ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓர் ஒளி ஆயும் அறிவையும் மாயா உபாதியால் ஏய பரிய புரியுந் தனைஎய்தும் சாயும் தனது வியாபகந் தானே.
|
1
|
நானறிந் தப்பொருள் நாட இடமில்லை வானறிந் தங்கே வழியுற விம்மிடும் ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் தானறிந் தெங்குந் தலைப்பட லாமே.
|
2
|
கடலிடை வாழ்கின்ற கௌவை யுலகத்(து) உடலிடை வாழ்வுகண் டுள்ளொளி நாடின் உடலிடை வைகின்ற உள்ளுறு தேனைக் கடலின் மலிதிரைக் காணலு மாமே.
|
3
|
பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித் தெரிந்துட லாய்நிற்குந் தேவர் பிரானும் இருஞ்சுடர் விட்டிட் டிகலிட மெல்லாம் பரிந்துடன் போகின்ற பல்குரையாமே.
|
4
|
உறுதியி னுள்வந்த உன்வினைப் பட்டும் இறுதியின் வீழ்ந்தார் இரணம தாகும் சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி பெறுதியின் மேலோர் பெருஞ்சுடர் ராமே.
|
5
|
Go to top |
பற்றினுள் ளேபர மாய பரஞ்சுடர் முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி நெற்றியி னுள்ளே நினைவாய் நிலைதரும் மற்றவ னாய்நின்ற மாதவன் தானே.
|
6
|
தேவனு மாகுந் திசைதிசை பத்துளும் ஏவனு மாய்விரி நீருல கேழையும் ஆவனு மாம் அமர்ந் தெங்கும் உலகினும் நாவனு மாகி நவிற்றுகின் றானே.
|
7
|
நோக்கும் கருடன் நொடிஏ ழுலகையும் காக்கும் அவனித் தலைவனும் அங்குள நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி போக்கும் வரவும் புரணவல் லானே.
|
8
|
செழுந்சடை யன்செம்பொ னேஒக்கும் மேனி ஒழிந்தன ஆயும் ஒருங்குடன் கூடும் கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன் ஒழிந்தில கேழினும் ஒத்துநின் றானே.
|
9
|
புலமையில் நாற்றம் இல் புண்ணியன் எந்தை நலமையில் ஞான வழக்கமும் ஆகும் விலமையில் வைத்துள வேதியர் கூறும் பலமையில் எங்கும் பரந்துநின் றானே.
|
10
|
Go to top |
விண்ணவ னாய்உல கேழுக்கும் மேல்உளன் மண்ணவ னாய் வலம் சூழ்கடல் ஏழுக்கும் தண்ணவ னாய் அதன் தண்மையில் நிற்பதோர் கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.
|
11
|
நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி நின்றனன் தான்நிலம் கீழொடு மேல்என நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல் நின்றனன் தானே வளங்கனி யாமே.
|
12
|
புவனா பதி மிகு புண்ணியன் எந்தை அவனேய உலகின் அடற்பெரும் பாகன் அவனே அரும்பல சீவனும் ஆகும் அவனே இறைஎன மாலுற்ற வாறே.
|
13
|
உண்ணின் றொளிரும் உலவாப் பிராணனும் விண்ணின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும் மண்ணின் றியங்கிடும் வாயுவு மாய்நிற்கும் கண்ணின் றிலங்கும் கருத்தன் தானே.
|
14
|
எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப் பண்ணும் திறனும் படைத்த பரமனைக் கண்ணில் கவரும் கருத்தில் அதுஇது உண்ணின் றுருக்கி ஓர் ஆயமும் ஆமே.
|
15
|
Go to top |
இருக்கின்ற எண்டிசை அண்டம் பா தாளம் உருக்கொடு தன்நடு ஓங்க இவ் வண்ணம் கருக்கொடே எங்கும் கலந்துநின் றானே திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே.
|
16
|
அதுஅறி வானவன் ஆதி புராணன் எதுஅறி யாவகை நின்றவன் ஈசன் பொதுஅது வான புவனங்கள் எட்டும் இதுஅறி வான் நந்தி எங்கள் பிரானே.
|
17
|
நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம் தூரும் உடம்புறு சோதியுமாய் உளன் பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை ஊரும் சகலன் உலப்பிலி தானே.
|
18
|
தானே கடல்மலை ஆதியு மாய்நிற்கும் தானே திசையொடு தேவருமாய் நிற்கும் தானே உடல்உயிர் தத்துவ மாய்நிற்கும் தானே உலகில் தலைவனும் ஆமே.
|
19
|
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் மூலன்உரைசெய்த முந்நூறு மந்திரம் மூலன் உரைசெய் முப்ப துபதேசம் மூலன் உரைசெய்த மூன்றும்ஒன் றாமே.
|
20
|
Go to top |
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலம்அறுத் தான்பதம் வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள் வாழ்கவே வாழ்க மலம்இலான் பாதமே.
|
21
|