சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.068
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி கொள் உருவர், புலியின் பண் - தக்கேசி (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=u7V2wxVfQPI |
3.068
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாள வரி கோள புலி பண் - சாதாரி (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=c27cbwflKjI |
4.047
திருநாவுக்கரசர்
தேவாரம்
கனகம் மா வயிரம் உந்தும் பண் - திருநேரிசை (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=s9ODsmIO0K0 |
6.055
திருநாவுக்கரசர்
தேவாரம்
வே(ற்)ற்று ஆகி விண் ஆகி பண் - குறிஞ்சி (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=7qLrT5FepJ0 |
6.056
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொறை உடைய பூமி, நீர், பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=pKyyHEruu5Y |
6.057
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாட்டு ஆன நல்ல தொடையாய், பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=KrQ2A0SoGVc |
7.100
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தான் எனை முன் படைத்தான்; பண் - பஞ்சமம் (திருக்கயிலாயம் ) Audio: https://www.youtube.com/watch?v=qhtteaiYfA4 Audio: https://sivaya.org/audio/7.100 Thaan Enai Padaiththaan.mp3 |
11.008
சேரமான் பெருமாள் நாயனார்
திருக்கயிலாய ஞான உலா
திருக்கயிலாய ஞான உலா பண் - (திருக்கயிலாயம் ) |
11.009
நக்கீரதேவ நாயனார்
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி பண் - (திருக்கயிலாயம் ) |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.068  
பொடி கொள் உருவர், புலியின்
பண் - தக்கேசி (திருத்தலம் திருக்கயிலாயம் ; (திருத்தலம் அருள்தரு பார்வதியம்மை உடனுறை அருள்மிகு கயிலாயநாதர் திருவடிகள் போற்றி )
பொடி கொள் உருவர், புலியின் அதளர், புரிநூல் திகழ் மார்பில் கடி கொள் கொன்றை கலந்த நீற்றர், கறை சேர் கண்டத்தர், இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனைச்சாரல் கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் கயிலை மலையாரே. | [1] |
புரி கொள் சடையார்; அடியர்க்கு எளியார்; கிளி சேர் மொழி மங்கை தெரிய உருவில் வைத்து உகந்த தேவர் பெருமானார்; பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க, இருள் கூர்ந்த கரிய மிடற்றர், செய்யமேனி; கயிலைமலையாரே. | [2] |
மாவின் உரிவை மங்கை வெருவ மூடி, முடிதன் மேல் மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர்; கழல் உன்னும் தேவர் தேவர்; திரிசூலத்தர் திரங்கல் முகவன் சேர் காவும் பொழிலும் கடுங்கல் சுனை சூழ் கயிலைமலையாரே. | [3] |
முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட முதல்வர், மதனன் தன் தென் நீர் உருவம் அழியத் திருக்கண் சிவந்த நுதலினார் மன் நீர் மடுவும், படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு கல்-நீர் வரைமேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே. | [4] |
ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர், கழல் சேர்வார், நன்று நினைந்து நாடற்கு உரியார் கூடித் திரண்டு எங்கும் தென்றி இருளில் திகைத்த கரி தண்சாரல் நெறி ஓடி, கன்றும் பிடியும் அடிவாரம் சேர் கயிலை மலையாரே. | [5] |
தாது ஆர் கொன்றை தயங்கும் முடியர், முயங்கு மடவாளைப் போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர், பனி மல்கும் மூதார் உலகில் முனிவர் உடன் ஆய் அறம் நான்கு அருள் செய்த காது ஆர் குழையர், வேதத் திரளர் கயிலை மலையாரே. | [6] |
தொடுத்தார், புரம் மூன்று எரியச் சிலைமேல் அரி ஒண் பகழியால்; எடுத்தான் திரள் தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார்; கொடுத்தார், படைகள்; கொண்டார், ஆளா; குறுகி வரும் கூற்றைக் கடுத்து, ஆங்கு அவனைக் கழலால் உதைத்தார் கயிலை மலையாரே. | [7] |
