திருத்தங்கு மார்பின் திருமால் வரைபோல் எருத்தத் திலங்கியவெண் கோட்டுப் பருத்த
|
1
|
குறுத்தாள் நெடுமூக்கிற் குன்றிக்கண் நீல நிறத்தாற் பொலிந்து நிலம்ஏழ் உறத்தாழ்ந்து
|
2
|
பன்றித் திருவுருவாய்க் காணாத பாதங்கள் நின்றவா நின்ற நிலைபோற்றி அன்றியும்
|
3
|
புண்டரிகத் துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய் அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் பண்டொருநாள்
|
4
|
காணான் இழியக் கனக முடிகவித்துக் கோணாது நின்ற குறிபோற்றி நாணாளும்
|
5
|
Go to top |
பேணிக்கா லங்கள் பிரியாமைப் பூசித்த மாணிக்கா அன்று மதிற்கடவூர்க் காண
|
6
|
வரத்திற் பெரிய வலிதொலையக் காலன் உரத்தில் உதைத்தவுதை போற்றி கரத்தான்மே
|
7
|
வெற்பன் மடப்பாவை கொங்கைமேற் குங்குமத்தின் கற்பழியும் வண்ணங் கசிவிப்பான் பொற்புடைய
|
8
|
வாமன் மகனாய் மலர்க்கணையொன் றோட்டியஅக் காமன் அழகழித்த கண்போற்றி தூமப்
|
9
|
படமெடுத்த வாளரவம் பார்த்தடரப் பற்றி விடமெடுத்த வேகத்தான் மிக்குச் சடலம்
|
10
|
Go to top |
முடங்க வலிக்கும் முயலகன்தன் மொய்ம்பை அடங்க மிதித்தவடர் போற்றி நடுங்கத்
|
11
|
திருமால் முதலாய தேவா சுரர்கள் கருமால் கடல்நாகம் பற்றிக் குருமாற
|
12
|
நீலமுண்ட நீள்முகில்போல் நெஞ்சழல வந்தெழுந்த ஆலமுண்ட கண்டம் அதுபோற்றி சாலமண்டிப்
|
13
|
போருகந்த வானவர்கள் புக்கொடுங்க மிக்கடர்க்கும் தாருகன்தன் மார்பில் தனிச்சூலம் வீரம்
|
14
|
கொடுத்தெறியும் மாகாளி கோபந் தவிர எடுத்த நடத்தியல்பு போற்றி தடுத்து
|
15
|
Go to top |
வரையெடுத்த வாளரக்கன் வாயா றுதிரம் நிரையெடுத்து நெக்குடலம் இற்றுப் புரையெடுத்த
|
16
|
பத்தனைய பொன்முடியும் தோளிருப தும்நெரிய மெத்தெனவே வைத்த விரல்போற்றி அத்தகைத்த
|
17
|
வானவர்கள் தாம்கூடி மந்திரித்த மந்திரத்தை மேனவில ஒடி விதிர்விதிர்த்துத் தானவருக்
|
18
|
கொட்டிக் குறளை உரைத்த அயன்சிரத்தை வெட்டிச் சிரித்த விறல்போற்றி மட்டித்து
|
19
|
வாலுகத்தால் மாவிலங்க மாவகுத்து மற்றதன்மேல் பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி மேலுதைத்தங்
|
20
|
Go to top |
கொட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரை வீட்டிய சண்டிக்கு வேறாக நாட்டின்கண்
|
21
|
பொற்கோயில் உள்ளிருத்திப் பூமாலை போனகமும் நற்கோலம் ஈந்த நலம்போற்றி நிற்க
|
22
|
வலந்தருமால் நான்முகனும் வானவரும் கூடி அலந்தருமால் கொள்ள அடர்க்கும் சலந்தரனைச்
|
23
|
சக்கரத்தால் ஈர்ந் தரிதன் தாமரைக்கண் சாத்துதலும் மிக்கஃதன் றீந்த விறல்போற்றி அக்கணமே
|
24
|
நக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம் தொக்கிருந்த வண்ணம் துதிசெய்ய மிக்கிருந்த
|
25
|
Go to top |
அங்கைத் தலத்தே அணிமாலை ஆங்களித்த செங்கைத் திறத்த திறல்போற்றி திங்களைத்
|
26
|
தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேற் சேர்வித்து வாய்த்திமையோர் தம்மைஎல்லாம் வான்சிறையில் பாய்த்திப்
|
27
|
பிரமன் குறையிரப்பப் பின்னும் அவற்கு வரமன் றளித்தவலி போற்றி புரமெரித்த
|
28
|
அன்றுய்ந்த மூவர்க் கமர்ந்து வரமளித்து நின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து நன்று
|
29
|
நடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயில் கடைகாவல் கொண்டவா போற்றி விடைகாவல்
|
30
|
Go to top |
தானவர்கட் காற்றாது தன்னடைந்த நன்மைவிறல் வானவர்கள் வேண்ட மயிலூரும் கோனவனைச்
|
31
|
சேனா பதியாகச் செம்பொன் முடிகவித்து வானாள வைத்த வரம்போற்றி மேனாள்
|
32
|
அதிர்த்தெழுந்த அந்தகனை அண்டரண்டம் உய்யக் கொதித்தெழுந்த சூலத்தாற் கோத்துத் துதித்தங்
|
33
|
கவனிருக்கும் வண்ணம் அருள்கொடுத்தங் கேழேழ் பவமறுத்த பாவனைகள் போற்றி கவைமுகத்த
|
34
|
பொற்பா கரைப்பிறந்து கூறிரண்டாப் போகட்டு மெற்பா சறைப்போக மேல்விலகி நிற்பால
|
35
|
Go to top |
மும்மதத்து வெண்கோட்டுக் கார்நிறத்துப் பைந்தறுகண் வெம்மதத்த வேகத்தால் மிக்கோடி விம்மி
|
36
|
அடர்த்திரைத்துப் பாயும் அடுகளிற்றைப் போக எடுத்துரித்துப் போர்த்தவிசை போற்றி தொடுத்தமைத்த
|
37
|
நாள்மாலை கொண்டணிந்த நால்வர்க்கன் றால்நிழற்கீழ் வாள்மாலை ஆகும் வகையருளித் தோள்மாலை
|
38
|
விட்டிலங்கத் தக்கிணமே நோக்கி வியந்தகுணம் எட்டிலங்க வைத்த இறைபோற்றி ஒட்டி
|
39
|
விசையன் விசையளப்பான் வேடுருவம் ஆகி அசையா உடல்திரியா நின்று வசையினால்
|
40
|
Go to top |
பேசுபதப் பான பிழைபொறுத்து மற்றவற்குப் பாசுபதம் ஈந்த பதம்போற்றி நேசத்தால்
|
41
|
வாயில்நீர் கொண்டு மகுடத் துமிழ்ந் திறைச்சி ஆயசீர்ப் போனகமா அங்கமைத்துக்த் தூயசீர்க்
|
42
|
கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி மண்ணின்மேல்
|
43
|
காளத்தி போற்றி கயிலைமலை போற்றி யென நீளத்தினால் நினைந்து நிற்பார்கள் தாளத்தோ
|
44
|
டெத்திசையும் பன்முரசம் ஆர்த்திமையோர் போற்றிசைப்ப அத்தனடி சேர்வார்கள் ஆங்கு. |
45
|
Go to top |