| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
| Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
| திருமுறை pann சீகாமரம் |
|
2.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும், பண் - சீகாமரம் (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=70vp6cYffLI Audio: https://www.youtube.com/watch?v=os6HVe6Y7So |
|
2.041
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மண் புகார், வான்புகுவர்; மனம் பண் - சீகாமரம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=DO3apSOzhk0 |
|
2.042
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அக்கு இருந்த ஆரமும், ஆடு பண் - சீகாமரம் (திருஆக்கூர் சுயம்புநாதேசுவரர் கட்கநேத்திரவம்மை) Audio: https://www.youtube.com/watch?v=CEEJM3UxekY |
|
2.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம், பண் - சீகாமரம் (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=VWYHKdcEfME |
|
2.044
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துன்னம் பெய் கோவணமும் தோலும் பண் - சீகாமரம் (திருஆமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=WRhi23nltl0 |
|
2.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தையல் ஓர் கூறு உடையான், பண் - சீகாமரம் (கைச்சின்னம் (கச்சன்னம்) கைச்சினநாதர் வேள்வளையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=oTtNwLaUQYc |
|
2.046
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும் பண் - சீகாமரம் (திருநாலூர்மயானம் பலாசவனேசுவரர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=LNQ8Zrbi-nE |
|
2.047
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மட்டு இட்ட புன்னை அம்கானல் பண் - சீகாமரம் (திருமயிலை (மயிலாப்பூர்) கபாலீசுவரர் கற்பகவல்லியம்மை) Audio: https://sivaya.org/audio/2.047 matitita punnai.mp3 Audio: https://www.youtube.com/watch?v=TW2gdkaWAzQ |
|
2.048
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் காட்டும் நுதலானும், கனல் பண் - சீகாமரம் (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=BIiW3xaWvB0 |
|
2.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பண் - சீகாமரம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=IpQgZbhWkLo |
|
2.050
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குன்ற வார்சிலை, நாண் அரா, பண் - சீகாமரம் (திருஆமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=h2o01V9o3ZU Audio: https://www.youtube.com/watch?v=ty0Coc7wehY |
|
2.051
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீருள் ஆர் கயல் வாவி பண் - சீகாமரம் (திருக்களர் களர்முளையீசுவரர் அழகேசுவரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=GJEnNyvhwho |
|
2.052
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய, பண் - சீகாமரம் (திருக்கோட்டாறு ஐராபதேசுவரர் வண்டமர்பூங்குழலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=eEm_TSZsC4g |
|
2.053
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ பண் - சீகாமரம் (திருப்புறவார்பனங்காட்டூர் பனங்காட்டீசுவரர் திருப்புருவமின்னாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=88PB9rmjOFU |
|
2.054
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம் பண் - சீகாமரம் (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=2F8zKGSlqLY |
|
4.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப் படை யானை; சூழ் பண் - சீகாமரம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=V1lAAzPKPFA |
|
4.020
திருநாவுக்கரசர்
தேவாரம்
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன் பண் - சீகாமரம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) Audio: https://sivaya.org/audio/4.020 Kaandaalae Karuththaai.mp3 Audio: https://www.youtube.com/watch?v=LRz5ZvcX5-0 |
|
7.086
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
விடையின் மேல் வருவானை; வேதத்தின் பண் - சீகாமரம் (திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்) பனங்காட்டீசுவரர் அமிர்தவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=2S4DswwYZWs |
|
7.087
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் பண் - சீகாமரம் (திருப்பனையூர் சவுந்தரேசர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=L0HnSKSQwqk |
|
7.088
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர் பண் - சீகாமரம் (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=qVl9t2D6-o4 |
|
7.089
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பிழை உளன பொறுத்திடுவர் என்று பண் - சீகாமரம் (திருவெண்பாக்கம் (பூண்டி) வெண்பாக்கத்தீசுவரர் கனிவாய்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=PUUgVgbSok0 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.040  
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
பண் - சீகாமரம் (திருத்தலம் திருப்பிரமபுரம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
|
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும், தன் அடைந்தார் தம்பிரான் ஆவானும், தழல் ஏந்து கையானும், கம்ப மா கரி உரித்த காபாலி, கறைக்கண்டன் வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே. | [1] |
|
தாம் என்றும் மனம் தளராத் தகுதியராய், உலகத்துக் காம்! என்று சரண் புகுந்தார் தமைக் காக்கும் கருணையினான் ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற காமன் தன்(ன்) உடல் எரியக் கனல் சேர்ந்த கண்ணானே. | [2] |
|
நன் நெஞ்சே! உனை இரந்தேன்; நம்பெருமான் திருவடியே உன்னம் செய்து இரு கண்டாய்! உய்வதனை வேண்டுதியேல், அன்னம் சேர் பிரமபுரத்து ஆரமுதை, எப்போதும் பன், அம் சீர் வாய் அதுவே! பார், கண்ணே, பரிந்திடவே! | [3] |
|
சாம் நாள் இன்றி(ம்), மனமே! சங்கைதனைத் தவிர்ப்பிக்கும் கோன் ஆளும் திருவடிக்கே கொழு மலர் தூவு! எத்தனையும் தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீவணனை, நா, நாளும் நன்நியமம் செய்து, சீர் நவின்று ஏத்தே! | [4] |
|
கண் நுதலான், வெண் நீற்றான், கமழ் சடையான், விடை >ஏறி, பெண் இதம் ஆம் உருவத்தான், பிஞ்ஞகன், பேர்பல >உடையான், விண் நுதலாத் தோன்றிய சீர்ப் பிரமபுரம் தொழ விரும்பி எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே. | [5] |
|
எங்கேனும் யாது ஆகிப் பிறந்திடினும், தன் அடியார்க்கு இங்கே என்று அருள்புரியும் எம்பெருமான், எருது ஏறி, கொங்கு ஏயும் மலர்ச்சோலைக் குளிர் பிரமபுரத்து உறையும் சங்கே ஒத்து ஒளிர் மேனிச் சங்கரன், தன் தன்மைகளே | [6] |
|
சிலை அதுவே சிலை ஆகத் திரி புரம் மூன்று எரிசெய்த இலை நுனை வேல் தடக்கையன், ஏந்திழையாள் ஒருகூறன், அலை புனல் சூழ் பிரமபுரத்து அருமணியை அடி பணிந்தால், நிலை உடைய பெருஞ்செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே. | [7] |
|
எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு எடுக்க, தோளொடு >தாள நெரித்து அருளும் சிவமூர்த்தி, நீறு அணிந்த மேனியினான், உரித்த வரித்தோல் உடையான், உறை பிரமபுரம் தன்னைத் தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே. | [8] |
|
கரியானும் நான்முகனும் காணாமைக் கனல் உரு ஆய் அரியான் ஆம் பரமேட்டி, அரவம் சேர் அகலத்தான், தெரியாதான், இருந்து உறையும் திகழ் பிரமபுரம் சேர உரியார்தாம் ஏழ் உலகும் உடன் ஆள உரியாரே. | [9] |
|
உடை இலார், சீவரத்தார், தன் பெருமை உணர்வு அரியான்; முடையில் ஆர் வெண்தலைக் கை மூர்த்தி ஆம் திரு உருவன்; பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில் உறையும் சடையில் ஆர் வெண்பிறையான்; தாள் பணிவார் தக்காரே. | [10] |
|
தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை, தத்துவனை, கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை, முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை வல்லார் பொன் அடைந்தார்; போகங்கள் பல அடைந்தார்; புண்ணியரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.041  
