சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.093   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கண்டியூர் - திருவிருத்தம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=NnhnaN6N0fs   Add audio link Add Audio
வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சித்
தானவர் மால் பிரமன்(ன்) அறியாத தகைமையினான்,
ஆனவன், ஆதிபுராணன், அன்று ஓடிய பன்றி எய்த
கானவனை, கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே.


1


வானமதியமும் வாள் அரவும் புனலோடு சடைத்
தானம் அது என வைத்து உழல்வான், தழல் போல் உருவன்,
கானமறி ஒன்று கை உடையான், கண்டியூர் இருந்த
ஊனம் இல் வேதம் உடையனை, நாம் அடி உள்குவதே.


2


பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை,
உண்டு, அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும்;
கண்டம் கறுத்த மிடறு உடையான்; கண்டியூர் இருந்த
தொண்டர் பிரானை- கண்டீர்- அண்டவாணர் தொழுகின்றதே.


3


முடியின் முற்றாதது ஒன்று இல்லை, எல்லாம் உடன் தான் உடையான்
கொடியும் உற்ற(வ்) விடை ஏறி, ஓர் கூற்று ஒருபால் உடையான்;
கடிய முற்று அவ் வினைநோய் களைவான், கண்டியூர் இருந்தான்;
அடியும் உற்றார் தொண்டர்; இல்லைகண்டீர், அண்டவானரே.


4


பற்றி ஓர் ஆனை உரித்த பிரான்,பவளத்திரள் போல்
முற்றும் அணிந்தது ஓர் நீறு உடையான், முன்னமே கொடுத்த
கல்- தம் குடையவன் தான் அறியான் கண்டியூர் இருந்த
குற்றம் இல் வேதம் உடையானை ஆம், அண்டர் கூறுவதே.


5


Go to top
போர்ப் பனை யானை உரித்த பிரான்; பொறி வாய் அரவம்
சேர்ப்பது, வானத் திரை கடல் சூழ் உலகம்(ம்) இதனைக்
காப்பது காரணம் ஆக, கொண்டான்; கண்டியூர் இருந்த
கூர்ப்பு உடை ஒள்வாள் மழுவனை ஆம், அண்டர் கூறுவதே.


6


அட்டது காலனை; ஆய்ந்தது வேதம் ஆறு அங்கம்; அன்று
சுட்டது காமனை, கண் அதனாலே; தொடர்ந்து எரியக்
கட்டு அவை மூன்றும் எரித்த பிரான்; கண்டியூர் இருந்த
குட்டம் முன் வேதப்படையனை ஆம், அண்டர் கூறுவதே.


7


அட்டும் ஒலிநீர், அணி மதியும், மலர் ஆன எல்லாம்,
இட்டுப் பொதியும் சடைமுடியான், இண்டைமாலை; அம் கைக்
கட்டும் அரவு அது தான் உடையான்; கண்டியூர் இருந்த
கொட்டும் பறை உடை கூத்தனை ஆம், அண்டர் கூறுவதே.


8


மாய்ந்தன, தீவினை; மங்கின நோய்கள் மறுகி விழத்
தேய்ந்தன; பாவம் செறுக்ககில்லா, நம்மை; செற்று அநங்கைக்
காய்ந்த பிரான், கண்டியூர் எம்பிரான், அங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரான், அல்லனோ, அடியேனை ஆட்கொண்டவனே?


9


மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அவ் வாசுகியைத்
தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி
உண்ட பிரான், நஞ்சு ஒளித்த பிரான், அஞ்சி ஓடி நண்ணக்
கண்ட பிரான், அல்லனோ, கண்டியூர் அண்டவானவனே?



10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கண்டியூர்
3.038   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்!
Tune - கொல்லி   (திருக்கண்டியூர் வீரட்டேசுவரர் மங்கைநாயகியம்மை)
4.093   திருநாவுக்கரசர்   தேவாரம்   வானவர் தானவர் வைகல் மலர்
Tune - திருவிருத்தம்   (திருக்கண்டியூர் செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song pathigam no 4.093