| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
- Hide Meaning https://sivaya.org/thiruvaasagam/47 Thiruvenba Thiruvasagam.mp3 Add audio link
8.147
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் - ஏரார் இளங்கிளியே
நேரிசை வெண்பா
அணைந்தோர் தன்மை; சிவனை முழுமையாகச் சரணடைந்து, சீவன் முக்தர்களாக விளங்கும் அடியவர்களின் இயல்பு, மெய்யுருகிப் பொய்யும் பொடியாகி, வினை நீங்கிச் சிவத்தை எய்தும் பதிகம்.
வெய்ய வினை இரண்டும் வெந்து அகல, மெய் உருகி,
பொய்யும் பொடி ஆகாது; என் செய்கேன்? செய்ய
திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ
மருவாது இருந்தேன் மனத்து.
1
திருப்பெருந்துறையை உடையவனாகிய இறை வனை அடையாது இருந்தேன்; என் மனத்தில் கொடிய வினை ஒழிய உடல் உருகிப் பொய்யும் பொடியாகாதுள்ளது. இதற்கு நான் என் செய்வேன்?.
ஆர்க்கோ? அரற்றுகோ? ஆடுகோ? பாடுகோ?
பார்க்கோ? பரம்பரனே, என் செய்கேன்? தீர்ப்பு அரிய
ஆனந்த மால் ஏற்றும் அத்தன், பெருந்துறையான்
தான்' என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து?
2
என்னோடு கூடி நின்று, இன்பப் பித்தேற்றுவான் திருப்பெருந்துறை இறைவனே என்று என்பால் தெளிவிப்பார் ஒருவர் உளராயின் அவரைப் பணிந்து ஆரவாரிப்பேனோ?. அரற்று வேனோ?. ஆடுவேனோ?. பாடுவேனோ?. நான் என் செய்து பாராட்டுவேன்?.
செய்த பிழை அறியேன்; சேவடியே, கை தொழுதே,
உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன் வையத்து
இருந்து, உறையுள் வேல் மடுத்து, என் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான்.
3
திருப்பெருந்துறை இறைவன் தன் வேலை என் மனத்துக் கோத்தான்; இதற்குக் காரணமாக நான் செய்த பிழையை அறிந்திலேன்; அவனது திருவடியையே கைதொழுது உய்யும் வகையின் நிலையையும் அறிந்திலேன்.
முன்னை வினை இரண்டும் வேர் அறுத்து, முன் நின்றான்
பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன்; தென்னன்;
பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்;
வரும் துயரம் தீர்க்கும் மருந்து.
4
மேல்வரக் கடவனவாகிய பிறவிகளை நீக்கும் பெரி யோனும், தென்னனும், திருப்பெருந்துறையை உடையவனும், பெருங் கருணையாளனும், வரும் துன்பங்களைத் தீர்க்கும் மருந்தாய் இருப் பவனும் ஆகிய சிவபெருமான், நான் முன்செய்தவினை இரண்டையும் வேரறுத்து எனக்கு எதிரே நின்றான்.
அறையோ, அறிவார்க்கு? அனைத்து உலகும் ஈன்ற
மறையோனும், மாலும், மால் கொள்ளும் இறையோன்;
பெருந்துறையுள் மேய பெருமான்; பிரியாது
இருந்து உறையும், என் நெஞ்சத்து இன்று.
5
அறியப் புகுவார்க்குச் சொல்லளவேயாமோ?. பிரமனும் திருமாலும் அறியாது மயக்கத்தை அடைகின்ற இறைவனும் திருப்பெருந்துறையில் எழுந்தருளினவனும் ஆகிய சிவபிரான், இன்று என் மனத்தில் தங்கி வாழ்கின்றான்.
Go to top
பித்து என்னை ஏற்றும்; பிறப்பு அறுக்கும்; பேச்சு அரிது ஆம்;
மத்தமே ஆக்கும், வந்து, என் மனத்தை; அத்தன்,
பெருந்துறையான், ஆட்கொண்டு பேர் அருளால் நோக்கும்
மருந்து, இறவாப் பேரின்பம், வந்து.
6
திருப்பெருந்துறை இறைவன், வந்து என்னைப் பித்தேற்றுவான்; என் பிறவியை அறுப்பான்; துதித்தற்கு அரியனான இறைவன் என் மனத்தைக் களிப்படையச் செய்வான்.
வாரா வழி அருளி வந்து, எனக்கு மாறு இன்றி,
ஆரா அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர்
திருத்தன், பெருந்துறையான், என் சிந்தை மேய
ஒருத்தன், பெருக்கும் ஒளி.
7
திருப்பெருந்துறை இறைவனும், என் மனத்தில் எழுந்தருளி இருக்கும் ஒருவனுமாகிய இறைவன் பெருக்கிய ஒளி வந்து இனிப் பிறவிக்கு வாராத வழியை அருளி, எனக்கு ஆராவமுதாக அமைந்து இருந்தது அன்றோ?.
யாவர்க்கும் மேல் ஆம் அளவு இலாச் சீர் உடையான்,
யாவர்க்கும் கீழ் ஆம் அடியேனை, யாவரும்
பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு, என் எம்பெருமான்!
மற்று அறியேன் செய்யும் வகை.
8
எல்லார்க்கும் மேலாகிய இறைவன், எல்லா வற்றிலும் கீழாகிய என்னைப் பேரின்பத்துள் வைத்தான். அவனுக்குக் கைம்மாறு செய்யும் வகை அறியேன்.
மூவரும், முப்பத்து மூவரும், மற்று ஒழிந்த
தேவரும், காணாச் சிவபெருமான் மா ஏறி,
வையகத்தே வந்திழிந்த வார் கழல்கள் வந்திக்க,
மெய்யகத்தே இன்பம் மிகும்.
9
மும்மூர்த்திகளும், முப்பத்து மூன்று தேவர்களும், மற்றைத் தேவர்களும் கண்டறியாத சிவபெருமானுடைய திருவடி களை வணங்கினால், உண்மையாகிய மனத்தின்கண் ஆனந்தம் திகழும்.
இருந்து என்னை ஆண்டான் இணை அடியே சிந்தித்து
இருந்து, இரந்துகொள், நெஞ்சே! எல்லாம் தரும் காண்
பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்,
மருந்து உருவாய், என் மனத்தே, வந்து.
10
நெஞ்சே! என்னை ஆண்டருளினவனாகிய இறைவனது திருவடியைச் சிந்தித்துக் கொண்டிருந்து, வேண்டும் பொருள்களை எல்லாம் வேண்டிக் கொள். வேண்டினால் திருப்பெருந் துறையான் நீ வேண்டுவனவற்றை எல்லாம் தந்தருளுவான்.
Go to top
இன்பம் பெருக்கி, இருள் அகற்றி, எஞ்ஞான்றும்
துன்பம் தொடர்வு அறுத்து, சோதி ஆய், அன்பு அமைத்து,
சீர் ஆர் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊர் ஆகக் கொண்டான், உவந்து.
11
திருப்பெருந்துறையான் ஆனந்தம் பெருகச் செய்து அஞ்ஞான இருளை அகற்றித் துன்பத்தை வேரறுத்துத் தன்னிடத்து அன்பையும் எனக்கு அருள் செய்து, என் மனத்தையே தனக்குத் திருக்கோயிலாகக் கொண்டான்.
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்
8.101
மாணிக்க வாசகர்
திருவாசகம்
சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.01
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - I மெய்யுணர்தல் (1-10) மெய்தான் அரும்பி
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.02
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - II. அறிவுறுத்தல் (11-20) நாடகத்தால் உன் அடியார்போல்
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.03
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - III. சுட்டறுத்தல் (21-30) வெள்ளம் தாழ் விரி சடையாய்!
Tune - வெள்ளம் தாழ் விரி சடையாய்!
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.04
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - IV ஆன்ம சுத்தி (31-40) ஆடுகின்றிலை; கூத்துஉடையான்
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.05
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - V கைம்மாறு கொடுத்தல் (41-50) இரு கை யானையை ஒத்து இருந்து
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.06
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - VI அநுபோக சுத்தி (51-60) ஈசனே! என் எம்மானே
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.07
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - VII. காருணியத்து இரங்கல் (61-70) தரிக்கிலேன் காய வாழ்க்கை
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.08
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் -VIII. ஆனந்தத்து அழுந்தல் (71-80) புணர்ப்ப தொக்க எந்தை என்னை
Tune - ஓம் நம சிவாய ஓம் - ஓம் நம சிவாய
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.09
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் -IX . ஆனந்த பரவசம் (81-90) விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.10
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - X. ஆனந்தாதீதம் (91-100) மாறு இலாத மாக் கருணை வெள்ளமே
Tune - ஹரிவராசனம்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.120
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத
Tune - புறநீர்மை
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.123
மாணிக்க வாசகர்
திருவாசகம்
செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்
Tune - ஹரிவராசனம்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.124
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.125
மாணிக்க வாசகர்
திருவாசகம்
ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.126
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.127
மாணிக்க வாசகர்
திருவாசகம்
புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.128
மாணிக்க வாசகர்
திருவாசகம்
வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்
Tune - அக்ஷரமணமாலை
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.129
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அருட்பத்து - சோதியே சுடரே
Tune - அக்ஷரமணமாலை
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.132
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.133
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.134
மாணிக்க வாசகர்
திருவாசகம்
உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.136
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.138
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.141
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அற்புதப்பத்து - மைய லாய்இந்த
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.142
மாணிக்க வாசகர்
திருவாசகம்
சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச்
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.143
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவார்த்தை - மாதிவர் பாகன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.144
மாணிக்க வாசகர்
திருவாசகம்
எண்ணப்பதிகம் - பாருருவாய
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.147
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்
Tune - ஏரார் இளங்கிளியே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.148
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்
Tune - ஏரார் இளங்கிளியே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.150
மாணிக்க வாசகர்
திருவாசகம்
ஆனந்தமாலை - மின்னே ரனைய
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
12.900
கடவுண்மாமுனிவர்
திருவாதவூரர் புராணம்
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )