செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள் மஞ்சுடை மேரு வலம்வரு காரணம் எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி தஞ்சுட ராக வணங்கு தவமே.
|
1
|
பகலவன் மாலவன் பல்லுயிர்க் கெல்லாம் புகல்வ னாய் நிற்கும் புண்ணிய நாதன் இகலற ஏழுல கும்உற ஓங்கும் பகலவன் பல்லுயிர்க் காதியு மாமே.
|
2
|
ஆதித்தன் அன்பினொ டாயிர நாமமும் சோதியி னுள்ளே சுடரொளி யாய்நிற்கும் வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும் ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.
|
3
|
தானே உலகுக்குத் தத்துவ னாய்நிற்கும் தானே உலகுக்குத் தையலுமாய் நிற்கும் தானே உலகுக்குச் சம்புவுமாய் நிற்கும் தானே உலகுக்குத் தண்சுட ராகுமே.
|
4
|
வலயம்முக் கோணம்வட் டம்அறு கோணம் துலைஇரு வட்டம்துய் யவ்வித ழெட்டில் அலையுற்ற வட்டத்தில் ஈரெட் டிதழா மலைவற் றுதித்தனன் ஆதித்த னாமே.
|
5
|
Go to top |
ஆதித்தன் உள்ளினில் ஆனமுக் கோணத்தில் சோதித் திலங்கும்நற் சூரியன் நாலாங் கேத மறுங்கேணி சூரியன் எட்டில் சோதிதன் ஈரெட்டில் சோடசந் தானே.
|
6
|
ஆதித்த னோடே அவனி இருண்டது பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற வேதப் பொருளை விளங்ககி லீரே.
|
7
|
பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள் நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன் ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.
|
8
|
மண்ணை இடந்ததின் கீழ்ஓடும் ஆதித்தன் விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும் கண்ணை இடந்து களிசெய்த ஆனந்தம் எண்ணும் கிழமைக் கிசைந்துநின் றானே.
|
9
|
பாரை யிடந்து பகலோன் வரும்வழி யாரு மறியார் அருங்கடை நூலவர் தீரன் இருந்த திருமலை சூழ் என்று ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே. 23,
|
10
|
Go to top |