சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

முதல் ஆயிரம்   பெரியாழ்வார்  
பெரியாழ்வார் திருமொழி  

Songs from 13.0 to 473.0   ( திருவில்லிபுத்தூர் )
Pages:    1    2  3  4  5  6  7  8  9  10  Next  Next 10
ஆற்றில் இருந்து விளையாடுவோங்களைச்
சேற்றால் எறிந்து வளை துகிற் கைக்கொண்டு
காற்றிற் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
      வளைத் திறம் பேசானால் இன்று முற்றும்



[213.0]
குண்டலம் தாழ குழல் தாழ நாண் தாழ
எண் திசையோரும் இறைஞ்சித் தொழுது ஏத்த
வண்டு அமர் பூங்குழலார் துகிற் கைக்கொண்டு
விண் தோய் மரத்தானால் இன்று முற்றும்
      வேண்டவும் தாரானால் இன்று முற்றும்



[214.0]
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து
படம் படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்
      உச்சியில் நின்றானால் இன்று முற்றும்



[215.0]
Back to Top
தேனுகன் ஆவி செகுத்துப் பனங்கனி
தான் எறிந்திட்ட தடம் பெருந்தோளினால்
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து
ஆனிரை காத்தானால் இன்று முற்றும்
      அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும்



[216.0]
ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு
பேர்த்து அவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு
வேய்த் தடந்தோளினார் வெண்ணெய் கோள் மாட்டாது அங்கு
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்
      அடியுண்டு அழுதானால் இன்று முற்றும்



[217.0]
தள்ளித் தளர் நடை யிட்டு இளம் பிள்ளையாய்
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கிக
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை உயிர்
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்
      துவக்கு அற உண்டானால் இன்று முற்றும்



[218.0]
மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று  
மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை
ஒரடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும்
      தரணி அளந்தானால் இன்று முற்றும்



[219.0]
தாழை தண்-ஆம்பற் தடம் பெரும் பொய்கைவாய்
வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்பு உண்
வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய்
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும்
      அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும்



[220.0]
Back to Top
வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத்து உருவாய் இடந்த இம் மண்ணினைத்
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
      தரணி இடந்தானால் இன்று முற்றும்



[221.0]
அங் கமலக் கண்ணன்தன்னை அசோதைக்கு
மங்கை நல்லார்கள் தாம் வந்து முறைப்பட்ட
அங்கு அவர் சொல்லைப் புதுவைக்கோன் பட்டன் சொல்
      இங்கு இவை வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே



[222.0]
தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு
      தளர்நடைஇட்டு வருவான்
பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு ஒரு
      புள்ளுவன் பொய்யே தவழும்
மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை
      துஞ்ச வாய்வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே             



[223.0]
பொன்போல் மஞ்சனம் ஆட்டி அமுது ஊட்டிப்
      போனேன் வருமளவு இப்பால்
வன் பாரச் சகடம் இறச் சாடி
      வடக்கில் அகம் புக்கு இருந்து
மின்போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை
      வேற்றுருவம் செய்து வைத்த
அன்பா உன்னை அறிந்துகொண்டேன்
      உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே



[224.0]
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்
      குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய்ம் மாய மருது ஆன அசுரரைப்
      பொன்றுவித்து இன்று நீ வந்தாய்
இம் மாயம் வல்ல பிள்ளை- நம்பீ உன்னை
      என்மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே



[225.0]
Back to Top
மைஆர் கண் மட ஆய்ச்சியர் மக்களை
      மையன்மை செய்து அவர் பின்போய்
கொய் ஆர் பூந்துகில் பற்றித் தனி நின்று
      குற்றம் பல பல செய்தாய்
பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ
      புத்தகத்துக்கு உள கேட்டேன்
ஐயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே



[226.0]
முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயி
      னோடு தயிரும் விழுங்கி
கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த
      கலத்தொடு சாய்த்துப் பருகி
மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல
      விம்மி விம்மி அழுகின்ற
அப்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே



[227.0]
கரும்பார் நீள் வயற் காய்கதிர்ச் செந்நெலைக்
      கற்றாநிரை மண்டித் தின்ன
விரும்பாக் கன்று ஒன்று கொண்டு விளங்கனி
      வீழ எறிந்த பிரானே
சுரும்பார் மென்குழற் கன்னி ஒருத்திக்குச்
      சூழ்வலை வைத்துத் திரியும்
அரம்பா உன்னை அறிந்துகொண்டேன்
      உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே



[228.0]
மருட்டார் மென்குழற் கொண்டு பொழில் புக்கு
      வாய்வைத்து அவ் ஆயர்தம் பாடி
சுருட்டார் மென்குழற் கன்னியர் வந்து உன்னைச்
      சுற்றும் தொழ நின்ற சோதி
பொருள்- தாயம் இலேன் எம்பெருமான் உன்னைப்
      பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே



[229.0]
வாளா ஆகிலும் காணகில்லார் பிறர்
      மக்களை மையன்மை செய்து
தோளால் இட்டு அவரோடு திளைத்து நீ
      சொல்லப் படாதன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி
      கெட்டேன் வாழ்வில்லை நந்தன்
காளாய் உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே



[230.0]
Back to Top
தாய்மார் மோர் விற்கப் போவர் தமப்பன்மார்
      கற்றா நிரைப் பின்பு போவர்
நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை
      நேர்படவே கொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து
      கண்டார் கழறத் திரியும்
ஆயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே



[231.0]
தொத்தார் பூங்குழற் கன்னி ஒருத்தியைச்
      சோலைத் தடம் கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை
      மூவேழு சென்றபின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை
      உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்
அத்தா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே



[232.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Fri, 10 May 2024 00:23:06 +0000
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song