சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
9.015   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - திருச்சாட்டியக்குடி
பண் -   (திருச்சாட்டியக்குடி )
Audio: https://www.youtube.com/watch?v=VPqqFCCIuUI
Audio: https://www.youtube.com/watch?v=kx4xr42RA_U
Audio: https://www.youtube.com/watch?v=sCXf_OLKQ-g

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.015   கருவூர்த் தேவர் - திருச்சாட்டியக்குடி  
பண் -   (திருத்தலம் திருச்சாட்டியக்குடி ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பெரியவா கருணை இளநிலா எறிக்கும்
   பிறைதவழ் சடைமொழுப்பு அவிழ்ந்து
சரியுமா சுழியங் குழைமிளிர்ந்து இருபால்
   தாழ்ந்தவா காதுகள் கண்டம்
கரியவா தாமும் செய்யவாய் முறுவல்
   காட்டுமா சாட்டியக் குடியார்
இருகைகூம் பினகண்(டு) அலர்ந்தவா முகம்ஏழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
[1]
பாந்தள்பூ ணாரம் பரிகலம் கபாலம்
   பட்டவர்த் தனம்எரு(து) அன்பர்
வார்ந்தகண் அருவி மஞ்சன சாலை
   மலைமகள் மகிழ்பெரும் தேவி
சாந்தமும் திருநீ(று) அருமறை கீதம்
   சடைமுடி சாட்டியக் குடியார்
ஏந்தெழில் இதயம் கோயில்மாளிகைஏழ்
   இருக்கையுள் இருந்தஈ சனுக்கே.
[2]
தொழுதுபின் செல்வ(து) அயன்முதற் கூட்டம்
   தொடர்வன மறைகள்நான் கெனினும்
கழுதுறு கரிகா(டு) உறைவிடம் போர்வை
   கவந்திகை கரியுரி திரிந்தூண்
தழலுமிழ் அரவம் கோவணம் பளிங்கு
   செபவடம் சாட்டியக் குடியார்
இழுதுநெய் சொரிந்தோம்(பு) அழலொளி விளக்கேழ்
   இருக்கையில் இருந்த ஈசனுக்கே.
[3]
பதிகநான் மறைதும் புருவும்நா ரதரும்
   பரிவொடு பாடுகாந் தர்ப்பர்
கதியெலாம் அரங்கம் பிணையல் மூவுலகில்
   கடியிருள் திருநடம் புரியும்
சதியிலார் கதியில் ஒலிசெயும் கையில்
   தமருகம் சாட்டியக் குடியார்
இதயமாம் கமலம் கமலவர்த் தனைஏழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
[4]
திருமகன் முருகன் தேவியேல் உமையாள்
   திருமகள் மருமகன் தாயாம்
மருமகன் மதனன் மாமனேல் இமவான்
   மலையுடை அரையர்தம் பாவை
தருமலி வளனாம் சிவபுரன் தோழன்
   தனபதி சாட்டியக் குடியார்
இருமுகம் கழல்முன்று ஏழுகைத் தலம்ஏழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
[5]
அனலமே ! புனலே ! அனிலமே ! புவனி
   அம்பரா ! அம்பரத்(து) அளிக்கும்
கனகமே ! வெள்ளிக் குன்றமே என்றன்
   களைகணே, களைகண்மற் றில்லாத்
தனியனேன் உள்ளம் கோயில்கொண் டருளும்
   சைவனே சாட்டியக் குடியார்க்(கு)
இனியதீங் கனியாய் ஒழிவற நிறைந்துஏழ்
   இருக்கையில் இருந்தவா(று) இயல்பே.
[6]
செம்பொனே ! பவளக் குன்றமே ! நின்ற
   திசைமுகன் மால்முதற் கூட்டத்து
அன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே !
   அத்தனே பித்தனே னுடைய
சம்புவே அணுவே தாணுவே சிவனே !
   சங்கரா சாட்டியக் குடியார்க்(கு)
இன்பனே ! எங்கும் ஒழிவற நிறைந்தேழ்
   இருக்கையில் இருந்தவா(று) இயம்பே.
[7]
செங்கணா போற்றி ! திசைமுகா போற்றி !
   சிவபுர நகருள்வீற் றிருந்த
அங்கணா போற்றி ! அமரனே போற்றி !
   அமரர்கள் தலைவனே போற்றி !
தங்கள்நான் மறைநூல் சகலமும் கற்றோர்
   சாட்டியக் குடியிருந் தருளும்
எங்கள்நா யகனே போற்றி ! ஏழ் இருக்கை
   இறைவனே ! போற்றியே போற்றி !
[8]
சித்தனே ! அருளாய் ! செங்கணா ! அருளாய் !
   சிவபுர நகருள்வீற் றிருந்த
அத்தனே ! அருளாய் ! அமரனே ! அருளாய் !
   அமரர்கள் அதிபனே ! அருளாய்
தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல்
   சாட்டியக் குடியுள்ஏழ் இருக்கை
முத்தனே ! அருளாய் ! முதல்வனே ! அருளாய் !
   முன்னவா துயர்கெடுத்(து) எனக்கே.
[9]
தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த்
   தண்டலைச் சாட்டியக் குடியார்
ஈட்டிய பொருளாய் இருக்கும்ஏழ் இருக்கை
   இருந்தவன் திருவடி மலர்மேல்
காட்டிய பொருட்கலை பயில்கரு ஊரன்
   கழறுசொல் மாலைஈர் ஐந்தும்
மாட்டிய சிந்தை மைந்தருக்(கு) அன்றே
   வளரொளி விளங்குவா னுலகே.
   
[10]
Back to Top

This page was last modified on Sun, 09 Mar 2025 21:46:14 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list column name thalam string value %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF