சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.057   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவாவடுதுறை - கொல்லி கனகாங்கி நவரோசு கனகாம்பரி ராகத்தில் திருமுறை அருள்தரு ஒப்பிலாமுலையம்மை உடனுறை அருள்மிகு மாசிலாமணியீசுவரர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=_3VaGscvF20   Add audio link Add Audio

மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும் ஆனாய்;
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே!
துஞ்சும் போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று(வ்)
அஞ்சல்! என்று அருள வேண்டும் ஆவடுதுறை உளானே!

1

நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும்
ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள் உற ஐவர் நின்றார்
தான் உகந்தே உகந்த தகவு இலாத் தொண்டனேன், நான்;
ஆன் உகந்து ஏறுவானே! ஆவடுதுறை உளானே!

2

கட்டமே வினைகள் ஆன காத்து, இவை நோக்கி, ஆள் ஆய்
ஒட்டவே ஒட்டி, நாளும் உன்னை உள் வைக்க மாட்டேன்-
பட்ட வான் தலை கை ஏந்திப் பலி திரிந்து ஊர்கள் தோறும்
அட்டமா உருவினானே! ஆவடுதுறை உளானே!

3

பெருமை நன்று உடையது இல்லை என்று நான் பேச மாட்டேன்;
ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏறமாட்டேன்;
கருமை இட்டு ஆய ஊனைக் கட்டமே கழிக்கின்றேன், நான்;
அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே!

4

துட்டனாய் வினை அது என்னும் சுழித்தலை அகப்பட்டேனைக்
கட்டனா ஐவர் வந்து கலக்காமை காத்துக் கொள்வாய்
மட்டு அவிழ் கோதை தன்னை மகிழ்ந்து ஒரு பாகம் வைத்து(வ்)
அட்டமா நாகம் ஆட்டும் ஆவடுதுறை உளானே!

5
Go to top

கார் அழல் கண்டம் மேயாய்; கடி மதில் புரங்கள் மூன்றும்
ஓர் அழல் அம்பினாலே உகைத்துத் தீ எரிய மூட்டி
நீர் அழல் சடை உளானே! நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே!

6

செறிவு இலேன்; சிந்தையுள்ளே சிவன் அடி தெரிய மாட்டேன்;
குறி இலேன்; குணம் ஒன்று இல்லேன்; கூறுமா கூற மாட்டேன்;
நெறி படு மதி ஒன்று இல்லேன்; நினையுமா நினைய மாட்டேன்;
அறிவு இலேன்; அயர்த்துப் போனேன்-ஆவடுதுறை உளானே!

7

கோலம் மா மங்கை தன்னைக் கொண்டு ஒரு கோலம் ஆய
சீலமே அறிய மாட்டேன்; செய்வினை மூடி நின்று
ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய்
ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே!

8

நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும் நேட,
கடியது ஓர் உருவம் ஆகி, கனல்-எரி ஆகி, நின்ற
வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகார்
அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே.

9

மலைக்கு நேர் ஆய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்சத்
தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள
உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து, அவற்கு அருள்கள் செய்து(வ்)
அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே.

10
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாவடுதுறை
3.004   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இடரினும், தளரினும், எனது உறு
Tune - காந்தாரபஞ்சமம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
4.056   திருநாவுக்கரசர்   தேவாரம்   மா-இரு ஞாலம் எல்லாம் மலர்
Tune - திருநேரிசை:காந்தாரம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
4.057   திருநாவுக்கரசர்   தேவாரம்   மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும்
Tune - கொல்லி   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
5.029   திருநாவுக்கரசர்   தேவாரம்   நிறைக்க வாலியள் அல்லள், இந்
Tune - திருக்குறுந்தொகை   (திருவாவடுதுறை )
6.046   திருநாவுக்கரசர்   தேவாரம்   நம்பனை, நால்வேதம் கரை கண்டானை,
Tune - திருத்தாண்டகம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
6.047   திருநாவுக்கரசர்   தேவாரம்   திருவே, என் செல்வமே, தேனே,
Tune - திருத்தாண்டகம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
7.066   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மறையவன்(ன்) ஒரு மாணி வந்து
Tune - தக்கேசி   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
7.070   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே!
Tune - தக்கேசி   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
9.006   சேந்தனார்   திருவிசைப்பா   சேந்தனார் - திருவாவடுதுறை
Tune -   (திருவாவடுதுறை )

          send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Fri, 26 Dec 2025 05:25:45 +0000