கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி வீணாத்தண் டூடே வெளியுறத் தான்நோக்கிக் காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு வாணாள் அடைக்கும் வழியது வாமே.
|
1
|
மலையார் சிரத்திடை வானீர் அருவி நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச் சிலையார் பொதுவில் திருநட மாடும் தொலையாத ஆனந்தச் சோதி கண் டேனே.
|
2
|
மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை மூல நிலத்தில் துயில்கின்ற மூர்த்தியை ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப் பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே.
|
3
|
கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி மடைவாயிற் கொக்குப் போல் வந்தித் திருப்பார்க் குடையாமல் ஊழி இருக்கலு மாமே.
|
4
|
கலந்த உயிருடன் காலம் அறியில் கலந்த உயிரது காலின் நெருக்கம் கலந்த உயிரது காலது கட்டிற் கலந்த உயிருடல் காலமும் நிற்குமே.
|
5
|
Go to top |
வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர் வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர் கோய்திற வாவிடிற் கோழையு மாமே.
|
6
|
வாழலு மாம்பல காலம் மனத்திடைப் போழ்கின்ற வாயு புறம் படாப் பாய்ச்சுறில் ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தற் பாழி பெரியதோர் பள்ளி அறையே.
|
7
|
நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால் இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய் வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக் குரங்கினைக் கோட்டை பொதியலு மாமே.
|
8
|
அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப் பொருத்தஐம் பூதம்சத் தாதியிற் போந்து தெரித்த மனாதிசித் தாதியிற் செல்லத் தரித்தது தாரணை தற்பரத் தோடே. 8,
|
9
|