சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
181   பழநி திருப்புகழ் ( - வாரியார் # 135 )  

மருமலரினன்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த
     தனதனன தந்த தந்த ...... தனதான

மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி
     மதியொடுபி றந்து முன்பெய் ...... வதையாலே
வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த
     மதலையென வந்து குன்றின் ...... வடிவாகி
இருமயல்கொ டுந்து வண்டு பொதுவையர கம்பு குந்து
     இரவுபகல் கொண்டொ டுங்கி ...... யசடாகும்
இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்து
     னிணையடிவ ணங்க என்று ...... பெறுவேனோ
திருவொடுபெ யர்ந்தி ருண்ட வனமிசைந டந்தி லங்கை
     திகழெரியி டுங்கு ரங்கை ...... நெகிழாத
திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள்
     செறிவுடன றிந்து வென்ற ...... பொறியாளர்
பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற
     பரமபத நண்ப ரன்பின் ...... மருகோனே
பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்க
     பழநிமலை வந்த மர்ந்த ...... பெருமாளே.
Easy Version:
மரு மலரினன் துரந்து விட வினை அருந்த அந்தி மதியொடு
பிறந்து
முன்பு எய் வதையாலே வகை தனை மறந்து எழுந்து முலை
தனை அருந்தி அந்த மதலை என வந்து குன்றின் வடிவாகி
இரு மயல் கொடுந் துவண்டு பொதுவையர் அகம் புகுந்து
இரவு பகல் கொண்டு ஒடுங்கி அசடாகும்
இரு வினை பொதிந்த இந்த ஜனன மரணம் துறந்து இணை
அடி வணங்க என்று பெறுவேனோ
திருவொடு பெயர்ந்து இருண்ட வனமிசை நடந்து இலங்கை
திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத திடம் உள முகுந்தர்
கஞ்சன் வர விடும் எல் வஞ்சகங்கள் செறிவுடன் அறிந்து
வென்ற பொறியாளர்
பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற
பரம பத நண்பர் அன்பின் மருகோனே
பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க
பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே.
Add (additional) Audio/Video Link

மரு மலரினன் துரந்து விட வினை அருந்த அந்தி மதியொடு
பிறந்து
... நறு மணம் கமழும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் ஏவி
விட, செய்த வினையின் பயனை அனுபவிக்க, மாலை நேரத்து
சந்திரனைப் போன்ற வடிவத்துடன் (இவ்வுலகில்) பிறந்து,
முன்பு எய் வதையாலே வகை தனை மறந்து எழுந்து முலை
தனை அருந்தி அந்த மதலை என வந்து குன்றின் வடிவாகி
...
முன் செய்த கொடு வினைகளால் வந்த வகையை மறந்து, எழுந்து
(தாயின்) முலைப் பாலைப் பருகி அழகிய குழந்தையாக வளர்ந்து, மலை
போல் வடிவை அடைந்து,
இரு மயல் கொடுந் துவண்டு பொதுவையர் அகம் புகுந்து
இரவு பகல் கொண்டு ஒடுங்கி அசடாகும்
... பெரிய காம
மயக்குடன் வாடி, பொது மகளிருடைய வீடுகளில் புகுந்து இரவும்
பகலும் அதே வேலையாயிருந்து, ஒடுங்கி அசடன் நான்
இரு வினை பொதிந்த இந்த ஜனன மரணம் துறந்து இணை
அடி வணங்க என்று பெறுவேனோ
... நல் வினை, தீ வினை
இரண்டும் சார்ந்த இந்தப் பிறப்பு, இறப்பு என்பவற்றை விட்டொழித்து
உனது இரண்டு திருவடிகளைத் தொழும் பேற்றை என்று அடைவேனோ?
திருவொடு பெயர்ந்து இருண்ட வனமிசை நடந்து இலங்கை
திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத திடம் உள முகுந்தர்
...
லக்ஷ்மியாகிய சீதையோடு (அயோத்தி நகரை விட்டு) நீங்கி இருள்
மிகுந்த காட்டில் நடந்து, இலங்கை நகரை விளங்கும் நெருப்புக்கு இட்ட
குரங்காகிய அனுமனைக் கை விடாத திடமான கருணை உள்ள ராமர்,
கஞ்சன் வர விடும் எல் வஞ்சகங்கள் செறிவுடன் அறிந்து
வென்ற பொறியாளர்
... கம்சன் அனுப்பிய நய வஞ்சகச் சூழ்ச்சிகளை
கூர்மையாக உணர்ந்து, அவைகளை வென்ற அறிவாளர் கிருஷ்ணர்,
பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற
பரம பத நண்பர் அன்பின் மருகோனே
... அன்புடன் மகிழ்ந்து
வணங்கும் மருத மரங்களின் இடையே தவழ்ந்து நின்றவரும், பரம
பதத்தில் இருக்கும் நண்பருமான திருமாலின் அன்பு மிகுந்த மருகனே,
பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க
பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே.
... தாமரையின் மீது
வண்டுகள் ஒலிக்கின்ற பல சுனைகள் விளங்குகின்ற பரிசுத்தமான
பழனி மலையில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே.

