சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
திருமுறை thalam திருப்பழமண்ணிப்படிக்கரை
7.022   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   முன்னவன், எங்கள் பிரான், முதல்
பண் - நட்டராகம்   (திருப்பழமண்ணிப்படிக்கரை நீலகண்டேசுவரர் வடிக்கண்ணமுதகரநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=1nr1Tdgfwpc

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.022   முன்னவன், எங்கள் பிரான், முதல்  
பண் - நட்டராகம்   (திருத்தலம் திருப்பழமண்ணிப்படிக்கரை ; (திருத்தலம் அருள்தரு வடிக்கண்ணமுதகரநாயகியம்மை உடனுறை அருள்மிகு நீலகண்டேசுவரர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
முன்னவன், எங்கள் பிரான், முதல் காண்பு அரிது ஆய பிரான்,
சென்னியில் எங்கள் பிரான், திரு நீல மிடற்று எம்பிரான்,
மன்னிய எங்கள் பிரான், மறை நான்கும் கல்லால் நிழல் கீழ்ப்
பன்னிய எங்கள் பிரான்-பழமண்ணிப் படிக் கரையே .

[1]
அண்ட கபாலம் சென்னி(ய்) அடிமேல் அலர் இட்டு நல்ல
தொண்டு அங்கு அடி பரவி, தொழுது ஏத்தி, நின்று ஆடும் இடம்;
வெண் திங்கள் வெண்மழுவன், விரை ஆர் கதிர் மூவிலைய
பண்டங்கன், மேய இடம் பழமண்ணிப் படிக் கரையே .

[2]
ஆடுமின், அன்பு உடையீர்! அடிக்கு ஆட்பட்ட தூளி கொண்டு
சூடுமின், தொண்டர் உள்ளீர்! உமரோடு எமர் சூழ வந்து,
வாடும் இவ் வாழ்க்கை தன்னை வருந்தாமல் திருந்தச் சென்று,
பாடுமின், பத்தர் உள்ளீர், பழமண்ணிப் படிக் கரையே .

[3]
அடுதலையே புரிந்தான், நவை; அந்தர மூ எயிலும்
கெடுதலையே புரிந்தான்; கிளரும் சிலை நாணியில் கோல்
நடுதலையே புரிந்தான்; நரி கான்றிட்ட எச்சில் வெள்ளைப்-
படுதலையே புரிந்தான்-பழமண்ணிப் படிக் கரையே .

[4]
உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தித் தொழுமின், தொண்டீர்!
மங்கை ஒர் கூறு உடையான், வானோர் முதல் ஆய பிரான்,
அம் கையில் வெண் மழுவன்(ன்), அலை ஆர் கதிர் மூவிலைய
பங்கய பாதன், இடம் பழமண்ணிப் படிக் கரையே .

[5]
செடி படத் தீ விளைத்தான், சிலை ஆர் மதில்; செம் புனம் சேர்
கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏறக் கொண்டான்;
கடியவன் காலன் தன்னைக் கறுத்தான்; கழல் செம்பவளப்-
படியவன்; பாசுபதன்-பழமண்ணிப் படிக் கரையே .

[6]
கடுத்தவன்-தேர் கொண்டு ஓடிக் கயிலாய நல் மாமலையை
எடுத்தவன், ஈர்-ஐந்துவாய் அரக்கன்-முடிபத்து அலற,
விடுத்து, அவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடல் உறப்
படுத்தவன்; பால் வெண் நீற்றன்-பழமண்ணிப் படிக் கரையே.

[7]
திரிவன மும்மதிலும்(ம்) எரித்தான்; இமையோர் பெருமான்;
அரியவன்; அட்ட புட்பம்(ம்) அவை கொண்டு அடி போற்றி, நல்ல
கரியவன் நான்முகனும்(ம்), அடியும் முடி காண்பு அரிய
பரியவன்; பாசுபதன்-பழமண்ணிப் படிக் கரையே .

[8]
வெற்று அரைக் கற்ற(அ)மணும், விரையாது வெண் தாலம் உண்ணும்
துற்றரை, துற்று அறுப்பான் துன்ன ஆடைத் தொழில் உடையீர்!
பெற்றரைப் பித்தர் என்று(க்) கருதேன்மின்! படிக்கரையுள்
பற்றரைப் பற்றி நின்று(ப்) பழி பாவங்கள் தீர்மின்களே! .

[9]
பல் உயிர் வாழும் தெண் நீர்ப் பழமண்ணிப் படிக் கரையை
அல்லி அம் தாமரைத்தார் ஆரூரன் உரைத்த தமிழ்
சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும், தமர்க்கும், கிளைக்கும்,
எல்லியும் நன்பகலும்(ம்) இடர் கூருதல் இல்லை அன்றே! .

[10]
Back to Top
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000