சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.115   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சங்கு ஒளிர் முன் கையர்
பண் - வியாழக்குறிஞ்சி   (திருஇராமனதீச்சரம் இராமநாதேசுவரர் சரிவார்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=A4nmsC17vas

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.115   சங்கு ஒளிர் முன் கையர்  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருத்தலம் திருஇராமனதீச்சரம் ; (திருத்தலம் அருள்தரு சரிவார்குழலியம்மை உடனுறை அருள்மிகு இராமநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
சங்கு ஒளிர் முன் கையர் தம் இடையே
அங்கு இடு பலி கொளுமவன், கோபப்
பொங்கு அரவு ஆடலோன், புவனி ஓங்க
எங்கும் மன், இராமன தீச்சரமே.

[1]
சந்த நல்மலர் அணி தாழ்சடையன்,
தந்த மதத்தவன் தாதையோ தான்,
அந்தம் இல் பாடலோன், அழகன், நல்ல
எம் தவன், இராமன தீச்சரமே.

[2]
தழை மயில் ஏறவன் தாதையோ தான்,
மழை பொதி சடையவன், மன்னு காதில்
குழை அது விலங்கிய கோல மார்பின்
இழையவன், இராமன தீச்சரமே.

[3]
சத்தியுள் ஆதி ஓர் தையல் பங்கன்,
முத்தி அது ஆகிய மூர்த்தியோ தான்,
அத்திய கையினில் அழகு சூலம்
வைத்தவன், இராமன தீச்சரமே.

[4]
தாழ்ந்த குழல் சடைமுடி அதன்மேல்-
தோய்ந்த இளம்பிறை துளங்கு சென்னிப்
பாய்ந்த கங்கையொடு பட அரவம்
ஏய்ந்தவன் இராமன தீச்சரமே.

[5]
சரிகுழல் இலங்கிய தையல் காணும்
பெரியவன், காளிதன் பெரிய கூத்தை
அரியவன், ஆடலோன், அங்கை ஏந்தும்
எரியவன், இராமன தீச்சரமே.

[6]
மாறு இலா மாது ஒருபங்கன், மேனி
நீறு அது ஆடலோன், நீள்சடைமேல்
ஆறு அது சூடுவான், அழகன், விடை
ஏறவன், இராமன தீச்சரமே.

[7]
தடவரை அரக்கனைத் தலை நெரித்தோன்,
பட அரவு ஆட்டிய படர் சடையன்,
நடம் அது ஆடலான், நால்மறைக்கும்
இடமவன், இராமன தீச்சரமே.

[8]
தனம் அணி தையல் தன் பாகன் தன்னை,
அனம் அணி அயன் அணிமுடியும் காணான்;
பன மணி அரவு அரி பாதம் காணான்;
இன மணி இராமன தீச்சரமே.

[9]
தறி போல் ஆம் சமணர் சாக்கியர் சொல் கொளேல்!
அறிவோர் அரன் நாமம் அறிந்து உரைமின்!
மறி கையோன், தன் முடி மணி ஆர் கங்கை
எறியவன், இராமன தீச்சரமே.

[10]
தேன் மலர்க் கொன்றை யோன்........
. ........ முந்தமக்கூனமன்றே.

[11]
Back to Top

This page was last modified on Sun, 09 Mar 2025 21:46:14 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list column name thalam string value %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D