சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
175   பழநி திருப்புகழ் ( குருஜி இராகவன் # 83 - வாரியார் # 198 )  

பாரியான கொடை

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தான தானதனத் தந்த தானன
     தான தானதனத் தந்த தானன
          தான தானதனத் தந்த தானன ...... தனதான


பாரி யானகொடைக் கொண்ட லேதிரு
     வாழ்வி சாலதொடைத் திண்பு யாஎழு
          பாரு மேறுபுகழ்க் கொண்ட நாயக ...... அபிராம
பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள்
     சீல ஞாலவிளக் கின்ப சீவக
          பாக சாதனவுத் துங்க மானத ...... எனவோதிச்
சீர தாகஎடுத் தொன்று மாகவி
     பாடி னாலுமிரக் கஞ்செ யாதுரை
          சீறு வார்கடையிற் சென்று தாமயர் ...... வுறவீணே
சேய பாவகையைக் கொண்டு போயறி
     யாம லேகமரிற் சிந்து வார்சிலர்
          சேய னார்மனதிற் சிந்தி யாரரு ...... குறலாமோ
ஆரு நீர்மைமடுக் கண்க ராநெடு
     வாயி னேர்படவுற் றன்று மூலமெ
          னார வாரமதத் தந்தி தானுய ...... அருள்மாயன்
ஆதி நாராணனற் சங்க பாணிய
     னோது வார்களுளத் தன்பன் மாதவ
          னான நான்முகனற் றந்தை சீதரன் ...... மருகோனே
வீர சேவகவுத் தண்ட தேவகு
     மார ஆறிருபொற் செங்கை நாயக
          வீசு தோகைமயிற் றுங்க வாகன ...... முடையோனே
வீறு காவிரியுட் கொண்ட சேகர
     னான சேவகனற் சிந்தை மேவிய
          வீரை வாழ்பழநித் துங்க வானவர் ...... பெருமாளே.

