சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
திருவிசைப்பா

Back to Top
பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா  
9.018   பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்  
பண் -   (திருத்தலம் திருவாரூர் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=716nJZHF7-4
Audio: https://www.youtube.com/watch?v=L69-Ou5DoBA
Audio: https://www.youtube.com/watch?v=bv-h64tXvYI

9.018 பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்   (திருவாரூர் )
கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து
   கழுத்திலோர் தனிவடங் கட்டி
முக்கண்நா யகராய்ப் பவனிபோந்(து) இங்ஙன்
   முரிவதோர் முரிவுமை அளவும்
தக்கசீர்க் கங்கை அளவுமன்(று) என்னோ
   தம்மொருப் பாடுல கதன்மேல்
மிக்கசீர் ஆரூர் ஆதியாய் வீதி
   விடங்கராய் நடம்குலா வினரே.
[1]
பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
   பருகுதோ(று)ம் அமுதம்ஒத் தவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள் ! இவர்தம்
   திருவுரு இருந்தவா பாரீர்
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
   தனிமுழு முதலுமாய் அதற்கோர்
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி
   விடங்கராய் நடம்குலா வினரே.
   
[2]

Back to Top
பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா  
9.019   பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=d7X8BJiaumM
Audio: https://www.youtube.com/watch?v=nSZv0w2kJfs
Audio: https://www.youtube.com/watch?v=ppwZEq2_5Ko
முத்து வயிரமணி
   மாணிக்க மாலைகண்மேல்
தொத்து மிளிர்வனபோல்
   தூண்டு விளக்கேய்ப்ப
எத்திசையும் வானவர்கள்
   ஏத்தும் எழில்தில்லை
அத்தனுக்கும் அம்பலமே
   ஆடரங்கம் ஆயிற்றே.
[1]
கடியார் கணம்புல்லர்
   கண்ணப்பர் என்றுன்
அடியார் அமருலகம்
   ஆளநீ ஆளாதே
முடியாமுத் தீவேள்வி
   மூவாயி ரவரொடும்
குடிவாழ்க்கை கொண்டுநீ
   குலாவிக் கூத் தாடினையே.
[2]
அல்லியம் பூம்பழனத்(து)
   ஆமூர்நா வுக்கரசைச்
செல்ல நெறிவகுத்த
   சேவகனே ! தென்தில்லைக்
கொல்லை விடையேறி
   கூத்தா(டு) அரங்காகச்
செல்வம் நிறைந்தசிற்
   றம்பலமே சேர்ந்தனையே.
[3]
எம்பந்த வல்வினை நோய்
   தீர்த்திட்(டு) எமையாளும்
சம்பந்தன் காழியர்கோன்
   தன்னையும் ஆட் கொண்டருளி
அம்புந்து கண்ணாளும்
   தானும் அணிதில்லைச்
செம்பொன்செய் அம்பலமே
   சேர்ந்திருக்கை ஆயிற்றே.
[4]
களையா உடலோடு
   சேரமான் ஆருரன்
விளையா மதமாறா
   வெள்ளானை மேல்கொள்ள
முளையா மதிசூடி
   மூவா யிரவரொடும்
அளையா விளையாடும்
   அம்பலம்நின் ஆடரங்கே.
[5]
அகலோக மெல்லாம்
   அடியவர்கள் தற்சூழப்
புகலோகம் உண்டென்று
   புகுமிடம்நீ தேடாதே
புவலோக நெறிபடைத்த
   புண்ணியங்கள் நண்ணியசீர்ச்
சிவலோகம் ஆவதுவும்
   தில்லைச் சிற் றம்பலமே.
[6]
களகமணி மாடம்
   சூளிகைசூழ் மாளிகைமேல்
அளகமதி நுதலார்
   ஆயிழையார் போற்றிசைப்ப
ஒளிகொண்ட மாமணிகள்
   ஓங்கிருளை ஆங்ககற்றும்
தெளிகொண்ட தில்லைச்
   சிற் றம்பலமே சேர்ந்தனையே.
[7]
பாடகமும் நூபுரமும்
   பல்சிலம்பும் பேர்ந்தொலிப்பச்
சூடகக்கை நல்லார்
   தொழுதேத்தத் தொல்லுலகில்
நாடகத்தின் கூத்தை
   நவிற்றுமவர் நாடோறும்
ஆடகத்தால் மேய்ந்தமைந்த
   அம்பலம்நின் ஆடரங்கே.
[8]
உருவத்(து) எரியுருவாய்
   ஊழிதோ றெத்தனையும்
பரவிக் கிடந்தயனும்
   மாலும் பணிந்தேத்த
இரவிக்கு நேராகி
   ஏய்ந்திலங்கு மாளிகைசூழ்ந்(து)
அரவிக்கும் அம்பலமே
   ஆடரங்கம் ஆயிற்றே.
[9]
சேடர் உறைதில்லைச்
   சிற்றம் பலத்தான்தன்
ஆடல் அதிசயத்தை
   ஆங்கறித்து பூந்துருத்திக்
காடன் தமிழ் மாலை
   பத்தும் கருத்தறிந்து
பாடும் இவைவல்லார்
   பற்றுநிலை பற்றுவரே.
   
[10]

This page was last modified on Sun, 09 Mar 2025 21:44:56 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool author %E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF book name %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE+ lang tamil