சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
143   பழநி திருப்புகழ் ( - வாரியார் # 111 )  

கனமாய் எழுந்து

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனனா தனந்தனத் தனனா தனந்தனத்
     தனனா தனந்தனத் ...... தனதான


கனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற்
     புரமா ரணந்துளுத் ...... திடுமானார்
கனிவா யுகந்துசிக் கெனவே யணைந்துகைப்
     பொருளே யிழந்துவிட் ...... டயர்வாயே
மனமே தளர்ந்துவிக் கலுமே யெழுந்துமட்
     டறவே யுலந்துசுக் ...... கதுபோலே
வசமே யழிந்துவுக் கிடுநோய் துறந்துவைப்
     பெனவே நினைந்துனைப் ...... புகழ்வேனோ
புனவே டர்தந்தபொற் குறமா துஇன்புறப்
     புணர்கா தல்கொண்டஅக் ...... கிழவோனே
புனலே ழுமங்கவெற் பொடுசூர் சிரங்கள்பொட்
     டெழவே லெறிந்தவுக் ...... கிரவீரா
தினமே வுகுங்குமப் புயவா சகிண்கிணிச்
     சிறுகீ தசெம்பதத் ...... தருளாளா
சிவலோ கசங்கரிக் கிறைபால பைங்கயத்
     திருவா வினன்குடிப் ...... பெருமாளே.

கனமாய் எழுந்து வெற்பு எனவே உயர்ந்து கற்புர மாரணம்
துளுத்திடு மானார்
கனி வாய் உகந்து சிக்கெனவே அணைந்து
கைப்பொருளே இழந்து விட்டு அயர்வாயே மனமே
தளர்ந்து
விக்கலுமே எழுந்து மட்டு அறவே உலந்து சுக்கு அது
போலே வசமே அழிந்து உக்கிடு நோய் துறந்து
வைப்பு எனவே நினைந்து உனைப் புகழ்வேனோ
புன வேடர் தந்த பொன் குற மாது இன்புறப் புணர் காதல்
கொண்ட அக் கிழவோனே
புனல் ஏழும் மங்க வெற்பொடு சூர் சிரங்கள் பொட்டு
எழ வேல் எறிந்த உக்கிர வீரா
தின மேவு குங்குமப் புய வாச கிண்கிணிச் சிறு கீத
செம் பதத்து அருளாளா
சிவ லோக சங்கரிக்கு இறை பால பைங்கயத்
திருவாவினன்குடிப் பெருமாளே.
பாரத்துடன் எழுந்து மலை போல் உயர்ந்து, கற்பூரம் முதலியன பூசப்பட்டு, மரணத்தைத் தரவல்ல (மந்திர வித்தை கொண்டது போல) செழிப்புடன் வளர்ந்த மார்பகங்கள் கொண்ட விலைமாதர்களின் கொவ்வைக் கனி போன்ற செவ்வாயை விரும்பி, விடாது உறுதியாகத் தழுவி, கைப் பொருள் எல்லாவற்றையும் இழந்து விட்டு, தளர்ச்சியுற்று மனம் தளர்ந்து, விக்கல் எடுத்து, அளவின்றி உடல் அழிவுற்று சுக்கு போலாகி உலர்ந்து, தன் வசம் அழிந்து ஒடுக்குகின்ற நோயை அகற்றி, சேமநிதி (நீயே) என்று கருதி உன்னைப் புகழ மாட்டேனோ? தினைப் புன வேடர்கள் பெற்ற அழகிய குற மகளாகிய வள்ளி இன்பம் கொள்ளும்படி, அவளைச் சேர்வதற்குக் காதல் கொண்ட அந்தக் கிழ வேடம் பூண்டவனே, ஏழு கடல்களும் வற்றும்படி, ஏழு மலைகளோடு, சூரனுடைய தலைகள் பொடிபடுமாறு வேலாயுதத்தைச் செலுத்திய பெருங் கோப வீரனே, நாள் தோறும் விரும்பக் கூடிய குங்குமப்பூ முதலிய வாசனைகள் பூசப்பட்ட தோள்களில் மணம் நிறைந்தவனே, கிண்கிணிகளின் மெல்லிய இசையுடன் கூடிய செவ்விய திருவடிகளை உடைய அருளாளனே, சிவலோகத்தில் உள்ள சங்கரிக்குத் தலைவனான சிவபெருமானுடைய பிள்ளையே, பசுமையான நீர் நிலைகளையுடைய பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
கனமாய் எழுந்து வெற்பு எனவே உயர்ந்து கற்புர மாரணம்
துளுத்திடு மானார்
... பாரத்துடன் எழுந்து மலை போல் உயர்ந்து,
கற்பூரம் முதலியன பூசப்பட்டு, மரணத்தைத் தரவல்ல (மந்திர
வித்தை கொண்டது போல) செழிப்புடன் வளர்ந்த மார்பகங்கள்
கொண்ட விலைமாதர்களின்
கனி வாய் உகந்து சிக்கெனவே அணைந்து ... கொவ்வைக் கனி
போன்ற செவ்வாயை விரும்பி, விடாது உறுதியாகத் தழுவி,
கைப்பொருளே இழந்து விட்டு அயர்வாயே மனமே
தளர்ந்து
... கைப் பொருள் எல்லாவற்றையும் இழந்து விட்டு,
தளர்ச்சியுற்று மனம் தளர்ந்து,
விக்கலுமே எழுந்து மட்டு அறவே உலந்து சுக்கு அது
போலே வசமே அழிந்து உக்கிடு நோய் துறந்து
... விக்கல்
எடுத்து, அளவின்றி உடல் அழிவுற்று சுக்கு போலாகி உலர்ந்து,
தன் வசம் அழிந்து ஒடுக்குகின்ற நோயை அகற்றி,
வைப்பு எனவே நினைந்து உனைப் புகழ்வேனோ ... சேமநிதி
(நீயே) என்று கருதி உன்னைப் புகழ மாட்டேனோ?
புன வேடர் தந்த பொன் குற மாது இன்புறப் புணர் காதல்
கொண்ட அக் கிழவோனே
... தினைப் புன வேடர்கள் பெற்ற
அழகிய குற மகளாகிய வள்ளி இன்பம் கொள்ளும்படி, அவளைச்
சேர்வதற்குக் காதல் கொண்ட அந்தக் கிழ வேடம் பூண்டவனே,
புனல் ஏழும் மங்க வெற்பொடு சூர் சிரங்கள் பொட்டு
எழ வேல் எறிந்த உக்கிர வீரா
... ஏழு கடல்களும் வற்றும்படி,
ஏழு மலைகளோடு, சூரனுடைய தலைகள் பொடிபடுமாறு
வேலாயுதத்தைச் செலுத்திய பெருங் கோப வீரனே,
தின மேவு குங்குமப் புய வாச கிண்கிணிச் சிறு கீத
செம் பதத்து அருளாளா
... நாள் தோறும் விரும்பக் கூடிய
குங்குமப்பூ முதலிய வாசனைகள் பூசப்பட்ட தோள்களில் மணம்
நிறைந்தவனே, கிண்கிணிகளின் மெல்லிய இசையுடன் கூடிய
செவ்விய திருவடிகளை உடைய அருளாளனே,
சிவ லோக சங்கரிக்கு இறை பால பைங்கயத்
திருவாவினன்குடிப் பெருமாளே.
... சிவலோகத்தில் உள்ள
சங்கரிக்குத் தலைவனான சிவபெருமானுடைய பிள்ளையே,
பசுமையான நீர் நிலைகளையுடைய பழனி மலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.
Similar songs:

