சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.086   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்) - சீகாமரம் தீரசங்கராபரணம் நாதநாமக்கிரியை கஜகௌரி ராகத்தில் திருமுறை அருள்தரு அமிர்தவல்லியம்மை உடனுறை அருள்மிகு பனங்காட்டீசுவரர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=2S4DswwYZWs   Add audio link Add Audio
விடையின்மேல் வருவானை
வேதத்தின் பொருளானை
அடையில்அன் புடையானை
யாவர்க்கும் அறிவொண்ணா
மடையில்வா ளைகள்பாயும்
வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
சடையிற்கங்கை தரித்தானைச்
சாராதார் சார்வென்னே


1


அறையும்பைங் கழலார்ப்ப
அரவாட அனலேந்திப்
பிறையுங்கங் கையுஞ்சூடிப்
பெயர்ந்தாடும் பெருமானார்
பறையுஞ்சங் கொலியோவாப்
படிறன்றன் பனங்காட்டூர்
உறையுமெங் கள்பிரானை
உணராதார் உணர்வென்னே


2


தண்ணார்மா மதிசூடித்
தழல்போலுந் திருமேனிக்
கெண்ணார்நாண் மலர்கொண்டங்
கிசைந்தேத்து மடியார்கள்
பண்ணார்பா டலறாத
படிறன்றன் பனங்காட்டூர்
பெண்ணாணா யபிரானைப்
பேசாதார் பேச்சென்னே


3


நெற்றிக்கண் ணுடையானை
நீறேறுந் திருமேனிக்
குற்றமில் குணத்தானைக்
கோணாதார் மனத்தானைப்
பற்றிப்பாம் பரையார்த்த
படிறன்றன் பனங்காட்டூர்ப்
பெற்றொன்றே றும்பிரானைப்
பேசாதார் பேச்சென்னே


4


உரமென்னும் பொருளானை
உருகிலுள் ளுறைவானைச்
சிரமென்னுங் கலனானைச்
செங்கண்மால் விடையானை
வரமுன்னம்அருள்செய்வான்
வன்பார்த்தான்பனங்காட்டூர்ப்
பரமன்எங் கள்பிரானைப்
பரவாதார் பரவென்னே


5


Go to top
எயிலார்பொக் கம்மெரித்த
எண்டோள்முக் கண்ணிறைவன்
வெயிலாய்க்காற் றெனவீசி
மின்னாய்த்தீ யெனநின்றான்
மயிலார்சோ லைகள்சூழ்ந்த
வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
பயில்வானுக் கடிமைக்கட்
பயிலாதார் பயில்வென்னே


6


மெய்யன்வெண் பொடிபூசும்
விகிர்தன்வே தமுதல்வன்
கையின்மான் மழுவேந்திக்
காலன்கா லம்மறுத்தான்
பைகொள்பாம் பரையார்த்த
படிறன்றன் பனங்காட்டூர்
ஐயன்எங் கள்பிரானை
அறியாதார் அறிவென்னே


7


வஞ்சமற்ற மனத்தாரை
மறவாத பிறப்பிலியைப்
பஞ்சிச்சீ றடியாளைப்
பாகம்வைத் துகந்தானை
மஞ்சுற்ற மணிமாட
வன்பார்த்தான் பனங்காட்டூர்
நெஞ்சத்தெங் கள்பிரானை
நினையாதார் நினைவென்னே


8


மழையானுந் திகழ்கின்ற
மலரோனென் றிருவர்தாம்
உழையாநின் றவருள்க
உயர்வானத் துயர்வானைப்
பழையானைப் பனங்காட்டூர்
பதியாகத் திகழ்கின்ற
குழைகாதற் கடிமைக்கட்
குழையாதார் குழைவென்னே


9


பாரூரும் பனங்காட்டூர்ப்
பவளத்தின் படியானைச்
சீரூருந் திருவாரூர்ச்
சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் னடித்தொண்டன்
அடியன்சொல் அடிநாய்சொல்
ஊரூரன் உரைசெய்வார்
உயர்வானத் துயர்வாரே


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்)
7.086   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   விடையின் மேல் வருவானை; வேதத்தின்
Tune - சீகாமரம்   (திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்) பனங்காட்டீசுவரர் அமிர்தவல்லியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 7.086