மண் புகார், வான்புகுவர்; மனம்
பண் - சீகாமரம் (திருத்தலம் திருச்சாய்க்காடு (சாயாவனம்) ; (திருத்தலம் அருள்தரு குயிலுநன்மொழியம்மை உடனுறை அருள்மிகு சாயாவனேசுவரர் திருவடிகள் போற்றி )
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
|
மண் புகார், வான்புகுவர்; மனம் இளையார்; பசியாலும் கண் புகார்; பிணி அறியார்; கற்றாரும் கேட்டாரும் விண் புகார் என வேண்டா வெண் மாட நெடுவீதித் தண் புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே. | [1] |
|
போய்க் காடே மறைந்து உறைதல் புரிந்தானும், பூம் புகார்ச் சாய்க்காடே பதி ஆக உடையானும், விடையானும், வாய்க் காடு முதுமரமே இடம் ஆக வந்து அடைந்த பேய்க்கு ஆடல் புரிந்தானும், பெரியோர்கள் பெருமானே. | [2] |
|
நீ நாளும், நன்நெஞ்சே, நினைகண்டாய்! ஆர் அறிவார், சாநாளும் வாழ்நாளும்? சாய்க்காட்டு எம்பெருமாற்கே பூ நாளும் தலை சுமப்ப, புகழ் நாமம் செவி கேட்ப, நா நாளும் நவின்று ஏத்த, பெறல் ஆமே, நல்வினையே. | [3] |
|
கட்டு அலர்த்த மலர் தூழிக் கைதொழுமின் பொன் இயன்ற தட்டு அலர்த்த பூஞ்செருத்தி கோங்கு அமரும் தாழ்பொழில்வாய், மொட்டு அலர்த்த தடந்தாழை முருகு உயிர்க்கும் காவிரிப்பூம் பட்டினத்துச் சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே! | [4] |
|
கோங்கு அன்ன குவிமுலையாள், கொழும் பணைத்தோள் கொடியிடையைப் பாங்கு என்ன வைத்து உகந்தான், படர்சடைமேல் பால்மதியம் தாங்கினான் பூம் புகார்ச் சாய்க்காட்டான்; தாள் நிழல் கீழ் ஓங்கினார், ஓங்கினார் என உரைக்கும், உலகமே. | [5] |
|
சாந்து ஆக நீறு அணிந்தான், சாய்க்காட்டான், காமனை முன் தீந்து ஆகம் எரி கொளுவச் செற்று உகந்தான், திருமுடிமேல் ஓய்ந்து ஆர மதி சூடி, ஒளி திகழும் மலைமகள் தோள் தோய்ந்து ஆகம் பாகமா உடையானும், விடையானே. | [6] |
|
மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும் நெடுவீதி, சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான் கொங்கு உலா வரிவண்டு இன் இசை பாடும் அலர்க்கொன்றைத் தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருள் அலவே. | [7] |
|
தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும் எரியுண்ண, பட அரவத்து எழில் ஆரம் பூண்டான், பண்டு அரக்கனையும் தடவரையால் தடவரைத்தோள் ஊன்றினான், சாய்க்காட்டை இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர் இலையே. | [8] |
|
வையம் நீர் ஏற்றானும், மலர் உறையும் நான்முகனும், ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால், அவன் பெருமை; தையலார் பாட்டு ஓவாச் சாய்க்காட்டு எம்பெருமானைத் தெய்வமாப் பேணாதார் தெளிவு உடைமை தேறோமே. | [9] |
|
குறங்கு ஆட்டும் நால்விரல் கோவணத்துக்கு உலோவிப் போய் அறம் காட்டும் சமணரும், சாக்கியரும், அலர் தூற்றும் திறம் காட்டல் கேளாதே, தெளிவு உடையீர்! சென்று அடைமின், புறங்காட்டில் ஆடலான் பூம் புகார்ச் சாய்க்காடே! | [10] |
|
நொய்ம் பந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல் அடியார் அம் பந்தும் வரிக் கழலும் அரவம் செய் பூங் காழிச் சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும் எம் பந்தம் எனக் கருதி, ஏத்துவார்க்கு இடர் கெடுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.042  
அக்கு இருந்த ஆரமும், ஆடு
பண் - சீகாமரம் (திருத்தலம் திருஆக்கூர் ; (திருத்தலம் அருள்தரு கட்கநேத்திரவம்மை உடனுறை அருள்மிகு சுயம்புநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
|
அக்கு இருந்த ஆரமும், ஆடு அரவும், ஆமையும், தொக்கு இருந்த மார்பினான்; தோல் உடையான்; வெண் நீற்றான்; புக்கு இருந்த தொல் கோயில் பொய் இலா மெய்ந்நெறிக்கே தக்கிருந்தார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே. | [1] |
|
நீர் ஆர வார்சடையான், நீறு உடையான், ஏறு உடையான், கார் ஆர் பூங்கொன்றையினான், காதலித்த தொல் கோயில் கூர் ஆரல் வாய் நிறையக் கொண்டு அயலே கோட்டகத்தில் தாரா இல்கு ஆக்கூரில் - தன் தோன்றி மாடமே. | [2] |
|
வாள் ஆர் கண், செந்துவர்வாய், மாமலையான் தன் மடந்தை தோள் ஆகம் பாகமாப் புல்கினான் தொல் கோயில் வேளாளர் என்றவர்கள் வண்மையால் மிக்கு இருக்கும் தாளாளர் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே. | [3] |
|
கொங்கு சேர் தண்கொன்றை மாலையினான், கூற்று அடரப் பொங்கினான், பொங்கு ஒளி சேர் வெண் நீற்றான், பூங்கோயில் அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி தங்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே. | [4] |
|
வீக்கினான், ஆடு அரவம்; வீழ்ந்து அழிந்தார் வெண் தலை என்பு ஆக்கினான், பல்கலன்கள்; ஆதரித்துப் பாகம் பெண் ஆக்கினான்; தொல் கோயில் ஆம்பல் அம்பூம் பொய்கை புடை தாக்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே. | [5] |
|
பண் ஒளி சேர் நால்மறையான், பாடலினோடு ஆடலினான், கண் ஒளி சேர் நெற்றியினான், காதலித்த தொல் கோயில் விண் ஒளி சேர் மா மதியம் தீண்டியக்கால் வெண் மாடம் தண் ஒளி சேர் ஆக்கூரில் தான் தோன்றிமாடமே. | [6] |
|
வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்து அவிய வாங்கினார், வானவர்கள் வந்து இறைஞ்சும், தொல் கோயில் பாங்கின் ஆர் நால்மறையோடு ஆறு அங்கம் பல்கலைகள் தாங்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே. | [7] |
|
கல் நெடிய குன்று எடுத்தான் தோள் அடரக் கால் ஊன்றி, இன் அருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல் கோயில் பொன் அடிக்கே நாள்தோறும் பூவோடு நீர் சுமக்கும் தன் அடியார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே. | [8] |
|
நன்மையால் நாரணனும் நான்முகனும் காண்பு அரிய தொன்மையான், தோற்றம் கேடு இல்லாதான், தொல் கோயில் இன்மையால் சென்று இரந்தார்க்கு, இல்லை என்னாது, ஈந்து உவக்கும் தன்மையார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே. | [9] |
|
நா மருவு புன்மை நவிற்ற, சமண் தேரர், பூ மருவு கொன்றையினான் புக்கு அமரும் தொல் கோயில் சேல் மருவு பைங்கயத்துச் செங்கழு நீர் பைங்குவளை தாம் மருவும் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே. | [10] |
|
ஆடல் அமர்ந்தானை, ஆக்கூரில் தான் தோன்றி மாடம் அமர்ந்தானை, மாடம் சேர் தண் காழி, நாடற்கு அரிய சீர், ஞானசம்பந்தன் சொல் பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.043  
கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம்,
பண் - சீகாமரம் (திருத்தலம் திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) ; (திருத்தலம் அருள்தரு தையல்நாயகியம்மை உடனுறை அருள்மிகு வைத்தியநாதர் திருவடிகள் போற்றி )
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
|
கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம், கதிர் மதியம், உள் ஆர்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையும் இடம் தள்ளாய சம்பாதி, சடாயு, என்பார்தாம் இருவர் புள் ஆனார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே. | [1] |
|
தையலாள் ஒருபாகம், சடைமேலாள் அவளோடும் ஐயம் தேர்ந்து உழல்வார், ஓர் அந்தணனார், உறையும் இடம் மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்து, பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே. | [2] |
|
வாச நலம் செய்து இமையோர் நாள்தோறும் மலர் தூவ, ஈசன், எம்பெருமானார், இனிது ஆக உறையும் இடம் யோசனை போய்ப் பூக் கொணர்ந்து, அங்கு ஒருநாளும் ஒழியாமே, பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்கு வேளூரே. | [3] |
|
மா காயம் பெரியது ஒரு மான் உரி தோல் உடை ஆடை ஏகாயம் இட்டு உகந்த எரி ஆடி உறையும் இடம் ஆகாயம் தேர் ஓடும் இராவணனை அமரின்கண் போகாமே பொருது அழித்தான்_ புள்ளிருக்கு வேளூரே. | [4] |
|
கீதத்தை மிகப் பாடும் அடியார்கள் குடி ஆகப் பாதத்தைத் தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம் வேதத்தின் மந்திரத்தால், வெண்மணலே சிவம் ஆக, போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே. | [5] |
|
