தொழிலறி வாளர் சுருதிகண் ணாகப் பழுதறி யாத பரம குருவை வழியறி வார்நல் வழியறி வாளர் அழிவறி வார்மற்றை யல்லா தாரே.
|
1
|
பதைத்தொழிந் தேன்பர மாஉனை நாடி அகைத்தொழிந் தேன் இனி ஆரொடுங் கூடேன் சிதைத்தடி யேன்வினை சிந்தின தீர உதைத்துடை யாய்உகந் தாண்டரு ளாயே.
|
2
|
பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச் சிதைக்கின்ற சிந்தையைச் செய்வே நிறுத்தி இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே.
|
3
|
கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக உள்ள பொருள்உடல் ஆவி யுடன் ஈக எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று தெள்ளி அறியச் சிவபதந் தானே.
|
4
|
சோதி விசாகம் தொடர்ந்திரு தேள்நண்டு ஓதிய நாளே உணர்வது தான் என்று நீதியுள் நீர்மை நினைந்தவர்க் கல்லது. ஆதியும் ஏதும் அறியகில் லானே.
|
5
|
Go to top |
தொழிலார மாமணித் தூய்தான சிந்தை எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே விழலார் விறலாம் வினையது போகக் கழலார் திருவடி கண்டரு ளாமே.
|
6
|
சாத்திக னாய்ப்பர தத்துவந் தானுன்னி ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி
சாத்தவல் லானவன் சற்சீட னாமே.
|
7
|
சத்தும் அசத்தும்எவ் வாறெனத் தான்உன்னிச் சித்தம் உருக்கிச் சிவனருள் கைகாட்டப் பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்த சத்தியின் இச்சை தகுவோன் சற் சீடனே.
|
8
|
அடிவைத் தருளுதி ஆசான் இன்றென்னா அடிவைத்த மாமுடி மாயப் பிறவி அடிவைத்த காய அருட்சத்தி யாலே அடிபெற்ற ஞானத்தன் ஆசற் றுளோனே.
|
9
|
சீராரும் ஞானத்தின் இச்சை செலச்செல ஆராத காதல் குருபரன் பால் ஆகச் சாராத சாதகம் நான்கும்தன் பால்உற்றோன் ஆராயும் ஞானத்த னாம்அடி வைக்கவே.
|
10
|
Go to top |
உணர்த்தும் அதிபக் குவர்க்கே உணர்த்தி இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக் குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண் டுணந்த்தும் மின் ஆவுடை யாள்தன்னை உன்னியே.
|
11
|
இறையடி தாழ்ந்ததை வணக்கமும் எய்திக் குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச் சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.
|
12
|
வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால் வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச் சித் தாந்தத்து வேட்கை விடும்மிக்க வேதாந்தி பாதமே தாழ்க்கும் தலையினோன் சற்சீட னாமே.
|
13
|
சற்குணம் வாய்மை தாயவிவே கம்தண்மை சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே சிற்பர ஞானம் தெளியத் தெளிவோர்தல் அற்புத மேதோன்றல் ஆகும்சற் சீடனே. 1,
|
14
|