சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google


Pannisai Tutorials


நால்வர் வணக்கம்
பண்- நட்டபாடை இராகம் – கம்பீரநாட்டை தாளம்- ஆதி
பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசை கன்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி
வாழிதிரு நாவலூர் வன்றொண்டன் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி. – உமாபதிசிவம்.

கோழைமிட றாககவி கோளுமில வாகவிசை கூடும்வகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழு மீசனிடமாம்

-- திருஞானசம்பந்த சுவாமிகள் 3.071.1 கோழை பொருந்திய கழுத்து உடையராயினும் , பாடும் கவிகளைப் பொருளுணரும்படி நிறுத்திப் பாடாவிடினும் , தங்களால் இயன்ற இசையில் , பக்தியுடன் பாடுகின்ற பாடல்கள் எவையாய் இருந்தாலும் , அவற்றிற்கு மகிழ்கின்றவன் சிவபெருமான்

Pannisai CheatSheet
1. https://www.youtube.com/watch?v=TUsZOpE7a1A
நட்டபாடை பண்
தோடுடைய செவியன்| விடையேறியோர்| தூவெண்மதிசூடிக்
காடுடைய|சுட லைப்பொடிபூசி|யென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய|மல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
https://www.youtube.com/watch?v=HwGfywiXQ_U
mahaa gaNapatim manasaa smaraami |
mahaa gaNapatim
vasishTa vaama dEvAdi vandita ||

வியாழக்குறிஞ்சி பண்
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

2. https://www.youtube.com/watch?v=-zOO0pTQXhY
காந்தாரபஞ்சமம் பண் Raagam Kethaara
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே. 1

காந்தாரபஞ்சமம்
இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 1

காந்தாரம் பண்
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே

3. https://www.youtube.com/watch?v=RuceMeIhQ-0
தக்கேசி பண்
பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப் போக முந்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப் பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம் வைகும் வயற்பழ னத்தணி ஆரூரானை மறக்கலு மாமே. 1

நட்டராகம் பண்
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 1

ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே. 10

Poobalam பண்
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே. 1

போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறை உறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 1

4. https://www.youtube.com/watch?v=UBSEatseXeQ
அந்தாளிக்குறிஞ்சி பண்
அன்புறு சிந்தைய ராகி யடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின்
றின்புறு மெந்தை யிணையடி யேத்துவார்
துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே.

தானெனை முன்படைத்தான் அத றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயி னேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித் தான்மலை உத்தமனே

ஊழிதொ றூழிமுற்றும் உயர் பொன்நொடித் தான்மலையைச்
சூழிசை யின்கரும்பின் சுவை நாவல ஊரன்சொன்ன
ஏழிசை இன்றமிழால் இசைந் தேத்திய பத்தினையும்
ஆழி கடலரையா அஞ்சை யப்பர்க் கறிவிப்பதே

Mullai Thevu
முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை,
பத்தி நெறி அறிவித்து, பழ வினைகள் பாறும்வண்ணம்,
சித்த மலம் அறுவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட
அத்தன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே

அருளா தொழிந்தால் அடியேனை
அஞ்சேல் என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட
பொன்னே பொன்னம் பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து
வருந்து வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல்
செத்தே போனாற் சிரியாரோ

கல்லாத புல்லறிவிற்
கடைப்பட்ட நாயேனை
வல்லாள னாய்வந்து
வனப்பெய்தி யிருக்கும்வண்ணம்
பல்லோருங் காணஎன்றன்
பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சுதில்லை
அம்பலத்தே கண்டேனே

பூதங்கள் ஐந்தாகிப்
புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப்
பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட
கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும்
விளங்குதில்லை கண்டேனே
5. https://www.youtube.com/watch?v=PiwQCqYGpyA


Bash Raaga
வேதநெறி தழைத் தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம்ப ரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்

சந்ததம் பந்தத் ...... தொடராலே
சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே
கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா
செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
தென்பரங் குன்றிற் ...... பெருமாளே

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்

http://sivaya.org/kandhar_anupoothi_tamil.html

வையம் நீடுக மாமழை மன்னுக
மெய் விரும்பிய அன்பர் விளங்குக
சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக
தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே.