திறம் கொண்ட அடியார்மேல் தீவினை நோய் வாராமே, அறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம் மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானைப் புறம் கண்ட சடாய் என்பான் புள்ளிருக்கு வேளூரே. | [6] |
|
அத்தியின் ஈர் உரி மூடி, அழகு ஆக அனல் ஏந்தி, பித்தரைப் போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம் பத்தியினால் வழிபட்டு, பலகாலம் தவம் செய்து, புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்கு வேளூரே. | [7] |
|
பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடி ஆக மண் இன்றி விண் கொடுக்கும் மணிகண்டன் மருவும் இடம் எண் இன்றி முக்கோடிவாணாள் அது உடையானைப் புண் ஒன்றப் பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே. | [8] |
|
வேதித்தார் புரம் மூன்றும் வெங்கணையால் வெந்து அவியச் சாதித்த வில்லாளி, கண்ணாளன், சாரும் இடம் ஆதித்தன்மகன் என்ன, அகன் ஞாலத்தவரோடும் போதித்த சடாயு என்பான் புள்ளிருக்குவேளூரே. | [9] |
|
கடுத்து வரும் கங்கைதனைக் கமழ் சடை ஒன்று ஆடாமே தடுத்தவர், எம்பெருமானார், தாம் இனிது ஆய் உறையும் இடம் விடைத்து வரும் இலங்கைக் கோன் மலங்கச் சென்று, இராமற்காப் புடைத்து அவனைப் பொருது அழித்தான் ள்ளிருக்குவேளூரே. | [10] |
|
செடி ஆய உடல் தீர்ப்பான், தீவினைக்கு ஓர் மருந்து ஆவான், பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரை, கடி ஆர்ந்த பொழில் காழிக் கவுணியன் சம்பந்தன் சொல் மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம், மறுபிறப்பே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.044  
துன்னம் பெய் கோவணமும் தோலும்
பண் - சீகாமரம் (திருத்தலம் திருஆமாத்தூர் ; (திருத்தலம் அருள்தரு அழகியநாயகியம்மை உடனுறை அருள்மிகு அழகியநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
|
துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை, பின் அம் சடைமேல் ஓர் பிள்ளைமதி சூடி, அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்தன் பொன் அம் கழல் பரவாப் பொக்கமும் பொக்கமே? | [1] |
|
கைம்மாவின்தோல் போர்த்த காபாலி, வான் உலகில் மும் மா மதில் எய்தான், முக்கணான், பேர் பாடி, அம் மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மான்! எம் பெம்மான்! என்று ஏத்தாதார் பேயரின் பேயரே. | [2] |
|
பாம்பு அரைச் சாத்தி ஓர் பண்டரங்கன், விண்டது ஓர் தேம்பல் இளமதியம் சூடிய சென்னியான், ஆம்பல் ஆம்பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்தன் சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே. | [3] |
|
கோள் நாகப் பேர் அல்குல் கோல்வளைக்கை மாதராள பூண் ஆகம் பாகமாப் புல்கி, அவளோடும் ஆண் ஆகம் காதல் செய் ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண் எல்லாம் காணாத கண்களே | [4] |
|
பாடல் நெறி நின்றான், பைங்கொன்றைத்தண் தாரே சூடல் நெறி நின்றான், சூலம் சேர் கையினான், ஆடல் நெறி நின்றான், ஆமாத்தூர் அம்மான்தன் வேட நெறி நில்லா வேடமும் வேடமே? | [5] |
|
சாமவரை வில் ஆகச் சந்தித்த வெங்கணையால் காவல் மதில் எய்தான், கண் உடை நெற்றியான், யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான்,அத் தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே. | [6] |
|
மாறாத வெங் கூற்றை மாற்றி, மலைமகளை வேறாக நில்லாத வேடமே காட்டினான், ஆறாத தீ ஆடி, ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே | [7] |
|
தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்தன் நாள் ஆதிரை என்றே, நம்பன்தன் நாமத்தால், ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக் கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளே | [8] |
|
புள்ளும் கமலமும் கைக்கொண்டார்தாம் இருவர் உள்ளுமவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே? அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மான், எம் வள்ளல், கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே? | [9] |
|
பிச்சை பிறர் பெய்ய, பின் சார, கோ சார, கொச்சை புலால் நாற, ஈர் உரிவை போர்த்து உகந்தான் அச்சம் தன் மா தேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர் நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே? | [10] |
|
ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை, கோடல் இரும் புறவின் கொச்சைவயத் தலைவன் நாடல் அரிய சீர் ஞானசம்பந்தன் தன் பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.045  
தையல் ஓர் கூறு உடையான்,
பண் - சீகாமரம் (திருத்தலம் கைச்சின்னம் (கச்சன்னம்) ; (திருத்தலம் அருள்தரு வேள்வளையம்மை உடனுறை அருள்மிகு கைச்சினநாதர் திருவடிகள் போற்றி )
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
|
தையல் ஓர் கூறு உடையான், தண்மதி சேர் செஞ்சடையான், மை உலாம் மணிமிடற்றான், மறை விளங்கு பாடலான், நெய் உலாம் மூ இலைவேல் ஏந்தி நிவந்து ஒளி சேர் கை உடையான், மேவி உறை கோயில் கைச்சினமே. | [1] |
|
விடம் மல்கு கண்டத்தான், வெள்வளை ஓர் கூறு உடையான், படம் மல்கு பாம்பு அரையான், பற்றாதார் புரம் எரித்தான், நடம் மல்கும் ஆடலினான், நால்மறையோர் பாடலினான், கடம் மல்கு மா உரியான், உறை கோயில் கைச்சினமே. | [2] |
|
பாடல் ஆர் நால்மறையான்; பைங்கொன்றை பாம்பினொடும் சூடலான், வெண்மதியும் துன்று கரந்தையொடும்; ஆடலான் அங்கை அனல் ஏந்தி; ஆடு அரவக் காடலன்; மேவி உறை கோயில் கைச்சினாமே. | [3] |
|
பண்டு அமரர் கூடிக் கடைந்த படு கடல் நஞ்சு உண்ட பிரான்' என்று இறைஞ்சி. உம்பர் தொழுது ஏத்த, விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து அவியக் கண்ட பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே. | [4] |
|
தேய்ந்து மலி வெண்பிறையான், செய்யதிருமேனியினான், வாய்ந்து இலங்கு வெண்நீற்றான், மாதினை ஓர் கூறு உடையான், சாய்ந்து அமரர் வேண்டத் தடங்கடல் நஞ்சு உண்டு அநங்கைக் காய்ந்த பிரான், மேவி உறை கோயில் கைச்சினமே. | [5] |
|
மங்கை ஓர் கூறு உடையான், மன்னும் மறை பயின்றான், அங்கை ஓர் வெண்தலையான், ஆடு அரவம் பூண்டு உகந்தான், திங்களொடு பாம்பு அணிந்த சீர் ஆர் திருமுடிமேல் கங்கையினான், மேவி உறை கோயில் கைச்சினமே. | [6] |
|
வரி அரவே நாண் ஆக, மால்வரையே வில் ஆக. எரிகணையால் முப்புரங்கள் எய்து உகந்த எம்பெருமான். பொரி சுடலை ஈமப் புறங்காட்டான், போர்த்தது ஓர் கரிஉரியான், மேவி உறை கோயில் கைச்சினமே. | [7] |
|
போது உலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்; மாது உமையாள் அஞ்ச மலை எடுத்த வாள் அரக்கன் நீதியினால் ஏத்த நிகழ்வித்து, நின்று ஆடும் காதலினான்; மேவி உறை கோயில் கைச்சினாமே. | [8] |
|
மண்ணினை முன் சென்று இரந்த மாலும், மலரவனும், எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான்; பண் இசையால் ஏத்தப்படுவான்; தன் நெற்றியின்மேல் கண் உடையான்; மேவி உறை கோயில் கைச்சினமே. | [9] |
|
தண்வயல் சூழ் காழித் தமிழ் ஞானசம்பந்தன், கண்நுதலான் மேவி உறை கோயில் கைச்சினத்தை, பண் இசையால் ஏத்திப் பயின்ற இவை வல்லார், விண்ணவராய் ஓங்கி, வியன் உலகம் ஆள்வாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.046  
பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும்
பண் - சீகாமரம் (திருத்தலம் திருநாலூர்மயானம் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பலாசவனேசுவரர் திருவடிகள் போற்றி )
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
|
பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும் மேல் ஊரும் செஞ்சடையான், வெண்நூல் சேர் மார்பினான், நாலூர் மயானத்து நம்பான் தன் அடி நினைந்து, மால் ஊரும் சிந்தையர்பால் வந்து ஊரா, மறுபிறப்பே. | [1] |
|
சூடும், பிறை சென்னி; சூழ்காடு இடம் ஆக ஆடும் பறைசங்கு ஒலியோடு அழகு ஆக; நாடும் சிறப்பு ஓவா நாலூர் மயானத்தைப் பாடும் சிறப்போர்பால் பற்றா ஆம், பாவமே. | [2] |
|
கல்லால் நிழல் மேவி, காமுறு சீர் நால்வர்க்கு, அன்று, எல்லா அறன் உரையும் இன் அருளால் சொல்லினான் நல்லார் தொழுது ஏத்தும் நாலூர்மயானத்தைச் சொல்லாதவர் எல்லாம் சொல்லாதார். தொல் நெறிக்கே | [3] |
|
