நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித் தறிஇருந் தாற்போலத் தம்மை இருத்திச் சொறியினும் தாக்கினும் துண்ணென் றுணராக் குறிஅறி வாளர்க்குக் கூடலு மாமே.
|
1
|
ஊழிதொ றூழி யுணர்ந்தவர்க் கல்லது ஊழிதொ றூழி உணரவுந் தானொட்டான் ஆழி அமரும் அரிஅயன் என்றுளார் ஊழி முயன்றும்ஓர் உச்சியு ளானே.
|
2
|
பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல் சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது ஓவியம் போல உணரவல் லார்கட்கு நாவி அணைந்த நடுதறி ஆமே.
|
3
|
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச் சிந்தை உறவே தெளிந்திருள் நீங்கினால் முந்தைப் பிறவி மூலவித் தாழுமே.
|
4
|
எழுத்தொடு பாடலும் எண்ணெண் கலையும் பழித்தலைப் பாசப் பிறவியை நீக்கா அழித்தலைச் சோமனோ டங்கி அருக்கன் வழித்தலைச் செய்யும் வகைஉணர்ந் தேனே.
|
5
|
Go to top |
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ னாகும் விரும்பிநின் றேசெயின் மெய்யுணர் வாகும் விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும் விரும்பிநின் றேசெயின் விண்ணவ னாகுமே.
|
6
|
பேணிற் பிறவா உலகருள் செய்திடும் காணில் தனது கலவியு ளேநிற்கும். நாணில் நரக நெறிக்கே வழிசெயும் ஊனிற் சுடும்அங்கி உத்தமன் றானே.
|
7
|
ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர் எத்தனை ஆயிரர் வீழ்ந்தனர் எண்ணிலி சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய் அத்தன் இவனென்றே அன்புறு வார்களே.
|
8
|
யோகிக் கியோகாதி மூன்றுள தொண்டுற்றோற் காகத் தகுங்கிரியை ஆதி சரியையாம் தாகத்தை விட்ட சரியைஒன் றாம் ஒன்றுள் ஆகித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே.
|
9
|
யோகச் சமயமே யோகம் பலஉன்னல் யோக விசேடமே அட்டாங்க யோகமாம் யோகநிர் வாணமே உற்ற பரோதயம் யோகாபி டேகமே ஒண்சித்தி உற்றலே. 8,
|
10
|
Go to top |