வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம் பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான் தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனும் கீழ்மேலுற நின்றான்திருக் கேதாரமெ னீரே
|
1
|
பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர் குறிகூவிய கூற்றங்கொளு நாளால் அறம் உளவே அறிவானிலும் அறிவான்நல நறுநீரொடு சோறு கிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே
|
2
|
கொம்பைப்பிடித் தொருக்காலர்க ளிருக்கான்மலர் தூவி நம்பன்நமை யாள்வான்என்று நடுநாளையும் பகலும் கம்பக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களைத் தூவிச் செம்பொற்பொடி சிந்துந்திருக் கேதாரமெ னீரே
|
3
|
உழக்கேயுண்டு படைத்தீட்டிவைத் திழப்பார்களுஞ் சிலர்கள் வழக்கேயெனிற் பிழைக்கேமென்பர் மதிமாந்திய மாந்தர் சழக்கேபறி நிறைப்பாரொடு தவமாவது செயன்மின் கிழக்கேசல மிடுவார்தொழு கேதாரமெ னீரே
|
4
|
வாளோடிய தடங்கண்ணியர் வலையில்லழுந் தாதே நாளோடிய நமனார்தமர் நணுகாமுனம் நணுகி ஆளாயுய்ம்மின் அடிகட்கிட மதுவேயெனில் இதுவே கீளோடர வசைத்தானிடங் கேதாரமெ னீரே
|
5
|
Go to top |
தளிசாலைகள் தவமாவது தம்மைப்பெறி லன்றே குளியீருளங் குருக்கேத்திரங் கோதாவிரி குமரி தெளியீர்உளஞ் சீபர்ப்பதம் தெற்குவடக் காகக் கிளிவாழைஒண் கனிகீறியுண் கேதாரமெ னீரே
|
6
|
பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவேய்முழ வதிரக் கண்ணின்னொளி கனகச்சுனை வயிரம்மவை சொரிய மண்ணின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண் டெறியக் கிண்ணென்றிசை முரலுந்திருக் கேதாரமெ னீரே
|
7
|
முளைக்கைப்பிடி முகமன்சொலி முதுவேய்களை இறுத்துத் துளைக்கைக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களைத் தூவி வளைக்கைப்பொழி மழைகூர்தர மயில்மான்பிணை நிலத்தைக் கிளைக்கமணி சிந்துந்திருக் கேதாரமெ னீரே
|
8
|
பொதியேசுமந் துழல்வீர்பொதி அவமாவதும் அறியீர் மதிமாந்திய வழியேசென்று குழிவீழ்வதும் வினையால் கதிசூழ்கடல் இலங்கைக்கிறை மலங்கவ்வரை யடர்த்துக் கெதிபேறுசெய் திருந்தானிடங் கேதாரமெ னீரே
|
9
|
நாவின்மிசை யரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன் யாவர்சிவ னடியார்களுக் கடியானடித் தொண்டன் தேவன்திருக் கேதாரத்தை ஊரன்னுரை செய்த பாவின்றமிழ் வல்லார்பர லோகத்திருப் பாரே
|
10
|
Go to top |