கோலத்து ஆர் கொன்றையான், கொல் புலித் தோல் ஆடையான், நீலத்து ஆர் கண்டத்தான், நெற்றி ஓர் கண்ணினான் ஞாலத்தார் சென்று ஏத்தும் நாலூர் மயானத்தில் சூலத்தான் என்பார்பால், சூழா ஆம், தொல்வினையே. | [4] |
|
கறை ஆர் மணிமிடற்றான், காபாலி, கட்டங்கன், பிறை ஆர் வளர்சடையான், பெண்பாகன் நண்பு ஆய நறை ஆர் பொழில் புடை சூழ் நாலூர்மயானத்து எம் இறையான் என்று ஏத்துவார்க்கு எய்தும் ஆம், இன்பமே. | [5] |
|
கண் ஆர் நுதலான், கனல் ஆடு இடம் ஆகப் பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி, நண்ணார் புரம் எய்தான், நாலூர் மயானத்தை நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நன்நெறியே. | [6] |
|
கண் பாவு வேகத்தால் காமனை முன் காய்ந்து உகந்தான், பெண் பாவு பாகத்தான், நாகத்தோல் ஆகத்தான் நண்பு ஆர் குணத்தோர்கள் நாலூர்மயானத்தை எண் பாவு சிந்தையார்க்கு ஏலா, இடர்தானே. | [7] |
|
பத்துத் தலையோனைப் பாதத்து ஒருவிரலால் வைத்து மலை அடர்த்து வாளோடு நாள் கொடுத்தான் நத்தின் ஒலி ஓவ நாலூர்மயானத்து என் அத்தன்; அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே. | [8] |
|
மாலோடு நான்முகனும் நேட, வளர் எரி ஆய், மேலோடு கீழ் காணா மேன்மையான் வேதங்கள் நாலோடும் ஆறு அங்கம் நாலூர்மயானத்து எம் பாலோடு நெய் ஆடி; பாதம் பணிவோமே. | [9] |
|
துன்பு ஆய மாசார், துவர் ஆய போர்வையார், புன் பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்! நண்பால் சிவாய! எனா நாலூர்மயானத்தே இன்பு ஆய் இருந்தானை, ஏத்துவார்க்கு இன்பமே. | [10] |
|
ஞாலம் புகழ் காழி ஞானசம்பந்தன்தான் நாலுமறை ஓதும் நாலூர்மயானத்தைச் சீலம் புகழால் சிறந்து ஏத்த வல்லாருக்கு ஏலும், புகழ்; வானத்து இன்பு ஆய் இருப்பாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.047  
மட்டு இட்ட புன்னை அம்கானல்
பண் - சீகாமரம் (திருத்தலம் திருமயிலை (மயிலாப்பூர்) ; (திருத்தலம் அருள்தரு கற்பகவல்லியம்மை உடனுறை அருள்மிகு கபாலீசுவரர் திருவடிகள் போற்றி )
மயிலாப்பூரில் வணிகர் குலத்தில் எல்லையில் செல்வம் உடையவராய் செம்மையே புரிமனத்தினராய் வணிகர் குலத்தில் சிவநேசன் என்னும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சைவ சமயமே மெய்மைச் சமயம் என்பதையும், அறிந்த பெரியவர். அவர் ஞானசம்பந்தரது பெருமைகளைக் கேள்வியுற்று அவர்பால் எல்லை யில்லாத பேரன்புடையராயினார். அவருக்கு ஒரு பெண் மகவு இருந் தாள். அழகிற் சிறந்த அப்பெண்ணுக்குப் பூம்பாவை எனப் பெய ரிட்டார். அப்பெண்ணும் மணப்பருவம் எய்திய நிலையில் இருந்தாள். ஞானசம்பந்தர் மதுரை சென்று பரசமயம் நிராகரித்துப் பாண்டி நாட்டில் சைவ சமயத்தை நிலைநிறுத்தி வந்த செய்தி கேட்டு என்னையும், என்மகளையும் என் செல்வத்தையும் அவருக்கே உடமையாக்கினேன்? என மொழிந்தார். இந்நிலையில் ஞானசம்பந் தருக்கு உரியள் என, சிவநேசர் மொழிந்திருந்த பூம்பாவை பூஞ்சோலை யில் மலர் பறிக்கச் சென்றபோது அரவு தீண்டி இறந்தாள். சிவநேசர் மிகவும் வருந்தியவராய் அப்பெண்ணை உயிருடன் ஒப்புவிக்கும் புண்ணியம் அமையவில்லை. ஆயினும் அவள் உடலைத் தகனம் செய்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு மட்குடத்திலிட்டு, அதை யேனும் ஒப்புவிப்போம் என்று பேணிவந்தார். ஞானசம்பந்தர் திருவொற்றியூர் வழிபாடு முடித்து மயிலாப் பூருக்கு எழுந்தருளும் செய்தி கேட்டு வரவேற்க எதிரே வந்தார். ஞானசம்பந்தரைக் கண்டு வணங்கிய அளவில் உடன் வந்த அடியார் கள் அவரை அறிமுகம் செய்ததோடு அவள் மகள் இறந்த செய்தியை யும் அவரிடம் கூறினர். ஞானசம்பந்தர் மயிலாப்பூருக்கு எழுந்தருளி வழிபாடாற்றிப் புறத்தே போந்தவர் சிவநேசரை அழைத்து அவர் மகளின் என்பு நிறைந்த குடத்தினை எடுத்து வரச் செய்து அக்குடத்தை இறைவன் திருமுன்னே வைக்கச் செய்து மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் என்பது உண்மையாயின் உலகவர் முன் இப்பூம்பாவை உயிர் பெற்று எழுந்து வருவாளாக எனக்கூறி இறைவனை வேண்டிப் பூம்பாவைத் திருப் பதிகமாகிய மட்டிட்ட புன்னை எனத் திருப்பதிகம் தொடங்கிப் பத்தாவது பாடல் பாடிய அளவில் செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போல அப்பெண் உலகவர் வியக்க உயிர் பெற்றுக் குடம் உடைய வெளிப்பட்டு ஞானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். ஞானசம்பந்தர் திருப்பதிகத்தின் பதினொன்றாவது பாடலைப் பாடி நிறைவு செய்தார். சிவநேசர் ஞானசம்பந்தரை வணங்கித் திருவருளைப் போற்றினார். தன் திருமகளைத் திருமணம் புரிந்து ஏற்றருள வேண்டுமென வேண்டினார்.
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
|
மட்டு இட்ட புன்னை அம்கானல் மடமயிலைக் கட்டு இட்டம் கொண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான், ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு அட்டு இட்டல் காணாதே போதியோ? பூம்பாவாய்! | [1] |
|
மைப் பயந்த ஒண்கண் மடநல்லார் மா மயிலைக் கைப் பயந்த நீற்றான், கபாலீச்சரம் அமர்ந்தான், ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவும் காணாதே போதியோ? பூம்பாவாய்! | [2] |
|
வளைக்கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில் துளக்கு இல் கபாலீச்சரத்தான் தொல்கார்த்திகைநாள் தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ? பூம்பாவாய்! | [3] |
|
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலைக் கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரிதனில், கார் தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் ஆர்திரைநாள் காணாதே போதியோ? பூம்பாவாய்! | [4] |
|
மைப் பூசும் ஒண்கண் மடநல்லார் மா மயிலைக் கைப் பூசு நீற்றான், கபாலீச்சரம் அமர்ந்தான் நெய்ப் பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ? பூம்பாவாய்! | [5] |
|
மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடல் ஆட்டுக் கண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான், அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள், அடி பரவி, நடம் ஆடல் காணாதே போதியோ? பூம்பாவாய்! | [6] |
|
மலி விழா வீதி மடநல்லார் மா மயிலைக் கலி விழாக் கண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான் பலி விழாப் பாடல்செய் பங்குனி உத்தரநாள் ஒலி விழாக் காணாதே போதியோ? பூம்பாவாய்! | [7] |
|
தண் ஆர் அரக்கன் தோள் சாய்த்து உகந்த தாளினான், கண் ஆர் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான், பண் ஆர் பதினெண்கணங்கள் தம்(ம்) அட்டமி நாள் கண் ஆரக் காணாதே போதியோ? பூம்பாவாய்! | [8] |
|
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும் முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி, திருவடியைக் கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம் அமர்ந்தான், பொன் தாப்புக் காணாதே போதியோ? பூம்பாவாய்! | [9] |
|
உரிஞ்சு ஆய வாழ்க்கை அமண், உடையைப் போர்க்கும் இருஞ் சாக்கியர்கள், எடுத்து உரைப்ப, நாட்டில் கருஞ் சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான் பெருஞ் சாந்தி காணாதே போதியோ? பூம்பாவாய்! | [10] |
|
கான் அமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் தேன் அமர் பூம்பாவைப் பாட்டு ஆகச் செந்தமிழான் ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார், வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.048  
கண் காட்டும் நுதலானும், கனல்
பண் - சீகாமரம் (திருத்தலம் திருவெண்காடு ; (திருத்தலம் அருள்தரு பிரமவித்தியாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுவேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
|
கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும் கையானும், பெண் காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும், பண் காட்டும் இசையானும், பயிர் காட்டும் புயலானும், வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே. | [1] |
|
பேய் அடையா, பிரிவு எய்தும், பிள்ளையினோடு உள்ளம் நினைவு ஆயினவே வரம் பெறுவர்; ஐயுற வேண்டா, ஒன்றும்; வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குள நீர் தோய் வினையார் அவர்தம்மைத் தோயா ஆம், தீவினையே. | [2] |
|
