சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை

Back to Top
அதிராவடிகள்   மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை  
11.025   மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

11.025 மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை   ( )
ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர்
மும்முகச் செந்நுதி நாலிணர் வெள்நிணக்
குடற்புலவு கமழும் அடற்கழுப் படையவன்
மதலை மாமதந் துவன்றிய கதனுடைக்
கடதடக் கபோலத் தோரிட மருப்பின்
கரண்டக உதரத்து முரண்தரு குழவிதன்
சேவடி யுகளம் அல்லது
யாவையும் இலம்இனி இருநிலத் திடையே.

[1]
நிலந்துளங்க மேருத் துளங்க நெடுவான்
தலந்துளங்கச் சப்பாணி கொட்டும் கலந்துளங்கொள்
காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து
மாமாரி ஈன்ற மணி.

[2]
மணிசிந்து கங்கைதன் மானக் குருளையை வாளரக்கர்
அணிசிந்த வென்றஎம் ஐயர்க்க கிளங்கன்றை அங்கரும்பின்
துனிசிந்த வாய்ப்பெய்த போதகத் தைத்தொடர்ந் தோர்பிறவித்
பிணிசிந்து கான்முனை யைப்பிடித் தோர்க்கில்லை பேதுறலே.

[3]
பேதுறு தகையம் அல்லம் தீதுறச்
செக்கர்க் குஞ்சிக் கருநிறத் தொக்கன்
நாப்பண்
புக்கவண் இரும்பொறித் தடக்கையும்
முரணிய பெருந்தோள்
கொட்ட நாவி தேவிதன்
மட்டுகு தெரியல் அடிமணந் தனமே.

[4]
மேய உருமிடற்றர் வெள்ளெயிற்றர் திண்சேனை
ஒய மணியூசல் ஆடின்றே பாய
மழைசெவிக்காற் றுந்திய வாளமர்க்கண் எந்தை
தழைசெவிக்காற் றுந்தத் தளர்ந்து.

[5]
உந்தத் தளரா வளைத்தனம் முன்னம்மின் ஒடைநெற்றிச்
சந்தத் தளரா ஒருதனித் தெவ்வர்தந் தாளிரியூர்
விந்தத் தளரா மருங்குற் கிளிபெற்ற வேழக்கன்றின்
மந்தத் தளரா மலர்ச்சர ணங்கள் வழுத்துமினே.

[6]
மின்னெடுங் கொண்டல் அந்நெடு முழக்கத்து
ஒவற விளங்கிய துளைக்கைக் கடவுளை
யாம்மிக வழுத்துவ தெவனோ அவனேல்
பிறந்ததிவ் வுலகின் பெருமூ தாதை
உரந்தரு சிரமரிந் தவற்கே வரைந்தது
மேருச் சிமையத்து மீமிசை
வாரிச் செல்வன் மகள்மகன் மொழியே.

[7]
மொழியின் மறைமுதலே முந்நயனத் தேறே
கழிய வருபொருளே கண்ணே செழிய
கலாலயனே எங்கள் கணபதியே நின்னை
அலாலையனே சூழாதென் அன்பு.

[8]
அன்பு தவச்சுற்றத் தாரழல் கொண்டெயில் மூன்றெரிய
வன்புத வத்துந்தை மாட்டுகின் றான்மதஞ் சூழ்மருப்பிற்
கன்பு தவக்கரத் தாளமிட் டோடிக் கடுநடையிட்
கின்பு தவச்சென்று நீயன்று காத்த தியம்புகவே.

[9]
கவவுமணிக் கேடகக் கங்கணக் கவைவல்நா
அறைகழல் அவுணரொடு பொருத ஞான்றுநின்
புழைக்கரம் உயிர்த்த அழற்பேர் ஊதை
வரைநனி கீறி மூரி
அஞ்செறு புலர்த்தும் என்பர்
மஞ்சேறு கயிலை மலைகிழ வோயே.

[10]
மலைசூழ்ந் திழிகின்ற மாசுணம்பொற் பாறைத்
தலைசூழ்ந்து தானினைப்ப தொக்கும் கலைசூழ்
திரண்டகங்கொள் பேரறிவன் திண்வயிற்றின் உம்பர்க்
கரண்டகங்கொள் காலுயிர்க்குங் கை.

[11]
காலது கையது கண்ணது தீயது கார்மதநீர்
மேலது கீழது நூலது வெற்பது பொற்பமைதீம்
பாலது தேனது தானது மென்மொழிப் பாவைமுப்பூண்
வேலது வாளது நான்மறைக் கின்ற விடுசுடர்க்கே.

