இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம் அமைய வகுத்த அனாதி புராணன் சமையங்க ளாறுந்தன் தாளிணை நாட அமையங் கழல்கின்ற ஆதிப் பிரானே.
|
1
|
ஒன்றதே பேரூர் வழிஆ றதற்குள என்றது போலும் இருமுச் சமயமும் நின்றிது தீதிது என்றுரை ஆதர்கள் குன்று குரைத்தெழு நாயைஒத் தார்களே.
|
2
|
சைவப் பெருமைத் தனிநா யகன்றன்னை உய்ய உயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை எய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய் வையத் தலைவனை வந்தடைந் துய்மினே.
|
3
|
சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியில் பவனவன் வைத்த பழவழி நாடி இவனவன் என்ப தறியவல் லார்கட் கவனவ னங்குள தாங்கட னாமே.
|
4
|
ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப் போமாறு தானில்லை புண்ணிய மல்லதுஅங் காமாம் வழிஆக்கும் அவ்வே றுயிர்கட்கும் போமாறவ் வாதாரப் பூங்கொடி யாளே.
|
5
|
Go to top |
அரனெறி யாவ தறிந்தேனும் நானும் சிவநெறி தேடித் திரிந்தஅந் நாளும் உரநெறி உள்ளக் கடல்கடந் தேறும் தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.
|
6
|
தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி போந்து புனைந்து புணர்நெறி ஆமே.
|
7
|
ஈரும் மனத்தை இண்டற வீசும் இய் யூரும் சகாரத்தை ஓது முன் ஓதியே வாரும் அரன்நெறி மன்னியே முன்னில் அத் தூரும் சுடரொளி தோன்றலு மாமே.
|
8
|
மினற்குறி யாளனை வேதியர் வேதத் தனற்குறி யாளனை ஆதிப் பிரானை நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின் அனைக்குறி காணில் அரன்நெறி ஆமே.
|
9
|
ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல வாய்ந்துண ராவகை நின்ற அரன்நெறி பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே. |
10
|
Go to top |
சைவ சமயத் தனிநா யகன்நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய வையத் துளார்க்கு வகுத்துவைத் தானே.
|
11
|
இத்தவம் அத்தவம் என்றிரு பேர்இடும் பித்தரைக் காணின் நகும்எங்கள் பேர்நந்தி எத்தவ மாகில்என்! எங்குப் பிறக்கில் என்! ஒத்துணர் வார்க்கொல்லை ஊர்புக லாமே.
|
12
|
ஆமே பிரான்முகம் ஐந்தொடும் ஆருயிர்க் காமே பிரானுக் கதோமுகம் ஆறுள தாமேய் பிரானுக்கும் தன்சிர மாலைக்கும் நாமேய் பிரானுக்கு நாரியல் பாமே.
|
13
|
ஆதிப் பிரான் உல கேழும் அளந்தஅவ் வோதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும் பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி ஆதிக்கண் தெய்வமும் அந்தமும் ஆமே.
|
14
|
ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர் ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரன்நெறி ஆய்ந்தறிந் தேன்அவன் சேவடி கைதொழ ஆய்ந்தறிந் தேன்இம்மை அம்மை கண்டேனே.
|
15
|
Go to top |
அறியஒண் ணாத உடம்பின் பயனை அறியஒண் ணாத அறுவகை ஆக்கி அறியஒண் ணாத அறுவகைக் கோசத் தறியஒண் ணாததோர் அண்டம் பதிந்ததே. 1,
|
16
|