ஊணாப் பலி கொண்டு உலகில் ஏற்றார்; இலகு மணி நாகம் ண், நாண், ஆரம், ஆகப் பூண்டார்; புகழும் இருவர்தாம் பேணா ஓடி நேட, எங்கும் பிறங்கும் எரி ஆகி, காணா வண்ணம் உயர்ந்தார் போலும் கயிலை மலையாரே. | [8] |
விருது பகரும் வெஞ்சொல் சமணர், வஞ்சச் சாக்கியர், பொருது பகரும் மொழியைக் கொள்ளார் புகழ்வார்க்கு அணியராய், எருது ஒன்று உகைத்து, இங்கு இடுவார் தம்பால் இரந்து உண்டு, இகழ்வார்கள் கருதும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே. | [9] |
போர் ஆர் கடலில் புனல் சூழ் காழிப் புகழ் ஆர் சம்பந்தன், கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார் மேல், தேரா உரைத்த செஞ்சொல் மாலை செப்பும் அடியார் மேல் வாரா, பிணிகள்; வானோர் உலகில் மருவும் மனத்தாரே. | [10] |
Back to Top
சேரமான் பெருமாள் நாயனார் திருக்கயிலாய ஞான உலா
11.008  
திருக்கயிலாய ஞான உலா
பண் - (திருத்தலம் திருக்கயிலாயம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராதங்கண் அருமால் உற அழலாய் நின்ற பெருமான் | [1] |
பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான் துறவாதே யாக்கை துறந்தான் முறைமையால் | [2] |
ஆழாதே ஆழ்ந்தான் அகலா தகலியான் ஊழால் உயராதே ஓங்கினான் சூழொளிநூல் | [3] |
ஓதா துணர்ந்தான் நுணுகாது நுண்ணியான் யாதும் அணுகாது அணுகியான் ஆதி | [4] |
அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான் அரனாய் அழிப்பவனுந் தானே பரனாய | [5] |
தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான் மேவிய வாறே விதித்தமைத்தான் ஓவாதே | [6] |
எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் எவ்வுருவும் | [7] |
தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம் ஏனோர்க்குக் காண்பரிய எம்பெருமான் ஆனாத | [8] |
சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில் ஏரார் திருக்கோயி லுள்ளிருப்ப ஆராய்ந்து | [9] |
செங்கண் அமரர் புறங்கடைக்கண் சென்றீண்டி எங்கட்குக் காட்சிஅருள் என்றிரப்ப அங்கொருநாள் | [10] |
பூமங்கை, பொய்தீர் தரணி புகழ்மங்கை, நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த சேமங்கொள் | [11] |
ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை தேன்மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப ஊனமில்சீர் | [12] |
நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர் செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் நொந்தா | [13] |
வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் பயன்கொள் | [14] |
குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு தலமலிய ஆகந் தழீஇக் கலைமலிந்த | [15] |
கற்பகம் ஈன்ற கமழ்பட் டினையுடுத்துப் பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து விற்பகரும் | [16] |
சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர் வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் தோளா | [17] |
மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங் கணிவயிரக் கண்டிகை பொன்னாண் பணிபெரிய | [18] |
ஆரம் அவைபூண் டணிதிக ழும்சன்ன வீரந் திருமார்பில் வில்இலக ஏருடைய | [19] |
எண்தோட்கும் கேயூரம் பெய்துஉதர பந்தனமும் கண்டோர் மனம்மகிழக் கட்டுறீஇக் கொண்டு | [20] |
கடிசூத் திரம்புனைந்து கங்கணம்கைப் பெய்து வடிவுடைய கோலம் புனைந்தாங்கு அடிநிலைமேல் | [21] |
நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து வந்து வசுக்கள் இருக்குரைப்ப அந்தமில்சீர் | [22] |
எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும் அண்ணல்மேல் ஆசிகள் தாம் உணர்த்த ஒண்ணிறத்த | [23] |
பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப மன்னும் மகதியன்யாழ் வாசிப்பப் பொன்னியலும் | [24] |
அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் செங்கண் | [25] |
நிருதி முதலோர் நிகழ்கலன்கள் ஏந்த வருணன் மணிக்கலசந் தாங்கத் தெருவெலாம் | [26] |
வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத் தூயசீர்ச் சோமன் குடையேடுப்ப மேவியசீர் | [27] |
ஈசானன் வந்தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள் வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் தூய | [28] |
உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன் திருத்தகு மாநிதியஞ் சிந்தக் கருத்தமைந்த | [29] |
கங்கா நதியமுனை உள்ளுறுத்த தீர்த்தங்கள் பொங்கு கவரி புடைஇரட்டத் தங்கிய | [30] |
பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண் கைந்நாகம் எட்டும் கழல்வணங்க மெய்ந்நாக | [31] |
மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய் மோகத் துருமு முரசறையப் போகம்சேர் | [32] |
தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும் கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட எம்பெருமான் | [33] |
விண்ணார் பணிய உயர்ந்த விளங்கொளிசேர் வெண்ணார் மழவிடையை மேல்கொண்டாங்கு எண்ணார் | [34] |
கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத் திருக்கடைகள் ஏழ்கடந்த போதில் செருக்குடைய | [35] |
சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல் ஆனாப்போர் இந்திரன் பின்படர ஆனாத | [36] |
அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக் கன்னவிலும் திண்டோள் கருடன்மேல் மன்னிய | [37] |
மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து மேல்இடப்பால் மென்கருப்பு வில்இடப்பால் ஏல்வுடைய | [38] |
சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல்எய்வான் கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த ஐங்கணையான் | [39] |
காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி வாமன் புரவிமேல் வந்தணைய நாமஞ்சேர் | [40] |
வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச் சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டையொண்கண் தாழ்கூந்தல் | [41] |
மங்கை எழுவருஞ் சூழ மடநீலி சிங்க அடலேற்றின் மேற்செல்லத் தங்கிய | [42] |
விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர் அச்சா ரணர்அரக்க ரோடுஅசுரர் எச்சார்வும் | [43] |
சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம் கல்லலகு கல்ல வடமொந்தை நல்லிலயத் | [44] |
தட்டழி சங்கம் சலஞ்சலந் தண்ணுமை கட்டழியாப் பேரி கரதாளம் கொட்டும் | [45] |
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ் இடமாம் தடாரி படகம் இடவிய | [46] |
மத்தளம் துந்துபி வாய்ந்த முரு டிவற்றால் எத்திசை தோறும் எழுந்தியம்ப ஒத்துடனே | [47] |
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும் கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் தங்கிய | [48] |
ஆறாம் இருதுவும் யோகும் அருந்தவமும் மாறாத முத்திரையும் மந்திரமும் ஈறார்ந்த | [49] |
காலங்கள் மூன்றும் கணமும் குணங்களும் வால கிலியரும் வந்தீண்டி மேலை | [50] |
இமையோர் பெருமானே போற்றி எழில்சேர் உமையாள் மணவாளா போற்றி எமைஆளும் | [51] |
தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி ஈசனே எந்தாய் இறைபோற்றி தூயசீர்ச் | [52] |
சங்கரனே போற்றி சடாமகுடத் தாய்போற்றி பொங்கரவா பொன்னங் கழல்போற்றி அங்கொருநாள் | [53] |
ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப் பாசுபதம் ஈந்த பதம்போற்றி தூய | [54] |
மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர் தலைமேலாய் போற்றிதாள் போற்றி நிலைபோற்றி | [55] |
போற்றிஎனப் பூமாரி பெய்து புலன்கலங்க நாற்றிசையும் எங்கும் நலம்பெருக ஏற்றுக் | [56] |
கொடியும் பதாகையும் கொற்றக் குடையும் வடிவுடைய தொங்கலுஞ் சூழக் கடிகமழும் | [57] |
பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான் வாமான ஈசன் வரும்போழ்திற் சேமேலே | [58] |
வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம் கோமான் படைமுழக்கம் கேட்டலுமே தூமாண்பில் | [59] |
வானநீர் தாங்கி மறைஓம்பி வான்பிறையோ டூனமில் சூலம் உடையவாய் ஈனமிலா | [60] |
