அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும் மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும் புறங்கேட்டும் பொன்னுரை மேனியெம் ஈசன் திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.
|
1
|
தேவர் பிரான்றனைத் திவ்விய மூர்த்தியை யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின் ஓதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின் ஓதி உணர்ந்தவர் ஓங்கிநின் றாரே.
|
2
|
மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின் அயன்பணி கேட்ப தரன்பணி யாலே சிவன்பணி கேட்பவர் தேவரு மாவர் பயன்பணி கேட்பது பற்றது வாமே.
|
3
|
பெருமான் இவனென்று பேசி யிருக்குந் திருமா னுடர்பின்னைத் தேவரு மாவர் வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும் அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.
|
4
|
ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும் பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தின் நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே.
|
5
|
Go to top |
விழுப்பமும் கேள்வியும் மெய்ந்நின்ற ஞானத் தொழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது வழுக்கி விழாவிடில் வானவர் கோனும் இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே.
|
6
|
சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல் செறிவால் அனுபோகஞ் சித்திக்கும் என்னில் குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை அறியா திருந்தார் அவராவர் அன்றே.
|
7
|
உறுதுணை யாவ துயிரும் உடம்பும் உறுதுணை யாவ துலகுறு கேள்வி செறிதுணை யாவ சிவனடிச் சிந்தை பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே.
|
8
|
புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன் இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமா மகிழநின் றாதியை ஓதி உணராக் கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே.
|
9
|
வைத்துணர்ந் தான்மனத் தோடும்வாய் பேசி ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன் றொவ்வா தச்சுழன் றாணி கலங்கினும் ஆதியை நச்சுணர்ந் தாற்கே நணுகலு மாமே. 25,
|
10
|
Go to top |