உதயத்தில் விந்துவில் ஓம்முதற் குண்டலி உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான் விதியிற் பிரமாதி கள்மிகு சத்தி கதியிற் கரணம் கலைவை கரியே.
|
1
|
செய்திடும் விந்துபே தத்திறம் ஐயைந்தும் செய்திடும் நாதபே தத்திறன் நாலாறும் செய்திடும் மற்றவை ஈரிரண் டின்திறம் செய்திடும் ஆறாறு சேர்தத் துவங்களே.
|
2
|
வந்திடு பேத மெலாம் பரவிந்து தந்திடும் மாமாயை வாகீசி தற்பரை உந்து குடிலையோடு ஓம்உறு குண்டலி விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே.
|
3
|
விளங்கு நிவிர்த்தாதி மேவக ராதி வளங்கொள் உகார மகாரத்துள் விந்து களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி உளங்கொள் மனாதி உளமந்த மாமே.
|
4
|
அந்தமு மாதியு மாகிப் பராபரன் வந்த வியாபி யெனலாகு மந்நெறி கந்தம தாகிய காரண காரியம் தந்தைங் கருமமுந் தான்செய்யும் வீயமே.
|
5
|
Go to top |
வீயம தாகிய விந்துவின் சத்தியால் ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக் காயஐம் பூதமும் காரிய மாயையில் ஆயிட விந்து அகம்புற மாகுமே.
|
6
|
புறமக மெங்கும் புகுந்தொளிர் விந்து நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை உறமகிழ் சத்தி சிவபாத மாய்உள் திறனொடு வீடளிக் கும்செயல் கொண்டே.
|
7
|
கொண்ட இவ்விந்து பரமம் போற்கோதற நின்ற படம்குடி லாய்நிலை நிற்றலின் கண்ட கலாதியின் காரண காரியத்து அண்டம் அனைத்துமாய் மாமாயை யாகுமே.
|
8
|
அதுவித்தி லேநின்றங் கண்ணிக்கும் நந்தி இதுவித்தி லேயுள வாற்றை உணரார் மதுவித்தி லேமலர் அன்னம தாகிப் பொதுவித்தி லேநின்ற புண்ணியந் தானே.
|
9
|
வித்தினி லன்றி முளையில்லை அம்முளை வித்தினி லன்றி வெளிப்படுமா றில்லை வித்தும் முளையும் உடனன்றி வேறல்ல அத்தன்மைத் தாகும் அரன்நெறி காணுமே.
|
10
|
Go to top |
அருந்திய அன்ன மவைமூன்று கூறாம் பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்ன திருந்தும் உடல்மனம் ஆங்கது சேர்ந்திட்டு இருந்தன முன்னாள் இரதம தாகுமே.
|
11
|
இரதம் முதலான ஏழ்தாது மூன்றின் உரிய தினத்தின் ஒருபுற் பனிபோல் அரிய துளிவிந்து வாகும் ஏழ்மூன்றின் மருவிய விந்து வளருங்கா யத்திலே.
|
12
|
காயத்தி லேழ்மூன்று நாளிற் கலந்திட்டுக் காயத்து டன்மன மாகும் கலாவிந்து நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின் மாயத்தே செல்வோர் மனத்தோ டழியுமே.
|
13
|
அழிகின்ற விந்து அளவை யறியார் கழிகின் றதனையுட் காக்கலும் ஓரார் அழிகின்ற காயத் தழிந்தயர் வுற்றோர் அழிகின்ற தன்மை யறிந்தொழி யாரே. 21,
|
14
|