கொடுகொட்டி பாண்டரம் கோடுசங் காரம் நடம்எட்டோ(டு) ஐந்(து) ஆறு நாடியுள் நாடும் திடம்உ ற்றெழும் தேவ தாருவனத் தில்லை வடம்உற்ற மாவன மன்னவன் தானே.
|
1
|
தெற்கு வடக்குக் கிழக்குமேற் குச்சியில் அற்புத மானஓர் அஞ்சு முகத்திலும் ஒப்பில்பே ரின்பத் துபய உபயத்துள் தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.
|
2
|
அடியார் அரன்அடி ஆனந்தங் கண்டோர் அடியா ரவர்அர னத்தனரு ளுற்றோர் அடிஆர் பவரே அடியவ ராவர் அடியார்பொன் னம்பலத் தாடல்கண் டாரே.
|
3
|
அடங்காத என்னை அடக்கி அடிவைத்(து) இடங்காண் பரானந்தத் தேஎன்னை இட்டு நடந்தான் செயும்நந்தி தன்ஞானக் கூத்தன் படந்தான்செய் உள்ளுட் படிந்திருந் தானே.
|
4
|
உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனை செம்பொற் றிருமன்றுட் சேவகக் கூத்தனை சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை இன்புறு நாடிஎன் அன்பில்வைத் தேனே.
|
5
|
Go to top |
மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப் பூணுற்ற மன்றுட் புரிசடைக் கூத்தனைச் சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை ஆணிப்பொற் கூத்தனை யாரறி வாரே.
|
6
|
விம்மும் வெருவும் விழும் எழும் மெய்சோரும் தம்மையும் தாம்அறி யார்கள் சதுர்கெடும் செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள் அம்மலர்ப் பொற்பாதத்(து) அன்புவைப் பார்கட்கே.
|
7
|
தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள் வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன் ஓட்டறும் ஆசை அறும் உளத் தானந்த நாட்டம் முறுக்குறு நாடகம் காணவே.
|
8
|
காளியோ டாடிக் கனகா சலத்தாடிக் கூளியோ டாடிக் குவலயத் தேஆடி நீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி நாளுற அம்பலத் தேஆடும் நாதனே.
|
9
|
மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை கூரும்இவ் வானின் இலங்கை குறிஉறும் சாரும் திலைவனம் தண்மா மலயத்தூ டேறும் சுழுமுனை இவைசிவ பூமியே.
|
10
|
Go to top |
பூதல மேருப் புறத்தான தெக்கணம் ஓதும் இடைபிங் கலைஒண் சுழுனையாம் பாதி மதியோன் பயில்திரு அம்பலம் ஏதமில் பூதாண்டத் தெல்லையின் ஈறே. 14,
|
11
|