மண்ணொடு, நீர், அனல், காலோடு, ஆகாயம், மதி, இரவி, எண்ணில் வரும் இயமானன், இகபரமும், எண்திசையும், பெண்ணினொடு, ஆண், பெருமையொடு, சிறுமையும், ஆம் பேராளன் விண்ணவர்கோள் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே. | [3] |
|
விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவில், மடல் விண்ட முடத்தாழைமலர் நிழலைக் குருகு என்று, தடம் மண்டு துறைக் கெண்டை, தாமரையின்பூ மறைய, கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே. | [4] |
|
வேலை மலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ் மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன் தன் மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட பினை, நமன் தூதர், ஆலமிடற்றான் அடியார் என்று, அடர அஞ்சுவரே. | [5] |
|
தண்மதியும் வெய்ய(அ)ரவும் தாங்கினான், சடையின் உடன்; ஒண்மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான்; உறை கோயில் பண் மொழியால் அவன் நாமம் பல ஓத, பசுங்கிள்ளை வெண் முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே. | [6] |
|
சக்கரம் மாற்கு ஈந்தானும்; சலந்தரனைப் பிளந்தானும்; அக்கு அரைமேல் அசைத்தானும்; அடைந்து அயிராவதம் பணிய, மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும், வினை துரக்கும் முக்குளம், நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே. | [7] |
|
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த உன்மத்தன் உரம் நெரித்து, அன்று அருள் செய்தான் உறை கோயில் கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட, கடல் முழங்க, விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே. | [8] |
|
கள் ஆர் செங்கமலத்தான், கடல் கிடந்தான், என இவர்கள் ஒள் ஆண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து ஆழ்ந்தும், உணர்வு அரியான் வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று உள் ஆடி உருகாதார் உணர்வு, உடைமை, உணரோமே. | [9] |
|
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருள் என்னும் பேதையர்கள் அவர்; பிறிமின்! அறிவு உடையீர்! இது கேண்மின்; வேதியர்கள் விரும்பிய சீர் வியன்திரு வெண்காட்டான் என்று ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே! | [10] |
|
தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன் விண் பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப் பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார், மண் பொலிய வாழ்ந்தவர், போய் வான் பொலியப் புகுவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.049  
பண்ணின் நேர் மொழி மங்கைமார்
பண் - சீகாமரம் (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
|
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்தொறும் கண்ணின் நேர் அயலே பொலியும் கடல் காழி, பெண்ணின் நேர் ஒருபங்கு உடைப் பெருமானை, எம்பெருமான்! என்று என்று உன்னும் அண்ணல் ஆர் அடியார் அருளாலும் குறைவு இலரே. | [1] |
|
மொண்டு அலம்பிய வார்திரைக்கடல் மோதி மீது ஏறி சங்கம் வங்கமும் கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலிக் காழி, வண்டு அலம்பிய கொன்றையான் அடி வாழ்த்தி ஏத்திய மாந்தர்தம் வினை விண்டல் அங்கு எளிது ஆம்; அது நல்விதி ஆமே. | [2] |
|
நாடு எலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு வார் பொழில் காடு எலாம் மலர் தேன் துளிக்கும் கடல் காழி, தோடு உலாவிய காது உளாய்! சுரிசங்க வெண்குழையாய்! என்று என்று உன்னும் வேடம் கொண்டவர்கள் வினை நீங்கல் உற்றாரே. | [3] |
|
மையின் ஆர் பொழில் சூழ, நீழலில் வாசம் ஆர் மது மல்க, நாள்தொறும் கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலிக் காழி, ஐயனே! அரனே! என்று ஆதரித்து ஓதி, நீதி உளே நினைபவர், உய்யும் ஆறு உலகில் உயர்ந்தாரின் உள்ளாரே. | [4] |
|
மலி கடுந் திரைமேல் நிமிர்ந்து எதிர் வந்து வந்து ஒளிர் நித்திலம் விழ, கலி கடிந்த கையார் மருவும் கலிக் காழி, வலிய காலனை வீட்டி மாணிதன் இன் உயிர் அளித்தானை வாழ்த்திட, மெலியும், தீவினை நோய் அவை; மேவுவர், வீடே. | [5] |
|
மற்றும் இவ் உலகத்து உளோர்களும் வான் உளோர்களும் வந்து, வைகலும், கற்ற சிந்தையராய்க் கருதும் கலிக் காழி, நெற்றிமேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை பாடுவார், வினை செற்ற மாந்தர் எனத் தெளிமின்கள், சிந்தையுளே | [6] |
|
தான் நலம் புரை வேதியரொடு தக்க மா தவர்தாம் தொழ, பயில் கானலின் விரை சேர விம்மும் கலிக் காழி, ஊனுள் ஆர் உயிர் வாழ்க்கையாய்! உறவு ஆகி நின்ற ஒருவனே! என்று என்று ஆனலம் கொடுப்பார், அருள் வேந்தர் ஆவாரே. | [7] |
|
மைத்த வண்டு எழு சோலை ஆலைகள், சாலி சேர் வயல், ஆர, வைகலும் கத்து வார்கடல் சென்று உலவும் கலிக் காழி அத்தனே! அரனே! அரக்கனை அன்று அடர்த்து உகந்தாய்! உன கழல் பத்தராய்ப் பரவும் பயன் ஈங்கு நல்காயே! | [8] |
|
பரு மராமொடு, தெங்கு, பைங்கதலிப் பருங்கனி உண்ண, மந்திகள் கருவரால் உகளும் வயல், சூழ் கலிக் காழி, திருவின் நாயகன் ஆய மாலொடு செய்ய மா மலர்ச் செல்வன் ஆகிய இருவர் காண்பு அரியான் என ஏத்துதல் இன்பமே. | [9] |
|
பிண்டம் உண்டு உழல்வார்களும், பிரியாது வண் துகில் ஆடை போர்த்தவர், கண்டு சேரகிலார்; அழகு ஆர் கலிக் காழி, தொண்டைவாய் உமையோடும் கூடிய வேடனே சுடலைப் பொடி அணி! அண்டவாணன்! என்பார்க்கு அடையா, அல்லல் தானே. | [10] |
|
பெயர் எனும்(ம்) இவை பன்னிரண்டினும் உண்டு எனப் பெயர் பெற்ற ஊர், திகழ் கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலிக் காழி, நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன் செந்தமிழ் உரை உயருமா மொழிவார் உலகத்து உயர்ந்தாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.050  
குன்ற வார்சிலை, நாண் அரா,
பண் - சீகாமரம் (திருத்தலம் திருஆமாத்தூர் ; (திருத்தலம் அருள்தரு அழகியநாயகியம்மை உடனுறை அருள்மிகு அழகியநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
|
குன்ற வார்சிலை, நாண் அரா, அரி வாளி, கூர் எரி, காற்றின், மும்மதில் வென்ற ஆறு எங்ஙனே? விடை ஏறும் வேதியனே! தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணைமேல் அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே! | [1] |
|
பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார்விடம், வெருவ, உண்டு உகந்த அருள் என்கொல்? விண்ணவனே! கரவு இல் மா மணி பொன் கொழித்து, இழி சந்து கார் அகில் தந்து, பம்பை நீர் அருவி வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே! | [2] |
|
நீண்ட வார்சடை தாழ, நேரிழை பாட, நீறு மெய் பூசி, மால் அயன் மாண்ட வார் சுடலை நடம் ஆடும் மாண்பு அது என்? பூண்ட கேழல் மருப்பு, அரா, விரிகொன்றை, வாள் வரி ஆமை, பூண் என ஆண்ட நாயகனே! ஆமாத்தூர் அம்மானே! | [3] |
|
சேலின் நேரன கண்ணி வெண் நகை மான்விழித் திருமாதைப் பாகம் வைத்து ஏல மா தவம் நீ முயல்கின்ற வேடம் இது என்? பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி, இன் இசை பாட, நீள் பதி ஆலை சூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே! | [4] |
|
தொண்டர் வந்து வணங்கி, மா மலர் தூவி. நின் கழல் ஏத்துவார் அவர் உண்டியால் வருந்த, இரங்காதது என்னை கொல் ஆம்? வண்டல் ஆர் கழனிக் கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள்முகம் அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே! | [5] |
|
ஓதி, ஆரணம் ஆய நுண்பொருள், அன்று நால்வர் முன் கேட்க நன்நெறி நீதி ஆலநீழல் உரைக்கின்ற நீர்மையது என்? சோதியே! சுடரே! சுரும்பு அமர் கொன்றையாய்! திரு நின்றியூர் உறை ஆதியே! அரனே! ஆமாத்தூர் அம்மானே! | [6] |
|
மங்கை வாள் நுதல் மான் மனத்து இடை வாடி ஊட, மணம் கமழ் சடைக் கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை கொல் ஆம்? பங்கயமது உண்டு வண்டு இசை பாட, மா மயில் ஆட, விண் முழவு அம் கையால் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே! | [7] |
|
நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம் நினைந்து உளத்து இடை வென்று அடர்த்து, ஒருபால் மடமாதை விரும்புதல் என்? குன்று எடுத்த நிசாசரன் திரள் தோள் இருபது தான் நெரிதர அன்று அடர்த்து உகந்தாய்! ஆமாத்தூர் அம்மானே! | [8] |