***********************

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

https://www.youtube.com/watch?v=3SwxWknFL74
ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந்
துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத்
தந்தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

https://www.youtube.com/watch?v=3SwxWknFL74
8th min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.085
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

https://www.youtube.com/watch?v=3SwxWknFL74
18th min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.090
எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால்
கந்த மாமல ருந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே

https://www.youtube.com/watch?v=3SwxWknFL74
20th min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.095
பாடல் வண்டறை கொன்றை பான்மதி பாய்புனற் கங்கை
கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி
வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோண்மேல்
ஆடன் மாசுண மசைத்த அடிகளுக் கிடமர சிலியே.


நட்டராகம்
https://www.youtube.com/watch?v=3SwxWknFL74
25th min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.097
நம்பொருள் நம்மக்களென்று நச்சியிச்சை செய்துநீர்
அம்பர மடைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம்
உம்பர்நாத னுத்தமன் ஒளிமிகுந்த செஞ்சடை
நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே.

https://www.youtube.com/watch?v=3SwxWknFL74
28th min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.099
இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற விச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்
மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.

https://www.youtube.com/watch?v=3SwxWknFL74
30th min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.100
பண் - நட்டராகம் (திருக்கோவலூர் வீரட்டம் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை)
கனைகொளிருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும்
இனையபலவு மூப்பினோ டெய்திவந்து நலியாமுன்
பனைகளுலவு பைம்பொழிற் பழனஞ்சூழ்ந்த கோவலூர்
வினையைவென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்துமே.

https://www.youtube.com/watch?v=3SwxWknFL74
38th min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.106
பண் - நட்டராகம் (திருவலஞ்சுழி சித்தீசநாதர் பெரியநாயகியம்மை)

என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனாலே.

https://www.youtube.com/watch?v=3SwxWknFL74
46th min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no= 2.111
பண் - நட்டராகம் (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
பண்ணிற் பொலிந்த வீணையர் பதினெண் கணமு முணராநஞ்
சுண்ணப் பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகில் உடனாவார்
சுண்ணப் பொடிநீ றணிமார்பர் சுடர்பொற் சடைமேற் றிகழ்கின்ற
வண்ணப் பிறையோ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

https://www.youtube.com/watch?v=3SwxWknFL74
49th min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.113
பண் - செவ்வழி (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
பொடியிலங்குந் திருமேனி யாளர் புலியதளினர்
அடியிலங்குங் கழலார்க்க ஆடும் மடிகள்ளிடம்
இடியிலங்குங் குரலோதம் மல்கவ் வெறிவார்திரைக்
கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே.

https://www.youtube.com/watch?v=3SwxWknFL74
51st min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no= 2.114
பண் - செவ்வழி (திருக்கேதாரம் கேதாரேசுவரர் கௌரியம்மை)
தொண்டரஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார்மலர்
இண்டைகட்டி வழிபாடு செய்யு மிடமென்பரால்
வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக்
கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே.

https://www.youtube.com/watch?v=3SwxWknFL74
53st min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.118
பண் - செவ்வழி (திருதிலதைப்பதி (மதிமுத்தம்) மதிமுத்தநாதேசுவரர் பொற்கொடியம்மை)
பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப் புலர்காலையே
அடிகளாரத் தொழுதேத்த நின்ற அழகன்னிடம்
கொடிகளோங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி
வடிகொள்சோலைம் மலர் மணங்கமழும் மதிமுத்தமே.

https://www.youtube.com/watch?v=3SwxWknFL74
56th min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.120
பண் - செவ்வழி (திருமூக்கீச்சுரம் (உறையூர்) )
சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்
காந்தளாரும் விரலேழை யொடாடிய காரணம்
ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ
வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.

