| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Marati
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
திருவங்கப்பெருமாளறையர்அருளிச்செய்தது
முதல் ஆயிரம்
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
திருமாலை
Songs from 872.0 to 916.0 ( )
Pages:
1
2
3
Next
காவலிற் புலனை வைத்து
கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழிதர்கின்றோம்
நமன்-தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த
முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்பு உடைமை கண்டாய்
அரங்க மா நகருளானே
[872.0]
மற்றொன்றும்வேண்டாமனமே! மதிளரங்கர்
கற்றினம்மேய்த்தகழலிணைக்கீழ் - உற்ற
திருமாலைபாடும் சீர்த்தொண்டரடிப்பொடியெம்
பெருமானை எப்பொழுதும்பேசு.
[872.1]
பச்சை மா மலை போல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச் சுவை தவிர யான் போய்
இந்திர-லோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன்
அரங்க மா நகருளானே
[873.0]
வேத நூற் பிராயம் நூறு
மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும்
நின்றதிற் பதினையாண்டு
பேதை பாலகன் அது ஆகும்
பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்க மா நகருளானே
[874.0]
மொய்த்த வல்வினையுள் நின்று
மூன்று எழுத்து உடைய பேரால்
கத்திரபந்தும் அன்றே
பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை அடியர் ஆனார்க்கு
இரங்கும் நம் அரங்கன் ஆய
பித்தனைப் பெற்றும் அந்தோ
பிறவியுள் பிணங்குமாறே
[875.0]
Back to Top
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்
பெரியது ஓர் இடும்பை பூண்டு
உண்டு இராக் கிடக்கும் அப்போது
உடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய்-மாலை மார்பன்
தமர்களாய்ப் பாடி ஆடி
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத்
தொழும்பர்சோறு உகக்குமாறே
[876.0]
மறம் சுவர் மதில் எடுத்து
மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம் சுவர் ஓட்டை மாடம்
புரளும் போது அறிய மாட்டீர்
அறம் சுவர் ஆகி நின்ற
அரங்கனார்க்கு ஆட் செய்யாதே
புறஞ் சுவர்க் கோலஞ் செய்து
புள் கௌவக் கிடக்கின்றீரே
[877.0]
புலை-அறம் ஆகி நின்ற
புத்தொடு சமணம் எல்லாம்
கலை அறக் கற்ற மாந்தர்
காண்பரோ? கேட்பரோ தாம்?
தலை அறுப்பு உண்டும் சாவேன்
சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற
தேவனே தேவன் ஆவான்
[878.0]
வெறுப்பொடு சமணர் முண்டர்
விதி இல் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பு அரியனகள் பேசில்
போவதே நோயது ஆகி
குறிப்பு எனக்கு அடையும் ஆகில்
கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய்
அரங்க மா நகருளானே
[879.0]
மற்றும் ஓர் தெய்வம் உண்டே?
மதி இலா மானிடங்காள்
உற்றபோது அன்றி நீங்கள்
ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றம் மேல் ஒன்று அறியீர்
அவன் அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை
கழலிணை பணிமின் நீரே
[880.0]
Back to Top
நாட்டினான் தெய்வம் எங்கும்
நல்லது ஓர் அருள்தன்னாலே
காட்டினான் திருவரங்கம்
உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பிமீர்காள்
கெருடவா கனனும் நிற்கச்
சேட்டைதன் மடியகத்துச்
செல்வம் பார்த்து இருக்கின்றீரே
[881.0]
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர்
அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே அரக்கர்கோனைச்
செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில்
மதில்-திருவரங்கம் என்னா
கருவிலே திரு இலாதீர்
காலத்தைக் கழிக்கின்றீரே
[882.0]
நமனும் முற்கலனும் பேச
நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கம் ஆகும்
நாமங்கள் உடையன் நம்பி
அவனது ஊர் அரங்கம் என்னாது
அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று
அதனுக்கே கவல்கின்றேனே
[883.0]
எறியும் நீர் வெறிகொள் வேலை
மாநிலத்து உயிர்கள் எல்லாம்
வெறிகொள் பூந்துளவ மாலை
விண்ணவர்கோனை ஏத்த
அறிவு இலா மனிசர் எல்லாம்
அரங்கம் என்று அழைப்பராகில்
பொறியில் வாழ் நரகம் எல்லாம்
புல் எழுந்து ஒழியும் அன்றே
[884.0]
வண்டினம் முரலும் சோலை
மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை
குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை
அணி திருவரங்கம் என்னா
மிண்டர்பாய்ந்து உண்ணும்சோற்றை
விலக்கி நாய்க்கு இடுமின் நீரே
[885.0]
Back to Top
மெய்யர்க்கே மெய்யன் ஆகும்
விதி இலா என்னைப் போலப்
பொய்யர்க்கே பொய்யன் ஆகும்
புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு
ஒருவன் என்று உணர்ந்த பின்னை
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும்
அழகன் ஊர் அரங்கம் அன்றே
[886.0]
சூதனாய்க் கள்வனாகித்
தூர்த்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயற்கண் என்னும்
வலையுள் பட்டு அழுந்துவேனைப்
போதரே என்று சொல்லிப்
புந்தியுள் புகுந்து தன்பால்
ஆதரம் பெருக வைத்த
அழகன் ஊர் அரங்கம் அன்றே
[887.0]
விரும்பி நின்று ஏத்த மாட்டேன்
விதி இலேன் மதி ஒன்று இல்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம்
இறை-இறை உருகும் வண்ணம்
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த
அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என்
கண்ணினை களிக்குமாறே
[888.0]
இனி திரைத் திவலை மோத
எறியும் தண் பரவை மீதே
தனி கிடந்து அரசு செய்யும்
தாமரைக்கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க்
கண்ணனைக் கண்ட கண்கள்
பனி-அரும்பு உதிருமாலோ
என் செய்கேன் பாவியேனே?
[889.0]
குடதிசை முடியை வைத்துக்
குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித்
தென்திசை இலங்கை நோக்கிக்
கடல்-நிறக் கடவுள் எந்தை
அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ
என் செய்கேன் உலகத்தீரே?
[890.0]
Back to Top
Other Prabandhams:
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 20 Feb 2026 21:28:50 +0000