சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
திருவிசைப்பா

Back to Top
கண்டராதித்தர்   திருவிசைப்பா  
9.020   கண்டராதித்தர் - கோயில்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=ZGr_jqv4kPw
Audio: https://www.youtube.com/watch?v=Z_Z3jGsc924
Audio: https://www.youtube.com/watch?v=x9aopGO2dcg

9.020 கண்டராதித்தர் - கோயில்   (கோயில் (சிதம்பரம்) )
மின்னார் உருவம் மேல்விளங்க
   வெண்கொடி மாளி கைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்று வந்து
   நின்றது போலும் என்னாத்
தென்னா என்று வண்டு பாடும்
   தென்தில்லை அம்ப லத்துள்
என்னார் அமுதை எங்கள்
   கோவை என்றுகொல் எய்துவதே.
[1]
ஓவா முத்தீ அஞ்சு வேள்வி
   ஆறங்க நான்மறையோர்
ஆவே படுப்பார் அந்த ணாளர்
   ஆகுதி வேட்டுயர் வார்
மூவா யிரவர் தங்க ளோடு
   முன் அரங்(கு) ஏறிநின்ற
கோவே உன்றன் கூத்துக் காணக்
   கூடுவ தென்று கொலோ.
[2]
முத்தீ யாளர் நான் மறையர்
   மூவா யிர வர்நின்னோ(டு)
ஒத்தே வாழும் தன்மை யாளர்
   ஓதிய நான்மறையைத்
தெத்தே யென்று வண்டு பாடும்
   தென்தில்லை அம்பலத்துள்
அத்தா உன்றன் ஆடல் காண
   அணைவதும் என்றுகொலோ.
[3]
மானைப் புரையும் மடமென்
   நோக்கி மாமலை யாளோடும்
ஆனைஞ் சாடும் சென்னி
   மேலோர் அம்புலி சூடும்அரன்
தேனைப் பாலைத் தில்லை
   மல்கு செம்பொனின் அம்பலத்துக்
கோனை ஞானக் கொழுந்து
   தன்னைக் கூடுவது என்றுகொலோ.
[4]
களிவான் உலகில் கங்கை
   நங்கை காதலனே ! அருளென்(று)
ஒளிமால் முன்னே வரங்கி
   டக்க உன்னடியார்க்(கு) அருளும்
தெளிவார் அமுதே ! தில்லை
   மல்கு செம்பொனின் அம்பலத்துள்
ஒளிவான் சுடரே ! உன்னை
   நாயேன் உறுவதும் என்றுகொலோ.
[5]
பாரோர் முழுதும் வந்தி
   றைஞ்சப் பதஞ்சலிக்(கு) ஆட்டுகந்தான்
வாரார் முலையாள் மங்கை
   பங்கன் மாமறையோர் வணங்கச்
சீரான் மல்கு தில்லைச்
   செம்பொன் அம்பலத்(து) ஆடுகின்ற
காரார் மிடற்றெங் கண்டனாரைக்
   காண்பதும் என்றுகொலோ.
[6]
இலையார் கதிர்வேல் இலங்கைவேந்தன்
   இருபது தோளும்இற
மலைதான் எடுத்த மற்றவற்கு
   வாளொடு நாள்கொடுத்தான்
சிலையால் புரமூன்(று) எய்த
   வில்லி செம்பொனின் அம்பலத்துக்
கலையார் மறிபொன் கையி
   னானைக் காண்பதும் என்றுகொலோ.
[7]
வெங்கோல் வேந்தன் தென்னன்
   நாடும் ஈழமும் கொண்டதிறல்
செங்கோற் சோழன் கோழி
   வேந்தன் செம்பியன் பொன்னணிந்த
அங்கோல் வளையார் பாடி
   யாடும் அணிதில்லை அம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம்மி
   றையை என்றுகொல் எய்துவதே.
[8]
நெடியா னோடு நான்
   முகனும் வானவரும் நெருங்கி
முடியான் முடிகள் மோதி
   உக்க முழுமணி யின்திரளை
அடியார் அலகி னால்தி
   ரட்டும் அணிதில்லை அம்பலத்துக்
கடியார் கொன்றை மாலை
   யானைக் காண்பதும் என்றுகொலோ.
[9]
சீரான் மல்கு தில்லைச்
   செம்பொன் அம்பலத் தாடிதன்னைக்
காரார் சோலைக் கோழி
   வேந்தன் தஞ்சையர் கோன்கலந்த
ஆரா இன்சொற் கண்டரா
   தித்தன் அருந்தமிழ் மாலை வல்லார்
பேரா வுலகிற் பெருமை
   யோடும் பேரின்பம் எய்துவரே.
   
[10]

This page was last modified on Sun, 09 Mar 2025 21:44:56 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool author %E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D book name %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE+ lang tamil