சாக்கிர சாக்கிரந் தன்னில் திரோதாயி சாக்கிர சொப்பனந் தன்னிடை மாயேயம் சாக்கிரந் தன்னிற் சழுத்திதற் காமியம் சாக்கிரந் தன்னில் துரியத்து மாயையே.
|
1
|
மாயை எழுப்பும் கலாதியை மற்றதின் ஏய இராகாதி ஏய்ந்த துரியத்துத் தோயும் சுழுனை கனா நனாவும் துன்னி ஆயினன் அந்தச் சகலத் துளானே.
|
2
|
மேவிய அந்தன் விழிகட் குருடனாம் ஆவயின் முன்அடிக் காணும் அதுகண்டு மேவும் தடிகொண்டு சொல்லும் விழிபெற மூவயின் ஆன்மா முயலுங் கருமமே.
|
3
|
மத்திமம் ஒத்த சிலந்தி வலையத்துள் ஒத்தங் கிருந்தங் குயிருண்ணு மாறுபோல் அத்தனு ஐம்பொறி ஆடகத் துள்நின்று சத்தம் முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே.
|
4
|
வைச்சன அச்சு வகையிரு பத்தஞ்சோ(டு) உச்ச முடன் அணை வான்ஒரு வன்னுளன் பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே.
|
5
|
Go to top |
நாலா றுடன்புருடன் நற்றத் துவம்உடன் வேறான ஐயைந்து மெய்ப்புரு டன்பரம் கூறா வியோமம் பரம்-எனக் கொண்டனன் வேறான நாலேழு வேதாந்தி தத்வமே.
|
6
|
ஏலங்கொண் டாங்கே இடையொடு பிங்கலை கோலங்கொண் டாங்கே குணத்தி னுடன்புக்கு மூலங்கொண் டாங்கே முறுக்கிமுக் கோணிலும் காலங்கொண் டானடி காணலு மாமே.
|
7
|
நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும் ஓடிய காலின் ஒடுங்கி யிருந்திடும் கூடிய காமம் குறிக்கும் இரதமும் நாடிய நல்ல மனமும் உடலிலே.
|
8
|
பத்தொடு பத்தும் ஓர் மூன்றும் பகுதியும் உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும் மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும் தத்துவம் நாலேழ் எனஉன்னத் தக்கதே.
|
9
|
விளங்கிடும் முந்நூறு முப்ப தொருபான் தளங்கொள் இரட்டிய(து) ஆறு நடந்தால் வழங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து விளங்கிடும் அவ்வழித் தத்துவம் நின்றே.
|
10
|
Go to top |
நாலொரு கோடியே நாற்பத் தெண்ணாயிரம் மேலும்ஓர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும் பால்அவை தொண்ணூற்றோ டாறுட்படும் அவை கோலிய ஐயைந்து ளாகும் குறிக்கிலே.
|
11
|
ஆகின்ற தொண்ணூற்றோ டாறும் பொதுஎன்பர் ஆகின்ற ஆறா(று) அருஞ்சைவர் தத்துவம் ஆகின்ற நாலேழ்வே தாந்திக்கு வைணவர்க்(கு) ஆகின்ற நாலா(று)ஐ யைந்துமாயா வாதிக்கே.
|
12
|
தத்துவ மானவை தன்வழி நின்றிடில் ளித்தக னாகி விளங்கி யிருக்கலாம் பொய்த்தவ மானவை போயிடும் அவ்வழி தத்துவ மாவ(து) அகார எழுத்தே.
|
13
|
அறிவொன் றிலாதன ஐயேழும் ஒன்றும் அறிகின்ற என்னை அறியா திருந்தேன் அறிகின்ற நீஎன் றருள்செய்தான் நந்தி: அறிகின்ற நான்என் றறிந்துகொண் டேனே.
|
14
|
சாக்கிர சாக்கிர மாதிதனில் ஐந்தும் ஆக்கு மாலவத்தை ஐந்தும் நனவாதி போக்கிச் சிவத்தொடும் பொய்யான ஆறாறும் நீக்கி நெறிநின்றோன் தானாகி நிற்குமே.
|
15
|
Go to top |
ஆணவ மாதிமலம் ஐந்(து) அலரோனுக்(கு) ஆணவ மாதிநான் காம்மாற்(கு) அரனுக்கு ஆணவ மாதிமூன்(று) ஈசர்க்(கு): இரண்டென்ப ஆணவம் ஒன்றே சதாசிவர்க் கானதே. 5,
|
16
|