9.018 பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம் (திருவாரூர் ) |
Back to Top
பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா
9.018  
பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
பண் - (திருத்தலம் திருவாரூர் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=716nJZHF7-4
Audio: https://www.youtube.com/watch?v=L69-Ou5DoBA
Audio: https://www.youtube.com/watch?v=bv-h64tXvYI
கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து கழுத்திலோர் தனிவடங் கட்டி முக்கண்நா யகராய்ப் பவனிபோந்(து) இங்ஙன் முரிவதோர் முரிவுமை அளவும் தக்கசீர்க் கங்கை அளவுமன்(று) என்னோ தம்மொருப் பாடுல கதன்மேல் மிக்கசீர் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம்குலா வினரே. | [1] |
பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப் பருகுதோ(று)ம் அமுதம்ஒத் தவர்க்கே தித்தியா இருக்கும் தேவர்காள் ! இவர்தம் திருவுரு இருந்தவா பாரீர் சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனிமுழு முதலுமாய் அதற்கோர் வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம்குலா வினரே. | [2] |
Back to Top
பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா
9.019  
பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில்
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=d7X8BJiaumM
Audio: https://www.youtube.com/watch?v=nSZv0w2kJfs
Audio: https://www.youtube.com/watch?v=ppwZEq2_5Ko
முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேல் தொத்து மிளிர்வனபோல் தூண்டு விளக்கேய்ப்ப எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லை அத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே. | [1] |
கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன் அடியார் அமருலகம் ஆளநீ ஆளாதே முடியாமுத் தீவேள்வி மூவாயி ரவரொடும் குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக் கூத் தாடினையே. | [2] |
அல்லியம் பூம்பழனத்(து) ஆமூர்நா வுக்கரசைச் செல்ல நெறிவகுத்த சேவகனே ! தென்தில்லைக் கொல்லை விடையேறி கூத்தா(டு) அரங்காகச் செல்வம் நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே. | [3] |
எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்(டு) எமையாளும் சம்பந்தன் காழியர்கோன் தன்னையும் ஆட் கொண்டருளி அம்புந்து கண்ணாளும் தானும் அணிதில்லைச் செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை ஆயிற்றே. | [4] |
களையா உடலோடு சேரமான் ஆருரன் விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ள முளையா மதிசூடி மூவா யிரவரொடும் அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே. | [5] |
அகலோக மெல்லாம் அடியவர்கள் தற்சூழப் புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ தேடாதே புவலோக நெறிபடைத்த புண்ணியங்கள் நண்ணியசீர்ச் சிவலோகம் ஆவதுவும் தில்லைச் சிற் றம்பலமே. | [6] |
களகமணி மாடம் சூளிகைசூழ் மாளிகைமேல் அளகமதி நுதலார் ஆயிழையார் போற்றிசைப்ப ஒளிகொண்ட மாமணிகள் ஓங்கிருளை ஆங்ககற்றும் தெளிகொண்ட தில்லைச் சிற் றம்பலமே சேர்ந்தனையே. | [7] |
பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும் பேர்ந்தொலிப்பச் சூடகக்கை நல்லார் தொழுதேத்தத் தொல்லுலகில் நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர் நாடோறும் ஆடகத்தால் மேய்ந்தமைந்த அம்பலம்நின் ஆடரங்கே. | [8] |
உருவத்(து) எரியுருவாய் ஊழிதோ றெத்தனையும் பரவிக் கிடந்தயனும் மாலும் பணிந்தேத்த இரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு மாளிகைசூழ்ந்(து) அரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே. | [9] |
சேடர் உறைதில்லைச் சிற்றம் பலத்தான்தன் ஆடல் அதிசயத்தை ஆங்கறித்து பூந்துருத்திக் காடன் தமிழ் மாலை பத்தும் கருத்தறிந்து பாடும் இவைவல்லார் பற்றுநிலை பற்றுவரே. | [10] |