சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது மன்மார்க்கம் மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம் பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந் துன்மார்க்கம் ஞானத் துறுதியு மாமே.
|
1
|
மருவுந் துவாதச மார்க்கமில் லாதார் குருவும் சிவனும் சமயமும் கூடார் வெருவும் திருமகள் வீடில்லை யாகும் உருவும் கிளையும் ஒருங்கிழப் பாரே.
|
2
|
யோகச் சமாதியி னுள்ளே அகலிடம் யோகச் சமாதியி னுள்ளே உளரொளி யோகச் சமாதியி னுள்ளே உளள்சத்தி யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.
|
3
|
யோகமும் போகமும் யோகியர்க் காகுமால் யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர் போகம் புவியிற் புருடார்த்த சித்திய தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே.
|
4
|
ஆதார சோதனை யால்நாடி சுத்திகள் மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி சாதா ரணங்கெட லாம்சக மார்க்கத்தே.
|
5
|
Go to top |
பிணங்கிநிற் கின்றவை யைந்தையும் பின்னை அணங்கி எறிவன் அயில்மன வாளால் கணம்பதி னெட்டும் கருதும் ஒருவன் வணங்கவல் லான்சிந்தை வந்துநின் றானே.
|
6
|
வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும் வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும் உளங்கனிந் துள்ளே உகந்துநிற் பார்க்குப் பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே. 11,
|
7
|