பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப் பன்னிரண் டாதியோ டந்தப் பதினாலும் சொன்னிலை சோடசம் அந்தம்என் றோதிடே.
|
1
|
அந்தம் பதினா லதுவே வயிரவி முந்தும் நடுவும் முடிவும் முதலாகச் சிந்தைக் கமலத் தெழுகின்ற மாசத்தி அந்தமும் ஆதியும் ஆகிநின் றாளே.
|
2
|
ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர் போகின்ற பூதம் பொருந்து புராதரர் சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப் போகுந் திரிபுரை புண்ணியத் தோரே.
|
3
|
புண்ணிய நந்தி புனிதன் திருவாகும் எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி பண்ணிய வன்னி பகலோன் மதியீறு திண்ணிய சிந்தையன் தென்னனு மாமே.
|
4
|
தென்னன் திருநந்தி சேவகன் றன்னொடும் பொன்னங் கிரியினிற் பூதலம் போற்றிடும் பன்னும் பரிபிடி அந்தம் பகவனோ டுன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே.
|
5
|
Go to top |
ஓதிய நந்தி உணருந் திருவருள் நீதியில் வேத நெறிவந் துரைசெயும் போதம் இருபத் தெழுநாள் புணர்மதிச் சோதி வயிரவி சூலம்வந் தாளுமே.
|
6
|
சூலம் கபாலம்கை யேந்திய சூலிக்கு நாலங் கரம்உள நாகபா சாங்குசம் மாலங் கயன்அறி யாத வடிவற்கு மேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே.
|
7
|
மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி சொல்லியல் கிஞ்ச நிறம்மன்னு சேயிழை கல்லியல் ஒப்பது காணும் திருமேனி பல்லியல் ஆடையும் பன்மணி தானே.
|
8
|
பன்மணி சந்திர கோடி திருமுடி சொன்மணி குண்டலக் காதி உழைக் கண்ணி நன்மணி சூரிய சோம நயனத்தள் பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.
|
9
|
பூரித்த பூவிதழ் எட்டினுக் குள்ளேஓர் ஆரியத் தாள்உளள் அங்கெண்மர் கன்னியர் பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும் சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.
|
10
|
Go to top |
கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம் எண்டிசை யோகி இறைவி பராசத்தி அண்டமொ டெண்டிசை தாங்கும் அருட்செல்வி புண்டரி கத்தினுட் பூசனை யாளே.
|
11
|
பூசனை கந்தம் புனைமலர் மாகோடி யோசனை பஞ்சத் தொலி வந் துரைசெய்யும் வாச மிலாத மணிமந் திரயோகம் தேசந் திகழும் திரிபுரை காணே.
|
12
|
காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும் பேணும் சிவனும் பிரமனும் மாயனும் காணுந் தலைவிநற் காரணி காணே.
|
13
|
காரண மந்திரம் ஓதும் கமலத்துப் பூரண கும்ப இரேசம் பொருந்திய நாரணி நந்தி நடு அங் குரைசெய்த ஆரண வேதநூல் அந்தமு மாமே.
|
14
|
அந்தம் நடுவிரல் ஆதி சிறுவிரல் வந்த வழிமுறை மாறி உரைசெய்யும் செந்தமி ழாதி தெளிந்து வழிபடும் நந்தி இதனை நவம்உரைத் தானே.
|
15
|
Go to top |
உரைத்த நவசக்தி ஒன்று முடிய நிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப் பிரச்சதம் எட்டும்முன் பேசிய நந்தி நிரைத்து நியதி நியமம்செய் தானே.
|
16
|
தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற ஏமத் திருளற வீசும் இளங்கொடி ஓமப் பெருஞ்சுடர் உள்ளெழு நுண்புகை மேவித் தமுதொடு மீண்டது காணே.
|
17
|
காணும் இருதய மந்திரமும் கண்டு பேணும் நமஎன்று பேசும் தலைமேலே வேணு நடுவு மிகநின்ற ஆகுதி பூணும் நடுவென்ற வஞ்சஞ் சிகையே.
|
18
|
சிகைநின்ற அந்தம் கவசம்கொண் டாதி பகைநின்ற அங்கத்தைப் பட்டென்று மாறித் தொகைநின்ற நேத்திரம் முத்திரை சூலம் வகைநின்ற யோனி வருத்தலும் ஆமே.
|
19
|
வருத்தம் இரண்டும் சிறுவிரல் மாறிப் பொருத்தி அணிவிரல் சுட்டிற் பிடித்து நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே பெருத்த விரல்இரண் டுள்புக்குப் பேசே.
|
20
|
Go to top |
பேசிய மந்திரம் இகாரம் பிரித்துரை கூச மிலாத சகாரத்தை முன்கொண்டு வாசிப் பிராணன் உபதேச மாகைக்குக் கூசிய விந்து வுடன்கொண்டு கூவே.
|
21
|
கூவிய சீவன் பிராணன் முதலாகப் பாவிய சவ்வுடன் பண்ணும் மகாரத்தை மேவிய மாயை விரிசங்கு முத்திரை தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.
|
22
|
நின்ற வயிரவி நீலி நிசாசரி ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச் சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.
|
23
|
சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம் நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை ஆற்றலொ டாய்நிற்கும் ஆதி முதல்வியே.
|
24
|
ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம் பேதை உலகில் பிறவிகள் நாசமாம் ஓத உலவாத கோலம்ஒன் றாகுமே.
