சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
200   பழநி திருப்புகழ் ( குருஜி இராகவன் # 92 - வாரியார் # 108 )  

வேய் இசைந்து

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தான தந்தன தான தந்தன
     தான தந்தன தான தந்தன
          தான தந்தன தான தந்தன ...... தனதான


வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய
     மாதர் கொங்கையி லேமு யங்கிட
          வீணி லுஞ்சில பாத கஞ்செய ...... அவமேதான்
வீறு கொண்டுட னேவ ருந்தியு
     மேயு லைந்தவ மேதி ரிந்துள
          மேக வன்றறி வேக லங்கிட ...... வெகுதூரம்
போய லைந்துழ லாகி நொந்துபின்
     வாடி நைந்தென தாவி வெம்பியெ
          பூத லந்தனி லேம யங்கிய ...... மதிபோகப்
போது கங்கையி னீர்சொ ரிந்திரு
     பாத பங்கய மேவ ணங்கியெ
          பூசை யுஞ்சில வேபு ரிந்திட ...... அருள்வாயே
தீயி சைந்தெழ வேயி லங்கையில்
     ராவ ணன்சிர மேய ரிந்தவர்
          சேனை யுஞ்செல மாள வென்றவன் ...... மருகோனே
தேச மெங்கணு மேபு ரந்திடு
     சூர்ம டிந்திட வேலின் வென்றவ
          தேவர் தம்பதி யாள அன்புசெய் ...... திடுவோனே
ஆயி சுந்தரி நீலி பிங்கலை
     போக அந்தரி சூலி குண்டலி
          ஆதி யம்பிகை வேத தந்திரி ...... யிடமாகும்
ஆல முண்டர னாரி றைஞ்சவொர்
     போத கந்தனை யேயு கந்தருள்
          ஆவி னன்குடி மீதி லங்கிய ...... பெருமாளே.

வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய
      மாதர் கொங்கையிலே முயங்கிட
      வீணிலும் சில பாதகம் செய அவமே தான்
வீறு கொண்டு உடனே வருந்தியுமே
      உலைந்து அவமே திரிந்து உள்ளமே
      கவன்று அறிவே கலங்கிட வெகு தூரம்
போய் அலைந்து உழலாகி நொந்து
      பின் வாடி நைந்து எனது ஆவி வெம்பியே
      பூதலம் தனிலே மயங்கிய மதி போக
போது கங்கையின் நீர் சொரிந்து
      இருபாத பங்கயமே வணங்கியே
      பூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே
தீ இசைந்து எழவே இலங்கையில்
      ராவணன் சிரமே அரிந்து அவர்
      சேனையும் செல மாள வென்றவன் மருகோனே
தேசம் எங்கணுமே புரந்திடு
      சூர் மடிந்திட வேலின் வென்றவ
      தேவர் தம் பதி ஆள அன்பு செய்திடுவோனே
ஆயி சுந்தரி நீலி பிங்கலை
      போக அந்தரி சூலி குண்டலி
      ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும்
ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச
      ஓர் போதகம் தனையே உகந்து அருள்
      ஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே.
மூங்கிலுக்கு ஒத்ததாய் எழுந்துள்ள தோள்களைக் கொண்ட விலைமாதர்களின் மார்பகங்களைத் தழுவ வேண்டி, வீணாக சில பாதகச் செயல்களைச் செய்ய பயனொன்றும் இல்லாமல் செருக்கு அடைந்து மனம் வருந்தியும், நிலை குலைந்து, வீணாகத் திரிந்து நெஞ்சம் கவலை கொண்டும், அறிவு கலங்கி வெகு தூரம் போய் அலைந்து உழன்று நொந்தும், பின்னர் உடல் வாட்டமுற்று நிலை கெட்டு என் ஆவி கொதித்து வாடியும், இப் பூமியில் ஆசை மயக்கம் கொண்ட புத்தி என்னை விட்டு விலகிப் போகவும், மலரையும், கங்கை நீரையும் நிரம்பப் பெய்து உனது இரண்டு தாமரைத் திருவடிகளை வணங்கியே சில பூஜைகளையும் செய்ய அருள் புரிவாயாக. நெருப்புப் பற்றி எழும்படி இலங்கையில் இராவணனுடைய தலைகளை அரிந்து, அவனுடைய சேனைகள் தொலைந்து அழியும்படியாக வென்ற இராமனின் மருகோனே, எல்லா நாடுகளையும் ஆண்டு வந்த சூரன் இறந்து போகும்படியாக வேல் கொண்டு வென்றவனே, தேவர்கள் தம் ஊரை ஆளும்படி அருள் புரிந்தவனே, அனைவருக்கும் தாய், அழகி, பச்சை நிறமுடையவள், பொன்னிறமும் படைத்தவள், உயிர்களுக்குப் போகத்தை ஊட்டும் ஓளி வடிவினள், திரிசூலம் ஏந்தியவள், சுத்த மாயையாகிய சக்தி, ஆதி முதல்வி, அம்பிகை, வேதத் தலைவி (ஆகிய பார்வதி) இடப்பாகத்தில் அமரும், ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் வணங்கி வேண்ட, ஒப்பற்ற ஞான உபதேசத்தை மகிழ்ந்து அருளிய (பெருமாளே), திருவாவினன்குடி என்னும் தலத்தில் விளங்குகின்ற பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய ... மூங்கிலுக்கு ஒத்ததாய்
எழுந்துள்ள தோள்களைக் கொண்ட
மாதர் கொங்கையிலே முயங்கிட ... விலைமாதர்களின்
மார்பகங்களைத் தழுவ வேண்டி,
வீணிலும் சில பாதகம் செய அவமே தான் ... வீணாக சில
பாதகச் செயல்களைச் செய்ய பயனொன்றும் இல்லாமல்
வீறு கொண்டு உடனே வருந்தியுமே ... செருக்கு அடைந்து மனம்
வருந்தியும்,
உலைந்து அவமே திரிந்து உள்ளமே கவன்று ... நிலை குலைந்து,
வீணாகத் திரிந்து நெஞ்சம் கவலை கொண்டும்,
அறிவே கலங்கிட வெகு தூரம் போய் அலைந்து உழலாகி
நொந்து
... அறிவு கலங்கி வெகு தூரம் போய் அலைந்து உழன்று
நொந்தும்,
பின் வாடி நைந்து எனது ஆவி வெம்பியே ... பின்னர் உடல்
வாட்டமுற்று நிலை கெட்டு என் ஆவி கொதித்து வாடியும்,
பூதலம் தனிலே மயங்கிய மதி போக ... இப் பூமியில் ஆசை
மயக்கம் கொண்ட புத்தி என்னை விட்டு விலகிப் போகவும்,
போது கங்கையின் நீர் சொரிந்து ... மலரையும், கங்கை நீரையும்
நிரம்பப் பெய்து
இருபாத பங்கயமே வணங்கியே ... உனது இரண்டு தாமரைத்
திருவடிகளை வணங்கியே
பூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே ... சில பூஜைகளையும்
செய்ய அருள் புரிவாயாக.
தீ இசைந்து எழவே இலங்கையில் ... நெருப்புப் பற்றி எழும்படி
இலங்கையில்
ராவணன் சிரமே அரிந்து அவர் சேனையும் செல மாள ...
இராவணனுடைய தலைகளை அரிந்து, அவனுடைய சேனைகள்
தொலைந்து அழியும்படியாக
வென்றவன் மருகோனே ... வென்ற இராமனின் மருகோனே,
தேசம் எங்கணுமே புரந்திடு ... எல்லா நாடுகளையும் ஆண்டு வந்த
சூர் மடிந்திட வேலின் வென்றவ ... சூரன் இறந்து போகும்படியாக
வேல் கொண்டு வென்றவனே,
தேவர் தம் பதி ஆள அன்பு செய்திடுவோனே ... தேவர்கள்
தம் ஊரை ஆளும்படி அருள் புரிந்தவனே,
ஆயி சுந்தரி நீலி பிங்கலை ... அனைவருக்கும் தாய், அழகி, பச்சை
நிறமுடையவள், பொன்னிறமும் படைத்தவள்,
போக அந்தரி சூலி குண்டலி ... உயிர்களுக்குப் போகத்தை ஊட்டும்
ஓளி வடிவினள், திரிசூலம் ஏந்தியவள், சுத்த மாயையாகிய சக்தி,
ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும் ... ஆதி முதல்வி,
அம்பிகை, வேதத் தலைவி (ஆகிய பார்வதி) இடப்பாகத்தில் அமரும்,
ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச ... ஆலகால விஷத்தை உண்ட
சிவபெருமான் வணங்கி வேண்ட,
ஓர் போதகம் தனையே உகந்து அருள் ... ஒப்பற்ற ஞான
உபதேசத்தை மகிழ்ந்து அருளிய (பெருமாளே),
ஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே. ... திருவாவினன்குடி
என்னும் தலத்தில் விளங்குகின்ற பெருமாளே.
Similar songs:

189 - மூல மந்திரம் (பழநி)

தான தந்தன தான தந்தன
     தான தந்தன தான தந்தன
          தான தந்தன தான தந்தன ...... தனதான

200 - வேய் இசைந்து (பழநி)

தான தந்தன தான தந்தன
     தான தந்தன தான தந்தன
          தான தந்தன தான தந்தன ...... தனதான

Songs from this thalam பழநி

104 - அகல்வினை

105 - அணிபட்டு அணுகி

106 - அதல விதல

107 - அபகார நிந்தை

108 - அரிசன வாடை

109 - அருத்தி வாழ்வொடு

110 - அவனிதனிலே

111 - அறமிலா நிலை

112 - ஆதாளிகள் புரி

113 - ஆலகாலம் என

114 - ஆறுமுகம் ஆறுமுகம்

115 - இத் தாரணிக்குள்

116 - இரவி என

117 - இருகனக மாமேரு

118 - இரு செப்பென

119 - இலகிய களப

120 - இலகுகனி மிஞ்சு

121 - உயிர்க் கூடு

122 - உலகபசு பாச

123 - ஒருபொழுதும் இருசரண

124 - ஒருவரை ஒருவர்

125 - ஓடி ஓடி

126 - கடலைச் சிறை

127 - கடலை பொரியவரை

128 - கதியை விலக்கு

129 - கரிய பெரிய

130 - கரிய மேகமதோ

131 - கரியிணை கோடென

132 - கருகி அகன்று

133 - கருப்புவிலில்

134 - கருவின் உருவாகி

135 - கலக வாள்விழி

136 - கலகக் கயல்விழி

137 - கலவியி லிச்சி

138 - கலை கொடு

139 - களப முலையை

140 - கறுத்த குழலணி

141 - கனக கும்பம்

142 - கனத்திறுகி

143 - கனமாய் எழுந்து

144 - கார் அணிந்த

145 - குரம்பை மலசலம்

146 - குருதி மலசலம்

147 - குழல் அடவி

148 - குழல்கள் சரிய

149 - குறித்தமணி

150 - குன்றுங் குன்றும்

151 - கொந்துத் தரு

152 - கோல குங்கும

153 - கோல மதிவதனம்

154 - சகடத்திற் குழை

155 - சிந்துர கூரம

156 - சிவனார் மனங்குளிர

157 - சிறு பறையும்

158 - சீ உதிரம் எங்கும்

159 - சீறல் அசடன்

160 - சுருதி முடி மோனம்

161 - சுருளளக பார

162 - ஞானங்கொள்

163 - தகர நறுமலர்

164 - தகைமைத் தனியில்

165 - தமரும் அமரும்

166 - தலைவலி மருத்தீடு

167 - திடமிலி சற்குணமிலி

168 - திமிர உததி

169 - தோகைமயிலே கமல

170 - நாத விந்து

171 - நிகமம் எனில்

172 - நெற்றி வெயர்த்துளி

173 - பகர்தற்கு அரிதான

174 - பஞ்ச பாதகன்

175 - பாரியான கொடை

176 - புடவிக்கு அணி

177 - புடைசெப் பென

178 - பெரியதோர் கரி

179 - போதகம் தரு

180 - மந்தரமதெனவே

181 - மருமலரினன்

182 - மனக்கவலை ஏதும்

183 - மலரணி கொண்டை

184 - முகிலளகத்தில்

185 - முகை முளரி

186 - முதிரவுழையை

187 - முத்துக்கு

188 - மூலம் கிளர் ஓர்

189 - மூல மந்திரம்

190 - முருகுசெறி குழலவிழ

191 - முருகு செறிகுழல் முகில்

192 - வசனமிக ஏற்றி

193 - வஞ்சனை மிஞ்சி

194 - வரதா மணி நீ

195 - வனிதை உடல்

196 - வாதம் பித்தம்

197 - வாரணந் தனை

198 - விதம் இசைந்து

199 - விரை மருவு

200 - வேய் இசைந்து

1338 - சிவணிதா வியமனது

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song sequence no 200