|
செய்யா தாமரை மேல் இருந்தவனோடு மால் அடி, தேட, நீள் முடி வெய்ய ஆர் அழல் ஆய் நிமிர்கின்ற வெற்றிமை என்? தையலாளொடு பிச்சைக்கு இச்சை, தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு, ஐயம் ஏற்று உகந்தாய்! ஆமாத்தூர் அம்மானே! | [9] |
|
புத்தர் புன் சமண் ஆதர் பொய்ம்மொழி நூல் பிடித்து அலர் தூற்ற, நின் அடி பத்தர் பேண, நின்ற பரம் ஆய பான்மை அது என்? முத்தை வென்ற முறுவலாள் உமை பங்கன்! என்று இமையோர் பரவிடும் அத்தனே! அரியாய்! ஆமாத்தூர் அம்மானே! | [10] |
|
வாடல் வெண் தலைமாலை ஆர்த்து, மயங்கு இருள்(ள்), எரி ஏந்தி, மாநடம் ஆடல் மேயது என்? என்று ஆமாத்தூர் அம்மானை, கோடல் நாகம் அரும்பு பைம்பொழில் கொச்சையார் இறை ஞானசம்பந்தன் பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.051  
நீருள் ஆர் கயல் வாவி
பண் - சீகாமரம் (திருத்தலம் திருக்களர் ; (திருத்தலம் அருள்தரு அழகேசுவரியம்மை உடனுறை அருள்மிகு களர்முளையீசுவரர் திருவடிகள் போற்றி )
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
|
நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில், நீண்ட மா வயல், ஈண்டு மா மதில், தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திருக்களருள ஊர் உளார் இடு பிச்சை பேணும் ஒருவனே! ஒளிர் செஞ்சடை(ம்) மதி ஆர நின்றவனே! அடைந்தார்க்கு அருளாயே! | [1] |
|
தோளின்மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்து அடி போற்ற, மிண்டிய, தாளினார் வளரும் தவம் மல்கு திருக்களருள வேளின் நேர் விசயற்கு அருள்புரி வித்தகா! விரும்பும் அடியாரை ஆள் உகந்தவனே! அடைந்தார்க்கு அருளாயே! | [2] |
|
பாட வல்ல நல் மைந்தரோடு பனிமலர் பல கொண்டு போற்றி செய் சேடர் வாழ் பொழில் சூழ் செழு மாடத் திருக்களருள நீட வல்ல நிமலனே! அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மாநடம் ஆட வல்லவனே! அடைந்தார்க்கு அருளாயே! | [3] |
|
அம்பின் நேர் தடங்கண்ணினார் உடன் ஆடவர் பயில் மாட மாளிகை செம்பொன் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய திருக்களருள என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா! இணை அடி போற்றி நின்றவர்க்கு அன்பு செய்தவனே! அடைந்தார்க்கு அருளாயே! | [4] |
|
கொங்கு உலாம் மலர்ச்சோலை வண்டு இனம் கெண்டி மா மது உண்டு இசை செய, தெங்கு பைங்கமுகம் புடை சூழ்ந்த திருக்களருள மங்கை தன்னொடும் கூடிய மணவாளனே! பிணை கொண்டு, ஓர் கைத்தலத்து, அம் கையில் படையாய்! அடைந்தார்க்கு அருளாயே! | [5] |
|
கோல மா மயில் ஆலக் கொண்டல்கள் சேர் பொழில் குலவும் வயல் இடைச் சேல், இளங் கயல், ஆர் புனல் சூழ்ந்த திருக்களருள நீலம் மேவிய கண்டனே! நிமிர்புன்சடைப் பெருமான் எனப் பொலி ஆல நீழல் உளாய்! அடைந்தார்க்கு அருளாயே! | [6] |
|
தம் பலம்(ம்) அறியாதவர் மதில் தாங்கு மால்வரையால் அழல் எழத் திண்பலம் கெடுத்தாய்! திகழ்கின்ற திருக்களருள வம்பு அலர் மலர் தூவி, நின் அடி வானவர் தொழ, கூத்து உகந்து பே ரம்பலத்து உறைவாய்! அடைந்தார்க்கு அருளாயே! | [7] |
|
குன்று அடுத்த நல் மாளிகைக் கொடி, மாடம் நீடு உயர் கோபுரங்கள் மேல் சென்று அடுத்து, உயர் வான்மதி தோயும் திருக்களருள நின்று அடுத்து உயர்மால்வரை திரள்தோளினால் எடுத்தான் தன் நீள் முடி அன்று அடர்த்து உகந்தாய்! அடைந்தார்க்கு அருளாயே! | [8] |
|
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி, தெண் நிலாமதியம் பொழில் சேரும் திருக்களருள உள் நிலாவிய ஒருவனே! இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர் அழல் அண்ணல் ஆய எம்மான்! அடைந்தார்க்கு அருளாயே! | [9] |
|
பாக்கியம்பல செய்த பத்தர்கள், பாட்டொடும் பலபணிகள் பேணிய தீக்கு இயல் குணத்தார், சிறந்து ஆரும் திருக்களருள வாக்கினால் மறை ஓதினாய்! அமண்தேரர் சொல்லிய சொற்கள் ஆன பொய் ஆக்கி நின்றவனே! அடைந்தார்க்கு அருளாயே! | [10] |
|
இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி(ந்) நகர்க் கவுணியன், செந்து நேர் மொழியார் அவர் சேரும் திருக்களருள அந்தி அன்னது ஓர் மேனியானை, அமரர் தம் பெருமானை, ஞானசம் பந்தன் சொல் இவைபத்தும் பாட, தவம் ஆமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.052  
கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய,
பண் - சீகாமரம் (திருத்தலம் திருக்கோட்டாறு ; (திருத்தலம் அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு ஐராபதேசுவரர் திருவடிகள் போற்றி )
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
|
கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய, கார் அதிர்கின்ற பூம்பொழில் குருந்தம் மாதவியின் விரை மல்கு கோட்டாற்றில் இருந்த எம்பெருமானை, உள்கி, இணை அடி தொழுது ஏத்தும் மாந்தர்கள் வருந்தும் ஆறு அறியார்; நெறி சேர்வர், வான் ஊடே | [1] |
|
நின்று மேய்ந்து, நினைந்து, மா கரி, நீரொடும் மலர் வேண்டி, வான் மழை குன்றில் நேர்ந்து குத்திப் பணிசெய்யும் கோட்டாற்றுள் என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி, வான் அரசு ஆள வல்லவர் பொன்றும் ஆறு அறியார்; புகழ் ஆர்ந்த புண்ணியரே. | [2] |
|
விரவி நாளும் விழா இடைப் பொலி தொண்டர் வந்து வியந்து பண்செய, குரவம் ஆரும் நீழல் பொழில் மல்கு கோட்டாற்றில், அரவம் நீள்சடையானை உள்கி நின்று, ஆதரித்து, முன் அன்பு செய்து, அடி பரவும் ஆறு வல்லார் பழி பற்று அறுப்பாரே. | [3] |
|
அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் ஆடகம் பெறு மாட மாளிகைக் கொம்பின் நேர் துகிலின் கொடி ஆடு கோட்டாற்றில், நம்பனே! நடனே! நலம் திகழ் நாதனே! என்று காதல் செய்தவர் தம் பின் நேர்ந்து அறியார், தடுமாற்ற வல்வினையே. | [4] |
|
பழைய தம் அடியார் துதிசெய, பார் உளோர்களும் விண் உளோர் தொழ, குழலும் மொந்தை விழா ஒலி செய்யும் கோட்டாற்றில், கழலும் வண் சிலம்பும்(ம்) ஒலி செய, கான் இடைக் கணம் ஏத்த ஆடிய அழகன் என்று எழுவார், அணி ஆவர், வானவர்க்கே. | [5] |
|
பஞ்சின் மெல் அடி மாதர், ஆடவர், பத்தர், சித்தர்கள், பண்பு வைகலும் கொஞ்சி இன்மொழியால் தொழில் மல்கு கோட்டாற்றில், மஞ்சனே! மணியே! மணிமிடற்று அண்ணலே! என உள் நெகிழ்ந்தவர், துஞ்சும் ஆறு அறியார்; பிறவார், இத் தொல் நிலத்தே. | [6] |
|
கலவ மா மயிலாள் ஒர் பங்கனைக் கண்டு, கண்மிசை நீர் நெகிழ்த்து, இசை குலவும் ஆறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில், நிலவ மா மதி சேர் சடை உடை நின்மலா! என உன்னுவார் அவர் உலவு வானவரின் உயர்வு ஆகுவது உண்மையதே. | [7] |
|
வண்டல் ஆர் வயல் சாலி ஆலை வளம் பொலிந்திட, வார் புனல் திரை கொண்டலார் கொணர்ந்து அங்கு உலவும் திகழ் கோட்டாற்றில் தொண்டு எலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே! கழலால் அரக்கனை மிண்டு எலாம் தவிர்த்து, என், உகந்திட்ட வெற்றிமையே? | [8] |
|
கருதி வந்து அடியார் தொழுது எழ, கண்ணனோடு அயன் தேட, ஆனையின் குருதி மெய் கலப்ப உரி கொண்டு, கோட்டாற்றில், விருதினால் மடமாதும் நீயும் வியப்பொடும் உயர் கோயில் மேவி, வெள் எருது உகந்தவனே! இரங்காய், உனது இன் அரு | [9] |
|
உடை இலாது உழல்கின்ற குண்டரும், ஊண் அருந்தவத்து ஆய சாக்கியர், கொடை இலார் மனத்தார்; குறை ஆரும் கோட்டாற்றில், படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே! இவர் என்கொலோ, நுனை அடைகிலாத வண்ணம்? அருளாய், உன் அடியவர்க்கே! | [10] |
|
விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண் காட்டை, கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான் நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு அடையா, வினைகள்; அமரலோகம் ஆள்வாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.053  
விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ
பண் - சீகாமரம் (திருத்தலம் திருப்புறவார்பனங்காட்டூர் ; (திருத்தலம் அருள்தரு திருப்புருவமின்னாளம்மை உடனுறை அருள்மிகு பனங்காட்டீசுவரர் திருவடிகள் போற்றி )
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
|
விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ வெங்கணையால் எய்தாய்! வரி பண் அமர்ந்து ஒலி சேர் புறவு ஆர் பனங்காட்டூர், பெண் அமர்ந்து ஒரு பாகம் ஆகிய பிஞ்ஞகா! பிறை சேர் நுதல் இடைக் கண் அமர்ந்தவனே! கலந்தார்க்கு அருளாயே! | [1] |
