சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.068   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கயிலாயம் - சாதாரி பவப்ரியா பந்துவராளி காஞ்சனாவதி ராகத்தில் திருமுறை அருள்தரு பார்வதியம்மை உடனுறை அருள்மிகு கயிலாயநாதர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=c27cbwflKjI   Add audio link Add Audio
வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர்
ஆளுமவர் வேள் அநகர், போள் அயில கோள களிறு ஆளி, வர இல்
தோள் அமரர் தாளம், மதர் கூளி, எழ மீளி, மிளிர் தூளி, வளர் பொன்
காளமுகில் மூளும் இருள் கீள, விரி தாள கயிலாயமலையே.


1


புற்று அரவு பற்றிய கை, நெற்றியது மற்று ஒரு கண், ஒற்றை விடையன்,
செற்றது எயில், உற்றது உமை, அற்றவர்கள் நல்-துணைவன், உற்ற நகர்தான்-
சுற்றும் மணி பெற்றது ஒளி; செற்றமொடு குற்றம் இலது; எற்று? என வினாய்,
கற்றவர்கள் சொல்-தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாயமலையே.


2


சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை கொங்குமலர் தூய்,
எங்கள் வினை, சங்கை அவை, இங்கு அகல! அங்கம் மொழி எங்கும் உள ஆய்,
திங்கள் இருள் நொங்க, ஒளி விங்கி, மிளிர் தொங்கலொடு தங்க, அயலே
கங்கையொடு பொங்கு சடை எங்கள் இறை தங்கு கயிலாயமலையே.


3


முடிய சடை, பிடியது ஒரு வடிய மழு உடையர், செடி உடைய தலையில்
வெடிய வினை கொடியர் கெட, இடு சில்பலி நொடிய மகிழ் அடிகள் இடம் ஆம்
கொடிய குரல் உடைய விடை கடிய துடியடியினொடும் இடியின் அதிர,
கடிய குரல் நெடிய முகில் மடிய, அதர் அடி கொள் கயிலாயமலையே.


4


குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ, விடம் கிளர் படம் கொள் அரவம்
மடங்கு ஒளி படர்ந்திட, நடம் தரு விடங்கனது இடம் தண்முகில் போய்த்
தடங்கடல் தொடர்ந்து, உடன் நுடங்குவ இடம் கொள மிடைந்த குரலால்,
கடுங் கலின் முடங்கு அளை நுடங்கு அரவு ஒடுங்கு கயிலாயமலையே.


5


Go to top
ஏதம் இல பூதமொடு, கோதை துணை ஆதி முதல், வேத விகிர்தன்,
கீதமொடு நீதிபல ஓதி மறவாது பயில் நாதன், நகர்தான்-
தாது பொதி போது விட, ஊது சிறை மீது துளி கூதல் நலிய,
காதல் மிகு சோதி கிளர் மாது மயில் கோது கயிலாயமலையே.


6


சென்று பல வென்று உலவு புன்தலையர் துன்றலொடும் ஒன்றி, உடனே-
நின்று, அமரர் என்றும் இறைவன் தன் அடி சென்று பணிகின்ற நகர்தான்-
துன்று மலர் பொன்திகழ் செய் கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ,
கன்று, பிடி, துன்று களிறு, என்று இவை முன் நின்ற கயிலாயமலையே.


7


மருப்பு இடை நெருப்பு எழு தருக்கொடு செருச் செய்த பருத்த களிறின்
பொருப்பு இடை விருப்பு உற இருக்கையை ஒருக்கு உடன் அரக்கன் உணராது,
ஒருத்தியை வெருக்கு உற வெருட்டலும், நெருக்கு என நிருத்த விரலால்,
கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே.


8


பரிய திரை பெரிய புனல், வரிய புலி உரி அது உடை, பரிசை உடையன்,
வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர், பிரிவு இல் நகர்தான்-
பெரிய எரி உருவம் அது தெரிய, உரு பரிவு தரும் அருமை அதனால்,
கரியவனும், அரிய மறை புரியவனும், மருவு கயிலாயமலையே.


9


அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை, துண்ட மதியோடு
இண்டை புனைவுண்ட சடை முண்டதர சண்ட இருள்கண்டர் இடம் ஆம்
குண்டு அமண வண்டர் அவர், மண்டை கையில் உண்டு உளறி மிண்டு சமயம்
கண்டவர்கள் கொண்டவர்கள், பண்டும் அறியாத கயிலாயமலையே.


10


Go to top
அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி, அகிலும்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல சிந்து கயிலாயமலைமேல்,
எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலிப்
பந்தன் உரை சிந்தை செய, வந்த வினை நைந்து, பரலோகம் எளிதே.


11



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கயிலாயம்
1.068   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொடி கொள் உருவர், புலியின்
Tune - தக்கேசி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
3.068   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாள வரி கோள புலி
Tune - சாதாரி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
4.047   திருநாவுக்கரசர்   தேவாரம்   கனகம் மா வயிரம் உந்தும்
Tune - திருநேரிசை   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.055   திருநாவுக்கரசர்   தேவாரம்   வே(ற்)ற்று ஆகி விண் ஆகி
Tune - குறிஞ்சி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.056   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொறை உடைய பூமி, நீர்,
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.057   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாட்டு ஆன நல்ல தொடையாய்,
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
7.100   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தான் எனை முன் படைத்தான்;
Tune - பஞ்சமம்   (திருக்கயிலாயம் )
11.008   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா   திருக்கயிலாய ஞான உலா
Tune -   (திருக்கயிலாயம் )
11.009   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
Tune -   (திருக்கயிலாயம் )

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song author %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D paadal name %E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF pathigam no 3.068