சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
9.016   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - தஞ்சை இராசராசேச்சரம்
பண் -   (தஞ்சை இராசராசேச்சரம் )
Audio: https://www.youtube.com/watch?v=3QkwBkLEPRI
Audio: https://www.youtube.com/watch?v=V-ixoubde1s
Audio: https://www.youtube.com/watch?v=lJkd2SjcZic

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.016   கருவூர்த் தேவர் - தஞ்சை இராசராசேச்சரம்  
பண் -   (திருத்தலம் தஞ்சை இராசராசேச்சரம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
உலகெலாம் தொழவந்(து) எழுகதிர்ப் பருதி
   ஒன்றுநூ றாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம்(பு) அச்சோ !
   அங்ஙனே அழகிதோ, அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
   பருவரை ஞாங்கர்வெண் திங்கள்
இலைகுலாம் பதணத்(து) இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத்(து) இவர்க்கே.
[1]
நெற்றியிற் கண்என் கண்ணில்நின் றகலா
   நெஞ்சினில் அஞ்சிலம்(பு) அலைக்கும்
பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப்
   புகுந்தன போந்தன இல்லை
மற்றெனக்(கு) உறவேன் மறிதிரை வடவாற்
   றிடுபுனல் மதகில்வாழ் முதலை
ஏற்றிநீர்க் கிடங்கில் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.
[2]
சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய
   வெண்ணிலா விரிதரு தரளக்
குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்
   குறிப்பெனோ கோங்கிணர் அனைய
குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந்து
   உக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்(கு)
இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.
[3]
வாழியம் போதத்(து) அருகுபாய் விடையம்
   வரிசையின் விளக்கலின் அடுத்த
சூழலம் பளிங்கின் பாசலர் ஆதிச்
   சுடர்விடு மண்டலம் பொலியக்
காழகில் கமழும் மாளிகை மகளிர்
   கங்குல்வாய் அங்குலி கெழும
யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.
[4]
எவரும்மா மறைகள் எவையும் வானவர்கள்
   ஈட்டமும் தாட்டிருக் கமலத்
தவரும்மா லவனும் அறிவரும் பெருமை
   அடலழல் உமிழ்தழற் பிழம்பர்
உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில்
   உறுகளிற்(று) அரசின(து) ஈட்டம்
இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.
[5]
அருளுமா(று) அருளி ஆளுமா(று) ஆள
   அடிகள்தம் அழகிய விழியும்
குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற
   குயிலினை மயல்செய்வ(து) அழகோ
தரளவான் குன்றில் தண்நிலா ஒளியும்
   தருகுவால் பெருகுவான் தெருவில்
இருளெலாம் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.
[6]
தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின்
   தளிர்இறப்(பு) இலைஉதிர்(வு) என்றால்
நினைப்பருந் தம்பால்சேறலின் றேனும்
   நெஞ்சிடிந்(து) உருகுவ(து) என்னோ
கனைப்பெருங் கலங்கல் பொய்கையங் கழுநீர்ச்
   சூழல்மா ளிகைசுடர் வீசும்
எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.
[7]
பன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர்
   தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த
   எளிமையை என்றும் நான் மறக்கேன்
மின்நெடும் புருவத்(து) இளமயில் அனையார்
   விலங்கல்செய் நாடக சாலை
இன்நடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.
[8]
மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து
   வஞ்சகர் நெஞ்சகத்(து) ஒளிப்பார்
அங்கழல் சுடராம் அவர்க்கிள வேனல்
   அலர்கதிர் அனையர் வாழியரோ !
பொங்கெழில் திருநீறு அழிபொசி வனப்பில்
   புனல்துளும்(பு) அவிர்சடை மொழுப்பர்
எங்களுக்(கு) இனியர் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.
[9]
தனியர்எத் தனைஓ ராயிர வருமாம்
   தன்மையர் என்வயத் தினராம்
கனியரத் திருதீங் கரும்பர்வெண் புரிநூற்
   கட்டியர் அட்டஆ ரமிர்தர்
புனிதர்பொற் கழலர்புரி சடா மகுடர்
   புண்ணியர் பொய்யிலா மெய்யர்க்(கு)
இனியர்எத் தனையும் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.
[10]
சரளமந் தார சண்பக வகுள
   சந்தன நந்தன வனத்தின்
இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவரை
அருமருந்து அருந்தி அல்லல்தீர் கருவூர்
   அறைந்தசொல் மாலைஈ ரைந்தின்
பொருள்மருந்(து) உடையோர் சிவபதம் என்னும்
   பொன்நெடுங் குன்றுடை யோரே.
   
[11]
Back to Top

This page was last modified on Sun, 09 Mar 2025 21:46:14 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list column name thalam lang tamil string value %E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88