|
நீடல் கோடல் அலர, வெண்முல்லை நீர் மலர்நிரைத் தாது அளம்செய, பாடல் வண்டு அறையும் புறவு ஆர் பனங்காட்டூர், தோடு இலங்கிய காது அயல் மின் துளங்க, வெண்குழை துள்ள, நள் இருள் ஆடும் சங்கரனே! அடைந்தார்க்கு அருளாயே! | [2] |
|
வாளையும் கயலும் மிளிர் பொய்கை வார் புனல் கரை அருகு எலாம் வயல் பாளை ஒண் கமுகம் புறவு ஆர் பனங்காட்டூர், பூளையும் நறுங் கொன்றையும் மதமத்தமும் புனைவாய்! கழல் இணைத் தாளையே பரவும் தவத்தார்க்கு அருளாயே! | [3] |
|
மேய்ந்து இளஞ் செந்நெல் மென் கதிர் கவ்வி மேல்படுகலில், மேதி வைகறை பாய்ந்த தண்பழனப் புறவு ஆர் பனங்காட்டூர், ஆய்ந்த நால்மறை பாடி ஆடும் அடிகள்! என்று என்று அரற்றி, நல் மலர், சாய்ந்து, அடி பரவும் தவத்தார்க்கு அருளாயே! | [4] |
|
செங்கய(ல்)லொடு சேல் செருச் செய, சீறியாழ் முரல் தேன் இனத்தொடு பங்கயம் மலரும் புறவும் ஆர் பனங்காட்டூர், கங்கையும் மதியும் கமழ் சடைக் கேண்மையாளொடும் கூடி, மான்மறி அம் கை ஆடலனே! அடியார்க்கு அருளாயே! | [5] |
|
நீரின் ஆர் வரை கோலி, மால் கடல் நீடிய பொழில் சூழ்ந்து வைகலும் பாரினார் பிரியாப் புறவு ஆர் பனங்காட்டூர், காரின் ஆர் மலர்க்கொன்றை தாங்கு கடவுள்! என்று கைகூப்பி, நாள்தொறும் சீரினால் வணங்கும் திறத்தார்க்கு அருளாயே! | [6] |
|
கை அரிவையர் மெல்விரல்(ல்) அவை காட்டி, அம்மலர்க்காந்தள், அம் குறி பை அராவிரியும் புறவு ஆர்பனங்காட்டூர், மெய் அரிவை ஓர்பாகம் ஆகவும் மேவினாய்! கழல் ஏத்தி நாள்தொறும் பொய் இலா அடிமை புரிந்தார்க்கு அருளாயே! | [7] |
|
தூவி அம் சிறை மென் நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர்ப் பொய்கை, பாவில் வண்டு அறையும் புறவு ஆர் பனங்காட்டூர் மேவி, அந்நிலை ஆய் அரக்கன தோள் அடர்த்து, அவன் பாடல் கேட்டு, அருள் ஏவிய பெருமான்! என்பவர்க்கு அருளாயே! | [8] |
|
அம் தண் மாதவி, புன்னை, நல்ல அசோகமும்(ம்), அரவிந்தம், மல்லிகை, பைந் தண் நாழல்கள், சூழ் புறவு ஆர் பனங்காட்டூர், எந்து இள(ம்) முகில்வண்ணன், நான்முகன், என்று இவர்க்கு அரிது ஆய் நிமிர்ந்தது ஒர் சந்தம் ஆயவனே! தவத்தார்க்கு அருளாயே! | [9] |
|
நீணம் ஆர் முருகு உண்டு, வண்டு இனம், நீல மா மலர் கவ்வி, நேரிசை பாணி யாழ்முரலும் புறவு ஆர்பனங்காட்டூர், நாண் அழிந்து உழல்வார் சமணரும் நண்பு இல் சாக்கியரும் நக, தலை ஊண் உரியவனே! உகப்பார்க்கு அருளாயே! | [10] |
|
மையின் ஆர் மணி போல் மிடற்றனை, மாசு இல் வெண்பொடிப் பூசும் மார்பனை, பைய தேன் பொழில் சூழ் புறவு ஆர் பனங்காட்டூர், ஐயனை, புகழ் ஆன காழியுள் ஆய்ந்த நால்மறை ஞானசம்பந்தன் செய்யுள் பாட வல்லார், சிவலோகம் சேர்வாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.054  
உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம்
பண் - சீகாமரம் (திருத்தலம் திருப்புகலி -(சீர்காழி ) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
|
உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம் உடையீர்! அடைவோர்க்குக் கரு ஆர்ந்த வான் உலகம் காட்டிக் கொடுத்தல் கருத்து ஆனீர்! பொரு ஆர்ந்த தெண்கடல் ஒண்சங்கம் திளைக்கும் பூம் புகலி, திரு ஆர்ந்த கோயிலே கோயில் ஆக்த் திகழ்ந்தீரே. | [1] |
|
நீர் ஆர்ந்த செஞ்சடையீர்! நிரை ஆர் கழல் சேர் பாதத்தீர்! ஊர் ஆர்ந்த சில்பலியீர்! உழைமான் உரி தோல் ஆடையீர்! போர் ஆர்ந்த தெண்திரை சென்று அணையும் கானல் பூம் புகலி, சீர் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே. | [2] |
|
அழி மல்கு பூம் புனலும், அரவும், சடைமேல் அடைவு எய்த, மொழி மல்கு மாமறையீர்! கறை ஆர் கண்டத்து எண்தோளீர்! பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி, எழில் மல்கு கோயிலே கோயில் ஆக இருந்தீரே. | [3] |
|
கயில் ஆர்ந்த வெண்மழு ஒன்று உடையீர்! கடிய கரியின்தோல், மயில் ஆர்ந்த சாயல் மடமங்கை வெருவ, மெய் போர்த்தீர்! பயில் ஆர்ந்த வேதியர்கள் பதி ஆய் விளங்கும் பைம்புகலி, எயில் ஆர்ந்த கோயிலே கோயில் ஆக இசைந்தீரே. | [4] |
|
நா ஆர்ந்த பாடலீர்! ஆடல் அரவம் அரைக்கு ஆர்த்தீர்! பா ஆர்ந்த பல்பொருளின் பயன்கள் ஆனீர்! அயன் பேணும் பூ ஆர்ந்த பொய்கைகளும் வயலும் சூழ்ந்த பொழில் புகலி, தே ஆர்ந்த கோயிலே கோயில் ஆகத் திகழ்ந்தீரே. | [5] |
|
மண் ஆர்ந்த மணமுழவம் ததும்ப, மலையான்மகள் என்னும் பெண் ஆர்ந்த மெய் மகிழப் பேணி, எரி கொண்டு ஆடினீர்! விண் ஆர்ந்த மதியம் மிடை மாடத்து ஆரும் வியன்புகலி, கண் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகக் கலந்தீரே. | [6] |
|
களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரியக் கணை தொட்டீர்! அளி புல்கு பூ முடியீர்! அமரர் ஏத்த, அருள் செய்தீர்! தெளி புல்கு தேன் இனமும் அலருள் விரை சேர் திண் புகலி, ஒளி புல்கு கோயிலே கோயில் ஆக உகந்தீரே. | [7] |
|
பரந்து ஓங்கு பல்புகழ் சேர் அரக்கர் கோனை வரைக்கீழ் இட்டு உரம் தோன்றும் பாடல் கேட்டு, உகவை அளித்தீர்! உகவாதார் புரம் தோன்று மும்மதிலும் எரியச் செற்றீர்! பூம் புகலி, வரம் தோன்று கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. | [8] |
|
சலம் தாங்கு தாமரை மேல் அயனும், தரணி அளந்தானும், கலந்து ஓங்கி வந்து இழிந்தும், காணா வண்ணம் கனல் ஆனீர்! புலம் தாங்கி ஐம்புலனும் செற்றார் வாழும் பூம் புகலி, நலம் தாங்கு கோயிலே கோயில் ஆக நயந்தீரே. | [9] |
|
நெடிது ஆய வன் சமணும், நிறைவு ஒன்று இல்லாச் சாக்கியரும், கடிது ஆய கட்டுரையால் கழற, மேல் ஓர் பொருள் ஆனீர்! பொடி ஆரும் மேனியினீர்! புகலி மறையோர் புரிந்து ஏத்த, வடிவு ஆரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. | [10] |
|
ஒப்பு அரிய பூம் புகலி ஓங்கு கோயில் மேயானை, அப் பரிசில் பதி ஆன அணி கொள் ஞானசம்பந்தன், செப்ப(அ)ரிய தண்தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார், எப்பரிசில் இடர் நீங்கி, இமையோர் உலகத்து இருப்பாரே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.019  
சூலப் படை யானை; சூழ்
பண் - சீகாமரம் (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
|
சூலப் படை யானை; சூழ் ஆக வீழ் அருவி கோலத் தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை; பால் ஒத்த மென் மொழியாள் பங்கனை; பாங்கு ஆய ஆலத்தின் கீழானை;-நான் கண்டது ஆரூரே. | [1] |
|
பக்கமே பாரிடங்கள் சூழ, படுதலையில் புக்க ஊர்ப் பிச்சை ஏற்று, உண்டு, பொலிவு உடைத்து ஆய்க் கொக்கு இறகின் தூவல் கொடி எடுத்த, கோவணத்தோடு அக்கு அணிந்த, அம்மானை-நான் கண்டது ஆரூரே. | [2] |
|
சேய உலகமும் செல் சார்வும் ஆனானை, மாயப் போர் வல்லானை, மாலை தாழ் மார்பானை, வேய் ஒத்த தோளியர் தம் மென் முலை மேல்-தண் சாந்தின் ஆயத்து இடையானை,-நான் கண்டது ஆரூரே. | [3] |
|
ஏறு ஏற்றமா ஏறி, எண் கணமும் பின் படர, மாறு ஏற்றார் வல் அரணம் சீறி, மயானத்தின் நீறு ஏற்ற மேனியனாய், நீள் சடை மேல் நீர் ததும்ப ஆறு ஏற்ற அந்தணனை-நான் கண்டது ஆரூரே. | [4] |
|
தாம் கோல வெள் எலும்பு பூண்டு, தம் ஏறு ஏறி, பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார் தேம் காவி நாறும் திரு ஆரூர்த் தொல்-நகரில் பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாது இருந்தாரே. | [5] |
|
எம் பட்டம் பட்டம் உடையானை, ஏர் மதியின் நும் பட்டம் சேர்ந்த நுதலானை, அந்திவாய்ச் செம்பட்டு உடுத்துச் சிறு மான் உரி ஆடை அம் பட்டு அசைத்தானை,-நான் கண்டது ஆரூரே. | [6] |
|
போழ் ஒத்த வெண் மதியம் சூடிப் பொலிந்து இலங்கு வேழத்து உரி போர்த்தான், வெள் வளையாள் தான் வெருவ, ஊழித் தீ அன்னானை, ஒங்கு ஒலிமாப் பூண்டது ஓர் ஆழித் தேர் வித்தகனை,-நான் கண்டது ஆரூரே. | [7] |
|
வஞ்சனையார் ஆர் பாடும் சாராத மைந்தனை, துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை, தன் தொண்டர் நெஞ்சின் இருள் கூரும்பொழுது நிலாப் பாரித்து அம் சுடர் ஆய் நின்றானை,-நான் கண்டது ஆரூரே. | [8] |
|
கார முது கொன்றை கடி நாறு தண் என்ன நீர முது கோதையோடு ஆடிய நீள் மார்பன், பேர் அமுதம் உண்டார்கள் உய்யப் பெருங் கடல் நஞ்சு ஆர் அமுதா உண்டானை, -நான் கண்டது ஆரூரே. | [9] |
|
