சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
938   சிங்கை திருப்புகழ் ( - வாரியார் # 948 )  

சந்திதொறும் நாணம்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான


சந்திதொறு நாண மின்றியகம் வாடி
     உந்திபொரு ளாக ...... அலைவேனோ
சங்கைபெற நாளு மங்கமுள மாதர்
     தங்கள்வச மாகி ...... அலையாமற்
சுந்தரம தாக எந்தன்வினை யேக
     சிந்தைகளி கூர ...... அருள்வாயே
தொங்குசடை மீது திங்களணி நாதர்
     மங்கைரண காளி ...... தலைசாயத்
தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி
     என்றுநட மாடு ...... மவர்பாலா
துங்கமுள வேடர் தங்கள்குல மாதை
     மங்களம தாக ...... அணைவோனே
கந்தமுரு கேச மிண்டசுரர் மாள
     அந்தமுனை வேல்கொ ...... டெறிவோனே
கம்பர்கயி லாசர் மைந்தவடி வேல
     சிங்கைநகர் மேவு ...... பெருமாளே.

சந்திதொறும் நாணம் இன்றி அகம் வாடி உந்தி பொருளாக
அலைவேனோ
சங்கை பெற நாளும் அங்கம் உ(ள்)ள மாதர் தங்கள் வசமாகி
அலையாமல்
சுந்தரமது ஆக எந்தன் வினை ஏக சிந்தை களி கூர
அருள்வாயே
தொங்கு சடை மீது திங்கள் அணி நாதர் மங்கை ரண காளி
தலை சாய
தொந்தி திமிதோதி தந்த திமிதாதி என்று நடம் ஆடும்
அவர் பாலா
துங்கம் உ(ள்)ள வேடர் தங்கள் குல மாதை மங்களம் அதாக
அணைவோனே
கந்த முருகேச மிண்டு அசுரர் மாள அந்த முனை வேல்
கொ(ண்)டு எறிவோனே
கம்பர் கயிலாசர் மைந்த வடி வேல சிங்கை நகர் மேவு
பெருமாளே.
காலையும் மாலையும் வெட்கம் இல்லாமல் உள்ளம் சோர்வுற்று வயிறே முக்கிய காரியமாக அலைச்சல் உறுவேனோ? தினந்தோறும் அச்சம் கொண்டு, உடல் அழகுள்ள விலைமாதர்களின் வசப்பட்டுத் திரியாமல், அழகு பெற, என்னுடைய வினை தொலைந்து ஒழிய, மனம் மகிழ்ச்சி அடைய, நீஅருள்வாயாக. தொங்குகின்ற சடையின் மேல் சந்திரனை அணிந்துள்ள தலைவர், மங்கையும் போர்க்களத்தை ஆள்பவளுமான காளி நாணித் தலை குனிய, தொந்தி திமிதோதி தந்த திமிதாதி என்று நடனம் ஆடிய சிவபெருமானின் குமாரனே, பெருமை வாய்ந்த வேடர்களுடைய குலத்தில் வளர்ந்த பெண்ணாகிய வள்ளியை மங்களகரமாகத் தழுவியவனே, கந்தனே, முருகேசனே, நெருங்கிப் போரிட வந்த அசுரர்கள் இறக்க, அந்த கூரிய வேல் கொண்டு எறிந்து அழித்தவனே, (கச்சி) ஏகாம்பரநாதர், கயிலாய நாதர் ஆகிய சிவபெருமானின் பிள்ளையே, கூரிய வேலாயுதத்தை உடையவனே, காங்கேய நகரில் வாழும் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
சந்திதொறும் நாணம் இன்றி அகம் வாடி உந்தி பொருளாக
அலைவேனோ
... காலையும் மாலையும் வெட்கம் இல்லாமல் உள்ளம்
சோர்வுற்று வயிறே முக்கிய காரியமாக அலைச்சல் உறுவேனோ?
சங்கை பெற நாளும் அங்கம் உ(ள்)ள மாதர் தங்கள் வசமாகி
அலையாமல்
... தினந்தோறும் அச்சம் கொண்டு, உடல் அழகுள்ள
விலைமாதர்களின் வசப்பட்டுத் திரியாமல்,
சுந்தரமது ஆக எந்தன் வினை ஏக சிந்தை களி கூர
அருள்வாயே
... அழகு பெற, என்னுடைய வினை தொலைந்து ஒழிய,
மனம் மகிழ்ச்சி அடைய, நீஅருள்வாயாக.
தொங்கு சடை மீது திங்கள் அணி நாதர் மங்கை ரண காளி
தலை சாய
... தொங்குகின்ற சடையின் மேல் சந்திரனை அணிந்துள்ள
தலைவர், மங்கையும் போர்க்களத்தை ஆள்பவளுமான காளி நாணித்
தலை குனிய,
தொந்தி திமிதோதி தந்த திமிதாதி என்று நடம் ஆடும்
அவர் பாலா
... தொந்தி திமிதோதி தந்த திமிதாதி என்று நடனம்
ஆடிய சிவபெருமானின் குமாரனே,
துங்கம் உ(ள்)ள வேடர் தங்கள் குல மாதை மங்களம் அதாக
அணைவோனே
... பெருமை வாய்ந்த வேடர்களுடைய குலத்தில்
வளர்ந்த பெண்ணாகிய வள்ளியை மங்களகரமாகத் தழுவியவனே,
கந்த முருகேச மிண்டு அசுரர் மாள அந்த முனை வேல்
கொ(ண்)டு எறிவோனே
... கந்தனே, முருகேசனே, நெருங்கிப்
போரிட வந்த அசுரர்கள் இறக்க, அந்த கூரிய வேல் கொண்டு எறிந்து
அழித்தவனே,
கம்பர் கயிலாசர் மைந்த வடி வேல சிங்கை நகர் மேவு
பெருமாளே.
... (கச்சி) ஏகாம்பரநாதர், கயிலாய நாதர் ஆகிய
சிவபெருமானின் பிள்ளையே, கூரிய வேலாயுதத்தை உடையவனே,
காங்கேய நகரில் வாழும் பெருமாளே.
Similar songs:

45 - கன்றிலுறு மானை (திருச்செந்தூர்)

தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான

754 - அஞ்சுவித பூதமும் (நிம்பபுரம்)

தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான

938 - சந்திதொறும் நாணம் (சிங்கை)

தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான

1334 - கன்றிவரு நீல (திருச்செந்தூர்)

தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான

Songs from this thalam சிங்கை

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 938