வெள்ளை யணிதலால் வேழத் துரிபோர்த்த வள்ளலே போலும் வடிவுடைய ஒள்ளிய | [61] |
மாட நடுவில் மலர்ஆர் அமளியே கூடிய போர்க்கள மாக்குறித்துக் கேடில் | [62] |
சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா விலங்கு கொடும்புருவம் வில்லா நலந்திகழும் | [63] |
கூழைபின் தாழ வளைஆர்ப்பக் கைபோந்து கேழ்கிளரும் அல்குலாம் தேர்உந்திச் சூழொளிய | [64] |
கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனம்கவர அங்கம் பொருதசைந்த ஆயிழையார் செங்கேழ்நற் | [65] |
பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகம்சேர்த்தி நற்பெருங் கோலம் மிகப்புனைந்து பொற்புடைய | [66] |
பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக மாதரவர் சொல்லார் மகிழ்ந்தீண்டிச் சோதிசேர் | [67] |
சூளிகையும் சூட்டும் சுளிகையும் கட்டிகையும் வாளிகையும் பொற்றோடும் மின்விலக மாளிகையின் | [68] |
மேல்ஏறி நின்று தொழுவார் துயர்கொண்டு மால்ஏறி நின்று மயங்குவார் நூலேறு | [69] |
தாமமே தந்து சடாதாரி நல்கானேல் யாமமேல் எம்மை அடும்என்பார் காமவேள் | [70] |
ஆம்என்பார் அன்றென்பார் ஐயுறுவார் கையெறிவார் தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார் பூமன்னும் | [71] |
பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு துன்னரி மாலையாச் சூடுவார் முன்னம் | [72] |
ஒருகண் எழுதிவிட் டொன்றெழுதா தோடித் தெருவம் புகுவார் திகைப்பார் அருகிருந்த | [73] |
கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளியென்று பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார் அண்ணல்மேற் | [74] |
கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார் திண்ணம் நிறைந்தார் திறந்திட்டார் ஒண்ணிறத்த | [75] |
பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால் தூதைச் சிறுசோ றடுதொழிலாள் தீதில் | [76] |
இடையாலும் ஏக்கழுத்தம் மாட்டாள் நலஞ்சேர் உடையாலும் உள்உருக்க கில்லாள் நடையாலும் | [77] |
கௌவைநோய் காளையரைச் செய்யாள் கதிர்முலைகள் வெவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள் செவ்வன்நேர் | [78] |
நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள் தன் செவ்வாயின் வாக்கிற் பிறர்மனத்தும் வஞ்சியாள் பூக்குழலும் | [79] |
பாடவம் தோன்ற முடியாள் இளவேய்த்தோள் ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள் நாடோறும் | [80] |
ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண் சென்ற மனத்தினாளாஞ் சேயிழையாள் நன்றாகத் | [81] |
தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி நீல அறுவை விரித்துடுத்துக் கோலஞ்சேர் | [82] |
பந்தரில் பாவைகொண் டாடுமிப் பாவைக்குத் தந்தையார் என்றொருத்தி தான்வினவ அந்தமில்சீர் | [83] |
ஈசன் எரியாடி என்ன அவனைஓர் காய்சின மால்விடைமேல் கண்ணுற்றுத் தாய்சொன்ன | [84] |
இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமநூல் நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள் பொற்புடைய | [85] |
பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள் காரொளிசேர் மஞ்ஞைக் கவினியலாள் சீரொளிய | [86] |
தாமரை ஒன்றின் இரண்டு குழைஇரண்டு காமருவு கெண்டைஓர் செந்தொண்டை தூமருவு | [87] |
முத்தம் முரிவெஞ் சிலைசுட்டி செம்பவளம் வைத்தது போலும் மதிமுகத்தாள் ஒத்தமைந்த | [88] |
கங்கணம் சேர்ந்திலங்கு கையாள் கதிர்மணியின் கிங்கிணி சேர்ந்த திருந்தடியாள் ஒண்கேழ்நல் | [89] |
அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள் ஆய்பொதியில் சந்தனம் தோய்ந்த தடந்தோளாள் வந்து | [90] |
திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள் கடல்பட்ட இன்னமுதம் அன்னாள் மடல்பட்ட | [91] |
மாலை வளாய குழலாள் மணம்நாறு சோலை இளங்கிளிபோல் தூமொழியாள் சாலவும் | [92] |
வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக் கஞ்சனத்தை யிட்டங் கழகாக்கி எஞ்சா | [93] |
மணிஆரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி அணிஆர் வளைதோள்மேல் மின்ன மணியார்ந்த | [94] |
தூவெண் மணற்கொண்டு தோழியரும் தானுமாய்க் காமன் உருவம் வரவெழுதிக் காமன் | [95] |
கருப்புச் சிலையும் மலர் அம்பும் தேரும் ஒருப்பட்டு உடன்எழுதும் போழ்தில் விருப்பூரும் | [96] |
தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன் வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் தானமர | [97] |
நன்றறிவார் சொன்ன நலந்தோற்றும் நாண்தோற்றும் நின்றறிவு தோற்றும் நிறைதோற்றும் நன்றாகக் | [98] |
கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் மொய்கொண்ட | [99] |
மங்கை இடம்கடவா மாண்பினாள் வானிழிந்த கங்கைச் சுழியனைய உந்தியாள் தங்கிய | [100] |
அங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கி கொங்கை கமலம் முகம்கமலம் பொங்கெழிலார் | [101] |
இட்டிடையும் வஞ்சி இரும்பணைத்தோள் வேய்எழிலார் பட்டுடைய அல்குலும் தேர்த்தட்டு மட்டுவிரி | [102] |
கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில் ஏய்ந்த மணிமுறுவல் இன்முத்தம் வாய்ந்தசீர் | [103] |
வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக் கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக் குண்டலங்கள் | [104] |
காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித் தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து மாதராள் | [105] |
பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும் சொற்கோட்டி கொண்டிருந்த ஏல்வைக்கண் நற்கோட்டு | [106] |
வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல் ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு தெள்ளியநீர் | [107] |
தாழுஞ் சடையான் சடாமகுடம் தோன்றுதலும் வாழுமே மம்மர் மனத்தளாய்ச் சூழொளியான் | [108] |
தார்நோக்கும் தன்தாரும் நோக்கும் அவனுடைய ஏர்நோக்கும் தன்ன தெழில்நோக்கும் பேரருளான் | [109] |
தோள்நோக்கும் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின் நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து நாண்நோக்காது | [110] |
உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம் வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் ஒள்ளிய | [111] |
தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர் வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் ஏய்ந்தசீர் | [112] |
ஈசன் சிலையும் எழில்வான் பவளமும் சேய்வலங்கை வேலும் திரள்முத்தும் பாசிலைய | [113] |
வஞ்சியும் வேயும் வளர்தா மரைமொட்டும் மஞ்சில்வரும் மாமதிபோல் மண்டலமும் எஞ்சாப் | [114] |
புருவமும் செவ்வாயும் கண்ணும் எயிறும் உருவ நுசுப்பும்மென் தோளும் மருவினிய | [115] |
கொங்கையும் வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர் பங்கயப் போதனைய சேவடியாள் ஒண்கேழல் | [116] |
வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர் ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள் ஊழித் | [117] |
திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தை உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல் பெருகொளிய | [118] |
முத்தாரம் கண்டத் தணிந்தாள் அணிகலங்கள் மொய்த்தார வாரம் மிகப்பெருகி வித்தகத்தால் | [119] |
கள்ளும் கடாமுங் கலவையுங் கைபோந்திட்டு உள்ளும் புறமுஞ் செறிவமைத்துத் தெள்ளொளிய | [120] |
காளிங்கம் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த தாளின்பத் தாமம் நுதல்சேர்த்தித் தோளெங்கும் | [121] |
தண்ணறுஞ் சந்தனம்கொண் டப்பிச் சதிர்சாந்தை வண்ணம் பெறமிசையே மட்டித்தாங் கொண்ணுதலாள் | [122] |
தன்அமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப் பின்னும்ஓர் காமரம் யாழமைத்து மன்னும் | [123] |
விடவண்ணக் கண்டத்து வேதியன்மேல் இட்ட மடல்வண்ணம் பாடும் பொழுதுஈண்டு அடல்வல்ல | [124] |
வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க் கெஞ்ஞான்றும் மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் கோல | [125] |
மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால அணிஏறு தோளானைக் கண்டாங் கணியார்ந்த | [126] |
கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக் காட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி நாட்டார்கள் | [127] |
எல்லாரும் கண்டார் எனக்கடவுள் இக்காயம் நல்லாய் படுமேற் படுமென்று மெல்லவே | [128] |
செல்ல லுறும்சரணம் கம்பிக்கும் தன்னுறுநோய் சொல்லலுறும் சொல்லி உடைசெறிக்கும் நல்லாகம் | [129] |
காண லுறும்கண்கள் நீர்மல்கும் காண்பார்முன் நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது பூணாகம் | [130] |
புல்லலுறும் அண்ணல்கை வாரான் என் றிவ்வகையே அல்ல லுறும்அழுந்தும் ஆழ்துயரால் மெல்லியலாள் | [131] |
தன்உருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப் பொன்உருவங் கொண்டு புலம்புற்றாள் பின்னொருத்தி | [132] |
செங்கேழ்நல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா அங்கேழ் அரிவைப் பிராயத்தாள் ஒண்கேழ்நல் | [133] |
திங்களும் தாரகையும் வில்லும் செழும்புயலும் தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையால் பொங்கொளிசேர் | [134] |
மின்ஆர்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே தன்ஆவார் இல்லாத் தகைமையாள் எந்நாளும் | [135] |
இல்லாரை எல்லாரும் எள்குவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பென்னும் சொல்லாலே | [136] |
அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல் மல்கிய சாந்தொடு பூண்புனைந்து நல்கூர் | [137] |
இடைஇடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார் நடைபெடை அன்னத்தை வென்றாள் அடியிணைமேல் | [138] |
பாடகம் கொண்டு பரிசமைத்தாள் பன்மணிசேர் சூடகம் முன்கை தொடர்வித்தாள் கேடில்சீர்ப் | [139] |
பொன்அரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டு மன்னும் கழுத்தை மகிழ்வித்தாள் பொன்னனாள் | [140] |
இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம் அண்ணல்மேல் தான்இட்ட ஆசையால் முன்னமே | [141] |
பாடல் தொடங்கும் பொழுதில் பரஞ்சோதி கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் கூடிய | [142] |
இன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும் மன்னிய வீணையையுங் கைவிட்டுப் பொன்னனையீர் | [143] |
இன்றன்றே காண்ப தெழில்நலங் கொள்ளேனேல் நன்றன்றே பெண்மை நமக்கென்று சென்றவன்தன் | [144] |
ஒண்களபம் ஆடும் ஒளிவாள் முகத்திரண்டு கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் ஒண்கேழ்நல் | [145] |
கூந்தல் அவிழ்க்கும் முடிக்கும் கலைதிருத்தும் சாந்தம் திமிரும் முலையார்க்கும் பூந்துகிலைச் | [146] |
சூழும் அவிழ்க்கும் தொழும்அழும் சோர்துயருற் றாழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் சூழொளிய | [147] |
அங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள் நங்கை இவளும் நலம்தோற்றாள் அங்கொருத்தி | [148] |
ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய சீரார் தெரிவைப் பிராயத்தாள் ஓரா | [149] |
மருளோசை யின்மழலை வாய்ச்சொலால் என்றும் இருள்சீர் புலரியே ஒப்பாள் அருளாலே | [150] |
வெப்பம் இளையவர்கட் காக்குதலால் உச்சியோ டொப்பமையக் கொள்ளும் உருவத்தாள் வெப்பந்தீர்ந் | [151] |
தந்தளிர்போற் சேவடியும் அங்கையும் செம்மையால் அந்திவான் காட்டும் அழகினாள் அந்தமில் | [152] |
சீரார் முகம்மதியம் ஆதலால் சேயிழையாள் ஏரார் இரவின் எழில்கொண்டாள் சீராரும் | [153] |
கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால் தண்ணிளங் காரின் சவிகொண்டாள் வண்ணஞ்சேர் | [154] |
மாந்தளிர் மேனி முருக்கிதழ்வாய் ஆதலால் வாய்ந்த இளவேனில் வண்மையாள் மாந்தர் | [155] |
அறிவுடையீர் நின்மின்கள் அல்லார்போம் என்று பறையறைவ போலும் சிலம்பு முறைமையால் | [156] |
