![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=vU7izHQuO6s Add audio link
7.026
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
திருக்காளத்தி - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் ராகத்தில் திருமுறை அருள்தரு ஞானப்பூங்கோதையம்மை உடனுறை அருள்மிகு காளத்திநாதர் திருவடிகள் போற்றி
செண்டு ஆடும் விடையாய்! சிவனே! என் செழுஞ்சுடரே!
வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே!
கண்டார் காதலிக்கும் கணநாதன்! எம் காளத்தியாய்!
அண்டா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .
1
இமையோர் நாயகனே! இறைவா! என் இடர்த்துணையே!
கமை ஆர் கருணையினாய்! கரு மா முகில் போல் மிடற்றாய்!
உமை ஓர் கூறு உடையாய்! உருவே! திருக்காளத்தியுள்
அமைவே! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே.
2
படை ஆர் வெண் மழுவா! பகலோன் பல் உகுத்தவனே!
விடை ஆர் வேதியனே! விளங்கும் குழைக் காது உடையாய்!
கடை ஆர் மாளிகை சூழ் கணநாதன்! எம் காளத்தியாய்!
உடையாய்! உன்னை அல்லால் உகந்து ஏத்த மாட்டேனே.
3
மறி சேர் கையினனே! மதமா உரி போர்த்தவனே!
குறியே! என்னுடைய குருவே! உன் குற்றேவல் செய்வேன்;
நெறியே நின்று அடியார் நினைக்கும் திருக்காளத்தியுள்
அறிவே! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .
4
செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்தே கிடந்து உற்று அலறி,
நஞ்சேன், நான் அடியேன், நலம் ஒன்று அறியாமையினால்,
துஞ்சேன்; நான் ஒரு கால்-தொழுதேன்; திருக்காளத்தியாய்!
அஞ்சாது உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே.
5
Go to top
பொய்யவன் நாய் அடியேன் புகவே நெறி ஒன்று அறியேன்;
செய்யவன் ஆகி வந்து இங்கு இடர் ஆனவை தீர்த்தவனே!
மெய்யவனே! திருவே! விளங்கும் திருக்காளத்தி என்
ஐய! நுன் தன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .
6
கடியேன், காதன்மையால் கழல் போது அறியாத என் உள்
குடியாக் கோயில் கொண்ட குளிர் வார் சடை எம் குழகா!
முடியால் வானவர்கள் முயங்கும் திருக்காளத்தியாய்!
அடியேன் உன்னை அல்லால் அறியேன், மற்று ஒருவரையே .
7
நீறு ஆர் மேனியனே! நிமலா! நினை அன்றி மற்றுக்
கூறேன், நா அதனால்; கொழுந்தே! என் குணக்கடலே!
பாறு ஆர் வெண் தலையில் பலி கொண்டு உழல் காளத்தியாய்!
ஏறே! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே! .
8
தளிர் போல் மெல் அடியாள் தனை ஆகத்து அமர்ந்து அருளி,
எளிவாய் வந்து என் உள்ளம் புகுத வல்ல எம்பெருமான்!
களி ஆர் வண்டு அறையும் திருக்காளத்தியுள் இருந்த
ஒளியே! உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே .
9
கார் ஊரும் பொழில் சூழ் கணநாதன் எம் காளத்தியுள்
ஆரா இன்னமுதை, அணி நாவல் ஆரூரன் சொன்ன
சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார், வினை ஆயின போய்ப்
பேரா விண்ணுலகம் பெறுவார்; பிழைப்பு ஒன்று இலரே .
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருக்காளத்தி
3.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம், ஆர், அகிலொடு, சாதி,
Tune - கொல்லி
(திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
3.069
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது
Tune - சாதாரி
(திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
6.008
திருநாவுக்கரசர்
தேவாரம்
விற்று ஊண் ஒன்று இல்லாத
Tune - திருத்தாண்டகம்
(திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
7.026
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
செண்டு ஆடும் விடையாய்! சிவனே!
Tune - நட்டராகம்
(திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையம்மை)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000