சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

முதல் ஆயிரம்   பெரியாழ்வார்  
பெரியாழ்வார் திருமொழி  

Songs from 13.0 to 473.0   ( திருவில்லிபுத்தூர் )
Pages:    1    2  3  4  5  6  7  8  9  10  Next  Next 10
காறை பூணும் கண்ணாடி காணும் தன்
      கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் தன்
      கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்
      தேவன் திறம் பிதற்றும்
மாறில் மா மணிவண்ணன்மேல் இவள்
      மால் உறுகின்றாளே



[293.0]
கைத்தலத்து உள்ள மாடு அழியக்
      கண்ணாலங்கள் செய்து இவளை-
வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்?
      நம்மை வடுப்படுத்தும்-
செய்த்தலை எழு நாற்றுப் போல் அவன்
      செய்வன செய்துகொள்ள
மைத் தடமுகில் வண்ணன் பக்கல்
      வளர விடுமின்களே



[294.0]
பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து
      பேணி நம் இல்லத்துள்ளே
இருத்துவான் எண்ணி நாம் இருக்க
      இவளும் ஒன்று எண்ணுகின்றாள்
மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும்
      வார்த்தை படுவதன்முன்
ஒருப்படுத்து இடுமின் இவளை
      உலகளந்தான் இடைக்கே



[295.0]
Back to Top
ஞாலம் முற்றும் உண்டு ஆலிலைத் துயில்
      நாராயணனுக்கு இவள்
மாலதாகி மகிழ்ந்தனள் என்று
      தாய் உரை செய்ததனை
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்கோன்
      விட்டுசித்தன் சொன்ன
மாலை பத்தும் வல்லவர்கட்கு
      இல்லை வரு துயரே



[296.0]
நல்லது ஓர் தாமரைப் பொய்கை
      நாண்மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு
      அழகழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறியோடிற்றாலோ
      என்மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின்போய்
      மதுரைப் புறம் புக்காள் கொல்லோ?



[297.0]
ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத
      உருவறைக் கோபாலர் தங்கள்
கன்று கால் மாறுமா போலே
      கன்னி இருந்தாளைக் கொண்டு
நன்றும் கிறி செய்து போனான்
      நாராயணன் செய்த தீமை
என்றும் எமர்கள் குடிக்கு ஓர்
      ஏச்சுக்கொல்? ஆயிடுங் கொல்லோ?



[298.0]
குமரி மணம் செய்து கொண்டு
      கோலம் செய்து இல்லத்து இருத்தி
தமரும் பிறரும் அறியத்
      தாமோதரற்கு என்று சாற்றி   
அமரர் பதியுடைத் தேவி
      அரசாணியை வழிபட்டு
துமிலம் எழப் பறை கொட்டித்
      தோரணம் நாட்டிடுங் கொல்லோ?



[299.0]
ஒரு மகள் தன்னை உடையேன்
      உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
      செங்கண் மால் தான் கொண்டு போனான்
பெரு மகளாய்க் குடி வாழ்ந்து
      பெரும்பிள்ளை பெற்ற அசோதை
மருமகளைக் கண்டு உகந்து
      மணாட்டுப் புறம்செய்யுங் கொல்லோ?



[300.0]
Back to Top
தம் மாமன் நந்தகோபாலன்
      தழீஇக் கொண்டு என் மகள் தன்னைச்
செம்மாந்திரே என்று சொல்லி
      செழுங் கயற் கண்ணும் செவ்வாயும்
கொம்மை முலையும் இடையும்
      கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு
இம் மகளைப் பெற்ற தாயர்
      இனித் தரியார் என்னுங் கொல்லோ?



[301.0]
வேடர் மறக்குலம் போலே
      வேண்டிற்றுச் செய்து என்மகளைக்
கூடிய கூட்டமே யாகக்
      கொண்டு குடி வாழுங் கொல்லோ?
நாடும் நகரும் அறிய
      நல்லது ஓர் கண்ணாலம் செய்து
சாடு இறப் பாய்ந்த பெருமான்
      தக்கவா கைப்பற்றுங் கொல்லோ?



[302.0]
அண்டத்து அமரர் பெருமான்
      ஆழியான் இன்று என்மகளைப்
பண்டப் பழிப்புக்கள் சொல்லிப்
      பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?
கொண்டு குடி- வாழ்க்கை வாழ்ந்து
      கோவலப் பட்டம் கவித்துப்
பண்டை மணாட்டிமார் முன்னே
      பாதுகாவல் வைக்குங் கொல்லோ?



[303.0]
குடியிற் பிறந்தவர் செய்யும்
      குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ
நடை ஒன்றும் செய்திலன் நங்காய்
      நந்தகோபன் மகன் கண்ணன்
இடை இருபாலும் வணங்க
      இளைத்து இளைத்து என்மகள் ஏங்கிக்
கடைகயிறே பற்றி வாங்கிக்
      கை தழும்பு ஏறிடுங் கொல்லோ?



[304.0]
வெண்ணிறத் தோய் தயிர் தன்னை
      வெள்வரைப்பின் முன் எழுந்து
கண் உறங்காதே இருந்து
      கடையவும் தான்வல்லள் கொல்லோ?
ஒண்ணிறத் தாமரைச் செங்கண்
      உலகளந்தான் என்மகளைப்
பண் அறையாப் பணிகொண்டு
      பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?



[305.0]
Back to Top
மாயவன் பின்வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமும் எல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லைப் தண் புதுவைப் பட்டன் சொன்ன
தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணிவண்ணனுக்கு ஆளரே



[306.0]
என் நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன் நாதன் காணவே தண்பூ மரத்தினை
வன் நாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட
என் நாதன் வன்மையைப் பாடிப் பற
      எம்பிரான் வன்மையைப் பாடிப் பற



[307.0]
என் வில் வலி கண்டு போ என்று எதிர்வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி
முன் வில் வலித்து முதுபெண் உயிருண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
      தாசரதி தன்மையைப் பாடிப் பற



[308.0]
உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு
விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர் வந்து
செருக்கு உற்றான் வீரம் சிதையத் தலையைச்
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற
      தேவகி சிங்கத்தைப் பாடிப் பற



[309.0]
மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
      சீதை மணாளனைப் பாடிப் பற



[310.0]
Back to Top
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற
      அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற



[311.0]
முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற
      அயோத்தியர் கோமானைப் பாடிப் பற



[312.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Fri, 10 May 2024 00:23:06 +0000
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song