https://www.youtube.com/watch?v=s-C42f2gxyg

பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.016
பண் - இந்தளம் (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)
அயிலாரு மம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே

https://www.youtube.com/watch?v=s-C42f2gxyg
11th min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.018
பண் - இந்தளம் (திருமருகல் மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)
சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால்வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே.

https://www.youtube.com/watch?v=s-C42f2gxyg
19th min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.037
சதுரம் மறைதான் துதிசெய்து
பண் - இந்தளம் (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
சதுரம் மறைதான் றுதிசெய் துவணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய் கவெனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.

https://www.youtube.com/watch?v=s-C42f2gxyg
20th min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.038
பண் - இந்தளம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகர மேவுசாய்க் காடே.

https://www.youtube.com/watch?v=s-C42f2gxyg
26th min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.041
பண் - சீகாமரம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்
கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்
விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே.

நீநாளு நன்னெஞ்சே நினைகண்டா யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே. (3)

https://www.youtube.com/watch?v=s-C42f2gxyg
31st min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.043
பண் - சீகாமரம் (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா ருறையுமிடந்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.

செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக்
கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே. [ 11]

https://www.youtube.com/watch?v=s-C42f2gxyg
35th min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.048
பண் - சீகாமரம் (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டு முருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டி லுறைவானும் விடைகாட்டுங் கொடியானே

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே [2]

https://www.youtube.com/watch?v=s-C42f2gxyg
38th min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.047
பண் - சீகாமரம் (திருமயிலை (மயிலாப்பூர்) கபாலீசுவரர் கற்பகவல்லியம்மை)
மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

https://www.youtube.com/watch?v=s-C42f2gxyg
47th min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.066
பண் - காந்தாரம் (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.

https://www.youtube.com/watch?v=s-C42f2gxyg
48th min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.067
பண் - காந்தாரம் (திருப்பெரும்புலியூர் வியாக்கிரபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை
மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்
விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்
கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்
பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே


https://www.youtube.com/watch?v=s-C42f2gxyg
49th min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.072
பண் - காந்தாரம் (திருநணா (பவானி) சங்கமுகநாதேசுவரர் வேதமங்கையம்மை)
பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி
அந்தா ரரவணிந்த வம்மா னிடம்போலும் அந்தண் சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டுபாடச்
செந்தேன் றெளியொளிரத் தேமாங் கனியுதிர்க்குந் திருநணாவே

https://www.youtube.com/watch?v=s-C42f2gxyg
51st min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.057
பண் - காந்தாரம் (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
பெண்ணமருந் திருமேனி யுடையீர் பிறங்குசடைதாழப்
பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்
திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

https://www.youtube.com/watch?v=s-C42f2gxyg
52nd min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.061
உண்டாய் நஞ்சை உமையோர்
பண் - காந்தாரம் (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
உண்டாய் நஞ்சை யுமையோர் பங்கா வென்றுள்கித்
தொண்டாய்த் திரியு மடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ண மறுப்பா னெந்தை யூர்போலும்
வெண்டா மரைமேற் கருவண் டியாழ்செய் வெண்காடே

https://www.youtube.com/watch?v=s-C42f2gxyg
53rd min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.064
பண் - காந்தாரம் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே
ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய்
ஓவா வுவரிகொள்ள வுயர்ந்தா யென்றேத்தி
மூவா முனிவர் வணங்குங் கோயின் முதுகுன்றே.

சம்பந்தம் குருக்கள் & நல்லசிவம் - திருஞானசம்பந்தர் தேவாரப் பயிலரங்கம்
https://www.youtube.com/watch?v=We6VF_wy7u8
1st min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=2.043
பண் - சீகாமரம் (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)

கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா ருறையுமிடந்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.

https://www.youtube.com/watch?v=We6VF_wy7u8 30th min
பதிகம் http://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=1.135
பண் - மேகராகக்குறிஞ்சி (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)

நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை யண்ணலே.
This page was last modified on Fri, 21 Mar 2025 21:37:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

pannisai tutorials