சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
345   காஞ்சீபுரம் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 434 - வாரியார் # 493 )  

படிறொழுக்கமும்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனன தத்தன தனன தத்தன
     தனன தத்தன ...... தனதான


படிறொ ழுக்கமு மடம னத்துள
     படிப ரித்துட ...... னொடிபேசும்
பகடி கட்குள மகிழ மெய்ப்பொருள்
     பலகொ டுத்தற ...... உயிர்வாடா
மிடியெ னப்பெரு வடவை சுட்டிட
     விதன முற்றிட ...... மிகவாழும்
விரகு கெட்டரு நரகு விட்டிரு
     வினைய றப்பத ...... மருள்வாயே
கொடியி டைக்குற வடிவி யைப்புணர்
     குமர கச்சியி ...... லமர்வோனே
குரவு செச்சைவெண் முளரி புத்தலர்
     குவளை முற்றணி ...... திருமார்பா
பொடிப டப்பட நெடிய விற்கொடு
     புரமெ ரித்தவர் ...... குருநாதா
பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை
     பொருது ழக்கிய ...... பெருமாளே.

படிறொழுக்கமும் மடம னத்து
உளபடி பரித்து உடன் நொடிபேசும்
பகடிகட்கு உள மகிழ மெய்ப்பொருள்
பலகொடுத்து அற உயிர்வாடா
மிடியெ னப்பெரு வடவை சுட்டிட
விதன முற்றிட மிகவாழும்
விரகு கெட்டு அரு நரகு விட்டு
இருவினையறப் பதம் அருள்வாயே
கொடியிடைக்குற வடிவியைப்புணர் குமர
கச்சியில் அமர்வோனே
குரவு செச்சைவெண் முளரி புத்தலர் குவளை
முற்றணி திருமார்பா
பொடிபடப்பட நெடிய விற்கொடு
புரமெ ரித்தவர் குருநாதா
பொருதிரைக்கடல் நிருதரைப்படை
பொருது உழக்கிய பெருமாளே.
வஞ்சனையுடன் கூடிய நடையை மூட மனத்துள் உள்ளபடியே வைத்துக்கொண்டு, உடனுக்கு உடன் தந்திரமாகப் பேசும் பகட்டுப் பொது மகளிருக்கு, அவர்கள் மனம் மகிழ்வதற்காக, எனது உடம்பையும் பொருட்கள் பலவற்றையும் கொடுத்து, மிகவும் உயிர் வாடி நின்று, தரித்திரம் என்ற பெரிய வடவாக்கினி என்னைச் சுட்டுப் பொசுக்க, பெருந்துன்பம் ஏற்பட்டு, அதனால் மிகத் துயரத்தோடு வாழும் அந்தக் கேவலமான வாழ்வு நீங்கி, அரிய நரகத்தில் நான் விழுவது விலகி, நல்வினை, தீவினை என்ற என் இருவினைகளும் ஒழிய, உனது திருவடிகளைத் தந்தருள்வாயாக. கொடி போன்ற இடையை உடைய குறமகள், அழகிய வள்ளியை மருவிக் கலந்த குமரனே, கச்சிப்பதியாகிய காஞ்சீபுரத்தில் வீற்றிருப்பவனே, குராமலர், வெட்சி மலர், வெண்தாமரை, புதிதாக மலர்ந்த குவளைப்பூ இவை எல்லாம் நிரம்ப அணிந்து கொள்ளும் அழகிய மார்பினனே, தூளாகி அழியும்படி, மேருமலையாகிய நீண்ட வில்லினைக் கொண்டு திரிபுரத்தை (சிரித்தே) எரித்தவரான சிவபிரானின் குருநாதனே, மாறுபட்டு எழுகின்ற அலைகளை உடைய கடலையும், அசுரர்களையும், அவர்களது சேனையையும் போர் செய்து கலக்கி அதிரவைத்த பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
படிறொழுக்கமும் மடம னத்து ... வஞ்சனையுடன் கூடிய நடையை
மூட மனத்துள்
உளபடி பரித்து உடன் நொடிபேசும் ... உள்ளபடியே
வைத்துக்கொண்டு, உடனுக்கு உடன் தந்திரமாகப் பேசும்
பகடிகட்கு உள மகிழ மெய்ப்பொருள் ... பகட்டுப் பொது
மகளிருக்கு, அவர்கள் மனம் மகிழ்வதற்காக, எனது உடம்பையும்
பொருட்கள்
பலகொடுத்து அற உயிர்வாடா ... பலவற்றையும் கொடுத்து,
மிகவும் உயிர் வாடி நின்று,
மிடியெ னப்பெரு வடவை சுட்டிட ... தரித்திரம் என்ற பெரிய
வடவாக்கினி என்னைச் சுட்டுப் பொசுக்க,
விதன முற்றிட மிகவாழும் ... பெருந்துன்பம் ஏற்பட்டு,
அதனால் மிகத் துயரத்தோடு வாழும்
விரகு கெட்டு அரு நரகு விட்டு ... அந்தக் கேவலமான
வாழ்வு நீங்கி, அரிய நரகத்தில் நான் விழுவது விலகி,
இருவினையறப் பதம் அருள்வாயே ... நல்வினை, தீவினை
என்ற என் இருவினைகளும் ஒழிய, உனது திருவடிகளைத்
தந்தருள்வாயாக.
கொடியிடைக்குற வடிவியைப்புணர் குமர ... கொடி போன்ற
இடையை உடைய குறமகள், அழகிய வள்ளியை மருவிக் கலந்த
குமரனே,
கச்சியில் அமர்வோனே ... கச்சிப்பதியாகிய காஞ்சீபுரத்தில்
வீற்றிருப்பவனே,
குரவு செச்சைவெண் முளரி புத்தலர் குவளை ... குராமலர்,
வெட்சி மலர், வெண்தாமரை, புதிதாக மலர்ந்த குவளைப்பூ
முற்றணி திருமார்பா ... இவை எல்லாம் நிரம்ப அணிந்து
கொள்ளும் அழகிய மார்பினனே,
பொடிபடப்பட நெடிய விற்கொடு ... தூளாகி அழியும்படி,
மேருமலையாகிய நீண்ட வில்லினைக் கொண்டு
புரமெ ரித்தவர் குருநாதா ... திரிபுரத்தை (சிரித்தே) எரித்தவரான
சிவபிரானின் குருநாதனே,
பொருதிரைக்கடல் நிருதரைப்படை ... மாறுபட்டு எழுகின்ற
அலைகளை உடைய கடலையும், அசுரர்களையும், அவர்களது
சேனையையும்
பொருது உழக்கிய பெருமாளே. ... போர் செய்து கலக்கி
அதிரவைத்த பெருமாளே.
Similar songs:

290 - மலை முலைச்சியர் (திருத்தணிகை)

தனன தத்தன தனன தத்தன
     தனன தத்தன ...... தனதான

345 - படிறொழுக்கமும் (காஞ்சீபுரம்)

தனன தத்தன தனன தத்தன
     தனன தத்தன ...... தனதான

Songs from this thalam காஞ்சீபுரம்

309 - அதி மதம் கக்க

310 - கனக தம்பத்தை

311 - செடியுடம் பத்தி

312 - கன க்ரவுஞ்சத்தில்

313 - தெரியல் அம் செச்சை

314 - புன மடந்தைக்கு

315 - கறை இலங்கும்

316 - செறிதரும் செப்பத்து

317 - அரி அயன் புட்பி

318 - கனி தரும் கொக்கு

319 - தசைதுறுந் தொக்கு

320 - புரைபடுஞ் செற்ற

321 - சலமலம் விட்ட

322 - தலை வலையத்து

323 - இதத்துப் பற்றி

324 - எனக்குச்சற்று

325 - இறைச்சிப் பற்று

326 - கடத்தைப் பற்று

327 - கருப் பற்றிப் பருத்து

328 - கறுக்கப் பற்று

329 - அற்றைக்கு இரைதேடி

330 - முட்டுப் பட்டு

331 - அற்றைக் கற்றை

332 - சுத்தச் சித்த

333 - கொக்குக்கு ஒக்க

334 - தத்தித் தத்தி

335 - பொக்குப்பை

336 - அயில் அப்பு

337 - கச்சு இட்ட அணி

338 - கமலரு சோகம்

339 - கருமமான பிறப்பற

340 - கலகலென

341 - கொத்தார் பற் கால்

342 - கோவைச் சுத்த

343 - சீசி முப்புர

344 - நச்சு அரவம் என்று

345 - படிறொழுக்கமும்

346 - மகுடக் கொப்பாட

347 - மக்கட்குக் கூற

348 - மயல் ஓதும்

349 - முத்து ரத்ந சூத்ர

350 - வம்பறாச்சில

351 - வாய்ந்தப்பிடை

352 - அறிவிலாப் பித்தர்

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 345