|
25
|
Go to top |
கோலக் குழலி குலாய புருவத்தள் நீலக் குவளை மலரன்ன கண்ணினாள் ஆலிக்கும் இன்னமு தானந்த சுந்தரி மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.
|
26
|
வெளிப்படு வித்து விளைவறி வித்துத் தெளிப்படு வித்தென்றன் சிந்தையி னுள்ளே களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி ஒளிப்படுவித்தென்னை உய்யக்கொண் டாளே.
|
27
|
கொண்டனள் கோலம் கோடி அனேகங்கள் கண்டனள் எண்ணெண் கலையின்கண் மாலைகள் விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும் தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.
|
28
|
தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை மையலை நூக்கும் மனோன்மனி மங்கையைப் பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின் வெய்ய பவம்இனி மேவகி லாவே.
|
29
|
வேயன தோளி விரையுறு மென்மலர் ஏய குழலி இளம்பிறை ஏந்திழை தூய சடைமுடிச் சூலினி சுந்தரி ஏயென துள்ளத் தினிதிருந் தாளே.
|
30
|
Go to top |
இனியதென் மூலை இருக்குங் குமரி தனியொரு நாயகி தானே தலைவி தனிப்படு வித்தனள் சார்வு படுத்து நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே.
|
31
|
நாடிகள் மூன்றுள் நடுவெழு ஞாளத்துக் கூடி யிருக்கும் குமரி குலக்கன்னி பாடகச் சீறடி பைம்பொற் சிலம்பொலி ஊடகம் மேவி உறங்குகின் றேனே.
|
32
|
உறங்கு மளவில் மனோன்மனி வந்து கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப் பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட் டுறங்கல்ஐ யாஎன் றுபாயஞ்செய் தாளே.
|
33
|
உபாயம் அளிக்கும் ஒருத்திஎன் உள்ளத் தபாயம் அறக்கெடுத் தன்பு விளைத்துச் சுவாவை விளக்கும் சுழியகத் துள்ளே அவாவை யடக்கிவைத் தஞ்சல்என் றாளே.
|
34
|
அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை தஞ்சம்என் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க் கின்சொல் லளிக்கும் இறைவிஎன் றாரே.
|
35
|
Go to top |
ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை காரியல் கோதையள் காரணி நாரணி ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும் கோரிஎன் உள்ளங் குலாவிநின் றாளே.
|
36
|
குலாவிய கோலக் குமரிஎன் னுள்ளம் நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும் உலாவி யிருந்துணர்ந் துச்சியி னுள்ளே கலாவி யிருந்த கலைத்தலை யாளே.
|
37
|
கலைத்தலை நெற்றிஓர் கண்ணுடைக் கண்ணுள் முலைத்தலை மங்கை முயங்கி யிருக்கும் சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி அலைத்தபூங் கொம்பினள் ஆங்கிருந் தாளே.
|
38
|
இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப் பொருந்திரு நால்விரல் புக்கனள் புல்லித் திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றி அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.
|
39
|
ஆதி அனாதி அகாரணி காரணி சோதி அசோதி சுகபர சுந்தரி மாது சாமாதி மனோன்மனி மங்கலி ஓதிஎன் உள்ளத் துடன்இயைந் தாளே.
|
40
|
Go to top |
இயைந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவி நயந்தனள் அங்கே நமசிவ என்னும் பயன்தனை ஓரும் பதமது பற்றும் பெயர்ந்தனள் மற்றுப் பிதற்றறுத் தாளே.
|
41
|
பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர் முயற்றியின் முத்தி யருளும் முதல்வி கயற்றிகழ் முக்கண்ணும் கம்பலைச் செவ்வாய் முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள வாமே.
|
42
|
உள்ளத் திதயத்து நெஞ்சத் தொருமூன்றுள் பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது வள்ளற் றிருவின் வயிற்றினுள் மாமாயைக் கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே.
|
43
|
கன்னியும் கன்னி அழிந்திலள் காதலி துன்னிஅங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி பன்னிய நன்னூற் பகவரும் அங்குளர் என்னேஇம் மாயை இருளது தானே.
|
44
|
இருளது சத்தி வெளியதெம் அண்ணல் பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம் தெருளது சிந்தையைத் தெய்வம்என் றெண்ணில் அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே.
|
45
|
Go to top |
ஆதி அனாதியும் ஆய பராசத்தி பாதி பராபரை மேலுறை பைந்தொடி மாது சமாதி மனோன்மனி மங்கலி ஓதுமென் உள்ளத் துடன்முகிழ்த் தாளே.
|
46
|
ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை ஆதிஇல் வேதமே யாம்என் றறிகிலர் சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பள் ஆதிஎன் றோதினள் ஆவின் கிழத்தியே.
|
47
|
ஆவின் கிழத்தி நல் ஆவடு தண்டுறை நாவின் கிழத்தி நலம்புகழ்ந் தேத்திடும் தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை மேவுங் கிழத்தி வினைகடிந் தாளே.
|
48
|
வினைகடிந் தார்உள்ளத் துள்ளொளி மேவித் தனையடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள் எனையடி மைக்கொண்ட ஏந்திழை ஈசன் கணவனைக் காண அனாதியு மாமே.
|
49
|
ஆதி அனாதி அகாரணி காரணி வேதம தாய்ந்தனள் வேதியர்க் காய் நின்ற சோதி தனிச்சுடர்ச் சொரூபம தாய்நிற்கும் பாதி பராபரை பன்னிரண் டாதியே. 7,
|
50
|
Go to top |