வருமாதி யீரெட்டுள் வந்த தியானம் பொருவாத புந்தி புலன்போக மேவல் உருவாய சத்தி பரத்தியானம் உன்னும் குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.
|
1
|
கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட் பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப் பிண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே.
|
2
|
ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக் கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில் விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப் பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.
|
3
|
ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை ஒருபொழு துன்னார் சந்திரப் பூவே.
|
4
|
மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச் சினத்து விளக்கினைச் செல்ல எருக்கி அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட மனத்து விளக்கது மாயா விளக்கே.
|
5
|
Go to top |
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும் கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கிடில் கண்ணாடி போலக் கலந்துநின் றானே.
|
6
|
நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில் வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே.
|
7
|
நயனம் இரண்டையும் நாசிமேல் வைத்திட் டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித் துயரற நாடியே தூங்கவல் லார்க்குப் பயனிது காயம் பயமில்லை தானே.
|
8
|
மணிகடல் யாஅனை வார்குழல் மேகம் அணிவண்டு தும்பி வளைபே ரிகையாழ் தணிந்தெழு நாதங்கள் தாம்இவை பத்தும் பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே.
(இதற்குப் பின் உள்ள ``கடலொடு மேகம்`` என்னும் பாடல் நாயனார் திருமொழியன்று.)
கடலொடு மேகங் களிறொடும் ஓசை அடவெழும் வீணை அண்டரண் டத்துச் சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே.
|
9
|
ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும் பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும் ஓசை அதன்மணம் போல விடுவதோர் ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே.
|
10
|
Go to top |
நாத முடிவிலே நல்லாள் இருப்பது நாத முடிவில்நல் யோகம் இருப்பது நாத முடிவிலே நாட்டம் இருப்பது நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.
|
11
|
உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்தும் துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக் கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.
|
12
|
பள்ளி அறையில் பகலே இருளில்லை கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம் ஒள்ளி தறியில்ஓர் ஓசனை நீள்இது வெள்ளி அறையில் விடிவில்லை தானே.
|
13
|
கொண்ட விரதம் குறையாமல் தான்ஒன்றித் தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின் பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே.
|
14
|
அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம் அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில் அவ்வவர் மண்டலம் ஆயம்மற் றோர்க்கே.
|
15
|
Go to top |
இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித் துளைப்பெரும் பாசம் துருவிடு மாகில் இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே.
|
16
|
முக்குண மூடற வாயுவை மூலத்தே சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத் தக்க வலமிடம் நாழிகை சாதிக்க வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே.
|
17
|
நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே கடலித் திருந்து கருதவல் லார்கள் சடலத் தலைவனைத் தாமறிந் தாரே.
|
18
|
அறிவாய் அசத்தென்னும் ஆறா றகன்று செறிவான மாயை சிதைத்தரு ளாலே பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி நெறியான அன்பர் நிலையறிந் தாரே. 9,
|
19
|