[12]
சுடர்ப்பிழம்பு தழைத்த அழற்றனி நெடுவேல்
சேய்மூ வுலகமும் வலம்வர வேஅக்
கொன்றையம் படலை துன்றுசடைக் கணிந்த
ஒங்கிருந் தாதையை வளாஅய் மாங்கனி
அள்ளல் தீஞ்சுவை அருந்திய
வள்ளற் கிங்கென் மனங்கனிந் திடுமே.

[13]
இக்கயங்கொள் மூவலயஞ் சூழேழ் தடவரைகள்
திக்கயங்கள் பேர்ந்தாடச் செங்கீரை புக்கியங்கு
தேனாட வண்டாடச் செங்கீரை ஆடின்றே
வானாடன் பெற்ற வரை.

[14]
பெற்றமெல் லோதி சிலம்பின் மகள்பெறப் பிச்சுகந்த
மற்றவள் பிச்சன் மயங்கன்முன் னோன்பின் னிணைமைமிகக்
கற்றவன் ஐயன் புறங்காட் டிடைநடம் ஆட்டுகந்தோ
செற்றவெண் தந்தத் தவன்நம்மை ஆட்கொண்டு செய்தனவே.

[15]
செய்தரு பொலம்படை மொய்தரு பரூஉக்குருளை
வெள்ளெயிறு பொதிந்த வள்ளுகிர்த் திரள்வாய்ப்
பெருந்திரட் புழைக்கை
மண்முழை வழங்கும் திண்முரண் ஏற்றின்
பனையடர்ப் பாகன் றனதி ணையடி
நெடும்பொற் சரணம் ஏத்த
இடும்பைப் பௌவம் இனிநீங் கலமே.

[16]
அலங்கல் மணிகனகம் உந்தி அருவி
விலங்கல் மிசையிழிவ தொக்கும் பலன்கனிகள்
உண்டளைந்த கோன்மகுடத் தொண்கடுக்கைத் தாதளைந்து
வண்டணைந்து சோரும் மதம்.

[17]
மதந்தந்த மென்மொழி மாமலை யாட்டி மடங்கல்கொன்றை
மதந்தந்த முக்கண் ணரற்குமுன் ஈன்றவம் மாமலைபோல்
மதந்தந்த கும்பக் குழவிமந் தாரப்பொன் னாட்டிருந்து
மதந்தந்த செம்மலன் றோவையம் உய்ய வளர்கின்றதே.

[18]
வளர்தரு கவட்டின் கிளரொளிக் கற்பகப்
பொதும்பர்த் தும்பி ஒழிவின் றோச்சும்
பாரிடைக் குறுநடைத் தோடி ஞாங்கர்
இட்ட மாங்கனி
முழுவதும் விழுங்கிய முளைப்பனைத் தடக்கை
எந்தை அல்லது மற்று யாவுள
சிந்தை செய்யும் தேவதை நமக்கே.

[19]
கேளுற்றி யான்தளர ஒட்டுமே கிம்புரிப்பூண்
வாளுற்ற கேயூர வாளரக்கர் தோளுற்
றறுத்தெறிந்து கொன்றழித்தவ் அங்கயங்கண் மீண்டே
இறுத்தெறிந்து கொன்றழித்த ஏறு.

[20]
ஏறு தழீஇயவெம் புத்தேள் மருகவெங் குந்தவள
நீறு தழீஇயஎண் தோளவன் செல்வவண் டுண்ணநெக்க
ஆறு தழீஇய கரதலத் தையநின் றன்னை அல்லால்
வேறு தழீஇத்தொழு மோவணங் காத வியன்சிரமே.

[21]
சிரமே
விசும்பு போத உயரி இரண்
டசும்பு பொழி யும்மே
கரமே
வரைத்திரண் முரணிய இரைத்து விழும்மே
புயமே
திசைவிளிம்பு கிழியச் சென்று செறிக்குமே
அடியே
இடும்தொறும் இவ்வுல கம்யெபரும்மே
ஆயினும்
அஞ்சுடர்ப் பிழம்பு தழீஇ
நெஞ்சகத் தொடுங்குமோ நெடும்பணைச் சூரே.

[22]
சூர்தந்த பொற்குவட்டின் சூளிகையின் வானயிர்த்து
வார்தந் தெழுமதியம் மன்னுமே சீர்தந்த
மாமதலை வான்மதியங் கொம்பு வயிறுதித்த
கோமதலை வாண்மதியங் கொம்பு.

[23]

This page was last modified on Sun, 09 Mar 2025 21:44:56 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool author %E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D book name %E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88 lang tamil