பாரியானகொடைக் கொண்டலே
திரு வாழ் விசாலதொடைத் திண்புயா
எழு பாரும் ஏறுபுகழ்க் கொண்ட நாயக அபிராம
பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள்
சீல ஞாலவிளக் கின்ப சீவக
பாக சாதன உத்துங்க மானத எனவோதி
சீரதாக எடுத்தொன்று மாகவி பாடி னாலும்
இரக்கஞ்செயாதுரை சீறுவார்
கடையிற் சென்று தாமயர்வுற வீணே
சேய பாவகையைக் கொண்டு போய்
அறியாம லேகமரிற் சிந்து வார்சிலர்
சேய னார்மனதிற் சிந்தியார் அருகுறலாமோ
ஆரு நீர்மைமடுக் கண்கரா நெடுவாயில்
நேர்படவுற் றன்று மூலமென
ஆர வாரமதத் தந்திதான் உ(ய்)ய அருள்மாயன்
ஆதி நாராணனற் சங்க பாணியன்
ஓது வார்களுளத் தன்பன்
மாதவனான நான்முகன் நற் றந்தை சீதரன் மருகோனே
வீர சேவகவுத் தண்ட தேவகுமார
ஆறிருபொற் செங்கை நாயக
வீசு தோகைமயிற் றுங்க வாகனமுடையோனே
வீறு காவிரியுட் கொண்ட சேகரனான சேவகன்
நற் சிந்தை மேவிய வீரை வாழ்பழநி
துங்க வானவர் பெருமாளே.
பாரியைப் போன்ற கொடை மேகமே, லக்ஷ்மி வாசம்செய்யும் பெரிய மாலையை அணிந்த திண்ணிய தோளனே, ஏழு உலகிலும் மிக்க புகழ் கொண்ட நாயகனே, அழகனே, புலவர்கள் கூட்டத்திற்கு எப்போதும் வாழ்வை அருளும் நல்லொழுக்கம் வாய்ந்த விளக்கே, இன்பம் தரும் ஜீவகனே, இந்திரன் போன்று உயர்ந்த அரசனே - என்றெல்லாம் கூறி, சீராக எடுத்தமைந்த ஒரு சிறப்பான பாடலைப் பாடினாலும் இரக்கம் காட்டாது வார்த்தைகளைச் சீறிப் பேசுவோரது கடைவாயிலிற் சென்று தாம் சோர்வு அடையும்படி வீணாக, செம்மை வாய்ந்த பாமாலை வகைகளைக் கொண்டு போய் அறியாமலே சாக்கடையில் கொட்டுவது போலக் கொட்டிச் சிந்துவார்கள் சிலர். இரப்பவர்க்குத் தூரத்தில் நிற்பவர்கள், மனதில் சிறிதும் இரக்கத்தைச் சிந்தியாதவர்கள் ஆகியோரின் அருகே நிற்கலாமோ? நிறைந்த நீருள்ளதான கரிய சுனையின் மத்தியில் முதலையின் பெரும் வாயில் நேராக அகப்பட்டு, அன்று ஆதிமூலமே என்று பேரொலி செய்த மதயானையாகிய கஜேந்திரன் பிழைக்கும்வண்ணம் அருளிய மாயவன், ஆதிப் பரம்பொருளான நாராயணன், பாஞ்சஜன்யம் என்ற சங்கைக் கரத்தில் ஏந்தியவன், அவனைத் துதிப்போர்களின் உள்ளத்தில் இருக்கும் அன்பன், மகா தவனாகிய பிரமாவுக்கு நல்ல தந்தை, லக்ஷ்மியை மார்பில் தரித்த திருமாலின் மருமகனே, வீரமும், பராக்கிரமும், உக்கிரமும் உள்ள தெய்வக் குழந்தையே, பன்னிரு அழகிய செங்கை நாயகனே, வீசும் கலாப மயிலாம் பெருமை வாய்ந்த வாகனத்தை உடையவனே, விளங்கும் காவிரியைத் தன்னிடத்தே கொண்ட கலிசையூர்த் தலைவனான பராக்ரமனின் நல்ல மனத்தில் வீற்றிருக்கும் தலைவா, வீரை நகரிலும் பழநியிலும் வீற்றிருக்கும் பெருமாளே, தூய்மையான தேவர்களின் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
பாரியானகொடைக் கொண்டலே ... பாரியைப் போன்ற கொடை
மேகமே,
திரு வாழ் விசாலதொடைத் திண்புயா ... லக்ஷ்மி வாசம்செய்யும்
பெரிய மாலையை அணிந்த திண்ணிய தோளனே,
எழு பாரும் ஏறுபுகழ்க் கொண்ட நாயக அபிராம ... ஏழு
உலகிலும் மிக்க புகழ் கொண்ட நாயகனே, அழகனே,
பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள் ... புலவர்கள்
கூட்டத்திற்கு எப்போதும் வாழ்வை அருளும்
சீல ஞாலவிளக் கின்ப சீவக ... நல்லொழுக்கம் வாய்ந்த விளக்கே,
இன்பம் தரும் ஜீவகனே,
பாக சாதன உத்துங்க மானத எனவோதி ... இந்திரன் போன்று
உயர்ந்த அரசனே - என்றெல்லாம் கூறி,
சீரதாக எடுத்தொன்று மாகவி பாடி னாலும் ... சீராக
எடுத்தமைந்த ஒரு சிறப்பான பாடலைப் பாடினாலும்
இரக்கஞ்செயாதுரை சீறுவார் ... இரக்கம் காட்டாது வார்த்தைகளைச்
சீறிப் பேசுவோரது
கடையிற் சென்று தாமயர்வுற வீணே ... கடைவாயிலிற் சென்று
தாம் சோர்வு அடையும்படி வீணாக,
சேய பாவகையைக் கொண்டு போய் ... செம்மை வாய்ந்த பாமாலை
வகைகளைக் கொண்டு போய்
அறியாம லேகமரிற் சிந்து வார்சிலர் ... அறியாமலே சாக்கடையில்
கொட்டுவது போலக் கொட்டிச் சிந்துவார்கள் சிலர்.
சேய னார்மனதிற் சிந்தியார் அருகுறலாமோ ... இரப்பவர்க்குத்
தூரத்தில் நிற்பவர்கள், மனதில் சிறிதும் இரக்கத்தைச் சிந்தியாதவர்கள்
ஆகியோரின் அருகே நிற்கலாமோ?
ஆரு நீர்மைமடுக் கண்கரா நெடுவாயில் ... நிறைந்த நீருள்ளதான
கரிய சுனையின் மத்தியில் முதலையின் பெரும் வாயில்
நேர்படவுற் றன்று மூலமென ... நேராக அகப்பட்டு, அன்று
ஆதிமூலமே என்று
ஆர வாரமதத் தந்திதான் உ(ய்)ய அருள்மாயன் ... பேரொலி
செய்த மதயானையாகிய கஜேந்திரன் பிழைக்கும்வண்ணம் அருளிய மாயவன்,
ஆதி நாராணனற் சங்க பாணியன் ... ஆதிப் பரம்பொருளான
நாராயணன், பாஞ்சஜன்யம் என்ற சங்கைக் கரத்தில் ஏந்தியவன்,
ஓது வார்களுளத் தன்பன் ... அவனைத் துதிப்போர்களின்
உள்ளத்தில் இருக்கும் அன்பன்,
மாதவனான நான்முகன் நற் றந்தை சீதரன் மருகோனே ...
மகா தவனாகிய பிரமாவுக்கு நல்ல தந்தை, லக்ஷ்மியை மார்பில் தரித்த
திருமாலின் மருமகனே,
வீர சேவகவுத் தண்ட தேவகுமார ... வீரமும், பராக்கிரமும்,
உக்கிரமும் உள்ள தெய்வக் குழந்தையே,
ஆறிருபொற் செங்கை நாயக ... பன்னிரு அழகிய செங்கை
நாயகனே,
வீசு தோகைமயிற் றுங்க வாகனமுடையோனே ... வீசும் கலாப
மயிலாம் பெருமை வாய்ந்த வாகனத்தை உடையவனே,
வீறு காவிரியுட் கொண்ட சேகரனான சேவகன் ... விளங்கும்
காவிரியைத் தன்னிடத்தே கொண்ட கலிசையூர்த் தலைவனான
பராக்ரமனின்
நற் சிந்தை மேவிய வீரை வாழ்பழநி ... நல்ல மனத்தில்
வீற்றிருக்கும் தலைவா, வீரை நகரிலும் பழநியிலும் வீற்றிருக்கும்
பெருமாளே,
துங்க வானவர் பெருமாளே. ... தூய்மையான தேவர்களின்
பெருமாளே.
Similar songs:

175 - பாரியான கொடை (பழநி)

தான தானதனத் தந்த தானன
     தான தானதனத் தந்த தானன
          தான தானதனத் தந்த தானன ...... தனதான

Songs from this thalam பழநி

104 - அகல்வினை

105 - அணிபட்டு அணுகி

106 - அதல விதல

107 - அபகார நிந்தை

108 - அரிசன வாடை

109 - அருத்தி வாழ்வொடு

110 - அவனிதனிலே

111 - அறமிலா நிலை

112 - ஆதாளிகள் புரி

113 - ஆலகாலம் என

114 - ஆறுமுகம் ஆறுமுகம்

115 - இத் தாரணிக்குள்

116 - இரவி என

117 - இருகனக மாமேரு

118 - இரு செப்பென

119 - இலகிய களப

120 - இலகுகனி மிஞ்சு

121 - உயிர்க் கூடு

122 - உலகபசு பாச

123 - ஒருபொழுதும் இருசரண

124 - ஒருவரை ஒருவர்

125 - ஓடி ஓடி

126 - கடலைச் சிறை

127 - கடலை பொரியவரை

128 - கதியை விலக்கு

129 - கரிய பெரிய

130 - கரிய மேகமதோ

131 - கரியிணை கோடென

132 - கருகி அகன்று

133 - கருப்புவிலில்

134 - கருவின் உருவாகி

135 - கலக வாள்விழி

136 - கலகக் கயல்விழி

137 - கலவியி லிச்சி

138 - கலை கொடு

139 - களப முலையை

140 - கறுத்த குழலணி

141 - கனக கும்பம்

142 - கனத்திறுகி

143 - கனமாய் எழுந்து

144 - கார் அணிந்த

145 - குரம்பை மலசலம்

146 - குருதி மலசலம்

147 - குழல் அடவி

148 - குழல்கள் சரிய

149 - குறித்தமணி

150 - குன்றுங் குன்றும்

151 - கொந்துத் தரு

152 - கோல குங்கும

153 - கோல மதிவதனம்

154 - சகடத்திற் குழை

155 - சிந்துர கூரம

156 - சிவனார் மனங்குளிர

157 - சிறு பறையும்

158 - சீ உதிரம் எங்கும்

159 - சீறல் அசடன்

160 - சுருதி முடி மோனம்

161 - சுருளளக பார

162 - ஞானங்கொள்

163 - தகர நறுமலர்

164 - தகைமைத் தனியில்

165 - தமரும் அமரும்

166 - தலைவலி மருத்தீடு

167 - திடமிலி சற்குணமிலி

168 - திமிர உததி

169 - தோகைமயிலே கமல

170 - நாத விந்து

171 - நிகமம் எனில்

172 - நெற்றி வெயர்த்துளி

173 - பகர்தற்கு அரிதான

174 - பஞ்ச பாதகன்

175 - பாரியான கொடை

176 - புடவிக்கு அணி

177 - புடைசெப் பென

178 - பெரியதோர் கரி

179 - போதகம் தரு

180 - மந்தரமதெனவே

181 - மருமலரினன்

182 - மனக்கவலை ஏதும்

183 - மலரணி கொண்டை

184 - முகிலளகத்தில்

185 - முகை முளரி

186 - முதிரவுழையை

187 - முத்துக்கு

188 - மூலம் கிளர் ஓர்

189 - மூல மந்திரம்

190 - முருகுசெறி குழலவிழ

191 - முருகு செறிகுழல் முகில்

192 - வசனமிக ஏற்றி

193 - வஞ்சனை மிஞ்சி

194 - வரதா மணி நீ

195 - வனிதை உடல்

196 - வாதம் பித்தம்

197 - வாரணந் தனை

198 - விதம் இசைந்து

199 - விரை மருவு

200 - வேய் இசைந்து

1338 - சிவணிதா வியமனது

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 175