சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Marati
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி
Songs from 2899.0 to 4000.0 ( )
Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
Next
Next 10
குரை கழல்கள் நீட்டி மண்
கொண்ட கோல வாமனா
குரை கழல் கைகூப்புவார்கள்
கூட நின்ற மாயனே
விரை கொள் பூவும் நீரும் கொண்டு
ஏத்தமாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திரு உருவம்
என்னது ஆவி மேலதே
[3259.0]
என்னது ஆவி மேலையாய்
ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகி நின்ற
சோதி ஞான மூர்த்தியாய்
உன்னது என்னது ஆவியும்
என்னது உன்னது ஆவியும்
இன்ன வண்ணமே நின்றாய்
என்று உரைக்க வல்லேனே?
[3260.0]
Back to Top
உரைக்க வல்லேன் அல்லேன் உன்
உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்?
காதல் மையல் ஏறினேன்
புரைப்பு இலாத பரம்பரனே
பொய் இலாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள்
ஏத்த யானும் ஏத்தினேன்
[3261.0]
யானும் ஏத்தி ஏழ் உலகும்
முற்றும் ஏத்தி பின்னையும்
தானும் ஏத்திலும் தன்னை
ஏத்த ஏத்த எங்கு எய்தும்?
தேனும் பாலும் கன்னலும்
அமுதும் ஆகித் தித்திப்ப
யானும் எம் பிரானையே
ஏத்தினேன் யான் உய்வானே
[3262.0]
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி
கண்ணன் ஒண் கழல்கள் மேல்
செய்ய தாமரைப் பழனத்
தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய் இல் பாடல் ஆயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து
விண்ணும் ஆள்வர் மண்ணூடே
[3263.0]
மண்ணை இருந்து துழாவி
வாமனன் மண் இது என்னும்
விண்ணைத் தொழுது அவன் மேவு
வைகுந்தம் என்று கை காட்டும்
கண்ணை உள்நீர் மல்க நின்று
கடல்வண்ணன் என்னும் அன்னே என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு
என் செய்கேன் பெய் வளையீரே?
[3264.0]
பெய்வளைக் கைகளைக் கூப்பி
பிரான் கிடக்கும் கடல் என்னும்
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி
சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்
நையும் கண்ணீர் மல்க நின்று
நாரணன் என்னும் அன்னே என்
தெய்வ உருவில் சிறுமான்
செய்கின்றது ஒன்று அறியேனே
[3265.0]
Back to Top
அறியும் செந்தீயைத் தழுவி
அச்சுதன் என்னும் மெய் வேவாள்
எறியும் தண் காற்றைத் தழுவி
என்னுடைக் கோவிந்தன் என்னும்
வெறி கொள் துழாய் மலர் நாறும்
வினையுடையாட்டியேன் பெற்ற
செறி வளை முன் கைச் சிறுமான்
செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?
[3266.0]
ஒன்றிய திங்களைக் காட்டி
ஒளி மணி வண்ணனே என்னும்
நின்ற குன்றத்தினை நோக்கி
நெடுமாலே வா என்று கூவும்
நன்று பெய்யும் மழை காணில்
நாரணன் வந்தான் என்று ஆலும்
என்று இன மையல்கள் செய்தான்
என்னுடைக் கோமளத்தையே?
[3267.0]
கோமள வான் கன்றைப் புல்கி
கோவிந்தன் மேய்த்தன என்னும்
போம் இள நாகத்தின் பின் போய்
அவன் கிடக்கை ஈது என்னும்
ஆம் அளவு ஒன்றும் அறியேன்
அருவினையாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன்
மால் செய்து செய்கின்ற கூத்தே
[3268.0]
கூத்தர் குடம் எடுத்து ஆடில்
கோவிந்தன் ஆம் எனா ஓடும்
வாய்த்த குழல் ஓசை கேட்கில்
மாயவன் என்று மையாக்கும்
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்
அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு
என் பெண்கொடி ஏறிய பித்தே
[3269.0]
ஏறிய பித்தினோடு எல்லா
உலகும் கண்ணன் படைப்பு என்னும்
நீறு செவ்வே இடக் காணில்
நெடுமால் அடியார் என்று ஓடும்
நாறு துழாய் மலர் காணில்
நாரணன் கண்ணி ஈது என்னும்
தேறியும் தேறாதும் மாயோன்
திறத்தனளே இத் திருவே
[3270.0]
Back to Top
திரு உடை மன்னரைக் காணில்
திருமாலைக் கண்டேனே என்னும்
உரு உடை வண்ணங்கள் காணில்
உலகு அளந்தான் என்று துள்ளும்
கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்
கடல் வண்ணன் கோயிலே என்னும்
வெருவிலும் வீழ்விலும் ஓவாள்
கண்ணன் கழல்கள் விரும்புமே
[3271.0]
விரும்பிப் பகவரைக் காணில்
வியல் இடம் உண்டானே என்னும்
கரும் பெரு மேகங்கள் காணில்
கண்ணன் என்று ஏறப் பறக்கும்
பெரும் புல ஆ நிரை காணில்
பிரான் உளன் என்று பின் செல்லும்
அரும் பெறல் பெண்ணினை மாயோன்
அலற்றி அயர்ப்பிக்கின்றானே
[3272.0]
அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி
அகலவே நீள் நோக்குக் கொள்ளும்
வியர்க்கும் மழைக்கண் துளும்ப
வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும்
பெயர்த்தும் கண்ணா என்று பேசும்
பெருமானே வா என்று கூவும்
மயல் பெருங் காதல் என் பேதைக்கு
என்செய்கேன் வல்வினையேனே?
[3273.0]
வல்வினை தீர்க்கும் கண்ணனை
வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையால் சொன்ன பாடல்
ஆயிரத்துள் இவை பத்தும்
நல் வினை என்று கற்பார்கள்
நலனிடை வைகுந்தம் நண்ணி
தொல்வினை தீர எல்லாரும்
தொழுது எழ வீற்றிருப்பாரே
[3274.0]
வீற்றிருந்து ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம் மா பிளந்தான் தன்னை
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?
[3275.0]
Back to Top
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன்
செய்ய கோலத் தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
மொய்ய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே
[3276.0]
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே
[3277.0]
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள் உடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நா இயலால் இசைமாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே
[3278.0]
Other Prabandhams:
திருப்பல்லாண்டு
திருப்பாவை
பெரியாழ்வார் திருமொழி
நாச்சியார் திருமொழி
திருவாய் மொழி
பெருமாள் திருமொழி
திருச்சந்த விருத்தம்
திருமாலை
திருப்பள்ளி எழுச்சி
அமலன் ஆதிபிரான்
கண்ணி நுண் சிறுத்தாம்பு
பெரிய திருமொழி
திருக்குறுந் தாண்டகம்
திரு நெடுந்தாண்டகம்
முதல் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
நான்முகன் திருவந்தாதி
திருவிருத்தம்
திருவாசிரியம்
பெரிய திருவந்தாதி
நம்மாழ்வார்
திரு எழு கூற்றிருக்கை
சிறிய திருமடல்
பெரிய திருமடல்
இராமானுச நூற்றந்தாதி
திருவாய்மொழி
கண்ணிநுண்சிறுத்தாம்பு
அமலனாதிபிரான்
திருச்சந்தவிருத்தம்
This page was last modified on Fri, 10 May 2024 00:23:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
divya prabandham song