143 - கனமாய் எழுந்து (பழநி)

தனனா தனந்தனத் தனனா தனந்தனத்
     தனனா தனந்தனத் ...... தனதான

Songs from this thalam பழநி

104 - அகல்வினை

105 - அணிபட்டு அணுகி

106 - அதல விதல

107 - அபகார நிந்தை

108 - அரிசன வாடை

109 - அருத்தி வாழ்வொடு

110 - அவனிதனிலே

111 - அறமிலா நிலை

112 - ஆதாளிகள் புரி

113 - ஆலகாலம் என

114 - ஆறுமுகம் ஆறுமுகம்

115 - இத் தாரணிக்குள்

116 - இரவி என

117 - இருகனக மாமேரு

118 - இரு செப்பென

119 - இலகிய களப

120 - இலகுகனி மிஞ்சு

121 - உயிர்க் கூடு

122 - உலகபசு பாச

123 - ஒருபொழுதும் இருசரண

124 - ஒருவரை ஒருவர்

125 - ஓடி ஓடி

126 - கடலைச் சிறை

127 - கடலை பொரியவரை

128 - கதியை விலக்கு

129 - கரிய பெரிய

130 - கரிய மேகமதோ

131 - கரியிணை கோடென

132 - கருகி அகன்று

133 - கருப்புவிலில்

134 - கருவின் உருவாகி

135 - கலக வாள்விழி

136 - கலகக் கயல்விழி

137 - கலவியி லிச்சி

138 - கலை கொடு

139 - களப முலையை

140 - கறுத்த குழலணி

141 - கனக கும்பம்

142 - கனத்திறுகி

143 - கனமாய் எழுந்து

144 - கார் அணிந்த

145 - குரம்பை மலசலம்

146 - குருதி மலசலம்

147 - குழல் அடவி

148 - குழல்கள் சரிய

149 - குறித்தமணி

150 - குன்றுங் குன்றும்

151 - கொந்துத் தரு

152 - கோல குங்கும

153 - கோல மதிவதனம்

154 - சகடத்திற் குழை

155 - சிந்துர கூரம

156 - சிவனார் மனங்குளிர

157 - சிறு பறையும்

158 - சீ உதிரம் எங்கும்

159 - சீறல் அசடன்

160 - சுருதி முடி மோனம்

161 - சுருளளக பார

162 - ஞானங்கொள்

163 - தகர நறுமலர்

164 - தகைமைத் தனியில்

165 - தமரும் அமரும்

166 - தலைவலி மருத்தீடு

167 - திடமிலி சற்குணமிலி

168 - திமிர உததி

169 - தோகைமயிலே கமல

170 - நாத விந்து

171 - நிகமம் எனில்

172 - நெற்றி வெயர்த்துளி

173 - பகர்தற்கு அரிதான

174 - பஞ்ச பாதகன்

175 - பாரியான கொடை

176 - புடவிக்கு அணி

177 - புடைசெப் பென

178 - பெரியதோர் கரி

179 - போதகம் தரு

180 - மந்தரமதெனவே

181 - மருமலரினன்

182 - மனக்கவலை ஏதும்

183 - மலரணி கொண்டை

184 - முகிலளகத்தில்

185 - முகை முளரி

186 - முதிரவுழையை

187 - முத்துக்கு

188 - மூலம் கிளர் ஓர்

189 - மூல மந்திரம்

190 - முருகுசெறி குழலவிழ

191 - முருகு செறிகுழல் முகில்

192 - வசனமிக ஏற்றி

193 - வஞ்சனை மிஞ்சி

194 - வரதா மணி நீ

195 - வனிதை உடல்

196 - வாதம் பித்தம்

197 - வாரணந் தனை

198 - விதம் இசைந்து

199 - விரை மருவு

200 - வேய் இசைந்து

1338 - சிவணிதா வியமனது

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 143