அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர் செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய் தந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச் சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.
|
1
|
வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப் போதாந்த மான பிரணவத் துள்புக்கு நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை ஈதாந்தம் என்னார்கண் டின்புறு வோர்களே.
|
2
|
காயத் திரியே கருதுசா வித்திரி ஆய்தற் குவப்பர் மந்திரமாங் குன்னி நேயத்தே ரேறி நினைவுற்று நேயத்தாய் மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.
|
3
|
பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து குருநெறி யாலுரை கூடிநால் வேதத் திருநெறி யான திருக்கை யிருத்திச் சொருபம தானோர் துகளில்பார்ப் பாரே.
|
4
|
சத்திய முந்தவம் தான்அவன் ஆதலும் எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும் ஒத்த உயிர்உடன் உண்மை யுணர்வுற்றுப் பெத்தம் அறுத்தலு மாகும் பிரமமே.
|
5
|
Go to top |
வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர் வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர் வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம் வேதாந்தங் கேட்டவர் வேட்கைவிட் டாரே.
|
6
|
நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம் நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.
|
7
|
சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப் பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப் பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே.
|
8
|
திருநெறி யாகிய சித்தசித் தின்றிக் குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்து கரும நியமாதி கைவிட்டுக் காணுந் துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே.
|
9
|
மறையோ ரவரே மறையவ ரானால் மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை குறையோர்தல் மற்றுள்ள கோலா கலமென் றறிவார் மறைதெரிந் தந்தண ராமே.
|
10
|
Go to top |
அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச் சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி நந்துதல் இல்லை நரபதி நன்றாகும் அந்தியுஞ் சந்தியும் ஆகுதி பண்ணுமே.
|
11
|
வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர் நாதாந்த போதம் நணுகிய பேர்க்கது போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால் நாதாந்த முத்தியுஞ் சித்தியும் நண்ணுமே.
|
12
|
தானே விடும்பற் றிரண்டுந் தரித்திட நானே விடப்படு மேதொன்றை நாடாது இப்பாடலின் பின் அடிகள் கிடைக்கவில்லை..
|
13
|
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய் ஓமேவும் ஓரா குதிஅவி உண்ணவே இப்பாடலின் பின் அடிகள் கிடைக்கவில்லை. 16,
|
14
|