சீரார் திருந்தடிமேல் சேர்த்தினாள் தேர்அல்குல் ஓரா தகலல் உறாதென்று சீராலே | [157] |
அந்துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணிமுலைகள் மைந்தர் மனங்கவரும் என்பதனால் முந்துறவே | [158] |
பூங்கச்சி னால்அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால் காம்பொத்த தோளிணையைக் காப்பேவி வாய்ந்தசீர் | [159] |
நற்கழுத்தை நல்ஆரத் தால்மறைத்துக் காதுக்கு விற்பகரும் குண்டலங்கள் மேவுவித்து மைப்பகரும் | [160] |
காவியங் கண்ணைக் கதம்தணிப்பாள் போலத்தன் தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி யாவரையும் | [161] |
ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும் கோகிலமும் போலும் குணத்தினா ளாகிப் | [162] |
பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி அலர்சுமந்து கூழைய வாகிக் கலைகரந் | [163] |
துள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்த்தாழ்ந்து கள்ஆவி நாறும் கருங்குழலாள் தெள்ளொளிய | [164] |
செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி அங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப் பொங்கெழிலார் | [165] |
பொற்கவற்றின் வெள்ளிப் பலகை மணிச்சூது நற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில் விற்பகரும் | [166] |
தோளான் நிலைபேறு தோற்றம் கேடாய்நின்ற தாளான் சடாமகுடம் தோன்றுதலும் கேளாய | [167] |
நாணார் நடக்க நலத்தார்க் கிடையில்லை ஏணார் ஒழிக எழிலொழிக பேணும் | [168] |
குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்மின் நலத்தீர் நினைமின்நீர் என்று சொலற்கரிய | [169] |
தேவாதி தேவன் சிவனாயின் தேன்கொன்றைப் பூவார் அலங்கல் அருளாது போவானேல் | [170] |
கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் ஒண்டாங்கு | [171] |
பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள் பண்ணமரும் இன்சொற் பணிமொழியாள் மண்ணின்மேல் | [172] |
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே வுளவென்று பண்டையோர் | [173] |
கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல் விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள் கட்டரவம் | [174] |
அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த வஞ்சிக் கொடிநுடங்கு நுண்ணிடையாள் எஞ்சாத | [175] |
பொற்செப் பிரண்டு முகடு மணிஅழுத்தி வைத்தன போல வளர்ந்தே நீதி ஒத்துச் | [176] |
சுணங்கும் சிதலையுஞ் சூழ்போந்து கண்டார்க் கணங்கும் அமுதமுமாய்த் தோன்றி இணங்கொத்த | [177] |
கொங்கையாள் கோலங்கட் கெல்லாம்ஓர் கோலமாம் நங்கையாள் நாகிளவேய்த் தோளினாள் அங்கையால் | [178] |
காந்தட் குலம்பழித்தாள் காமவேள் காதலாள் சாந்தம் இலங்கும் அகலத்தாள் வாய்ந்துடனே | [179] |
ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால் தேய்ந்து துடித்தச் செழும்பவளம் காய்ந்திலங்கு | [180] |
முத்தமும் தேனும் பொதிந்து முனிவரையும் சித்தம் திறைகொள்ளும் செவ்வாயாள் ஒத்து | [181] |
வரிகிடந் தஞ்சனம் ஆடி மணிகள் உருவம் நடுவுடைய வாகிப் பெருகிய | [182] |
தண்ணங் கயலுஞ் சலஞ்சலமும் தோன்றுதலால் வண்ணங் கடலனைய வாட்கண்ணாள் ஒண்ணிறத்த | [183] |
குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய மண்டலமே போலும் மதிமுகத்தாள் வண்டலம்ப | [184] |
யோசனை நாறும் குழலாள் ஒளிநுதல்மேல் வாசிகை கொண்டு வடிவமைத்தாள் மாசில்சீர்ப் | [185] |
பாதாதி கேசம் பழிப்பிலாள் பாங்கமைந்த சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள் மாதார்ந்த | [186] |
பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர் வெண்கவரி வெள்ளத் திடையிருந்து ஒண்கேழ்நல் | [187] |
கண்அவனை அல்லாது காணா செவியவன தெண்ணருஞ்சீர் அல்ல திசைகேளா அண்ணல் | [188] |
கழலடி யல்லது கைதொழா அஃதால் அழலங்கைக் கொண்டான்மாட் டன்புஎன் றெழிலுடைய | [189] |
வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர் கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் விண்பால் | [190] |