Similar songs:

181 - மருமலரினன் (பழநி)

தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த
     தனதனன தந்த தந்த ...... தனதான

Songs from this thalam பழநி

104 - அகல்வினை

105 - அணிபட்டு அணுகி

106 - அதல விதல

107 - அபகார நிந்தை

108 - அரிசன வாடை

109 - அருத்தி வாழ்வொடு

110 - அவனிதனிலே

111 - அறமிலா நிலை

112 - ஆதாளிகள் புரி

113 - ஆலகாலம் என

114 - ஆறுமுகம் ஆறுமுகம்

115 - இத் தாரணிக்குள்

116 - இரவி என

117 - இருகனக மாமேரு

118 - இரு செப்பென

119 - இலகிய களப

120 - இலகுகனி மிஞ்சு

121 - உயிர்க் கூடு

122 - உலகபசு பாச

123 - ஒருபொழுதும் இருசரண

124 - ஒருவரை ஒருவர்

125 - ஓடி ஓடி

126 - கடலைச் சிறை

127 - கடலை பொரியவரை

128 - கதியை விலக்கு

129 - கரிய பெரிய

130 - கரிய மேகமதோ

131 - கரியிணை கோடென

132 - கருகி அகன்று

133 - கருப்புவிலில்

134 - கருவின் உருவாகி

135 - கலக வாள்விழி

136 - கலகக் கயல்விழி

137 - கலவியி லிச்சி

138 - கலை கொடு

139 - களப முலையை

140 - கறுத்த குழலணி

141 - கனக கும்பம்

142 - கனத்திறுகி

143 - கனமாய் எழுந்து

144 - கார் அணிந்த

145 - குரம்பை மலசலம்

146 - குருதி மலசலம்

147 - குழல் அடவி

148 - குழல்கள் சரிய

149 - குறித்தமணி

150 - குன்றுங் குன்றும்

151 - கொந்துத் தரு

152 - கோல குங்கும

153 - கோல மதிவதனம்

154 - சகடத்திற் குழை

155 - சிந்துர கூரம

156 - சிவனார் மனங்குளிர

157 - சிறு பறையும்

158 - சீ உதிரம் எங்கும்

159 - சீறல் அசடன்

160 - சுருதி முடி மோனம்

161 - சுருளளக பார

162 - ஞானங்கொள்

163 - தகர நறுமலர்

164 - தகைமைத் தனியில்

165 - தமரும் அமரும்

166 - தலைவலி மருத்தீடு

167 - திடமிலி சற்குணமிலி

168 - திமிர உததி

169 - தோகைமயிலே கமல

170 - நாத விந்து

171 - நிகமம் எனில்

172 - நெற்றி வெயர்த்துளி

173 - பகர்தற்கு அரிதான

174 - பஞ்ச பாதகன்

175 - பாரியான கொடை

176 - புடவிக்கு அணி

177 - புடைசெப் பென

178 - பெரியதோர் கரி

179 - போதகம் தரு

180 - மந்தரமதெனவே

181 - மருமலரினன்

182 - மனக்கவலை ஏதும்

183 - மலரணி கொண்டை

184 - முகிலளகத்தில்

185 - முகை முளரி

186 - முதிரவுழையை

187 - முத்துக்கு

188 - மூலம் கிளர் ஓர்

189 - மூல மந்திரம்

190 - முருகுசெறி குழலவிழ

191 - முருகு செறிகுழல் முகில்

192 - வசனமிக ஏற்றி

193 - வஞ்சனை மிஞ்சி

194 - வரதா மணி நீ

195 - வனிதை உடல்

196 - வாதம் பித்தம்

197 - வாரணந் தனை

198 - விதம் இசைந்து

199 - விரை மருவு

200 - வேய் இசைந்து

1338 - சிவணிதா வியமனது

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song