தாமறி வாரண்ணல் தாள்பணி வாரவர் தாமறி வாரறந் தாங்கிநின் றாரவர் தாமறி வார்சில தத்துவ ராவர்கள் தாமறி வார்க்குத் தமன்பர னாமே.
|
1
|
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.
|
2
|
அற்றுநின் றாருண்ணும் ஊணே அறனென்னுங் கற்றன போதங் கமழ்பவர் மானிடர் உற்றுநின் றாங்கொரு கூவற் குளத்தினிற் பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே.
|
3
|
அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர் தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர் விழித்திருந் தென்செய்வீர்? வெம்மை பரந்து இழுக்கவன் றென்செய்வீர்? ஏழைநெஞ் சீரே.
|
4
|
தன்னை அறியாது தாம்நலர் என்னாதிங் கின்மை யறியா திளையரென் றோராது வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம் தன்மமும் நல்ல தவஞ்செய்யும் நீரே.
|
5
|
Go to top |
துறந்தான் வழிமுதற் சுற்றமும் இல்லை இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன் அறந்தான் அறியும் அளவறி வாரே.
|
6
|
தான்தவஞ் செய்வதாம் செய்தவத் தவ்வழி மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள் ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர் நான்தெய்வம் என்று நமன்வரு வானே.
|
7
|
திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு கிளைக்குந் தனக்கும்அக் கேடில் புகழோன் விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே.
|
8
|
பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை அற்றம் உரையான் அறநெறிக் கல்லது உற்றுங்க ளால்ஒன்றும் ஈந்தது வேதுணை மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.20,
|
9
|