காயப்பை ஒன்று சரக்குப் பலஉள மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பைஉண்டு காயப்பைக் குள்நின்ற கள்வன் புறப்பட்டால் மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.
|
1
|
அத்தன் அமைத்த உடல்இரு கூற்றினில் சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால் சத்த பரிச ரூப ரசகந்தம் புத்திமன்ஆங் காரம் புரியட்ட காயமே.
|
2
|
எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும் கட்டிய மூன்றும் கரணம தாயிடும் ஒட்டிய பாசம் உணர்வது வாகவே கட்டி அவிழ்த்திடும் கண்ணுதல் காணுமே.
|
3
|
இந்தியம் அந்தக் கரணம் இவை உயிர் வந்தன சூக்க உடலன்று மானது தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும் முந்துளம் மன்னும் மற்றாறும் முடிவிலே.
|
4
|
இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை மருவிய அத்தி வழும்பொடு மச்சை பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி உருவ மலால்உடல் ஒன்றென லாமே?
|
5
|
Go to top |
ஆரே அறிவார் அடியின் பெருமையை ஆரே அறிவார் அருந்தவம் நின்றது ஆரே அறிவார் அறுபத்தெட் டாக்கையை ஆரே அறிவார் அடிக்காவ லானாதே.
|
6
|
எண்சாண் அளவாய் எடுத்த உடம்புக்குள் கண்கால் உடலில் கரக்கின்ற கைகளில் புண்கால் அறுபத்தெட் டாக்கை புணர்க்கின்ற நண்பால் உடம்பு தன்னால்உடம் பாமே.
|
7
|
உடம்பிற்குள் நாலுக் குயிராய சீவன் ஒடுங்கும் பரனோ(டு) ஒழியாப் பிரமம் கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி அடங்கியே அற்றதிங் காரறி வாரே.
|
8
|
ஆறந்த மாகி நடுவுடன் கூடினால் தேறிய மூவாறும் சிக்கென் றிருந்திடும் கூறுங் கலைகள் பதினெட்டுங் கூடியே ஊறும் உடம்பை உயிருடம் பென்னுமே.
|
9
|
மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும் பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும் கையினில் துல்லியம் காட்டும் உடலையும் ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.
|
10
|
Go to top |
காயுங் கடும்பரி கால்வைத்து வாங்கல்போல் சேய இடம் அண்மை செல்லவும் வல்லது காயத் துகிற்போர்வை ஒன்றுவிட் டாங்கொன்றிட் டேயு மவரென்ன ஏய்ந்திடுங் காயமே.
|
11
|
நாகம் உடல்உரி போலும் நல் அண்டசம் ஆகும் நனாவில் கனாமறந் தல்லது போகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்(று) ஏகும் இடம்சென்(று) இருபயன் உண்ணுமே.
|
12
|
உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன கண்டு விடும் சூக்கம் காரண மாச்செலப் பண்டு தொடரப் பரகாய யோகிபோல் பிண்டம் எடுக்கும் பிறப்பிறப் பெய்தியே.
|
13
|
தானவ னாகிய தற்பரந் தாங்கினோன் ஆனவை மாற்றிப் பரமத் தடைந்திடும் ஏனை உயிர்வினைக் கெய்து மிடஞ்சென்றும் வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.
|
14
|
ஞானிக்குக் காயம் சிவமேய் தனுவாம் அஞ் ஞானிக்கூன் நிற்கு முடம்பே யதுவாகும் மேனிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும் மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.
|
15
|
Go to top |
விஞ்ஞானத் தார்க்கா ணவமே மிகுதனு எய்ஞ்ஞானத் தார்க்குத் தனுமாயை தானென்ப அஞ்ஞானத் தோருக்குக் கன்மம் தனுவாகும் மெய்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே.
|
16
|
மலமென் றுடம்பை மதியாத ஊமர் தலமென்று வேறு தரித்தமை கண்டீர் நலமென் றிதனையே நாடி யிருக்கின் பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் வண்டத்தே.
|
17
|
நல்ல வசனத்து வாக்கு மனாதிகள் மெல்லவிளை யாடும் விமலன் அகத்திலே அல்ல செவிசத்த மாதி மனத்தையும் மெல்லத் தரித்தார் மிகுத்தார் பசித்தே.2,
|
18
|