ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம் ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.
|
1
|
சத்தமும் சத்த மனமும் தகுமனம் உய்த்த உணர்வும் உணர்த்தும் அகந்தையும் சித்தம்என் றிம்மூன்றும் சிந்திக்கும் செய்கையும் சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே.
|
2
|
தன்பால் உலகம் தனக்கரு காவதும் அன்பால் எனக்கரு ளாவது மாவன என்பார்கள் ஞானமும் எய்தும் சிவோகமும் பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே.
|
3
|
இருக்குஞ் சேம இடம்பிரம மாகும் வருக்கஞ் சராசர மாகும் உலகம் தருக்கிய ஆசார மெல்லாந் தருமே திருக்கிலா ஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே.
|
4
|
அறிவும் அடக்கமும் அன்பும் உடனே பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன் குறியுங் குணமும் குரைகழல் நீங்கா நெறியறி வார்க்கிது நீத்தொளி யாமே.
|
5
|
Go to top |
ஞானம் விழைந்தெழு கின்றதோர் சிந்தையுள் யானம் விழைந்தெதி ரேகாண் வழிதொறும் கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே.
|
6
|
ஞானிக் குடன்குணம் ஞானத்தில் நான்குமாம் மோனிக் கிவைஒன்றும் கூடா முன் மோகித்து மேனிற்ற லால்சத்தி வித்தை விளைத்திடும் தானிக் குலத்தோர் சரியை கிரியையே.
|
7
|
ஞானத்தில் ஞானாதி நான்குமாம் ஞானிக்கு ஞானத்தில் ஞானமே நான்என தென்னாமை ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே.
|
8
|
நண்ணிய ஞானத்தில் ஞானாதி நண்ணுவோன் புண்ணிய பாவம் கடந்த பிணக்கற்றோன் கண்ணிய நேயம் கரைஞானம் கண்டுளோன் திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே.
|
9
|
ஞானச் சமயமே நாடுந் தனைக்காண்டல் ஞான விசேடமே நாடு பரோதயம் ஞானநிர் வாணமே நன்றறி வானருள் ஞானாபி டேகமே நற்குரு பாதமே. 9,
|
10
|
Go to top |