தாள் தழுவு கையன், தாமரைப் பூஞ்சேவடியன், கோள் தால வேடத்தன், கொண்டது ஓர் வீணையினான், ஆடு அரவக் கிண்கிணிக் கால் அன்னான் ஓர் சேடனை, ஆடும் தீக் கூத்தனை,-நான் கண்டது ஆரூரே. | [10] |
|
மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி, மணி விரலால், துஞ்சாப் போர் வாள் அரக்கன் தோள் நெரியக் கண் குருதிச்- செஞ் சாந்து அணிவித்து, தன் மார்பில் பால் வெண் நீற்று- அம்சாந்து அணிந்தானை-நான் கண்டது ஆரூரே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.020  
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
பண் - சீகாமரம் (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
|
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய்; கழல் அடி பூண்டு கொண்டொழிந்தேன்; புறம் போயினால் அறையோ?- ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகைமேல் எழு கொடி வான் இள (ம்) மதி தீண்டி வந்து உலவும் திரு ஆரூர் அம்மானே! | [1] |
|
கடம் பட(ந்) நடம் ஆடினாய்; களைகண் நினைக்கு ஒரு காதல் செய்து, அடி ஒடுங்கி வந்து அடைந்தேன்; ஒழிப்பாய், பிழைப்ப எல்லாம்!- முடங்கு இறா, முது நீர் மலங்கு, இள வாளை, செங்கயல், சேல் வரால், களிறு, அடைந்த தண் கழனி, அணி ஆரூர் அம்மானே! | [2] |
|
அரு மணித் தடம் பூண் முலை அரம்பையரொடு அருளிப்பாடியர் உரிமையில்- தொழுவார், உருத்திர பல் கணத்தார் விரிசடை விரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், கபாலிகள் தெருவினில் பொலியும் திரு ஆரூர் அம்மானே! | [3] |
|
பூங்கழல் தொழுதும் பரவியும், புண்ணியா! புனிதா! உன் பொன் கழல் ஈங்கு இருக்கப் பெற்றேன்; என்ன குறை உடையேன்?- ஓங்கு தெங்கு, இலை ஆர் கமுகு, இள வாழை, மாவொடு, மாதுளம், பல- தீம் கனி சிதறும் திரு ஆரூர் அம்மானே! | [4] |
|
நீறு சேர் செழு மார்பினாய்; நிரம்பா மதியொடு நீள்சடை இடை ஆறு பாய வைத்தாய்; அடியே அடைந்தொழிந்தேன் ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற, விண்ட மலர் இதழ் வழி தேறல் பாய்ந்து ஒழுகும் திரு ஆரூர் அம்மானே! | [5] |
|
அளித்து வந்து அடி கைதொழுமவர்மேல் வினை கெடும் என்று இ(வ்) வையகம் களித்து வந்து உடனே கலந்து ஆடக் காதல் ஆய்க் குளித்தும், மூழ்கியும், தூவியும், குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புகத் தெளிக்கும் தீர்த்தம் அறாத் திரு ஆரூர் அம்மானே! | [6] |
|
திரியும் மூ எயில் தீ எழச் சிலை வாங்கி நின்றவனே! என் சிந்தையுள பிரியும் ஆறு எங்ஙனே? பிழைத்தேயும் போகல் ஒட்டேன் பெரிய செந்நெல், பிரம்புரி, கெந்தசாலி, திப்பியம் என்று இவை அகத்து அரியும் தண் கழனி அணி ஆரூர் அம்மானே! | [7] |
|
பிறத்தலும், பிறந்தால் பிணிப் பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று இறக்கும் ஆறு உளதே; இழித்தேன், பிறப்பினை நான்; அறத்தையே புரிந்த மனத்தனாய், ஆர்வச்செற்றக்குரோதம் நீக்கி, உன் திறத்தனாயொழிந்தேன் -திரு ஆரூர் அம்மானே! | [8] |
|
முளைத்த வெண்பிறை மொய் சடை உடையாய்! எப்போதும் என் நெஞ்சு இடம் கொள வளைத்துக் கொண்டிருந்தேன்; வலி செய்து போகல் ஒட்டேன் அளைப் பிரிந்த அலவன் போய்ப் புகு தந்த காலமும் கண்டு தன் பெடை திளைக்கும் தண் கழனித் திரு ஆரூர் அம்மானே! | [9] |
|
நாடினார், -கமலம்மலர் அயனோடு, இரணியன் ஆகம் கீண்டவன், நாடிக் காணமாட்டாத் தழல் ஆய நம்பானை, பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு தேடிக் கண்டு கொண்டேன்; திரு ஆரூர் அம்மானே! | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.086  
விடையின் மேல் வருவானை; வேதத்தின்
பண் - சீகாமரம் (திருத்தலம் திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்) ; (திருத்தலம் அருள்தரு அமிர்தவல்லியம்மை உடனுறை அருள்மிகு பனங்காட்டீசுவரர் திருவடிகள் போற்றி )
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
|
விடையின் மேல் வருவானை; வேதத்தின் பொருளானை; அடையில் அன்பு உடையானை; யாவர்க்கும் அறிய ஒண்ணா, மடையில் வாளைகள் பாயும் வன் பார்த்தான் பனங்காட்டூர், சடையில் கங்கை தரித்தானை; சாராதார் சார்பு என்னே! | [1] |
|
அறையும் பைங்கழல் ஆர்ப்ப, அரவு ஆட, அனல் ஏந்தி, பிறையும் கங்கையும் சூடி, பெயர்ந்து, ஆடும் பெருமானார்; பறையும் சங்கு ஒலி ஓவாப் படிறன்; தன் பனங்காட்டூர் உறையும் எங்கள் பிரானை; உணராதார் உணர்வு என்னே! | [2] |
|
தண் ஆர் மா மதி சூடி, தழல் போலும் திருமேனிக்கு எண் ஆர் நாள்மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள் பண் ஆர் பாடல் அறாத படிறன்; தன் பனங்காட்டூர் பெண் ஆண் ஆய பிரானை; பேசாதார் பேச்சு என்னே! | [3] |
|
நெற்றிக்கண் உடையானை, நீறு ஏறும் திருமேனிக் குற்றம் இல் குணத்தானை, கோணாதார் மனத்தானை பற்றிப் பாம்பு அரை ஆர்த்த படிறன், தன் பனங்காட்டூர்ப் பெற்றொன்று ஏறும் பிரானை, பேசாதார் பேச்சு என்னே! | [4] |
|
உரம் என்னும் பொருளானை, உருகில் உள் உறைவானை, சிரம் என்னும் கலனானை, செங்கண் மால்விடையானை, வரம் முன்னம் அருள் செய்வான், வன் பார்த்தான் பனங்காட்டூர்ப் பரமன், எங்கள் பிரானை, பரவாதார் பரவு என்னே! | [5] |
|
எயிலார் பொக்கம்(ம்) எரித்த எண்தோள் முக்கண்(ண்) இறைவன்; வெயில் ஆய், காற்று என் வீசி, மின் ஆய், தீ என நின்றான்; மயில் ஆர் சோலைகள் சூழ்ந்த வன் பார்த்தான் பனங்காட்டூர்ப் பயில்வானுக்கு, அடிமைக் கண் பயிலாதார் பயில்வு என்னே! | [6] |
|
மெய்யன், வெண்பொடி பூசும் விகிர்தன், வேத(ம்) முதல்வன், கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம்(ம்) அறுத்தான், பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன், தன் பனங்காட்டூர் ஐயன், எங்கள் பிரானை, அறியாதார் அறிவு என்னே! | [7] |
|
வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பு இலியை, பஞ்சிச் சீறடியாளைப் பாகம் வைத்து உகந்தானை, மஞ்சு உற்ற மணி மாட வன் பார்த்தான் பனங்காட்டூர் நெஞ்சத்து எங்கள் பிரானை, நினையாதார் நினைவு என்னே! | [8] |
|
மழையானும், திகழ்கின்ற மலரோன், என்று இருவர் தாம் உழையா நின்றவர் உள்க உயர்வானத்து உயர்வானை, பழையானை; பனங்காட்டூர் பதி ஆகத் திகழ்கின்ற குழை(க்)காதற்கு அடிமைக் கண் குழையாதார் குழைவு என்னே! | [9] |
|
பார் ஊரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானை, சீர் ஊரும் திரு ஆரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல், அடி நாய் சொல், ஊர் ஊரன் உரை செய்வார், உயர்வானத்து உயர்வாரே. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.087  
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம்
பண் - சீகாமரம் (திருத்தலம் திருப்பனையூர் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு சவுந்தரேசர் திருவடிகள் போற்றி )
புகலூர்ப் பெருமானளித்த பொற் கட்டிகளை யெடுத்துக் கொண்டு புறப்பட்ட சுந்தரர், திருப்பனையூரின் புறத்தே வரும்போது அத்தலத்திறைவன் நம்பியாரூரர்க்கு ஆடல்காட்டி அருள்செய்தார். ஆடல் கண்டருளிய சுந்தரர், மாட மாளிகை எனறு திருப்பதிகம் பாடிப் போற்றித் தொழுதார்.
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
|
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர் பொழில் பாடல் வண்டு அறையும் பழனத் திருப் பனையூர், தோடு பெய்து, ஒரு காதினில் குழை தூங்க, தொண்டர்கள் துள்ளிப் பாட, நின்று ஆடும் ஆறு வல்லார் அவரே அழகியரே. | [1] |
|
நாறு செங்கழு நீர்மலர் நல்ல மல்லிகை சண்பகத்தொடு, சேறு செய் கழனிப் பழனத் திருப் பனையூர், நீறு பூசி, நெய் ஆடி, தம்மை நினைப்பவர் தம் மனத்தர் ஆகி நின்று, ஆறு சூட வல்லார் அவரே அழகியரே. | [2] |
|
செங்கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு பைங்கண் வாளைகள் பாய் பழனத் திருப் பனையூர், திங்கள் சூடிய செல்வனார், அடியார் தம்மேல் வினை தீர்ப்பராய் விடில் அங்கு இருந்து உறைவார் அவரே அழகியரே. | [3] |
|
வாளை பாய,-மலங்கு, இளங்கயல், வரிவரால், உகளும்-கழனியுள் பாளை ஒண் கமுகம் புடை சூழ் திருப் பனையூர், தோளும் ஆகமும் தோன்ற, நட்டம் இட்டு ஆடுவார்; அடித்தொண்டர் தங்களை ஆளும் ஆறு வல்லார்; அவரே அழகியரே. | [4] |
|
கொங்கையார் பலரும் குடைந்து ஆட, நீர்க் குவளை மலர்தர, பங்கயம் மலரும் பழனத் திருப் பனையூர், மங்கை பாகமும் மால் ஒர்பாகமும் தாம் உடையவர்; மான் மழுவினொடு அங்கைத் தீ உகப்பார்; அவரே அழகியரே. | [5] |