக்க வாசகர்
திருவாசகம்
சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.01
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - I மெய்யுணர்தல் (1-10) மெய்தான் அரும்பி
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.02
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - II. அறிவுறுத்தல் (11-20)
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.03
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - III. சுட்டறுத்தல் (21-30)
Tune - வெள்ளம் தாழ் விரி சடையாய்! விடையாய்!
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.04
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - IV ஆன்ம சுத்தி (31-40)
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.05
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - V கைம்மாறு கொடுத்தல் (41-50)
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.06
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - VI அநுபோக சுத்தி (51-60)
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.07
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - VII. காருணியத்து இரங்கல் (61-70)
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.08
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் -VIII. ஆனந்தத்து அழுந்தல் (71-80)
Tune - ஈசனோடு பேசியது போதுமே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.09
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் -IX . ஆனந்த பரவசம் (81-90)
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.10
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - X. ஆனந்தாதீதம் (91-100)
Tune - ஹரிவராசனம்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.120
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத
Tune - புறநீர்மை
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.123
மாணிக்க வாசகர்
திருவாசகம்
செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்
Tune - ஹரிவராசனம்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.124
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.125
மாணிக்க வாசகர்
திருவாசகம்
ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.126
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.127
மாணிக்க வாசகர்
திருவாசகம்
புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.128
மாணிக்க வாசகர்
திருவாசகம்
வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்
Tune - அக்ஷரமணமாலை
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.129
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அருட்பத்து - சோதியே சுடரே
Tune - அக்ஷரமணமாலை
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.132
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.133
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.134
மாணிக்க வாசகர்
திருவாசகம்
உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.136
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.138
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.141
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அற்புதப்பத்து - மைய லாய்இந்த
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.142
மாணிக்க வாசகர்
திருவாசகம்
சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச்
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.143
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவார்த்தை - மாதிவர் பாகன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.144
மாணிக்க வாசகர்
திருவாசகம்
எண்ணப்பதிகம் - பாருருவாய
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.147
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்
Tune - ஏரார் இளங்கிளியே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.148
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்
Tune - ஏரார் இளங்கிளியே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.150
மாணிக்க வாசகர்
திருவாசகம்
ஆனந்தமாலை - மின்னே ரனைய
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
12.900
கடவுண்மாமுனிவர்
திருவாதவூரர் புராணம்
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )